Jump to content

ஊழியர்களின் எதிர்ப்பால் தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்


Recommended Posts

625.183.560.350.160.300.053.800.330.160.

கொரோனா வைரஸ் நோயில் இருந்து தற்காத்து கொள்வதற்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய தனது மகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் நேற்றும் நேற்று முன்தினமும் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் புதல்வி, ஹொட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனுமதி அடிப்படையில் நேற்று முன்தினம் ஹொட்டலில் இருந்து வெளியேறினார்.

தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.

இது குறித்த தகவலை அறிந்துக்கொண்டதும் தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்கள் நேற்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து சிரேஷ்ட அதிகாரிகள் தலையிட்டு அவர்களை தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர்.\

safe.png

14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தனிமைபபடுத்தல் சட்டத்தை மீறி பேராசிரியர் ஹூல் தனது புதல்வியை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வந்ததன் மூலம் தினமும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வரும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை ஆபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் அவரது புதல்வி ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்களின் எதிர்ப்பை அடுத்து நேற்று மதியம் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியதாகவும் இதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் முற்றாக கிருமி தொற்று நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் இன்று நடைபெறும் தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் பேராசிரியரை வீடியோ தொழிற்நுட்பத்தின் மூலம் கலந்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/246501?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

1 hour ago, Gowin said:

தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.

சாதாரண மக்களுக்கு மட்டும் தான் விதிமுறைகள், அதுவும் சுகாதார விதிமுறைகள் என எண்ணும் இவர்களை படித்த முட்டாள்கள் என்று சொல்வதா? இல்லை தலைக்கனம் பிடித்தவர்கள் என்று சொல்வதா? 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டுமென்றே தலைப்புகள் தவறாக வைக்கப்படுகின்றனவா?

ஆணக்குழுவில் இருந்து வெளியேறுவது வேறு. ஆணைக்குழு அலுவலகத்தில் இருந்து வெளியேறுவது வேறு.

இரண்டுக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது என்பதை தமிழவின் செய்தியாளருக்கு தெரியவில்லையோ.

செய்தியை பார்த்தால் ஆணைக்குழு அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 🥺

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

சாதாரண மக்களுக்கு மட்டும் தான் விதிமுறைகள், அதுவும் சுகாதார விதிமுறைகள் என எண்ணும் இவர்களை படித்த முட்டாள்கள் என்று சொல்வதா? இல்லை தலைக்கனம் பிடித்தவர்கள் என்று சொல்வதா? 
 

செத்த வீட்டில் கூட தானே பிணமாக இருந்து மற்றவர்களின் முக்கியத்துவத்தை தான் பெற நினைக்கும் கூட்டத்தில் இருப்பவர் இந்த பேராசிரியர். காலகாலமாக தமிழ் மக்களின் போராட்டத்துக்கு எதிராக கதைத்து சிங்களத்துக்கு வக்காளத்து வாங்கியவர். இவரிடம் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Gowin said:

safe.png

இடை இடையே கோரோனோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் யாழ் களம் பாராட்டுக்குரியது..👍

Link to comment
Share on other sites

6 hours ago, Gowin said:

தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.

பனை முறிந்த படியாதான் கூல் பாதை மாறி மகளை தேர்தல் அலுவலகம் கூட்டி போயிருக்கார். 

அதுவும் கூல் பேமிலிக்கே கொரோனா தொற்றாது என தெரிஞ்ச பிறகும் தனிமைப்படுத்துறது கூடாது. 

தேர்தல் அலுவலகத்தில இருக்கிற புலி ஆதரவாளர்கள் சும்ம்மா  சும்ம்மா கூல் மேல குறை சொல்ல கூடாது. 
 

Link to comment
Share on other sites

13 hours ago, ampanai said:

சாதாரண மக்களுக்கு மட்டும் தான் விதிமுறைகள், அதுவும் சுகாதார விதிமுறைகள் என எண்ணும் இவர்களை படித்த முட்டாள்கள் என்று சொல்வதா? இல்லை தலைக்கனம் பிடித்தவர்கள் என்று சொல்வதா? 
 

மேலே செய்தியில் 14 நாட்கள் ஹோட்டலில் தனிப்படுத்தலுக்கு பின்னர் மேலதிக தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்வதாக எழுதப்பட்டுள்ளது. அதில் தவறிருப்பதாக தெரியவில்லை. எனவே சில காரணங்களை வைத்துக்கொண்டு நேர்மையான பேராசிரியரை தாக்குவது நல்லதல்ல. 

Link to comment
Share on other sites

20 minutes ago, Vankalayan said:

மேலே செய்தியில் 14 நாட்கள் ஹோட்டலில் தனிப்படுத்தலுக்கு பின்னர் மேலதிக தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்வதாக எழுதப்பட்டுள்ளது. அதில் தவறிருப்பதாக தெரியவில்லை. எனவே சில காரணங்களை வைத்துக்கொண்டு நேர்மையான பேராசிரியரை தாக்குவது நல்லதல்ல. 

இல்லை, நீங்கள் இந்த பகுதியை வசிக்கவில்லை : " வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் புதல்வி, ஹொட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனுமதி அடிப்படையில் நேற்று முன்தினம் ஹொட்டலில் இருந்து வெளியேறினார்

பின்னர் இதை செய்துள்ளார் :

"தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்."

Link to comment
Share on other sites

4 minutes ago, ampanai said:

இல்லை, நீங்கள் இந்த பகுதியை வசிக்கவில்லை : " வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் புதல்வி, ஹொட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனுமதி அடிப்படையில் நேற்று முன்தினம் ஹொட்டலில் இருந்து வெளியேறினார்

பின்னர் இதை செய்துள்ளார் :

"தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்."

எப்படி இருந்தாலும் தனிமைப்படுத்தல் 14 நாட்கள்தான். மேலும் 14 நாட்கள்  மேலதிகமாக கேட்டிருக்கிறார்கள். அது எப்படி என்று தெரியவில்லை. அவருக்கு வழங்கப்படட அவரது அலுவலக வாகனத்தில் போய் இருப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. 
 
இங்குள்ள அதிகாரிகளுக்கு ஒரு வாகனமும், குடும்பத்துக்கு ஒரு வாகனமும் இருக்கும்போது இது தவறில்லை. அப்படி என்றால் சடட நடவடிக்கை எடுக்கலாம். இங்கு நிறைய அரசியல் காரணங்களுக்காக இதை எல்லாம் பெரிது படுத்துகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை. 

Link to comment
Share on other sites

3 minutes ago, Vankalayan said:

எப்படி இருந்தாலும் தனிமைப்படுத்தல் 14 நாட்கள்தான். மேலும் 14 நாட்கள்  மேலதிகமாக கேட்டிருக்கிறார்கள். அது எப்படி என்று தெரியவில்லை. அவருக்கு வழங்கப்படட அவரது அலுவலக வாகனத்தில் போய் இருப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. 

"தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்."

 

வாகனத்தில் ஏறி அலுவலகம் வந்துள்ளார். அதுதான் தவறு 

Link to comment
Share on other sites

Just now, ampanai said:

"தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்."

 

வாகனத்தில் ஏறி அலுவலகம் வந்துள்ளார். அதுதான் தவறு 

14 நாட்கள் முடிந்துதான் அங்கு போய் இருக்கிறார். எனவே அது ஒரு பிரச்சினையே இல்லை. எல்லாம் ஒரு அரசியல் காரணத்துக்காகத்தான். அவருக்கும் மற்றைய இருவருக்கும் பிரச்சினை இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Vankalayan said:

14 நாட்கள் முடிந்துதான் அங்கு போய் இருக்கிறார். எனவே அது ஒரு பிரச்சினையே இல்லை. எல்லாம் ஒரு அரசியல் காரணத்துக்காகத்தான். அவருக்கும் மற்றைய இருவருக்கும் பிரச்சினை இருக்கிறது. 

நீங்களே குற்றம் சாட்டி , எதிராளிக்கு ஆதரவாக ஆஜராகி , பின்னர் நியாயத் தீர்ப்பையும் வழங்கும் ஒரு கிளாசிக் உதாரணமாகவெல்லோ இது இருக்கு ..
அவர் 14 நாட்கள் அல்ல கூடுதலாக 40 நாட்கள் தன்னும் மேலதிகமாவோ அன்றி அல்லாமலோ தனிமைப்படுத்தப் பட வேண்டும் என்று இருந்தால் , அவரை நேரடியாக தனிமைப்படுத்தும் இடத்தை தவிர வேறு எங்கேயும் கொண்டு செல்வது மிகவும் தப்பான செயல் .
இதற்கு சமாந்தரமான முறையில் செயல் பட்டிருந்த அவுஸ்திரேலியா , நியூசீலாந்து நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்திருக்கின்றார்கள் ..
இப்படியான முன்னுதாரணங்கள் எல்லாம் எங்களுக்கு அந்நியமான செயல்பாடுகள் என்பது தான் கவலைக்குரிய விடயம் , என்ன செய்யலாம் , இளைத்துப் போவதைத் தவிர ...      

        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சிறீலங்காவில் தற்போது தனிமைப்படுத்தல் 28 நாட்கள் 

4 hours ago, Vankalayan said:

14 நாட்கள் முடிந்துதான் அங்கு போய் இருக்கிறார். எனவே அது ஒரு பிரச்சினையே இல்லை. எல்லாம் ஒரு அரசியல் காரணத்துக்காகத்தான். அவருக்கும் மற்றைய இருவருக்கும் பிரச்சினை இருக்கிறது. 

 

Quote

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் புதல்வி, ஹொட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனுமதி அடிப்படையில் நேற்று முன்தினம் ஹொட்டலில் இருந்து வெளியேறினார்.

தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.

 

அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதே

1) 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தல்

2) யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லல்

என்ற அடிப்படையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவருக்கு படிச்ச அளவுக்கு மூளை வேலை செய்யுதில்லை.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதுக்கு மகளை இழுத்திக்கிட்டு திரியனும்..??! அவாவுக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் என்ன தொடர்ப்பு..??!

அசாதாரண வேளையில் அசாதாரண நடத்தை.. இது படிச்ச மனுசர் செய்யுற செயற்பாடா..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சிறீலங்காவில் தற்போது தனிமைப்படுத்தல் 28 நாட்கள் 

———

1) 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தல்

2) யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லல்

என்ற அடிப்படையில்

மீரா..... 14 நாட்கள் அவரின் மகள், வீட்டில் தனிமைப் படுத்தப் படவில்லை என்ற விடயம்... தேர்தல் ஆணைக்குழு அலுவலர்களுக்கு எப்படி தெரிந்தது? 🔎

வெளி நாட்டில் இருந்து வந்தவர்களை.... 😷அடையாளம் காண, ஏதாவது வித்தியாசமன ஏற்பாடுகள்... அங்கு நடைமுறையில் உள்ளதா?  🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

மீரா..... 14 நாட்கள் அவரின் மகள், வீட்டில் தனிமைப் படுத்தப் படவில்லை என்ற விடயம்... தேர்தல் ஆணைக்குழு அலுவலர்களுக்கு எப்படி தெரிந்தது? 🔎

வெளி நாட்டில் இருந்து வந்தவர்களை.... 😷அடையாளம் காண, ஏதாவது வித்தியாசமன ஏற்பாடுகள்... அங்கு நடைமுறையில் உள்ளதா?  🙂

அண்ணா உங்களுக்கு இந்த செய்தி ஞாபகம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அழைத்து வரப்பட்டது இப்படியானவர்களின் பிள்ளைகள்

 

மேலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் அரசாங்கத்தால் தனிமைப்படுத்தல்

 

May 3ம் திகதி வரை அரச தனியார் கட்டடங்களில் தங்கவைக்கப்படனர், ஆனால் May 4ம் திகதி வந்தவர்கள் நட்சத்திர விடுதிகளில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

உவருக்கு படிச்ச அளவுக்கு மூளை வேலை செய்யுதில்லை.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதுக்கு மகளை இழுத்திக்கிட்டு திரியனும்..??! அவாவுக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் என்ன தொடர்ப்பு..??!

அசாதாரண வேளையில் அசாதாரண நடத்தை.. இது படிச்ச மனுசர் செய்யுற செயற்பாடா..??!

மகளை அரசியலில் இறக்கப் போறாரோ ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அண்ணா உங்களுக்கு இந்த செய்தி ஞாபகம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அழைத்து வரப்பட்டது இப்படியானவர்களின் பிள்ளைகள்

மேலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் அரசாங்கத்தால் தனிமைப்படுத்தல்

May 3ம் திகதி வரை அரச தனியார் கட்டடங்களில் தங்கவைக்கப்படனர், ஆனால் May 4ம் திகதி வந்தவர்கள் நட்சத்திர விடுதிகளில்

ஆம் மீரா.... அந்தச் செய்திகளை, வாசித்திருந்தேன்.
எனக்கென்னவோ.... ரட்ணஜீவன் ஹூல்தான், 
தன்னுடை மகள்.... "லண்டனில் இருந்து, வந்திருக்கிறா" என்று  ஊழியர்களிடம் சொல்லி...
மாட்டுப் பட்டுப் போனார் போலை... கிடக்குது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

மகளை அரசியலில் இறக்கப் போறாரோ ?

இவரே... இன்னும் அரசியலில், குதிக்க முடியாமல்... 
கரையில் நின்று நோட்டம் விட்டுக்  கொண்டிருக்கிறார்.
அதுக்குள்ளை... மகளை, இறக்கப் போகிறாரா.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மகளை அரசியலில் இறக்கப் போறாரோ ?
 

உவரே அரசியலுக்கு வர இயலாது.. இவர் ஒரு அமெரிக்க பிரஜையும் கூட. இதுக்க மகள்.

மேலும் இவர் இவரின் மனைவி அளவுக்கு கூட தமிழர் விவகாரப் பற்றில்லாதவர் போல் தான் திரிந்தார். இப்ப இவரின் சகோதரரின் அடியை ஒற்றி.. சனநாயகம்.. மனித உரிமை மீறல் என்று சொல்லித் திரிகிறார். வெட்டிப் புகழுக்கு தான். 

ஏலவே டக்கி மாமாவோடு மனித உரிமை மீறல் குற்றம்சாட்டப் போய் டக்கி மாமா தன் பாணியில் தன் சிங்களப் பொலிஸ் அரசியல் செல்வாக்கை.. விளையாட்டக் காட்ட இவர் நாட்டை விட்டு ஓடினவர். அடிக்கடி நாட்டை விட்டு ஓடுவார். இதில அரசியல்.. ஐயோ ஐயோ..??! 

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

ஏலவே டக்கி மாமாவோடு மனித உரிமை மீறல் குற்றம்சாட்டப் போய் டக்கி மாமா தன் பாணியில் தன் சிங்களப் பொலிஸ் அரசியல் செல்வாக்கை.. விளையாட்டக் காட்ட இவர் நாட்டை விட்டு ஓடினவர். அடிக்கடி நாட்டை விட்டு ஓடுவார். இதில அரசியல்.. ஐயோ ஐயோ..??! 

சும்மா இல்ல துண்டை காணம் துணியைக் காணம் என்டு ஓடினர். ஆள மிரட்டி ஓடவைச்சது மகிந்த.

Link to comment
Share on other sites

18 hours ago, MEERA said:

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சிறீலங்காவில் தற்போது தனிமைப்படுத்தல் 28 நாட்கள் 

 

 

அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதே

1) 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தல்

2) யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லல்

என்ற அடிப்படையில்

 

18 hours ago, MEERA said:

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சிறீலங்காவில் தற்போது தனிமைப்படுத்தல் 28 நாட்கள் 

 

 

அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதே

1) 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தல்

2) யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லல்

என்ற அடிப்படையில்

நீங்கள் என்னதான் எழுதினாலும் இங்கு அரசியல் பிரச்சினையே ஒழிய வேறொன்றும் இல்லை. அது தமிழர்களிடமிருந்து வரலாம், சிங்களவர்களிடம் இருந்தும் வரலாம்.

இங்கு இவர் ஹோட்டலுக்கு உரிய பணம் வழங்கி, சுகாதார , ராணுவ அதிகாரிகளின் சான்றுப்பத்திரத்துடன்தான் அங்கு சென்றிருக்கிறார். இது பற்றி வீரகேசரி பத்திரகையில் ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதை வாசித்தால் உங்களுக்கு விளங்கும்.

இவரை தமிழர்களோ , சிங்களவர்களோ எதிர்ப்பதட்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று எந்த பயங்கரவாத அமைப்புக்கும் அஞ்சாதவர். மற்றது அரசியல் பலத்துக்கு அடிபணியாதவர். இதட்கு மேலே எழுத ஒன்றுமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Vankalayan said:

 ஒன்று எந்த பயங்கரவாத அமைப்புக்கும் அஞ்சாதவர். மற்றது அரசியல் பலத்துக்கு அடிபணியாதவர். ..... 

😀 சும்மா காலங்காத்தால பகிடி விடதையுங்கோ, முடியல

Link to comment
Share on other sites

Just now, உடையார் said:

😀 சும்மா காலங்காத்தால பகிடி விடதையுங்கோ, முடியல

சிலருக்கு உண்மைகள் கசக்கும். சிலருக்கு பகிடியாக இருக்கும். பயங்கரவாதிகளுக்கு அஞ்சாதவர் என்பது பகிடியா அல்லது அதிகாரத்துக்கு அடிபணியாதவர் என்பது பகிடியா?

Link to comment
Share on other sites

34 minutes ago, Vankalayan said:

, சுகாதார , ராணுவ அதிகாரிகளின் சான்றுப்பத்திரத்துடன்தான் அங்கு சென்றிருக்கிறார்.

இப்பிடி பச்சைப் பொய்களை எழுதினால் தான் கூல் செய்த தவறுகளை நியாயப்படுத்த முடியும்.

பேராசிரியர் பட்டத்தை, மனித உரிமையாளர் என்கிற போலிக் கவசத்தை சுமந்துகொண்டு தனிமைப்படுத்தல் முடியாத நிலையில மகளை பொது இடத்துக்கு கூடிச் சென்ற ரட்ணஜீவன் கூல் எப்படிப்பட்ட கேவலமான புத்தியுடைய, ஏனையவர்களின் உரிமைகளை மதிக்காத ஏமாற்று பேர்வழி என்கிறதை அறிய முடியும்.

கூல் கோஷ்டியே வெறிபிடித்த ஒரு அஜென்டாவுடன் அரசியல் பலமுள்ளவர்களிடம் சுயநல ஆதாயம் பெறும் போலி மனிதவுரிமை கோஷ்டி என்கிறது ஊரறிந்த விஷயம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.