Jump to content

ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால்... இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றியிருப்பார் -தங்கபாலு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் தொழில்நுட்பம்

ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால்... இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றியிருப்பார் -தங்கபாலு

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29-வது நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படும் நிலையில், அவரை பற்றிய நினைவலைகளை நம்முடன் பகிர்ந்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு.

மேலும், ராஜீவ் உயிரோடு இருந்திருந்தால் என்னென்ன மாற்றங்களை செய்திருப்பார் என்பது பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தியை பற்றி தங்கபாலு தெரிவித்ததாவது;

''இளைய பாரதத்தை கட்டி எழுப்பியவர் ராஜீவ் காந்தி, அவர் கொண்டு வந்த திட்டங்களால் தான் இன்று இந்தியா இந்தளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ராஜீவ்காந்தி தான் அடித்தளமிட்டார். நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல் தொழில் நுட்ப மேம்பாடு மிக அவசியம் என்பதை அன்றே அடையாளம் கண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார் ராஜீவ்காந்தி.

ராஜீவ்காந்தியை அருகில் இருந்து கவனித்தவன் என்ற முறையில் சொல்கிறேன், அவரை போல் தன்னலமற்ற தலைவரை பார்க்க முடியாது. தனது நலத்தை பற்றி ஒரு நாளும் அவர் சிந்தித்தது கிடையாது. இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதில் ராஜீவ்காந்தி மிக உறுதியுடன் இருந்தார். சுதந்திர இந்தியா உண்மையிலேயே சுதந்திரமாக இருக்க வேண்டும் என எண்ணியவர்.
 

ராஜீவ்காந்தி மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தார் என்றால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்திருக்கும். அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம். புதிய இந்தியாவில் வறுமை இருக்கக்கூடாது, அரசியல், வேலைவாய்ப்பு, உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் ஏற்றம் பெற வேண்டும் என சிந்தித்து செயல்பட்டவர் ராஜீவ் காந்தி. இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்தவர் அவர்.

ராஜீவ் காந்தி மட்டும் மறையவில்லை என்றால் இந்நேரம் ஏழ்மையும்; வறுமையும் இல்லாத இந்தியாவை உருவாக்கியிருப்பார். சமூக பொருளாதார திட்டத்தில் புதுமையைக் கொண்டு வந்தார். இந்தியா தற்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் ராஜீவ். அவரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம்'', என்று தனது எண்ண ஓட்டங்களையும், ராஜீவை பற்றிய நினைவலைகளையும் தங்கபாலு பகிர்ந்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/kv-thangabalu-says-if-rajiv-gandhi-had-been-alive-he-would-have-made-india-a-superpower-386133.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடத்தெரியாதவள் மேடை சரியெல்லை என்டாளாம்.

ராஜீவின் மரணத்திற்கு பின் வளர்ச்சியடையத் தொடங்கிய சீனா.. இன்று உலகப் பொருண்மியத்தின் இரண்டாம் இடத்தை தொட்டுவிட்டது. 

குறிப்பாக தமிழக காங்கிரஸூக்கும்.. ராஜீவ் குடும்பத்திற்கும்.. ராஜீவின் மரணம் தான் அரசியல் முதலீடு. 

இதனால்.. ஹிந்தியா பொருண்மிய ரீதியில் ஒருபோதும் வளர முடியாது. வேணும் என்றால் ராஜீவ் குடும்ப செல்வச் செழிப்பில்.. செல்வாக்கில் வளர்ச்சி இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் ஊழலை அறிமுக‌ம் செய்து வைச்ச‌தே இந்த‌ ராஜிவ் காந்தி தான் /

இதில‌ நாட்டு வ‌ள‌ர்சியை ப‌ற்றி இவ‌ர் அறிக்கை விடுகிறார் / 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னது இந்தியா வல்லரசு இல்லை என்று இப்பவும் ஒரு வல்லரசுக்கு தேவையான பணத்தை விட அதிக பணம் உள்ளது முக்கியமாய் மாநில கட்சிகளின் தலைவர்களின்  பினாமிகளை பிடிச்ச்சு உலுப்ப  டிரில்லியன் கணக்கான கருப்பு பணம் வந்து கொட்டும் அதைவிட மத்தியில் உள்ள கட்சிகளின் பினாமிகள் எங்கெங்கினும் பணமாயும் தங்க கட்டி பாளம்களாய்  உள்ளன தங்கபாலு அரசியலுக்கு வருமுன் எவ்வளவு சொத்து வைத்து இருந்தவர் இப்ப எவ்வளவு வைத்து இருக்கிறார் ?

உங்க ராசீவ் சொந்த புத்தி இல்லாமல் ஆடி அடங்கினவர் நல்லகாலம் அவருக்கும் மொழி பெயர்க்க போகாமல் இருந்ததில் தமிழ் தப்பிக்கொண்டது 

 

Link to comment
Share on other sites

19 hours ago, பெருமாள் said:

யார் சொன்னது இந்தியா வல்லரசு இல்லை என்று இப்பவும் ஒரு வல்லரசுக்கு தேவையான பணத்தை விட அதிக பணம் உள்ளது முக்கியமாய் மாநில கட்சிகளின் தலைவர்களின்  பினாமிகளை பிடிச்ச்சு உலுப்ப  டிரில்லியன் கணக்கான கருப்பு பணம் வந்து கொட்டும் அதைவிட மத்தியில் உள்ள கட்சிகளின் பினாமிகள் எங்கெங்கினும் பணமாயும் தங்க கட்டி பாளம்களாய்  உள்ளன தங்கபாலு அரசியலுக்கு வருமுன் எவ்வளவு சொத்து வைத்து இருந்தவர் இப்ப எவ்வளவு வைத்து இருக்கிறார் ?

உங்க ராசீவ் சொந்த புத்தி இல்லாமல் ஆடி அடங்கினவர் நல்லகாலம் அவருக்கும் மொழி பெயர்க்க போகாமல் இருந்ததில் தமிழ் தப்பிக்கொண்டது 

 

பெருமாள்,  அவரது பெயரே தவறான மொழி பெயர்ப்பு தானே. உண்மை பெயர் தகர பாலு. பிறந்தவுடன் யாரோ  தங்க பாலு என்று எழுதி விட்டாகள். 

Link to comment
Share on other sites

On 21/5/2020 at 05:32, தமிழ் சிறி said:

அவரை போல் தன்னலமற்ற தலைவரை பார்க்க முடியாது. தனது நலத்தை பற்றி ஒரு நாளும் அவர் சிந்தித்தது கிடையாது.

அப்படியா??!!

3 hours ago, tulpen said:

தங்க பாலு

இவர் ஒரு தெலுங்கர்தானே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பழுவூர்கிழான் said:

அப்படியா??!!

 

22 hours ago, பெருமாள் said:

 

 

பழுவூர்கிழான் அவர்களே...  அப்படித்தான், தங்க (பித்தளை) பாலு..  சொல்கிறார். :)
எதற்கும்... பெருமாள், இணைத்த...  :rolleyes: காணொளியையையும்  பாருங்களேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 21/5/2020 at 15:02, தமிழ் சிறி said:

ராஜீவ்காந்தி மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தார் என்றால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்திருக்கும். அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம்

ஒருமுறை அயோத்தி நகரை ஆட்சி செய்த திரிசங்கு பல வரங்களைப் பெற்றிருந்த விசுவாமித்திர முனிவரைச் சந்தித்தான்.

"தவமுனியே..! முனிவர்கள் பலரும் பூத உடலுடன் சொர்க்க லோகம் சென்று வருவது போல், நானும் அங்கு சென்று வர ஆசைப்படுகிறேன். எனது ஆசையை நிறைவேற்றித் தாருங்கள் " என்றான்.

இந்திரன் மீது ஏற்கனவே கோபம் கொண்டிருந்த விசுவாமித்திரர், ஒரு மாபெரும் வேள்வியை நடத்தினார். அந்த யாகத்தின் சக்தியைக் கொண்டு, திரிசங்குவை, பூத உடலுடன் இந்திரன் வீற்றிருக்கும் சபைக்கு நடுவே கொண்டு போய் நிறுத்தினார். இதைப் பார்த்து ஆத்திரம் கொண்ட இந்திரன், திரிசங்குவை காலால் உதைத்து பூலோகம் நோக்கித் தள்ளினான்.

மேலிருந்து கீழே விழுந்த திரிசங்கு, "விசுவாமித்திரரே.! காப்பாற்றுங்கள்" என்று ஓலமிட்டான்.

உடனே விசுவாமித்திரர், திரிசங்கு கீழே விழாமல் இருக்க யாகத்திற்கு நெய் வார்க்கும் சுருக்கை என்ற கரண்டியை மேல் நோக்கி வீசினார். அது அந்தரத்திலேயே திரிசங்குவை தடுத்து நிறுத்தியது.

பின்னர் விசுவாமித்திரர் தன் தவ வலிமையக் கொண்டு, அந்தரத்திலேயே ஒரு சொர்க்கலோகத்தை படைக்க தொடங்கி , அதில் திரிசங்குவை இந்திரனாக அமர வைத்தார்.

டிஸ்கி :

அதென்ன ஆ உ என்டா .. வல்லரசு ( ? ).. அவர் மட்டும் உயிரோடு இருந்தால் அதற்கும் மேல கதைய படிக்குக..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பழுவூர்கிழான் said:

அப்படியா??!!

இவர் ஒரு தெலுங்கர்தானே?!

இவரும் ஒரிஜினல் இல்லையா? :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.