Jump to content

சுமந்திரன் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எப்.முபாரக் -

 

Thurainayagam.JPG


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் செவ்வியை முழுமையாக பார்வையிடாமலும் தெளிவான மொழிபெயர்ப்பை பெறாமலும் சுமந்திரன் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது என மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் (20) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சமூக வலைத்தள ஊடகம் ஒன்றிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் வழங்கப்பட்ட செவ்வி தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலைப்பாடு குறிப்பிட்ட செவ்வியை முழுமையாக பார்வையிடாமையினாலும், தவறான மொழிபெயர்ப்புடன் கூடிய குறிப்பிட்ட சில கேள்விகளுக்கான பதில்களில் உள்ள தெளிவற்ற புரிதலின் காரணமாக ஏற்பட்டுள்ளன. 

 

சமூக வலைத்தளங்களில் உலாவிய பொருத்தமற்ற முறையில் மொழிபெயர்க்கப்பட்ட குறிப்பிட்ட கானொளியே பலர் தங்கள் உணர்வினை வெளிப்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது. 

 

இந்த நேர்காணலை ஆரம்பத்தில் இருந்து பார்க்கும்போது நேர்கண்டவர் சிங்கள மக்களிடம் எதனை கொண்டு சேர்க்க முயல்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 

 எனினும் மிகத் தெளிவாகவும், திடமாகவும் யதார்த்த அரசியல்வாதியாக சுமந்திரன் அவர்கள் பதிலளித்திருந்தார். தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டு பயணிக்கும் நபராக, அவர் ஆயுதப் போராட்டத்தினுடைய பொறிமுறையினை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என யதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருந்தார். 

 

ஒர் உரிமைசார் ஆயுதப் போராட்டமானது தீர்வுக்காக அரசியல் மயப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், மூன்று தசாப்த காலங்களுக்கு மேல் நீடிக்காததையும் உலக வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டதனால் இதனை அடியொற்றியதான பதிலாக அதனை நாம் பார்க்க முடியும். 

 

சிறந்த சட்டத்தரணியான சுமந்திரன் அவர்கள் உணர்ச்சி அரசியலைத்தாண்டி நடைமுறைச் சாத்தியமான அரசியலை மேற்கொண்டு வரும் சிறந்த அரசியல்வாதி எனவும்,

தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வினை அரசின் அனுசரனையுடனேயே நாம் பெற்றுக் கொள்ள முடியும் அதற்கான அணுகுமுறையினை தமிழ் மக்களை பிரதிநிதுத்துவப்படுத்துகின்ற கட்சியின் பிரதிநிதிகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

 

 இலங்கையில் காலாகாலமாக மூவின மக்களும் இனம், மதம், மொழிகளுக்கு அப்பால் ஒற்றுமையாக, பரஸ்பர புரிந்துணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றார்கள். 

 

இந்நிலையில் தமிழ் மக்களும் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல மாறாக மறுக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற அவர்களுக்கான உரிமைகளைக் கோரியே அரசுடன் போராடி வருகின்றார்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். காலாகாலமாக தீர்வு என்ற விடையத்தில் தமிழ் மக்கள் அரசினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். 

 

ஒருசில கடும்போக்குவாதிகளினால் சிங்கள மக்கள் குழப்பமடையச் செய்யப்பட்டு வருகின்றமையினால் இந்நிலை தொடர்ந்து வருகின்றது. 

 

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய சொல்ல முடியாத இழப்புக்களையும், துயரங்களையும் மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு சிங்கள மக்களும் உணர்ந்து கொள்வார்கள். 

 

இதனால் தமிழ் மக்கள் தங்களை மீட்டெடுப்பதற்கு அவர்களுக்கான அதிகாரங்களுடன்கூடிய தீர்வு அவசியம் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள் எனவே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க சிங்கள மக்கள் அரசுக்கு ஆணையிட வேண்டும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!

-

http://www.importmirror.com/2020/05/blog-post_940.html

 

Link to comment
Share on other sites

1 minute ago, colomban said:

சுமந்திரன் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது என மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் (20) தெரிவித்துள்ளார்.

போலிக்கு துதிபாடும் துரைநாயகத்தின் விமர்சனம் தேவையற்றது.

Link to comment
Share on other sites

3 hours ago, colomban said:

இந்நிலையில் தமிழ் மக்களும் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல மாறாக மறுக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற அவர்களுக்கான உரிமைகளைக் கோரியே அரசுடன் போராடி வருகின்றார்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். காலாகாலமாக தீர்வு என்ற விடையத்தில் தமிழ் மக்கள் அரசினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். 

தமிழ் மக்கள் சிங்கள அரசுகளினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள் என்பது தெரிந்தும், ஏமாற்றும் அரசொன்றுக்கு முண்டுகொடுத்து காப்பாற்றிது ஏன்? புரியவில்லை??    

Link to comment
Share on other sites

19 minutes ago, Paanch said:

தமிழ் மக்கள் சிங்கள அரசுகளினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள் என்பது தெரிந்தும், ஏமாற்றும் அரசொன்றுக்கு முண்டுகொடுத்து காப்பாற்றிது ஏன்? புரியவில்லை??    

அப்ப என்ன செய்து இருக்க வேண்டும்? ரணிலின் ஆட்சியை கலைக்க உதவி செய்து விட்டு மகிந்த அண்ட் கோ வை அப்பவே கொண்டு வந்து இருக்க வேண்டுமா?

Link to comment
Share on other sites

17 minutes ago, Paanch said:

தமிழ் மக்கள் சிங்கள அரசுகளினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள் என்பது தெரிந்தும், ஏமாற்றும் அரசொன்றுக்கு முண்டுகொடுத்து காப்பாற்றிது ஏன்? புரியவில்லை??    

எல்லாம் எல்லோருக்கும் புரியாது. கொரோனா வைரஸ் முகமூடி போட்ட வைத்தியர்களையும் கொல்கிறதே? இன்னமும் முகமூடி போடுகிறீர்களா? இப்படியான கேள்விகள் அந்த துறைசார் வல்லுனர்கள் தவிர மற்றவர்களுக்கு பயனற்றவை - உங்கள் கேள்வியும் தான். உங்களுக்கு தேவையான பதில் இணைய செய்தித்தளங்களில் தாராளமாக உள்ளது, ஆனால் உங்களுக்கு புரியவில்லை என்று எழுதியுள்ளீர்கள், அது உண்மை. இது புரிவதற்கு சிக்கலான விடயம். எல்லாம் எல்லோருக்கும் புரியாது.

Link to comment
Share on other sites

3 minutes ago, நிழலி said:

அப்ப என்ன செய்து இருக்க வேண்டும்? ரணிலின் ஆட்சியை கலைக்க உதவி செய்து விட்டு மகிந்த அண்ட் கோ வை அப்பவே கொண்டு வந்து இருக்க வேண்டுமா?

சந்தர்ப்பம் பேரம் பேசிக் காப்பாற்றுவதற்கு இருந்ததல்லவா....

Link to comment
Share on other sites

2 minutes ago, Paanch said:

சந்தர்ப்பம் பேரம் பேசிக் காப்பாற்றுவதற்கு இருந்ததல்லவா....

அந்தளவுக்கு எல்லாம் ராச தந்திரம் எல்லாம் எங்கள் தமிழ் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்திருந்தால் ஆயுதப் போராட்டம் கூட நிகழ்ந்து இருக்காது.

Link to comment
Share on other sites

11 minutes ago, நிழலி said:

அந்தளவுக்கு எல்லாம் ராச தந்திரம் எல்லாம் எங்கள் தமிழ் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்திருந்தால் ஆயுதப் போராட்டம் கூட நிகழ்ந்து இருக்காது.

தாரமும், குருவும், அரசியல்வாதிகளும் தலைவிதிப்படி என்று புது மொழி எழுதவேண்டும். 😩

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

அந்தளவுக்கு எல்லாம் ராச தந்திரம் எல்லாம் எங்கள் தமிழ் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்திருந்தால் ஆயுதப் போராட்டம் கூட நிகழ்ந்து இருக்காது.

எதிரியை தனது விவேகத்தால் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இருந்ததை வரலாற்றில் கூட நான்  அறியவில்லை. நரம்பு  புடைக்க கத்தி உசுப்பேற்றி கேட்போரை விசிலடிக்க வைத்துவிட்டு புஸ்வாணமாய் போவதே தமிழனின் விவேகம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அல்ல, சுமந்திரனின் இடத்தில் யார் தற்போது இருந்தாலும் அவதூறுகள் வந்த வண்ணமே அமையும். உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்பமுடியாது.

பெருத்த எடுப்பில் கற்பனைகளை வளர்த்துவிட்டு எதிர்பார்ப்புக்கள், ஏமாற்றங்களால் நொந்து போனவர்கள் மனதை யதார்த்த அரசியல் செயற்பாடுகள் சாந்தி அடையவைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது. 

சுமந்திரன் மீதான பாய்ச்சல் ஒரு தனிநபர் மீதான தாக்குதல் என்று எடுக்கப்படாது ஏமாற்றங்கள் நிறைந்த ஒரு சமூகம் தனது இயலாமையை வெளிப்படுத்தும் செயற்பாடு என்று எடுத்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சுமத்திரனை போன்று சிந்தித்து தான் செர்.பொன் ராமநாதன் போன்றோர் ஐக்கிய இலங்கையை அன்று வரவேற்றனர் .....அதை ஒழுங்காக நடத்த தெரியாத சிங்களபெளத்த அரசியல்வாதிகள் இப்பொழுது ஐக்கியம் பற்றி பேசுகிறார்கள்....ஆயிரம் ராமனாதங்கள்,ஆயிரம் சுமத்திரன் கள்,ஆயிரம் ஆயிரம் தமிழ்தேச நேசக்  கரங்கள் உருவானாலும் சிங்கள மக்களின் பிரநிதிகளிடமிருந்து  அந்த நேசக்கரத்தை பிடிக்க ஒரு அரசியல்வாதியும் முன்வரப்போவதில்லை....
நேசக்கரத்தை பிடித்தால் வாக்குகளை இழக்க வேண்டும்.....நேசக்கரத்தை உதறிதள்ளினால் அமோக வாக்குகள் ....நான்  அனுபவத்தில் கண்ட உண்மை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

பெருத்த எடுப்பில் கற்பனைகளை வளர்த்துவிட்டு எதிர்பார்ப்புக்கள், ஏமாற்றங்களால் நொந்து போனவர்கள் மனதை யதார்த்த அரசியல் செயற்பாடுகள் சாந்தி அடையவைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது. 

கற்பனை உலகில் கோட்டை கட்டிய அவர்களை சாந்தி அடையவைக்க வேண்டுமானால் தொடர்ந்தும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி நரம்பு  புடைக்க பேசி நடித்து ஏமாற்ற வேண்டும்.
உண்மை நியையை ஏற்று கொண்டு கனவு உலகில் இருந்து அவர்கள் வெளிவருவது தான் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு விளக்கம் கொடுத்து வாக்கு வங்கிக்கு தயாராகினம். கட்சி தலைவருக்கும் விளங்கவில்லை, உறுப்பினர்களுக்கும் விளங்கவில்லை. அப்போ; புரியாத மொழியில் பேசுகிறோம் என்கிற துணிவில் விளாசித் தள்ளி இருக்கிறார் சட்டாம்பி. நாங்கள் கை தட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஆளாளுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு விளக்கம் கொடுத்து வாக்கு வங்கிக்கு தயாராகினம். கட்சி தலைவருக்கும் விளங்கவில்லை, உறுப்பினர்களுக்கும் விளங்கவில்லை. அப்போ; புரியாத மொழியில் பேசுகிறோம் என்கிற துணிவில் விளாசித் தள்ளி இருக்கிறார் சட்டாம்பி. நாங்கள் கை தட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

சொன்ன கருத்தை வைத்து ஒரு  பிடி பிடித்தவுடன் அது சொந்த கருத்து என்று உதார் விட்டு ஆள்மாறும் மொள்ளமாரித்தனம் இருக்கும்வரை யார் எதுவேண்டுமானாலும் உளறலாம்.   

Link to comment
Share on other sites

இங்கு நல்ல விமரிசனங்களை முன் வைத்திருக்கிறார்கள். வரவேற்கத்தக்கது. இருந்தாலும் சிலருக்கு தேவையற்ற விமர்சனங்களை வைக்கவிடடாள் நித்திரையே வராது. 

Link to comment
Share on other sites

சுமந்திரனை நீக்கி விட்டு வரப்போகும் நபர் (அவர் எகஸ்(X) ஆக இருக‍்கலாம் Y ஆக இருக்கலாம்) எப்படி செயற்பட வேண்டும்  என்பதில் எமக்கு ஒரு தெளிவு இல்லை.  அது குறித்து நிழலி கேட்ட கேள்விக்கும் தெளிவான பதிலை இங்கு யாரும் வழங்கவும் இல்லை.  இன்று சுமந்திரன் தனது விருப்படி இப்படி செயற்படுவதற்கு காரணம் விடுதலை புலிகள் 2004 ம் ஆண்டில் விட்ட தவறு தான். 2004 ம் ஆண்டு விடுதலை புலிகளின் சிபார்சில் தமிழ்தேசிய கூட்டமைப்பில்   பாராளுமன்ற உறுப்பினர் ஆகியவர்களின் பட்டியலை எடுத்து பாருங்கள். எல்லோருமே டம்மி பீஸுகள்தான். சிறந்த ஆளுமைகளை அன்றே பாராளுமன்ற உறுப்பினர ஆக்கி இருந்தால் சம்பந்தர் தனது விருப்படி சுமந்திரனை கொண்டு வந்திருக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அந்த ஆளுமைகள் சம பலத்துடன் இருந்திருப்பார்கள். இராணுவரீதியில் ஜீனியஸ் ஆக விளங்கிய விடுதலைப்புலிகள் அரசியலில் அவ்வாறு நடந்து கொள்ள முயற்சிக்க கூட இல்லை.  அப்போது சரியாக நடந்திருந்தால் சுமந்திரன் போன்ற நபர்கள் இன்று எமது  அரசியலில் ஆதிக்கம் செலுத்து இருக்க முடியாது என்பது எனது கருத்து. 

அனைத்துலக மட்டத்தில் நடை பெற்ற முக்கிய பேச்சுவார்த்தை காலங்களில் யோகி, பாலகுமார் போன்ற  அரசியல் விற்பன்னர்களை அரசியல் துறை பொறுப்பாளராக நியமித்திருக்கலாம். சர்வதேச நாடுகளில் பத்திரிகை சந்திப்புகளில் என்றாலும் சரி ராஜ தந்திரிகளுடனான சந்திப்புகளிலும் சரி நேரடியாக அவர்களுடன் உரையாடி நட்பை வளர்த்து எனது பக்க நியாயங்களை புரிய வைக்கும்    திறமை வாய்ந்தவர்களை  அனுப்பி இருக்கலாம். இறுதியாக 2006  பெப்ரவரியில் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இணை தலைமை நாடுகளால் பாரிய அழுத்தம் கொடுக்கபட்டதை  அந்த நேரத்தில்  பேச்சுவார்த்தை குழுவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் அறிந்தேன்.  அந்த அழுத்தம் கிட்டத்தட்ட  1987 ல்  தலைவர் பிரபாகரனை டெல்லி மிரட்டியது போன்ற நிலை இருந்த‍தாக செய்திகள் வந்தன.    சர்வதேச நாடுகள் என்ன நிலைபாட்டில் இருக்கின்றன என்பது குறித்து சரியான தகவல்களை தலைமைக்கு அளிக்காமல் தலைமையையும் தளபதிகளையும் உசுப்பேற்றும் நடவடிக்கைகளே அந்த காலத்தில் எடுக்கபட்டது. எப்போது அடுத்த அடி என்பதே அப்போது  புலிகளின் ஐரோப்பிய கிளை உறுப்பினர்களின் அன்றாடப் பேச்சாக இருந்தது.  அந்த உசுப்பேத்தல்களை நம்புபவர்களாகவே அன்று எம்மை போன்ற சாதாரண மக்கள் இருந்தார்கள். 

 

( 2009 வரை விடுதலை போராட்டதிற்கு என்னாலான பங்களிப்பை செய்த பல ஆயிரம் மக்களின் ஒருவரான மனிதில் எழுந்த கேள்விகளே இவை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா துரைநாயகம் முதலில் சுத்துமாத்திரனுக்கு செம்பு தூக்குவதை விட்டிட்டு உங்களுக்கு வாக்கு போட்ட மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள்.

மூதூர் நகரத்திற்கு வருவதற்கான பாலம் இன்றோ நாளையோ என்று தொங்கிக் கொண்டிருக்கிறது, சோனகர்களை தாண்டி அரச தனியார் உதவிகள் தமிழ் பிரதேசங்களுக்கு வர பஞ்சிப்படுகிறது இப்படி பல.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தீர்வு பொதி என்டு பிரச்சாரம் செய்து கொன்டு வாக்கு கேட்டு வருபவர்களை ஓட விரட்ட வேணும்.மற்றது இப்படி இணையத்தில் உந்த அரசியல் வாதிகளை விரட்டுவதை விட தேர்தல் களத்தில ஏன் விரட்ட முடியாது உள்ளது.

Link to comment
Share on other sites

16 minutes ago, சுவைப்பிரியன் said:

முதலில் தீர்வு பொதி என்டு பிரச்சாரம் செய்து கொன்டு வாக்கு கேட்டு வருபவர்களை ஓட விரட்ட வேணும்.மற்றது இப்படி இணையத்தில் உந்த அரசியல் வாதிகளை விரட்டுவதை விட தேர்தல் களத்தில ஏன் விரட்ட முடியாது உள்ளது.

இணையத்தில் கை மட்டும் உறையும்....! தேர்தல் களத்தில் பையும் நிறையுமே...!! 😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சுமந்திரனை நீக்கி விட்டு வரப்போகும் நபர் (அவர் எகஸ்(X) ஆக இருக‍்கலாம் Y ஆக இருக்கலாம்) எப்படி செயற்பட வேண்டும்  என்பதில் எமக்கு ஒரு தெளிவு இல்லை.  அது குறித்து நிழலி கேட்ட கேள்விக்கும் தெளிவான பதிலை இங்கு யாரும் வழங்கவும் இல்லை.  இன்று சுமந்திரன் தனது விருப்படி இப்படி செயற்படுவதற்கு காரணம் விடுதலை புலிகள் 2004 ம் ஆண்டில் விட்ட தவறு தான். 2004 ம் ஆண்டு விடுதலை புலிகளின் சிபார்சில் தமிழ்தேசிய கூட்டமைப்பில்   பாராளுமன்ற உறுப்பினர் ஆகியவர்களின் பட்டியலை எடுத்து பாருங்கள். எல்லோருமே டம்மி பீஸுகள்தான். சிறந்த ஆளுமைகளை அன்றே பாராளுமன்ற உறுப்பினர ஆக்கி இருந்தால் சம்பந்தர் தனது விருப்படி சுமந்திரனை கொண்டு வந்திருக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அந்த ஆளுமைகள் சம பலத்துடன் இருந்திருப்பார்கள். இராணுவரீதியில் ஜீனியஸ் ஆக விளங்கிய விடுதலைப்புலிகள் அரசியலில் அவ்வாறு நடந்து கொள்ள முயற்சிக்க கூட இல்லை.  அப்போது சரியாக நடந்திருந்தால் சுமந்திரன் போன்ற நபர்கள் இன்று எமது  அரசியலில் ஆதிக்கம் செலுத்து இருக்க முடியாது என்பது எனது கருத்து. 

அனைத்துலக மட்டத்தில் நடை பெற்ற முக்கிய பேச்சுவார்த்தை காலங்களில் யோகி, பாலகுமார் போன்ற  அரசியல் விற்பன்னர்களை அரசியல் துறை பொறுப்பாளராக நியமித்திருக்கலாம். சர்வதேச நாடுகளில் பத்திரிகை சந்திப்புகளில் என்றாலும் சரி ராஜ தந்திரிகளுடனான சந்திப்புகளிலும் சரி நேரடியாக அவர்களுடன் உரையாடி நட்பை வளர்த்து எனது பக்க நியாயங்களை புரிய வைக்கும்    திறமை வாய்ந்தவர்களை  அனுப்பி இருக்கலாம். இறுதியாக 2006  பெப்ரவரியில் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இணை தலைமை நாடுகளால் பாரிய அழுத்தம் கொடுக்கபட்டதை  அந்த நேரத்தில்  பேச்சுவார்த்தை குழுவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் அறிந்தேன்.  அந்த அழுத்தம் கிட்டத்தட்ட  1987 ல்  தலைவர் பிரபாகரனை டெல்லி மிரட்டியது போன்ற நிலை இருந்த‍தாக செய்திகள் வந்தன.    சர்வதேச நாடுகள் என்ன நிலைபாட்டில் இருக்கின்றன என்பது குறித்து சரியான தகவல்களை தலைமைக்கு அளிக்காமல் தலைமையையும் தளபதிகளையும் உசுப்பேற்றும் நடவடிக்கைகளே அந்த காலத்தில் எடுக்கபட்டது. எப்போது அடுத்த அடி என்பதே அப்போது  புலிகளின் ஐரோப்பிய கிளை உறுப்பினர்களின் அன்றாடப் பேச்சாக இருந்தது.  அந்த உசுப்பேத்தல்களை நம்புபவர்களாகவே அன்று எம்மை போன்ற சாதாரண மக்கள் இருந்தார்கள். 

 

( 2009 வரை விடுதலை போராட்டதிற்கு என்னாலான பங்களிப்பை செய்த பல ஆயிரம் மக்களின் ஒருவரான மனிதில் எழுந்த கேள்விகளே இவை)

புலிகள்/தலைவர் தெரிந்தே தான் டம்மி பீசுகளை த.தே.கூ  அமைப்பில் இறக்கினார்கள் ...இவர்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கலாம் ...அடுத்தது தலைவருக்கு எப்பவுமே அரசியல் ரீதியான தீர்வுகளில் நம்பிக்கை இல்லை .

Link to comment
Share on other sites

17 hours ago, tulpen said:

எதிரியை தனது விவேகத்தால் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இருந்ததை வரலாற்றில் கூட நான்  அறியவில்லை. நரம்பு  புடைக்க கத்தி உசுப்பேற்றி கேட்போரை விசிலடிக்க வைத்துவிட்டு புஸ்வாணமாய் போவதே தமிழனின் விவேகம்.  

எதிரியை தனது வீரத்தாலும், விவேகத்தாலும் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் அன்றும் இருந்தது, இன்றும் கண்டோம். ஆனால் சூழ்ச்சியை வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அன்று எல்ளாளன், இன்று பிரபாகரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

எதிரியை தனது வீரத்தாலும், விவேகத்தாலும் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் அன்றும் இருந்தது, இன்றும் கண்டோம். ஆனால் சூழ்ச்சியை வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அன்று எல்ளாளன், இன்று பிரபாகரன்.

உண்மைதான்

Link to comment
Share on other sites

17 minutes ago, Paanch said:

எதிரியை தனது வீரத்தாலும், விவேகத்தாலும் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் அன்றும் இருந்தது, இன்றும் கண்டோம். ஆனால் சூழ்ச்சியை வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அன்று எல்ளாளன், இன்று பிரபாகரன்.

சூழ்சசியை வெற்றி கொள்வது தான் விவேகம். யுத்தத்தில் சூழ்சசி என்பது காலாகாலமாக இருந்து வந்த நடைமுறை தான்.  எதிரிகளை இனங்கண்டு அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து அவர்களை வெற்றி கொண்டு தமிழரின் இறைமையை நிலைநாட்டும்  திறமை சோழர்களிடம் கூட இருக்கவில்லை. 

எதிரி சூழ்சசிகள் செய்வான் என்பதை புரிந்து கொள்ளாதவன் விவேகம்  அற்றவன். 

Link to comment
Share on other sites

12 minutes ago, tulpen said:

எதிரி சூழ்சசிகள் செய்வான் என்பதை புரிந்து கொள்ளாதவன் விவேகம்  அற்றவன். 

ஒரு உண்மையான வீரனுக்குச் சூழ்ச்சி புரியத் தெரியாது. சூழ்ச்சியே தெரியாதவனுக்கு அதுபற்றிய விவேகம் எப்படிவரும்....?  உங்கள் கூற்று உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனே தேவையில்லை என்று சொல்லுது தமிழ் சனம். இவர் மூதூர் வாசி எதுக்கு இவ்வளவு முக்கு முக்கிறார். மூனாக்கு சுமந்திரன் மூக்கால் சிந்துவதாலா..??! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.