Jump to content

முன்னாள் எம்.பி.செல்வத்துக்கு கதிரின் திறந்த மடல்


Recommended Posts

முன்னாள் எம்.பி.செல்வத்துக்கு கதிரின் திறந்த மடல்

 

 

 

சிங்கள மொழி நேர்காணலொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எம். ஏ. சுமந்திரன்  ஆயுதப் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்ததையடுத்து , தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அமிர்தலிங்கம் சகாப்தத்தின்  நூலின் ஆசிரியரான கதிர் பாலசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுக்கு திறந்த மடலொன்றை எழுதியுள்ளார்.  

 

மதிப்பிற்குரிய திரு. செல்வம் அடைக்கலநாதன் கவனத்திற்கு 

திரு. சுமந்திரன் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை தவறு என்று கூறியதற்குக் காரணம் என்ன? அவர் பின்வரும் சம்பவங்கள், அநியாயங்கள், அட்டூழியங்கள் கொடுமைகளை ஆதாரமாகக்கொண்டு ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். 

ஆயுதம் ஏந்திய அமைப்புகள் விடுதலைக்காகப் போராடியதிலும், தலைமைப் பீட வெறிபிடித்து மோதி அழிந்த ஜீவன்களை கருத்தில் கொண்டிருக்கலாம். ஆயுதப் போராட்டம் தவறு என்று சுமந்திரன் கூறமுன்னரே, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களே -- தந்தை செல்வா, அமிர்தலிங்கம்,சிவசிதம்பரம் முதலிய பெருந் தலைவர்கள் -- தவறு என்று ஆயுதப் போராட்ட ஆரம்பத்திலேயே உலகறியச் சொல்லியிருக்கிறார்கள். ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் அன்றைய தமிழ் அரசுத் தலைவர்களை தம் பக்கம் அணைத்துக்கொள்ள எவ்வளவோ முயன்றார்கள். முடியவில்லை. கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேற்பிள்ளை மட்டும் அமிர்தலிங்கம் அவர்களுடன் ஒத்துப் போகாததால் இளைஞர் பக்கம் மெல்லிதாய் தலையாட்டினார். ஆயுதம் ஏந்திய அமைப்புகள் கொன்ற தமிழ் அரசுக் கட்சி தலைவர்களையும், பொது மக்களையும் கருத்தில் எடுத்தும் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் மொத்தம் 16 தமிழ் அரசுக் கட்சி தலைவர்கள் பிரமுகர்களை கொன்றுள்ளார்கள். பெயர்கள் அமிர்தலிங்கம் சகாப்தம் நூலில் பதிவாகியுள்ளது.

சுடலையிலும், வீதியோரமும் கொன்று எறிந்த பொதுமக்களை எண்ணியும்,தந்திக் கம்பங்களில் கட்டிச் சுட்டுக் கொன்ற பொது மக்களை எண்ணியும் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். ஆரம்ப கட்டத்தில் சோத்துப் பார்சல் கொடுத்த மக்களின் வீடுகளுள் புகுந்து, வீட்டாரைக் கட்டிவைத்து விட்டு,நகை பணம் பொருட்கள் கொள்ளை அடித்ததையும் கருத்தில் கொண்டிருக்கலாம். இன்று வடக்கு மாகாணம், ஆயதம் ஏந்திய இழைஞர் முன்னெடுத்த போராட்டம் கொண்டு வந்த கொடிய யுத்த பேரழிவால் கண்ணீர் சொரிகின்றது. பல பகுதிகள் சுடுகாடு போற் காட்சிதருகின்றன.

தலைவன் இல்லாது தவிக்கும் குடும்பங்கள் ஆயிரக் கணக்கில். தந்தையை இழந்து கண்ணீர் கொட்டும் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில். அனாதைகள் ஆக்கப்பட்டு அல்லலுறும் குழந்தைகள் ஆயிரக் கணக்கில். வாழ்ந்த மனைகளை இழந்து தவிப்போர் ஆயிரக் கணக்கில். ஆங்காங்கிருந்த கைத்தொழில் நிலையங்கள் எதுவும் இன்றில்லை. கலாசாரம் சீரழிந்து உயர் பண்பாட்டில் மண் அள்ளிப்போட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் உயிர்நிலையான கல்வி பாதாளத்துள் தள்ளப்பட்டுள்ளது. இப்படி எத்தனை எத்தனையோ கொடுமைகளை வடமாகாணம் தலைமேல் சுமந்துநின்று கண்ணீர்வடிக்கின்றது. 

வற்றின் மத்தியிலே ஆயுதம் ஏந்திய பலர் கோடி சீமான்களாக இலங்கையில் மட்டுமல்ல உலகம் பரந்து வாழ்கின்றனர். இவையெல்லாம் மனச்சாட்சியை உறுத்தியதால் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். 

ராஜிவ் காந்தி கொலை காரணமாக இந்திய ஆதரவை இழந்தமையை கருத்தில் எடுத்தும் ஆயதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். என்றும், இந்திய ஆதரவு இல்லாமல் எமக்கு அற்பமாவது விடுலை கிடைக்குமா? 

திரு. செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு. நீங்கள் கூறுவது போல உலகளாவிய ரீதியில் எங்கள் பிரச்சினையை முதன் முதலில் பதிந்தவர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள் அல்ல. அதனை செய்தவர் அமரர் அமிர்தலிங்கம் அவர்கள். தில்லி பாராளுமன்றத்தில் திருமதி இந்திரா காந்தி அவர்கள் 1983 இனக் கலவரத்தை இன அழிப்பு என்று பதிவு செய்தார். அதுவே எமது பிரச்சினை சார்ர்ந்து உலகறிய வைத்த முதலாவது பதிவு. அதன் பின்னணியிலே அமரர் அமிர்தலிங்கம் இருந்தார். அவரே உலக நாடுகளுக்கு – இந்தியா, சுவிற்சலாந்து, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா,அவுஸ்திரேலிய நாடுகளுக்கு -- தமிழர் பிரச்சினையை முதன்முதலில் எடுத்துச் சென்றவர். ஆயுதப் போராட்டத்தின் காரணமாகத்தான் இனப் பிரச்சினை சார்ந்த விடயங்களை அரசாங்கத்துடன் பேச முடிந்ததாக நீங்கள் கூறுகின்றீர்கள். அப்படியல்ல. சேர் பொன்னம்பலம் இராமநாதன் காலம் தொடக்கம் இந்தப் பிரச்சினை வரலாறு தொடர் கதையாய்  நீண்டுவருகின்றது. நீங்கள் கூறுவது போல பொது மக்கள் போராளிகள் ஒட்டுமொத்தமாக உயிரை அர்ப்பணித்ததற்காக சரி என்று சொல்ல வேண்டுமா?

தமிழ் அரசுக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம்,ஆலாலசுந்தரம் ஆகியோரை உங்கள் இயக்கம் கொன்றது சரி என்று சொல்கிறீர்களா? அல்லது உங்கள் தவைர் சபாரத்தினத்தை புகையிலைத் தோட்டத்தில் இருகை கூப்பிக் கும்பிடக் கும்பிடக் மாத்தையா கொன்றது சரியென்று சொல்கிறீர்களா? இப்படி எத்தனை எத்தனை கொலைகள்? இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டும் ஆயுதப் போராட்டம் தவறு என்று சுமந்திரன் கூறியிருக்கலாம். வல்லமையுள்ள தமிழ் அரசியல் தலைவர்களை கொன்று ஒழித்ததன் பின்னர் தமிழர் பிரச்சினையை உலகிற்குச் சொல்லக்கூடிய தனித்த தலைவராக சுமந்திரன் திகழ்கின்றார். அவரை ஒழித்தால் அரசியல் அரங்கிலே தமிழருக்காக வாதாட யார் இருக்கிறார்? ஈழத் தமிழ் மக்கள் செய்த தவத்தால் கிடைத்த சட்ட மேதை சுமந்திரன். அவரை சீண்டாதீர்கள். மக்கள் அவர் பக்கம் இருக்கின்றார்கள். 

ஆயுதப் போராட்டத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. தியாகங்கள் நிறைந்த புனிதமான வீரம்நிறைந்த பக்கத்தைத் தவிர்த்து, எதிர்ப்பக்கத்தையே சுமந்திரன் தனது பேசு பொருளில் எடுத்துள்ளார். தயவு செய்து உங்கள் ஆதரவை அவருக்கு வழங்குங்கள். அரசியல் அநாதைகளாகத் தவிக்கும் தமிழ் மக்களுக்கு அது அளப்பரிய நன்மை பயக்கும்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மனனள-எம-ப-சலவததகக-கதரன-தறநத-மடல/175-250523

Link to comment
Share on other sites

16 minutes ago, nunavilan said:

அமிர்தலிங்கம் சகாப்தத்தின்  நூலின் ஆசிரியரான கதிர் பாலசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுக்கு திறந்த மடலொன்றை எழுதியுள்ளார்.  

இவனுக்கள் மனச்சாட்சி இல்லாம பேசக்கூடியவனுக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

 

சுடலையிலும், வீதியோரமும் கொன்று எறிந்த பொதுமக்களை எண்ணியும்,தந்திக் கம்பங்களில் கட்டிச் சுட்டுக் கொன்ற பொது மக்களை எண்ணியும் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். ஆரம்ப கட்டத்தில் சோத்துப் பார்சல் கொடுத்த மக்களின் வீடுகளுள் புகுந்து, வீட்டாரைக் கட்டிவைத்து விட்டு,நகை பணம் பொருட்கள் கொள்ளை அடித்ததையும் கருத்தில் கொண்டிருக்கலாம். இன்று வடக்கு மாகாணம், ஆயதம் ஏந்திய இழைஞர் முன்னெடுத்த போராட்டம் கொண்டு வந்த கொடிய யுத்த பேரழிவால் கண்ணீர் சொரிகின்றது. பல பகுதிகள் சுடுகாடு போற் காட்சிதருகின்றன.

தலைவன் இல்லாது தவிக்கும் குடும்பங்கள் ஆயிரக் கணக்கில். தந்தையை இழந்து கண்ணீர் கொட்டும் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில். அனாதைகள் ஆக்கப்பட்டு அல்லலுறும் குழந்தைகள் ஆயிரக் கணக்கில். வாழ்ந்த மனைகளை இழந்து தவிப்போர் ஆயிரக் கணக்கில். ஆங்காங்கிருந்த கைத்தொழில் நிலையங்கள் எதுவும் இன்றில்லை. கலாசாரம் சீரழிந்து உயர் பண்பாட்டில் மண் அள்ளிப்போட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் உயிர்நிலையான கல்வி பாதாளத்துள் தள்ளப்பட்டுள்ளது. இப்படி எத்தனை எத்தனையோ கொடுமைகளை வடமாகாணம் தலைமேல் சுமந்துநின்று கண்ணீர்வடிக்கின்றது. 

வற்றின் மத்தியிலே ஆயுதம் ஏந்திய பலர் கோடி சீமான்களாக இலங்கையில் மட்டுமல்ல உலகம் பரந்து வாழ்கின்றனர். இவையெல்லாம் மனச்சாட்சியை உறுத்தியதால் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். 

தமிழ் அரசுக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம்,ஆலாலசுந்தரம் ஆகியோரை உங்கள் இயக்கம் கொன்றது சரி என்று சொல்கிறீர்களா? அல்லது உங்கள் தவைர் சபாரத்தினத்தை புகையிலைத் தோட்டத்தில் இருகை கூப்பிக் கும்பிடக் கும்பிடக் மாத்தையா கொன்றது சரியென்று சொல்கிறீர்களா? இப்படி எத்தனை எத்தனை கொலைகள்? இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டும் ஆயுதப் போராட்டம் தவறு என்று சுமந்திரன் கூறியிருக்கலாம். 

 

அருமை! அருமையான கட்டுரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, colomban said:

அருமை! அருமையான கட்டுரை

அதுக்கு அந்த காசு சேர்த்து பண முதலைகள் ஆனாவர்களை குறை சொல்லியிருக்கனும், நேரடியாக கூற தில்லில்லையா?

 

1 hour ago, nunavilan said:

 

வற்றின் மத்தியிலே ஆயுதம் ஏந்திய பலர் கோடி சீமான்களாக இலங்கையில் மட்டுமல்ல உலகம் பரந்து வாழ்கின்றனர். இவையெல்லாம் மனச்சாட்சியை உறுத்தியதால் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சிவனேன்னு இருந்த தமிழ் இளைஞர்களை சுதந்திர தமிழீழம் நோக்கியும்.. இரத்தத் திலகம் நோக்கியும்.. 1000 தமிழ் இளைஞர்களை ஆயுதங்களுடன் தாருங்கள்.. ஒரு மாதத்துக்குள் தமிழீழம் மீட்டுத்தருகிறோம் .. தம்பி பிரபாகரனின் பாதையில் நியாயமுள்ளது.. அதைத்தான் சிங்களவர்கள் செவிமடுக்கிறார்கள்.. என்றவர்கள் எல்லாம்..

அமிர்தலிங்கமோ..யோகேஸ்வரனோ.. சிவசிதம்பரமோ அல்ல.. அவர்களின் ஆவிகளாவர்.

ஆயுதம் ஏந்தாத தமிழர்களை இனக்கலவரங்கள் மூலம் கொன்றொழித்தது யார்.. சிங்களவர்கள் இல்லாமல்...??! ஆம் அந்த தமிழர்களை சொர்க்கத்துக்கு அனுப்பிய புத்தரின் புண்ணியவான்கள் சிங்களவர்கள்.. அவர்களிடம் அடைக்கலம் தேடி அடிமையாக வாழக் கிடைத்தது பெரும் பாக்கியம் என்பார்கள் போலும். 

தமிழாராய்ச்சி மாநாட்டில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றது.. புலிகளைப் போலும்.

தமிழீழம் கேட்ட அமிர்தலிங்கம்.. அதையும் கைவிட்டு.. 13 வது திருத்தச் சட்டத்தையும் கைவிட்டு.. ஹிந்தியாவில் மாடி வீடு தந்தால் போதும் என்றது தான் தமிழ் மக்களுக்கு அமிர்தலிங்கம் வகையறாக்கள் பெற்றுக் கொடுத்த உரிமை போலும். 

அந்தப் பாதை தான் அப்பாவி மக்களின் இனப்படுகொலைக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல்.. சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு.. ஜேவிபி பயங்கரவாதத்திற்கு.. இஸ்லாமிய மதவாதப் பயங்கரவாதத்திற்கு வெள்ளையடிக்கும்..சுமந்திரன் வகையறாக்களின் மிலேச்சத்தனப் பாதையாகும்.

அதனை இந்த கட்டுரை விற்பன்னர் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண பொதுமக்களை இனப்படுகொலை செய்வதற்கும்.. அரசியல் துரோகிகளை.. இனத்துரோகிகளை.. சமூக விரோதிகளை.. தேசத்துரோகிகளை.. காட்டிக்கொடுப்பாளர்களை.. மக்கள் விரோதிகளை.. ஆக்கிரமிப்பாளர்களை தண்டிப்பதற்கும் இடையில் உள்ள வேற்றுமை புரியாத முட்டாள்களிடம் பேனா போனால்.. இதுதான் கதி. 

இப்படி இல்லை.. இன்னும் இன்னும் பொறுக்கும் எலும்புத்துண்டுக்கு ஏற்ப இன்னும் எழுதுங்கள். 

Link to comment
Share on other sites

15 hours ago, nunavilan said:

முன்னாள் எம்.பி.செல்வத்துக்கு கதிரின் திறந்த மடல்

 

 

 

 

ஆயுதம் ஏந்திய அமைப்புகள் விடுதலைக்காகப் போராடியதிலும், தலைமைப் பீட வெறிபிடித்து மோதி அழிந்த ஜீவன்களை கருத்தில் கொண்டிருக்கலாம். ஆயுதப் போராட்டம் தவறு என்று சுமந்திரன் கூறமுன்னரே, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களே -- தந்தை செல்வா, அமிர்தலிங்கம்,சிவசிதம்பரம் முதலிய பெருந் தலைவர்கள் -- தவறு என்று ஆயுதப் போராட்ட ஆரம்பத்திலேயே உலகறியச் சொல்லியிருக்கிறார்கள். ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் அன்றைய தமிழ் அரசுத் தலைவர்களை தம் பக்கம் அணைத்துக்கொள்ள எவ்வளவோ முயன்றார்கள். முடியவில்லை. கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேற்பிள்ளை மட்டும் அமிர்தலிங்கம் அவர்களுடன் ஒத்துப் போகாததால் இளைஞர் பக்கம் மெல்லிதாய் தலையாட்டினார். ஆயுதம் ஏந்திய அமைப்புகள் கொன்ற தமிழ் அரசுக் கட்சி தலைவர்களையும், பொது மக்களையும் கருத்தில் எடுத்தும் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் மொத்தம் 16 தமிழ் அரசுக் கட்சி தலைவர்கள் பிரமுகர்களை கொன்றுள்ளார்கள். பெயர்கள் அமிர்தலிங்கம் சகாப்தம் நூலில் பதிவாகியுள்ளது.

சுடலையிலும், வீதியோரமும் கொன்று எறிந்த பொதுமக்களை எண்ணியும்,தந்திக் கம்பங்களில் கட்டிச் சுட்டுக் கொன்ற பொது மக்களை எண்ணியும் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். ஆரம்ப கட்டத்தில் சோத்துப் பார்சல் கொடுத்த மக்களின் வீடுகளுள் புகுந்து, வீட்டாரைக் கட்டிவைத்து விட்டு,நகை பணம் பொருட்கள் கொள்ளை அடித்ததையும் கருத்தில் கொண்டிருக்கலாம். இன்று வடக்கு மாகாணம், ஆயதம் ஏந்திய இழைஞர் முன்னெடுத்த போராட்டம் கொண்டு வந்த கொடிய யுத்த பேரழிவால் கண்ணீர் சொரிகின்றது. பல பகுதிகள் சுடுகாடு போற் காட்சிதருகின்றன.

தலைவன் இல்லாது தவிக்கும் குடும்பங்கள் ஆயிரக் கணக்கில். தந்தையை இழந்து கண்ணீர் கொட்டும் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில். அனாதைகள் ஆக்கப்பட்டு அல்லலுறும் குழந்தைகள் ஆயிரக் கணக்கில். வாழ்ந்த மனைகளை இழந்து தவிப்போர் ஆயிரக் கணக்கில். ஆங்காங்கிருந்த கைத்தொழில் நிலையங்கள் எதுவும் இன்றில்லை. கலாசாரம் சீரழிந்து உயர் பண்பாட்டில் மண் அள்ளிப்போட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் உயிர்நிலையான கல்வி பாதாளத்துள் தள்ளப்பட்டுள்ளது. இப்படி எத்தனை எத்தனையோ கொடுமைகளை வடமாகாணம் தலைமேல் சுமந்துநின்று கண்ணீர்வடிக்கின்றது. 

வற்றின் மத்தியிலே ஆயுதம் ஏந்திய பலர் கோடி சீமான்களாக இலங்கையில் மட்டுமல்ல உலகம் பரந்து வாழ்கின்றனர். இவையெல்லாம் மனச்சாட்சியை உறுத்தியதால் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். 

ராஜிவ் காந்தி கொலை காரணமாக இந்திய ஆதரவை இழந்தமையை கருத்தில் எடுத்தும் ஆயதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். என்றும், இந்திய ஆதரவு இல்லாமல் எமக்கு அற்பமாவது விடுலை கிடைக்குமா? 

திரு. செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு. நீங்கள் கூறுவது போல உலகளாவிய ரீதியில் எங்கள் பிரச்சினையை முதன் முதலில் பதிந்தவர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள் அல்ல. அதனை செய்தவர் அமரர் அமிர்தலிங்கம் அவர்கள். தில்லி பாராளுமன்றத்தில் திருமதி இந்திரா காந்தி அவர்கள் 1983 இனக் கலவரத்தை இன அழிப்பு என்று பதிவு செய்தார். அதுவே எமது பிரச்சினை சார்ர்ந்து உலகறிய வைத்த முதலாவது பதிவு. அதன் பின்னணியிலே அமரர் அமிர்தலிங்கம் இருந்தார். அவரே உலக நாடுகளுக்கு – இந்தியா, சுவிற்சலாந்து, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா,அவுஸ்திரேலிய நாடுகளுக்கு -- தமிழர் பிரச்சினையை முதன்முதலில் எடுத்துச் சென்றவர். ஆயுதப் போராட்டத்தின் காரணமாகத்தான் இனப் பிரச்சினை சார்ந்த விடயங்களை அரசாங்கத்துடன் பேச முடிந்ததாக நீங்கள் கூறுகின்றீர்கள். அப்படியல்ல. சேர் பொன்னம்பலம் இராமநாதன் காலம் தொடக்கம் இந்தப் பிரச்சினை வரலாறு தொடர் கதையாய்  நீண்டுவருகின்றது. நீங்கள் கூறுவது போல பொது மக்கள் போராளிகள் ஒட்டுமொத்தமாக உயிரை அர்ப்பணித்ததற்காக சரி என்று சொல்ல வேண்டுமா?

தமிழ் அரசுக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம்,ஆலாலசுந்தரம் ஆகியோரை உங்கள் இயக்கம் கொன்றது சரி என்று சொல்கிறீர்களா? அல்லது உங்கள் தவைர் சபாரத்தினத்தை புகையிலைத் தோட்டத்தில் இருகை கூப்பிக் கும்பிடக் கும்பிடக் மாத்தையா கொன்றது சரியென்று சொல்கிறீர்களா? இப்படி எத்தனை எத்தனை கொலைகள்? இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டும் ஆயுதப் போராட்டம் தவறு என்று சுமந்திரன் கூறியிருக்கலாம். வல்லமையுள்ள தமிழ் அரசியல் தலைவர்களை கொன்று ஒழித்ததன் பின்னர் தமிழர் பிரச்சினையை உலகிற்குச் சொல்லக்கூடிய தனித்த தலைவராக சுமந்திரன் திகழ்கின்றார். அவரை ஒழித்தால் அரசியல் அரங்கிலே தமிழருக்காக வாதாட யார் இருக்கிறார்? ஈழத் தமிழ் மக்கள் செய்த தவத்தால் கிடைத்த சட்ட மேதை சுமந்திரன். அவரை சீண்டாதீர்கள். மக்கள் அவர் பக்கம் இருக்கின்றார்கள். 

ஆயுதப் போராட்டத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. தியாகங்கள் நிறைந்த புனிதமான வீரம்நிறைந்த பக்கத்தைத் தவிர்த்து, எதிர்ப்பக்கத்தையே சுமந்திரன் தனது பேசு பொருளில் எடுத்துள்ளார். தயவு செய்து உங்கள் ஆதரவை அவருக்கு வழங்குங்கள். அரசியல் அநாதைகளாகத் தவிக்கும் தமிழ் மக்களுக்கு அது அளப்பரிய நன்மை பயக்கும்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மனனள-எம-ப-சலவததகக-கதரன-தறநத-மடல/175-250523

அருமையான கட்டுரை. அடைக்கலம் இப்போது ஓடி ஒளிந்திருப்பார். என்ன செய்வது எதாவது அறிக்கை விட்டு பிழைக்கலாம் எண்டு இருந்தவருக்கு இப்படி ஒரு கட்டுரை இடியாய் வந்து விழுந்திருக்குதே. பாவம் மனுஷன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?
    • அது என்னோடும் சிறியோடும் சேர முன்பு.🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.