Jump to content

சுமந்திரன் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எப்.முபாரக் -

 

Thurainayagam.JPG


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் செவ்வியை முழுமையாக பார்வையிடாமலும் தெளிவான மொழிபெயர்ப்பை பெறாமலும் சுமந்திரன் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது என மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் (20) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சமூக வலைத்தள ஊடகம் ஒன்றிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் வழங்கப்பட்ட செவ்வி தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலைப்பாடு குறிப்பிட்ட செவ்வியை முழுமையாக பார்வையிடாமையினாலும், தவறான மொழிபெயர்ப்புடன் கூடிய குறிப்பிட்ட சில கேள்விகளுக்கான பதில்களில் உள்ள தெளிவற்ற புரிதலின் காரணமாக ஏற்பட்டுள்ளன. 

 

சமூக வலைத்தளங்களில் உலாவிய பொருத்தமற்ற முறையில் மொழிபெயர்க்கப்பட்ட குறிப்பிட்ட கானொளியே பலர் தங்கள் உணர்வினை வெளிப்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது. 

 

இந்த நேர்காணலை ஆரம்பத்தில் இருந்து பார்க்கும்போது நேர்கண்டவர் சிங்கள மக்களிடம் எதனை கொண்டு சேர்க்க முயல்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 

 எனினும் மிகத் தெளிவாகவும், திடமாகவும் யதார்த்த அரசியல்வாதியாக சுமந்திரன் அவர்கள் பதிலளித்திருந்தார். தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டு பயணிக்கும் நபராக, அவர் ஆயுதப் போராட்டத்தினுடைய பொறிமுறையினை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என யதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருந்தார். 

 

ஒர் உரிமைசார் ஆயுதப் போராட்டமானது தீர்வுக்காக அரசியல் மயப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், மூன்று தசாப்த காலங்களுக்கு மேல் நீடிக்காததையும் உலக வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டதனால் இதனை அடியொற்றியதான பதிலாக அதனை நாம் பார்க்க முடியும். 

 

சிறந்த சட்டத்தரணியான சுமந்திரன் அவர்கள் உணர்ச்சி அரசியலைத்தாண்டி நடைமுறைச் சாத்தியமான அரசியலை மேற்கொண்டு வரும் சிறந்த அரசியல்வாதி எனவும்,

தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வினை அரசின் அனுசரனையுடனேயே நாம் பெற்றுக் கொள்ள முடியும் அதற்கான அணுகுமுறையினை தமிழ் மக்களை பிரதிநிதுத்துவப்படுத்துகின்ற கட்சியின் பிரதிநிதிகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

 

 இலங்கையில் காலாகாலமாக மூவின மக்களும் இனம், மதம், மொழிகளுக்கு அப்பால் ஒற்றுமையாக, பரஸ்பர புரிந்துணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றார்கள். 

 

இந்நிலையில் தமிழ் மக்களும் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல மாறாக மறுக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற அவர்களுக்கான உரிமைகளைக் கோரியே அரசுடன் போராடி வருகின்றார்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். காலாகாலமாக தீர்வு என்ற விடையத்தில் தமிழ் மக்கள் அரசினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். 

 

ஒருசில கடும்போக்குவாதிகளினால் சிங்கள மக்கள் குழப்பமடையச் செய்யப்பட்டு வருகின்றமையினால் இந்நிலை தொடர்ந்து வருகின்றது. 

 

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய சொல்ல முடியாத இழப்புக்களையும், துயரங்களையும் மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு சிங்கள மக்களும் உணர்ந்து கொள்வார்கள். 

 

இதனால் தமிழ் மக்கள் தங்களை மீட்டெடுப்பதற்கு அவர்களுக்கான அதிகாரங்களுடன்கூடிய தீர்வு அவசியம் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள் எனவே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க சிங்கள மக்கள் அரசுக்கு ஆணையிட வேண்டும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!

-

http://www.importmirror.com/2020/05/blog-post_940.html

 

Link to comment
Share on other sites

1 minute ago, colomban said:

சுமந்திரன் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது என மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் (20) தெரிவித்துள்ளார்.

போலிக்கு துதிபாடும் துரைநாயகத்தின் விமர்சனம் தேவையற்றது.

Link to comment
Share on other sites

3 hours ago, colomban said:

இந்நிலையில் தமிழ் மக்களும் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல மாறாக மறுக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற அவர்களுக்கான உரிமைகளைக் கோரியே அரசுடன் போராடி வருகின்றார்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். காலாகாலமாக தீர்வு என்ற விடையத்தில் தமிழ் மக்கள் அரசினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். 

தமிழ் மக்கள் சிங்கள அரசுகளினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள் என்பது தெரிந்தும், ஏமாற்றும் அரசொன்றுக்கு முண்டுகொடுத்து காப்பாற்றிது ஏன்? புரியவில்லை??    

Link to comment
Share on other sites

19 minutes ago, Paanch said:

தமிழ் மக்கள் சிங்கள அரசுகளினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள் என்பது தெரிந்தும், ஏமாற்றும் அரசொன்றுக்கு முண்டுகொடுத்து காப்பாற்றிது ஏன்? புரியவில்லை??    

அப்ப என்ன செய்து இருக்க வேண்டும்? ரணிலின் ஆட்சியை கலைக்க உதவி செய்து விட்டு மகிந்த அண்ட் கோ வை அப்பவே கொண்டு வந்து இருக்க வேண்டுமா?

Link to comment
Share on other sites

17 minutes ago, Paanch said:

தமிழ் மக்கள் சிங்கள அரசுகளினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள் என்பது தெரிந்தும், ஏமாற்றும் அரசொன்றுக்கு முண்டுகொடுத்து காப்பாற்றிது ஏன்? புரியவில்லை??    

எல்லாம் எல்லோருக்கும் புரியாது. கொரோனா வைரஸ் முகமூடி போட்ட வைத்தியர்களையும் கொல்கிறதே? இன்னமும் முகமூடி போடுகிறீர்களா? இப்படியான கேள்விகள் அந்த துறைசார் வல்லுனர்கள் தவிர மற்றவர்களுக்கு பயனற்றவை - உங்கள் கேள்வியும் தான். உங்களுக்கு தேவையான பதில் இணைய செய்தித்தளங்களில் தாராளமாக உள்ளது, ஆனால் உங்களுக்கு புரியவில்லை என்று எழுதியுள்ளீர்கள், அது உண்மை. இது புரிவதற்கு சிக்கலான விடயம். எல்லாம் எல்லோருக்கும் புரியாது.

Link to comment
Share on other sites

3 minutes ago, நிழலி said:

அப்ப என்ன செய்து இருக்க வேண்டும்? ரணிலின் ஆட்சியை கலைக்க உதவி செய்து விட்டு மகிந்த அண்ட் கோ வை அப்பவே கொண்டு வந்து இருக்க வேண்டுமா?

சந்தர்ப்பம் பேரம் பேசிக் காப்பாற்றுவதற்கு இருந்ததல்லவா....

Link to comment
Share on other sites

2 minutes ago, Paanch said:

சந்தர்ப்பம் பேரம் பேசிக் காப்பாற்றுவதற்கு இருந்ததல்லவா....

அந்தளவுக்கு எல்லாம் ராச தந்திரம் எல்லாம் எங்கள் தமிழ் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்திருந்தால் ஆயுதப் போராட்டம் கூட நிகழ்ந்து இருக்காது.

Link to comment
Share on other sites

11 minutes ago, நிழலி said:

அந்தளவுக்கு எல்லாம் ராச தந்திரம் எல்லாம் எங்கள் தமிழ் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்திருந்தால் ஆயுதப் போராட்டம் கூட நிகழ்ந்து இருக்காது.

தாரமும், குருவும், அரசியல்வாதிகளும் தலைவிதிப்படி என்று புது மொழி எழுதவேண்டும். 😩

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

அந்தளவுக்கு எல்லாம் ராச தந்திரம் எல்லாம் எங்கள் தமிழ் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்திருந்தால் ஆயுதப் போராட்டம் கூட நிகழ்ந்து இருக்காது.

எதிரியை தனது விவேகத்தால் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இருந்ததை வரலாற்றில் கூட நான்  அறியவில்லை. நரம்பு  புடைக்க கத்தி உசுப்பேற்றி கேட்போரை விசிலடிக்க வைத்துவிட்டு புஸ்வாணமாய் போவதே தமிழனின் விவேகம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அல்ல, சுமந்திரனின் இடத்தில் யார் தற்போது இருந்தாலும் அவதூறுகள் வந்த வண்ணமே அமையும். உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்பமுடியாது.

பெருத்த எடுப்பில் கற்பனைகளை வளர்த்துவிட்டு எதிர்பார்ப்புக்கள், ஏமாற்றங்களால் நொந்து போனவர்கள் மனதை யதார்த்த அரசியல் செயற்பாடுகள் சாந்தி அடையவைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது. 

சுமந்திரன் மீதான பாய்ச்சல் ஒரு தனிநபர் மீதான தாக்குதல் என்று எடுக்கப்படாது ஏமாற்றங்கள் நிறைந்த ஒரு சமூகம் தனது இயலாமையை வெளிப்படுத்தும் செயற்பாடு என்று எடுத்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சுமத்திரனை போன்று சிந்தித்து தான் செர்.பொன் ராமநாதன் போன்றோர் ஐக்கிய இலங்கையை அன்று வரவேற்றனர் .....அதை ஒழுங்காக நடத்த தெரியாத சிங்களபெளத்த அரசியல்வாதிகள் இப்பொழுது ஐக்கியம் பற்றி பேசுகிறார்கள்....ஆயிரம் ராமனாதங்கள்,ஆயிரம் சுமத்திரன் கள்,ஆயிரம் ஆயிரம் தமிழ்தேச நேசக்  கரங்கள் உருவானாலும் சிங்கள மக்களின் பிரநிதிகளிடமிருந்து  அந்த நேசக்கரத்தை பிடிக்க ஒரு அரசியல்வாதியும் முன்வரப்போவதில்லை....
நேசக்கரத்தை பிடித்தால் வாக்குகளை இழக்க வேண்டும்.....நேசக்கரத்தை உதறிதள்ளினால் அமோக வாக்குகள் ....நான்  அனுபவத்தில் கண்ட உண்மை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

பெருத்த எடுப்பில் கற்பனைகளை வளர்த்துவிட்டு எதிர்பார்ப்புக்கள், ஏமாற்றங்களால் நொந்து போனவர்கள் மனதை யதார்த்த அரசியல் செயற்பாடுகள் சாந்தி அடையவைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது. 

கற்பனை உலகில் கோட்டை கட்டிய அவர்களை சாந்தி அடையவைக்க வேண்டுமானால் தொடர்ந்தும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி நரம்பு  புடைக்க பேசி நடித்து ஏமாற்ற வேண்டும்.
உண்மை நியையை ஏற்று கொண்டு கனவு உலகில் இருந்து அவர்கள் வெளிவருவது தான் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு விளக்கம் கொடுத்து வாக்கு வங்கிக்கு தயாராகினம். கட்சி தலைவருக்கும் விளங்கவில்லை, உறுப்பினர்களுக்கும் விளங்கவில்லை. அப்போ; புரியாத மொழியில் பேசுகிறோம் என்கிற துணிவில் விளாசித் தள்ளி இருக்கிறார் சட்டாம்பி. நாங்கள் கை தட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஆளாளுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு விளக்கம் கொடுத்து வாக்கு வங்கிக்கு தயாராகினம். கட்சி தலைவருக்கும் விளங்கவில்லை, உறுப்பினர்களுக்கும் விளங்கவில்லை. அப்போ; புரியாத மொழியில் பேசுகிறோம் என்கிற துணிவில் விளாசித் தள்ளி இருக்கிறார் சட்டாம்பி. நாங்கள் கை தட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

சொன்ன கருத்தை வைத்து ஒரு  பிடி பிடித்தவுடன் அது சொந்த கருத்து என்று உதார் விட்டு ஆள்மாறும் மொள்ளமாரித்தனம் இருக்கும்வரை யார் எதுவேண்டுமானாலும் உளறலாம்.   

Link to comment
Share on other sites

இங்கு நல்ல விமரிசனங்களை முன் வைத்திருக்கிறார்கள். வரவேற்கத்தக்கது. இருந்தாலும் சிலருக்கு தேவையற்ற விமர்சனங்களை வைக்கவிடடாள் நித்திரையே வராது. 

Link to comment
Share on other sites

சுமந்திரனை நீக்கி விட்டு வரப்போகும் நபர் (அவர் எகஸ்(X) ஆக இருக‍்கலாம் Y ஆக இருக்கலாம்) எப்படி செயற்பட வேண்டும்  என்பதில் எமக்கு ஒரு தெளிவு இல்லை.  அது குறித்து நிழலி கேட்ட கேள்விக்கும் தெளிவான பதிலை இங்கு யாரும் வழங்கவும் இல்லை.  இன்று சுமந்திரன் தனது விருப்படி இப்படி செயற்படுவதற்கு காரணம் விடுதலை புலிகள் 2004 ம் ஆண்டில் விட்ட தவறு தான். 2004 ம் ஆண்டு விடுதலை புலிகளின் சிபார்சில் தமிழ்தேசிய கூட்டமைப்பில்   பாராளுமன்ற உறுப்பினர் ஆகியவர்களின் பட்டியலை எடுத்து பாருங்கள். எல்லோருமே டம்மி பீஸுகள்தான். சிறந்த ஆளுமைகளை அன்றே பாராளுமன்ற உறுப்பினர ஆக்கி இருந்தால் சம்பந்தர் தனது விருப்படி சுமந்திரனை கொண்டு வந்திருக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அந்த ஆளுமைகள் சம பலத்துடன் இருந்திருப்பார்கள். இராணுவரீதியில் ஜீனியஸ் ஆக விளங்கிய விடுதலைப்புலிகள் அரசியலில் அவ்வாறு நடந்து கொள்ள முயற்சிக்க கூட இல்லை.  அப்போது சரியாக நடந்திருந்தால் சுமந்திரன் போன்ற நபர்கள் இன்று எமது  அரசியலில் ஆதிக்கம் செலுத்து இருக்க முடியாது என்பது எனது கருத்து. 

அனைத்துலக மட்டத்தில் நடை பெற்ற முக்கிய பேச்சுவார்த்தை காலங்களில் யோகி, பாலகுமார் போன்ற  அரசியல் விற்பன்னர்களை அரசியல் துறை பொறுப்பாளராக நியமித்திருக்கலாம். சர்வதேச நாடுகளில் பத்திரிகை சந்திப்புகளில் என்றாலும் சரி ராஜ தந்திரிகளுடனான சந்திப்புகளிலும் சரி நேரடியாக அவர்களுடன் உரையாடி நட்பை வளர்த்து எனது பக்க நியாயங்களை புரிய வைக்கும்    திறமை வாய்ந்தவர்களை  அனுப்பி இருக்கலாம். இறுதியாக 2006  பெப்ரவரியில் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இணை தலைமை நாடுகளால் பாரிய அழுத்தம் கொடுக்கபட்டதை  அந்த நேரத்தில்  பேச்சுவார்த்தை குழுவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் அறிந்தேன்.  அந்த அழுத்தம் கிட்டத்தட்ட  1987 ல்  தலைவர் பிரபாகரனை டெல்லி மிரட்டியது போன்ற நிலை இருந்த‍தாக செய்திகள் வந்தன.    சர்வதேச நாடுகள் என்ன நிலைபாட்டில் இருக்கின்றன என்பது குறித்து சரியான தகவல்களை தலைமைக்கு அளிக்காமல் தலைமையையும் தளபதிகளையும் உசுப்பேற்றும் நடவடிக்கைகளே அந்த காலத்தில் எடுக்கபட்டது. எப்போது அடுத்த அடி என்பதே அப்போது  புலிகளின் ஐரோப்பிய கிளை உறுப்பினர்களின் அன்றாடப் பேச்சாக இருந்தது.  அந்த உசுப்பேத்தல்களை நம்புபவர்களாகவே அன்று எம்மை போன்ற சாதாரண மக்கள் இருந்தார்கள். 

 

( 2009 வரை விடுதலை போராட்டதிற்கு என்னாலான பங்களிப்பை செய்த பல ஆயிரம் மக்களின் ஒருவரான மனிதில் எழுந்த கேள்விகளே இவை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா துரைநாயகம் முதலில் சுத்துமாத்திரனுக்கு செம்பு தூக்குவதை விட்டிட்டு உங்களுக்கு வாக்கு போட்ட மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள்.

மூதூர் நகரத்திற்கு வருவதற்கான பாலம் இன்றோ நாளையோ என்று தொங்கிக் கொண்டிருக்கிறது, சோனகர்களை தாண்டி அரச தனியார் உதவிகள் தமிழ் பிரதேசங்களுக்கு வர பஞ்சிப்படுகிறது இப்படி பல.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தீர்வு பொதி என்டு பிரச்சாரம் செய்து கொன்டு வாக்கு கேட்டு வருபவர்களை ஓட விரட்ட வேணும்.மற்றது இப்படி இணையத்தில் உந்த அரசியல் வாதிகளை விரட்டுவதை விட தேர்தல் களத்தில ஏன் விரட்ட முடியாது உள்ளது.

Link to comment
Share on other sites

16 minutes ago, சுவைப்பிரியன் said:

முதலில் தீர்வு பொதி என்டு பிரச்சாரம் செய்து கொன்டு வாக்கு கேட்டு வருபவர்களை ஓட விரட்ட வேணும்.மற்றது இப்படி இணையத்தில் உந்த அரசியல் வாதிகளை விரட்டுவதை விட தேர்தல் களத்தில ஏன் விரட்ட முடியாது உள்ளது.

இணையத்தில் கை மட்டும் உறையும்....! தேர்தல் களத்தில் பையும் நிறையுமே...!! 😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சுமந்திரனை நீக்கி விட்டு வரப்போகும் நபர் (அவர் எகஸ்(X) ஆக இருக‍்கலாம் Y ஆக இருக்கலாம்) எப்படி செயற்பட வேண்டும்  என்பதில் எமக்கு ஒரு தெளிவு இல்லை.  அது குறித்து நிழலி கேட்ட கேள்விக்கும் தெளிவான பதிலை இங்கு யாரும் வழங்கவும் இல்லை.  இன்று சுமந்திரன் தனது விருப்படி இப்படி செயற்படுவதற்கு காரணம் விடுதலை புலிகள் 2004 ம் ஆண்டில் விட்ட தவறு தான். 2004 ம் ஆண்டு விடுதலை புலிகளின் சிபார்சில் தமிழ்தேசிய கூட்டமைப்பில்   பாராளுமன்ற உறுப்பினர் ஆகியவர்களின் பட்டியலை எடுத்து பாருங்கள். எல்லோருமே டம்மி பீஸுகள்தான். சிறந்த ஆளுமைகளை அன்றே பாராளுமன்ற உறுப்பினர ஆக்கி இருந்தால் சம்பந்தர் தனது விருப்படி சுமந்திரனை கொண்டு வந்திருக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அந்த ஆளுமைகள் சம பலத்துடன் இருந்திருப்பார்கள். இராணுவரீதியில் ஜீனியஸ் ஆக விளங்கிய விடுதலைப்புலிகள் அரசியலில் அவ்வாறு நடந்து கொள்ள முயற்சிக்க கூட இல்லை.  அப்போது சரியாக நடந்திருந்தால் சுமந்திரன் போன்ற நபர்கள் இன்று எமது  அரசியலில் ஆதிக்கம் செலுத்து இருக்க முடியாது என்பது எனது கருத்து. 

அனைத்துலக மட்டத்தில் நடை பெற்ற முக்கிய பேச்சுவார்த்தை காலங்களில் யோகி, பாலகுமார் போன்ற  அரசியல் விற்பன்னர்களை அரசியல் துறை பொறுப்பாளராக நியமித்திருக்கலாம். சர்வதேச நாடுகளில் பத்திரிகை சந்திப்புகளில் என்றாலும் சரி ராஜ தந்திரிகளுடனான சந்திப்புகளிலும் சரி நேரடியாக அவர்களுடன் உரையாடி நட்பை வளர்த்து எனது பக்க நியாயங்களை புரிய வைக்கும்    திறமை வாய்ந்தவர்களை  அனுப்பி இருக்கலாம். இறுதியாக 2006  பெப்ரவரியில் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இணை தலைமை நாடுகளால் பாரிய அழுத்தம் கொடுக்கபட்டதை  அந்த நேரத்தில்  பேச்சுவார்த்தை குழுவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் அறிந்தேன்.  அந்த அழுத்தம் கிட்டத்தட்ட  1987 ல்  தலைவர் பிரபாகரனை டெல்லி மிரட்டியது போன்ற நிலை இருந்த‍தாக செய்திகள் வந்தன.    சர்வதேச நாடுகள் என்ன நிலைபாட்டில் இருக்கின்றன என்பது குறித்து சரியான தகவல்களை தலைமைக்கு அளிக்காமல் தலைமையையும் தளபதிகளையும் உசுப்பேற்றும் நடவடிக்கைகளே அந்த காலத்தில் எடுக்கபட்டது. எப்போது அடுத்த அடி என்பதே அப்போது  புலிகளின் ஐரோப்பிய கிளை உறுப்பினர்களின் அன்றாடப் பேச்சாக இருந்தது.  அந்த உசுப்பேத்தல்களை நம்புபவர்களாகவே அன்று எம்மை போன்ற சாதாரண மக்கள் இருந்தார்கள். 

 

( 2009 வரை விடுதலை போராட்டதிற்கு என்னாலான பங்களிப்பை செய்த பல ஆயிரம் மக்களின் ஒருவரான மனிதில் எழுந்த கேள்விகளே இவை)

புலிகள்/தலைவர் தெரிந்தே தான் டம்மி பீசுகளை த.தே.கூ  அமைப்பில் இறக்கினார்கள் ...இவர்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கலாம் ...அடுத்தது தலைவருக்கு எப்பவுமே அரசியல் ரீதியான தீர்வுகளில் நம்பிக்கை இல்லை .

Link to comment
Share on other sites

17 hours ago, tulpen said:

எதிரியை தனது விவேகத்தால் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இருந்ததை வரலாற்றில் கூட நான்  அறியவில்லை. நரம்பு  புடைக்க கத்தி உசுப்பேற்றி கேட்போரை விசிலடிக்க வைத்துவிட்டு புஸ்வாணமாய் போவதே தமிழனின் விவேகம்.  

எதிரியை தனது வீரத்தாலும், விவேகத்தாலும் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் அன்றும் இருந்தது, இன்றும் கண்டோம். ஆனால் சூழ்ச்சியை வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அன்று எல்ளாளன், இன்று பிரபாகரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

எதிரியை தனது வீரத்தாலும், விவேகத்தாலும் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் அன்றும் இருந்தது, இன்றும் கண்டோம். ஆனால் சூழ்ச்சியை வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அன்று எல்ளாளன், இன்று பிரபாகரன்.

உண்மைதான்

Link to comment
Share on other sites

17 minutes ago, Paanch said:

எதிரியை தனது வீரத்தாலும், விவேகத்தாலும் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் அன்றும் இருந்தது, இன்றும் கண்டோம். ஆனால் சூழ்ச்சியை வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அன்று எல்ளாளன், இன்று பிரபாகரன்.

சூழ்சசியை வெற்றி கொள்வது தான் விவேகம். யுத்தத்தில் சூழ்சசி என்பது காலாகாலமாக இருந்து வந்த நடைமுறை தான்.  எதிரிகளை இனங்கண்டு அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து அவர்களை வெற்றி கொண்டு தமிழரின் இறைமையை நிலைநாட்டும்  திறமை சோழர்களிடம் கூட இருக்கவில்லை. 

எதிரி சூழ்சசிகள் செய்வான் என்பதை புரிந்து கொள்ளாதவன் விவேகம்  அற்றவன். 

Link to comment
Share on other sites

12 minutes ago, tulpen said:

எதிரி சூழ்சசிகள் செய்வான் என்பதை புரிந்து கொள்ளாதவன் விவேகம்  அற்றவன். 

ஒரு உண்மையான வீரனுக்குச் சூழ்ச்சி புரியத் தெரியாது. சூழ்ச்சியே தெரியாதவனுக்கு அதுபற்றிய விவேகம் எப்படிவரும்....?  உங்கள் கூற்று உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனே தேவையில்லை என்று சொல்லுது தமிழ் சனம். இவர் மூதூர் வாசி எதுக்கு இவ்வளவு முக்கு முக்கிறார். மூனாக்கு சுமந்திரன் மூக்கால் சிந்துவதாலா..??! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.