Jump to content

இராணுவ ஆட்சிக்கு இடமளியோம் - மரிக்கார்


Recommended Posts

(செ.தேன்மொழி)

நாட்டுக்கும், மக்களுக்கும் நலனை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன்,நாட்டு மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கோ, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தியில் டைக்கோட் மற்றும் சால்வை அணிந்த மோசடிதாரர்கள் கிடையாது. அதனால் யாருக்கும் துணைப்போக வேண்டிய தேவை எமக்கில்லை என்றும் அடக்குனுமுறை ஆட்சிக்கு எதிராக குறல் எழுப்புவதற்கு ஒருபோதும் அச்சமாட்டோம் என்றும் கூறினார்.

marikar.jpg

 

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

புண்ணியத்திற்காக தோன்றிய ஜனாதிபதியாகவே கோதாபய ராஜபக்ஷ காண்பிக்கப்பட்டார். ஆனால் அவர் ஆட்சியைக் கைப்பற்றிய தருணத்திலிருந்து இன்று வரை கொரோனா வைரஸ் பரவல்இ எலிக்காய்ச்சல் மற்றும் வெள்ளப் பெருக்கு என்று அழிவுகளே ஏற்பட்டு வருகின்றன.
எமது ஆட்சிக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது எந்தவித விண்ணப்பங்களும் பூர்த்திச் செய்யப்படாமல் அனைவருக்கும் உடனே நிவாரணத்தை பெற்றுக் கொடுத்தோம். ஆனால். தற்போதைய அரசாங்கம் கொரேனா நெருக்கடியால் பாதிப்புற்றுள்ள மக்களுக்கு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்தும் இன்னமும் முழுமையாக நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

வைரஸ் பரவலினால் நாடுமூடப்பட்டதை அடுத்து மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலே இருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. இந்தக்காலப்பகுதியில் சிலர் அவர்களது வீடுகளிலிருந்தே தொழில் செய்யவேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இதனால் வழமைக்கு மாறாக நீர் மற்றும் மின்சாரம், தொலைபேசி பாவனைகள் அதிகரித்துள்ளன. இதனால் கட்டணமும் அதிகரித்துள்ளது.

இதேவேளை சிலருக்கு ஊதியம்கிடைக்கப்படாமளும் இன்னும் சிலருக்கு அரைவாசி ஊதியமே வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். அரசாங்கள் அவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத கழிவையோ அல்லது ஆறு மாதகால கால அவகாசத்தையோ பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஓமாகம பகுதியில் சர்வதேச கிரிக்கட் விளையாட்டு அரங்கை அமைப்பதற்கு முன்னர் கொரோனா காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை, ஆடை ஏற்றுமதி, உற்பத்தி நிலையங்கள் என்பவற்றை முன்னேற்றுவது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.வீட்டுத்தோட்டங்கள் அமைப்பது எக்காலத்திற்கும் உகந்த செயற்பாடுகளாகும். ஆனால் அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றமுடியும் என்று கூறுவது மூடத்தனமானதாகும். அரசாங்கம் மக்களின் நலரனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் நன்மைத்தரும் விடயங்களை முன்னெடுத்தால் எதிர்கட்சி என்ற வகையில் அனைத்து ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுப்போம். அதனை விடுத்து எமது ஆட்சிகாலத்தில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த பேச்சு சுகந்திரம் ஊடகசு தந்திரம், சுயாதீனமான நசீதித்துறை என்பறை ஒழித்து அடக்குமுறைஆட்சி, அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படுதல் மற்றும் இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தால். அதற்கு எதிராக குறல் எழுப்புவோம்.

அரசாங்கத்தின் துணையில் இருக்க வேண்டிய தேவை எமக்கில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்குள் டைக்கோட் அணிந்த மோசடிதாரர்களோ, சால்வை அணிந்த மோசடிகாரர்களோ கிடையாது. நாட்டிலர் இதுவரையிருந்த ஆட்சிமுறைக்க மாறுப்பட்ட முறையிலான மக்களின் நலனைமட்டும் கருத்திற்கொண்ட ஆட்சியை முன்னெடுப்பதற்காகவே சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.

https://www.virakesari.lk/article/82434

Link to comment
Share on other sites

எதோ இவரை கேட்டு விட்டு தான் இராணுவம் ஆட்சியை பிடிக்குமாக்கும்; 

Link to comment
Share on other sites

மரிக்கார் எந்த நாட்டுல இருந்து பேசுறார்?

Link to comment
Share on other sites

18 minutes ago, Vankalayan said:

நிச்சயமாக நாங்களும் அனுமதிக்க மாடடோம்.

ஏற்கனவே அங்கு இராணுவ ஆட்சிதானே நடக்கின்றது: பேராசிரியர் சொல்கிறார் 

http://www.ft.lk/columns/Defence-re-defined-The-military-as-first-resort/4-700510

 

Link to comment
Share on other sites

7 minutes ago, ampanai said:

ஏற்கனவே அங்கு இராணுவ ஆட்சிதானே நடக்கின்றது: பேராசிரியர் சொல்கிறார் 

http://www.ft.lk/columns/Defence-re-defined-The-military-as-first-resort/4-700510

 

இல்லையே , ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம்? சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள். ராணுவ ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை. வியத்கம இயக்கம்தான் அரசை நடத்துகின்றது. அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Vankalayan said:

அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது. 

ஓ அதுதான் கொரோனாவை விடுதலை புலிகளுடன் ஒப்பிட்டு , வைத்தியர்கள் ,மருத்துவ பணியாளர்களை தவிர்த்து கடற்படையை அனுப்பி போராட விட்டவைகளோ, இந்த கைங்கரியத்தால் தான் ஆயிரத்திற்குள் மட்டுப்பட வேண்டிய தொற்று தற்போது மீறியுள்ளது. அதுசரி உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய வியாத்மக புத்திஜீவி யாரோ ....?

10 hours ago, ampanai said:

நாட்டு மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கோ, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்

இடமளிப்பதற்கும் இடமளிக்காமலிருப்பதற்கும் நீங்க யாரு மரைக்கார்  ..? 
பியூஸ் போன கூட்டமெலாம் பண்ணும் அலப்பறைகள் தாங்கமுடியலடா சாமி 

Link to comment
Share on other sites

5 hours ago, Vankalayan said:

இல்லையே , ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம்? சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள். ராணுவ ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை. வியத்கம இயக்கம்தான் அரசை நடத்துகின்றது. அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது. 

புத்த கோவிலில் ஒரு பிரச்சனை என்றால் அதில் வந்து தலையிட வேண்டியது காவல்துறை - அது சனநாயக நாடு.

ஒரு பொது சுகாதார பிரச்சனை என்றால் அங்கே தலையிடவேண்டியது சுகாதார துறையும் அதுசார் வல்லுனர்களும். மாறாக, இங்கே எல்லாமே முப்படை, அதலான் தான் அதிகளவில் கடற்படை பாதிப்பு 

அங்கே வந்து இராணுவம் தலையிட்டால் ? அது இராணுவ ஆட்சி நடக்கும் நாடு 

99090656_10158068616556855_46833268288389120_n.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=ri0rbdouAQIAX8j5wQ4&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=0ae8a1cc66b2f4b03bcc24e156407d7d&oe=5EEBC6CC

 

Link to comment
Share on other sites

22 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஓ அதுதான் கொரோனாவை விடுதலை புலிகளுடன் ஒப்பிட்டு , வைத்தியர்கள் ,மருத்துவ பணியாளர்களை தவிர்த்து கடற்படையை அனுப்பி போராட விட்டவைகளோ, இந்த கைங்கரியத்தால் தான் ஆயிரத்திற்குள் மட்டுப்பட வேண்டிய தொற்று தற்போது மீறியுள்ளது. அதுசரி உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய வியாத்மக புத்திஜீவி யாரோ ....?

 

வித்தகம அமைப்பானது பொறியியலாளர்கள், வைத்தியர்கள், பொருளியலாளர்கள், நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட ஒரு அமைப்பு. எனவே அங்கு குறிப்பிட்டு யாரையும் கூற முடியாது. அவர்களுடைய 100 % ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட விடடாலும் பெரும்பாலான தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே இங்கு ராணுவம் மட்டும் எல்லாவற்றையும் தீர்மானிப்பதோ, நடைமுறை படுத்துவதோ இல்லை.

 கோரோனோ இலங்கையில்  இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

கோரோனோ இலங்கையில்  இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது.

இது அரசாங்கம் கூறும் புள்ளிவிபரங்களை வைத்து கூறும் கூற்று ,
கொரானா நோய்த்தொற்று தொற்றியுள்ள அநேக இளவயதுடையோர் அறிகுறிகளை காட்டாமலே குணமடைவதாக WHO தெரிவித்திருந்தது ஆனால்  அவர்கள் பலபேருக்கு காவிகளாக செயற்பட்டிருக்கலாம்.

உண்மையான இலக்கம் செய்யப்படும் Swab டெஸ்ட் அடிப்படையிலேயே வெளித்தெரியும் அதனடிப்படையில் இலங்கை ஒரு மில்லியன் தொகைக்கு 930 சோதனைகள் ,சிங்கப்பூரோ 51,600 சோதனைகள்.

இதனாலேயே சிங்கப்பூரில் அதிக நோயாளிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர் , இவர்களில் 
அதிகமான Foreign Dom களில் தங்கியிருந்தவர்கள் மிக அரிதான மற்றும் அறிகுறிகளே வெளித்தெரியாமல் இருந்தவர்கள் ஆனால் சோதனைகளில் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டவர்கள். இலங்கையில் இப்படி பலபேர் 
அவர்களாகவே நோய்களை பரப்பி குணமடைகின்றனர். இலங்கையின் இந்த கணக்கெல்லாம் வியாத்மக கப்ரால் ஒரு காலத்தில் அடித்துவிட்ட பொருளாதார வளர்ச்சி 8-9% புருடா வகையறா  தான்   

Link to comment
Share on other sites

22 hours ago, அக்னியஷ்த்ரா said:

இது அரசாங்கம் கூறும் புள்ளிவிபரங்களை வைத்து கூறும் கூற்று ,
கொரானா நோய்த்தொற்று தொற்றியுள்ள அநேக இளவயதுடையோர் அறிகுறிகளை காட்டாமலே குணமடைவதாக WHO தெரிவித்திருந்தது ஆனால்  அவர்கள் பலபேருக்கு காவிகளாக செயற்பட்டிருக்கலாம்.

உண்மையான இலக்கம் செய்யப்படும் Swab டெஸ்ட் அடிப்படையிலேயே வெளித்தெரியும் அதனடிப்படையில் இலங்கை ஒரு மில்லியன் தொகைக்கு 930 சோதனைகள் ,சிங்கப்பூரோ 51,600 சோதனைகள்.

இதனாலேயே சிங்கப்பூரில் அதிக நோயாளிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர் , இவர்களில் 
அதிகமான Foreign Dom களில் தங்கியிருந்தவர்கள் மிக அரிதான மற்றும் அறிகுறிகளே வெளித்தெரியாமல் இருந்தவர்கள் ஆனால் சோதனைகளில் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டவர்கள். இலங்கையில் இப்படி பலபேர் 
அவர்களாகவே நோய்களை பரப்பி குணமடைகின்றனர். இலங்கையின் இந்த கணக்கெல்லாம் வியாத்மக கப்ரால் ஒரு காலத்தில் அடித்துவிட்ட பொருளாதார வளர்ச்சி 8-9% புருடா வகையறா  தான்   

இள வய்துள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரப்பிவிட்டு குணமடைதிருக்கலாம். அப்படி என்றால் நிறைய வயதானவர்கள் மரணித்திருக்க வேண்டுமே. கணக்கு எங்கயோ பிழைக்குதே.

இலங்கையில் உள்ள வயோதிபர்கள் எல்லாம் வாலிபர்களாக மாறிவிடடார்களோ தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2020 at 22:00, Vankalayan said:

நிச்சயமாக நாங்களும் அனுமதிக்க மாடடோம்.

எப்படி ? அமெரிக்காவுக்குப் போன்போட்டா 😂

On 20/5/2020 at 22:39, Vankalayan said:

இல்லையே , ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம்? சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள். ராணுவ ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை. வியத்கம இயக்கம்தான் அரசை நடத்துகின்றது. அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது. 

ஐயா

வெள்ளையடிப்பதுதான் உங்கள் தொழிலோ 🤔

On 21/5/2020 at 21:52, Vankalayan said:

வித்தகம அமைப்பானது பொறியியலாளர்கள், வைத்தியர்கள், பொருளியலாளர்கள், நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட ஒரு அமைப்பு. எனவே அங்கு குறிப்பிட்டு யாரையும் கூற முடியாது. அவர்களுடைய 100 % ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட விடடாலும் பெரும்பாலான தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே இங்கு ராணுவம் மட்டும் எல்லாவற்றையும் தீர்மானிப்பதோ, நடைமுறை படுத்துவதோ இல்லை.

 கோரோனோ இலங்கையில்  இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது.

கொயபல்ஸ் என்று ஒருவர் ஜேர்மனியில் இருந்ததாக நினைவில் உள்ளது. அவரை உங்களுக்குத் தெரியுமா 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2020 at 12:39, Vankalayan said:

ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம்? சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள்.

ஜனாதிபதியாக வீற்றிருப்பவர், ஒரு இனத்தை அழித்த போர்க்குற்றவாளி.  மனித குலத்துக்கு எதிரான குற்றம் புரிந்த இராணுவ அதிகாரிகளை, அதி உயர் பதவிகளுக்கு நியமிப்பவரும் அவர். இதன் பின்னும் வேறு எதை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறீர்கள்?   வெகு விரைவில் இதற்கு பதில் கிடைக்கும். அதுவரை பொறுத்திருங்கள்.

On 22/5/2020 at 11:52, Vankalayan said:

மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது

மற்றய நாடுகளுக்குள் கொரோனா கொண்டு செல்லப்பட்டது. நமது நாடு தேடிப்போய் வாங்கி வந்ததனால், முன்னேறி இருக்கிறது. முழுவதுமாக  அழித்து விட்டால்  சந்தோசம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Vankalayan said:

இள வய்துள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரப்பிவிட்டு குணமடைதிருக்கலாம். அப்படி என்றால் நிறைய வயதானவர்கள் மரணித்திருக்க வேண்டுமே. கணக்கு எங்கயோ பிழைக்குதே.

இலங்கையில் உள்ள வயோதிபர்கள் எல்லாம் வாலிபர்களாக மாறிவிடடார்களோ தெரியவில்லை.

அதுதான் திடீர் மரணம் ,சும்மா இருந்தவர் கீழே விழுந்து மரணம் என்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறதே ..இப்பவே அவசரப்பட்டால் எப்படி 
கொஞ்சம் பொறுங்கோ கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் 

Link to comment
Share on other sites

20 hours ago, Kapithan said:

எப்படி ? அமெரிக்காவுக்குப் போன்போட்டா 😂

ஐயா

வெள்ளையடிப்பதுதான் உங்கள் தொழிலோ 🤔

கொயபல்ஸ் என்று ஒருவர் ஜேர்மனியில் இருந்ததாக நினைவில் உள்ளது. அவரை உங்களுக்குத் தெரியுமா 😂

சிலவேளைகளில் உண்மைகளை ஏற்றுக்கொள்ள கஷ்ட்டமாகத்தான் இருக்கும். கோயபல்சை போன்றவர்கள் கோயபல்சை மறக்க மாடடார்கள்.

13 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுதான் திடீர் மரணம் ,சும்மா இருந்தவர் கீழே விழுந்து மரணம் என்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறதே ..இப்பவே அவசரப்பட்டால் எப்படி 
கொஞ்சம் பொறுங்கோ கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் 

அப்படி என்றால் எவ்வளவு காலம் செல்லும்? வருடக்கணக்காகுமா ? அப்படி என்றால் வெளி நாடுகளில் அவர்களை கண்டுபிடித்தும் நிறைய மரணங்கள் சம்பவிக்குதே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

சிலவேளைகளில் உண்மைகளை ஏற்றுக்கொள்ள கஷ்ட்டமாகத்தான் இருக்கும். கோயபல்சை போன்றவர்கள் கோயபல்சை மறக்க மாடடார்கள்.

 

ஒரு இனத்தைக் கருவறுத்தவர்களுக்குகொஞ்சமும் மனச்சாட்சி இல்லாமல் எப்படி உங்களால் வெள்ளையடிக்க முடிகிறது ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

அப்படி என்றால் எவ்வளவு காலம் செல்லும்? வருடக்கணக்காகுமா ? அப்படி என்றால் வெளி நாடுகளில் அவர்களை கண்டுபிடித்தும் நிறைய மரணங்கள் சம்பவிக்குதே?

எல்லாமே நிகழ்தகவு தான் .. தொற்றுபவர்கள் எல்லோரும் நல்ல நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்றால் கொரோனாவால் கூட ஒன்றும் செய்யமுடியாது.
சிங்கப்பூரின் தொகை 31600 ஐ தொடுகிறது மரணமடைந்த வர்கள்
வெறும் 23 பேர் தான் 
ஆக பாதிக்கப்பட்டோரில் இது 0.0686 வீதம்.
சிங்கப்பூர் இதை கண்டும் காணாமல் விட்டிருந்தாலே இவர்களில் அநேகர் தாங்களாகவே குணம்டைந்திருப்பர் 
சோதனைேயே உண்மை நிலவரத்தை வெளிக்காட்டியது.
நான் கூற வருவதும் இதைத்தான் ஏற்கனவே அண்டப் புளுகுகளுக்கு பெயர் போன இலங்கை அரசாங்கம் சொல்லும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் வேண்டுமானால் நம்பலாம் அது உங்கள் உரிமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Vankalayan,

இலங்கையில் கொரோனா உறுதி செய்யபட்டவர்கள் வெறும் 1106 இறப்பு தொகை வெறும் 9.
இலங்கையின் கைலிலாகாத கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை
இலங்கை கொரோனா இறப்பு தொகையில் அமெரிக்கா,  இங்கிலாந்தை  முந்துகின்றது    என்று பத்திரிக்கைகளில் செய்தி வருவதற்கு ஏற்பாடு செய்யுங்களேன் 😂

Link to comment
Share on other sites

16 hours ago, Kapithan said:

ஒரு இனத்தைக் கருவறுத்தவர்களுக்குகொஞ்சமும் மனச்சாட்சி இல்லாமல் எப்படி உங்களால் வெள்ளையடிக்க முடிகிறது ☹️

யாருக்கும் வெள்ளையடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. உண்மையை மறைக்க முடியாது. பொய்களை எழுதி மற்றவர்களை சந்தோசப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கில்லை. 

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

எல்லாமே நிகழ்தகவு தான் .. தொற்றுபவர்கள் எல்லோரும் நல்ல நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்றால் கொரோனாவால் கூட ஒன்றும் செய்யமுடியாது.
சிங்கப்பூரின் தொகை 31600 ஐ தொடுகிறது மரணமடைந்த வர்கள்
வெறும் 23 பேர் தான் 
ஆக பாதிக்கப்பட்டோரில் இது 0.0686 வீதம்.
சிங்கப்பூர் இதை கண்டும் காணாமல் விட்டிருந்தாலே இவர்களில் அநேகர் தாங்களாகவே குணம்டைந்திருப்பர் 
சோதனைேயே உண்மை நிலவரத்தை வெளிக்காட்டியது.
நான் கூற வருவதும் இதைத்தான் ஏற்கனவே அண்டப் புளுகுகளுக்கு பெயர் போன இலங்கை அரசாங்கம் சொல்லும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் வேண்டுமானால் நம்பலாம் அது உங்கள் உரிமை

அப்படியென்றால் இதே நிலைமை நியூசிலாந்து, சுவீடன் , நோர்வே , ஜெர்மெனி போன்ற நாடுகளிலும் ஏட்படுமா? இலங்கை வைத்தியர்கள் இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லையா? இலங்கையை தவிர மற்ற எல்லா நாடுகளும் உண்மையை கூறுகின்றது என்று கூறுகிறீர்கள். இது ஒரு ஆகாசப்புளுகு இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Vankalayan said:

அப்படியென்றால் இதே நிலைமை நியூசிலாந்து, சுவீடன் , நோர்வே , ஜெர்மெனி போன்ற நாடுகளிலும் ஏட்படுமா? இலங்கை வைத்தியர்கள் இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லையா? இலங்கையை தவிர மற்ற எல்லா நாடுகளும் உண்மையை கூறுகின்றது என்று கூறுகிறீர்கள். இது ஒரு ஆகாசப்புளுகு இல்லையா

நல்லா ஆட்டுக்குள் கொண்டு வந்து மாட்டை ஓட்டுகிறீர்கள் வங்காலை

இலங்கையின் புள்ளிவிபர ஓட்டையை பற்றிகதைத்தால் ஜெர்மனி பிரான்ஸ் நோர்வெயை தூக்கி கொண்டு வருகிறீர்கள்.
வட பிராந்திய வைத்தியர்களை விட 
கோத்தாவுக்கும் உங்களுக்கும் தான் கன விடயம் தெரியும் போல கிடக்கு
https://www.wsws.org/en/articles/2020/04/29/jaff-a29.html

எப்பிடி இருக்கு இனி இதை வைத்தியர்களின் ஆகாசப்புழுகு என்பீர்கள் போல
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Vankalayan said:

யாருக்கும் வெள்ளையடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. உண்மையை மறைக்க முடியாது. பொய்களை எழுதி மற்றவர்களை சந்தோசப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கில்லை. 

 

நீங்கள் கூறுவது உண்மையாக இருக்குமானால், அனுபவம்  மேலும் அதிகமாகத் தேவை என்று பொருள். 🙂

Link to comment
Share on other sites

Just now, அக்னியஷ்த்ரா said:

நல்லா ஆட்டுக்குள் கொண்டு வந்து மாட்டை ஓட்டுகிறீர்கள் வங்காலை

இலங்கையின் புள்ளிவிபர ஓட்டையை பற்றிகதைத்தால் ஜெர்மனி பிரான்ஸ் நோர்வெயை தூக்கி கொண்டு வருகிறீர்கள்.
வட பிராந்திய வைத்தியர்களை விட 
கோத்தாவுக்கும் உங்களுக்கும் தான் கன விடயம் தெரியும் போல கிடக்கு
https://www.wsws.org/en/articles/2020/04/29/jaff-a29.html

எப்பிடி இருக்கு இனி இதை வைத்தியர்களின் ஆகாசப்புழுகு என்பீர்கள் போல
 

அந்த நாடுகளிலும் கொரோனவை ஒழித்துவிடட பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. எனவேதான் அதுவும் உண்மையா என்று கேட்ட்டேன். யாழ்ப்பாண வைத்தியர்கள் ஒன்றும் புதிதாக கூறிவிடவில்லை. 

Just now, Kapithan said:

நீங்கள் கூறுவது உண்மையாக இருக்குமானால், அனுபவம்  மேலும் அதிகமாகத் தேவை என்று பொருள். 🙂

இனி பொய்யய்தான் எழுத வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Vankalayan said:

அந்த நாடுகளிலும் கொரோனவை ஒழித்துவிடட பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. எனவேதான் அதுவும் உண்மையா என்று கேட்ட்டேன். யாழ்ப்பாண வைத்தியர்கள் ஒன்றும் புதிதாக கூறிவிடவில்லை. 

இனி பொய்யய்தான் எழுத வேண்டும்.

அப்படியென்றால் எழுத வேண்டாம். உம்மை நம்புகிறேன். 🙂

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

அப்படியென்றால் எழுத வேண்டாம். உம்மை நம்புகிறேன். 🙂

உணமையை மட்டுமே எழுதுவேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.