Jump to content

40 மில்லியன் டொலர் செலவில் அமையும், பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

prime-minister-rajapaksa-met-senior-cricketers-at-temple-trees-today-1-720x450.jpg

பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

40 மில்லியன் டொலர் செலவில் அமையும் புதிய கிரிக்கெட் மைதானம் குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

சுமார் 40 ஆயிரம் இருக்கைகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று ஹோமாகம பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட பிரதமர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் கட்டுமானம் தொடருமா என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

prime-minister-rajapaksa-met-senior-cricketers-at-temple-trees-today-2-428x258.jpg  prime-minister-rajapaksa-met-senior-cricketers-at-temple-trees-today-3-428x271.jpg

prime-minister-rajapaksa-met-senior-cricketers-at-temple-trees-today-4-428x259.jpg

http://athavannews.com/பிரம்மாண்ட-கிரிக்கெட்-அர/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீதிகளில் மக்கள் பட்டினியால் அவலம் – இந்த சூழ்நிலையில் புதிய கிரிக்கெட் மைதானம் அவசியமா? அர்ஜூன சீற்றம்

 

இலங்கையில் இன்னொரு சர்வதேச மைதானத்தை அமைப்பது அர்த்தமற்ற செயல் என முன்னாள் இலங்கை அணித்தலைவரும் முன்னாள் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை பல்வேறு திட்டங்களிற்காக நிதியை செலவிடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் கிரிக்கெட் முன்னேற்றத்திற்காக அந்த நிதியை செலவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் பல சர்வதேச மைதானங்கள் உள்ளன என தெரிவித்துள்ள அர்ஜூன ரணதுங்க அஸ்கிரிய மொரட்டுவை போன்ற மைதானங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன இந்த மைதானங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளை நடத்தியவை என தெரிவித்துள்ளார்.
இந்த மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களே அவசியம் புதிய மைதானங்களிற்காக மிகப்பெரும் பணத்தை செலவிடவேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.homagama-300x185.png
அவுஸ்திரேலியாவை விட இலங்கையில் அதிக மைதானங்கள் உள்ளன என்பதை ரசிகர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மைதானம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள தருணமும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள அமைச்சர் பல குடும்பங்கள் கொவிட் 19 காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன,நாளாந்தம் உழைப்பவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்,இவர்களே எங்கள் ரசிகர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Arjuna-Ranatunga-3-300x291.jpg
நீங்கள் வீதிக்கு சென்றால் எங்கும் பட்டினியை காணலாம் மக்கள் வாழ்;க்கையை கொண்டுநடத்திமுடியாதபடி நெருக்கடியில் உள்ள தருணத்தில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை 40 பில்லியன் டொலர்களில் மைதானத்தை அமைக்கும் முயற்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ளது , இது சுத்த பைத்தியக்காரத்தனம்,ஜனாதிபதி உடனடியாக இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என அர்ஜூன ரணதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://thinakkural.lk/article/42356

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.