Jump to content

Guyana நாட்டு ஜனாதிபதி Donald Ramotar தொடக்கி வைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மத்திய அமெரிக்காவின்  Guyana நாட்டின் ஜனாதிபதி Donald Ramotar , போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர்  Stephen J. Rapp  உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.

மே22ம் நாள் வெள்ளிக்கிழமை (அமெரிக்கா) நியூ யோர்க் நேரம் காலை 8 மணிக்கு தொடங்க இருக்கின்ற இந்நிகழ்வினை www.tgte.tv வலைக்காட்சி , https://www.facebook.com/tgteofficial சமூகவலைத்தளம் உட்பட தமிழர் ஊடகப்பரப்பெங்கும் உலகத்தமிழர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணக்கம் சகோதர சகோதரிகளே,
கடந்த மே18ம் நாள் இடம்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை கிழக்கு தீமோரின் முன்னாள் ஜனாதிபதி  Dr. Jose Ramos-Horta  அவர்கள் வழங்கியிருந்த நிலையில், தற்போது இந்நிகழ்வில் Guyana  நாட்டு ஜனாதிபதி Hon Donald Ramotar பங்கெடுத்திருப்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியமானதொரு நகர்வாக உள்ளதோடு, அமெரிக்காவின் ஓபமா நிர்வாகத்தில் போர்குற்ற விவகாரங்களுக்கா தூதுவராக ( United States Ambassador-at-Large for War Crimes Issues  ) இருந்த  Stephen J. Rapp  அவர்கள் பங்கெடுப்பதும் முக்கியமானதொரு விடயமாகவுள்ளது.

இத்தொடக்க நிகழ்வில் அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழக (  Director,Peace-building and Rights Program    Institute for the study of Human Rights- Columbia University,U.S.) Aதலைவர்  Professor David.L .Phillips   அவர்கள் பங்கெடுப்பதோடு, தமிழகத்தில் இருந்தும் பேராளர்கள் பங்கெடுக்கின்றனர்.

தொடர்ந்து மதியம் 13 மணிக்கு தொடங்க இருக்கின்ற அரசவை அமர்வில் நாடுகடந்த அரசியல், அதன் கோட்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளில் அது கடந்து வந்த பாதை, அதன் எதிர்காலம் என்ற தொனிபொருளில் கருத்தாடல் ஒன்று இடம்பெற இருக்கின்றது.

இதேவேளை புதிதாக நியமனம் பெற்றுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் மேலவை உறுப்பினர்களுக்கும் Dr. Jeyalingam (Physician and Former President Illankai Tamil Sangam, USA), Prof. Saraswathy - (Human Rights Activist, Tamil Nadu,India), Mrs. Usha Sriskandarajah (Yoga Teacher, Poet, Writer and Columnist, Canada), Mr. Satya (Journalist, Human Rights and Public Health Activist based in New Delhi, India), Mr. Rathakrishanan (Political Analyst, Legal Expert, Human Rights Activist, Writer and Columnist, Tamil Nadu, India), Mr. Ravikumar (President of World Thamil Organaization (WTO), USA), Mr. Roy Chetty (Human Rights Activist, South Africa) அரசவை உறுப்பினர்களுக்கு இடையிலான கருத்தாடல் ஒன்றும் இடம்பெற இருக்கின்றது.

தொடர்ந்து அமைச்சர்களினால் சமர்பிக்கப்பட இருக்கின்ற செயற்பாட்டு அறிக்கை தொடர்பிலான விவாதமும் இடம்பெற இருக்கின்றது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அரசவை அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையவழி தொழில்நுட்பம் மூலம், இந்நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போரே வாழ்வாகவும் வாழ்வே போராகவும் கொண்ட எமது விடுதலைப் பாதையில் கொரோனா வைரஸ் போன்ற எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டவாறு ;கான நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரவித்துள்ளது.
மின்னஞ்சலில் வந்தபடியால் இணைப்பு இல்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல‌ செய்தி  , எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியாய் அமைந்தால் ம‌கிழ்ச்சி /
 

Guyana நாடும் கிரிக்கெட்டில் வெஸ்சின்டீஸ் அணிக‌ளுட‌ன் இருக்கும் ஒரு அணி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கிழக்குத்திமோர் நாட்டின் விடுதலை வீரரும்.. முன்னாள் அதிபருமானவர்.. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து.. நாடு கடந்த தமிழீழ அரசின் அழைப்பின் பெயரில்.. இணையச் செய்தி ஒன்றை வழங்கி இருந்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசு.. தனி அரசுப் பிரகடனம் நோக்கி பயணிப்பது காலத் தேவையாகி விட்டது. உலகத் தமிழினமும்.. இதை நோக்கி ஒத்த சக்திகளோடு ஒன்றுபட்டு நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வழிகாட்டுதல் நன்று. 

Link to comment
Share on other sites

பல நாடுகளிலும் தங்கள் தேவைகள் சரிவர, முதலில் அரசை வழிக்கு கொண்டுவர பார்ப்பார்கள் அமெரிக்கர்கள். 

அது சரிவராவிட்டால், எதிர்க்கட்சி ஊடாக முயலுவார்கள். இலங்கையில் அது பலவீனமாக உள்ளது. 

அதுவும் சரிவராவிட்டால், நாட்டிற்குள் குழப்பங்களை ஏற்படுத்துவார்கள். அதற்கு சிறுபான்மை மக்களையும் அவரகள் கட்சிக்களையும் உபயோகிப்பார்கள். இலங்கையில் அதுவும் பலவீனமாக உள்ளது.

சில வேளைகளில் ஒட்டுகுழுக்களை உபயோகிப்பார்கள். அதுக்கு இலங்கையில் இடமே தற்பொழுது இல்லை.  

ஒரு சர்வசன வாக்கெடுப்பை நோக்கி நாடு கடந்த அரசு பயணிப்பதாக தெரிகின்றது. அதுவே சிறப்பு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ampanai said:

பல நாடுகளிலும் தங்கள் தேவைகள் சரிவர, முதலில் அரசை வழிக்கு கொண்டுவர பார்ப்பார்கள் அமெரிக்கர்கள். 

அது சரிவராவிட்டால், எதிர்க்கட்சி ஊடாக முயலுவார்கள். இலங்கையில் அது பலவீனமாக உள்ளது. 

அதுவும் சரிவராவிட்டால், நாட்டிற்குள் குழப்பங்களை ஏற்படுத்துவார்கள். அதற்கு சிறுபான்மை மக்களையும் அவரகள் கட்சிக்களையும் உபயோகிப்பார்கள். இலங்கையில் அதுவும் பலவீனமாக உள்ளது.

சில வேளைகளில் ஒட்டுகுழுக்களை உபயோகிப்பார்கள். அதுக்கு இலங்கையில் இடமே தற்பொழுது இல்லை.  

ஒரு சர்வசன வாக்கெடுப்பை நோக்கி நாடு கடந்த அரசு பயணிப்பதாக தெரிகின்றது. அதுவே சிறப்பு. 

 

அம்பனை, வித்தியாசமான கோணத்தில்... சிந்தித்து இருக்கின்றீ ர்கள். அது, நடந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

தமிழீழ நாடு கடந்த அரசில் சில குறைகள் இருக்கலாம்..இருக்கின்றது. 

கனடிய நாடு உட்பட பல நாடுகளால் பதிவு செய்யப்பட்ட  அமைப்புத்தான்  இது. 

கடந்த பதினோரு ஆண்டுகளாக எமது போராட்டத்தை இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில், உலக வரைபுகளுக்கு (World Order) இணங்க, நடாத்தி செல்பவர்கள் இவர்களே.  

==================================================================

நடக்கும் கோவிட் 19 என்ற தொற்றால் உலகம் மீண்டும் ஒரு ஆரம்ப நிலைக்குள் (reset) சென்றுகொண்டு இருக்கின்றது.

அதில் வர இருக்கும் போட்டி, மேற்குலகம் ( இந்தியா சார்ந்து) சீனாவிற்கு எதிராக வடிவம் பெற்று வருகின்றது. சீனாவும், தனக்கு ஆதரவாக ஆசிய, ஆபிரிக்க நாடுகளை ( சந்தைகளை) கடன் கொடுத்து வளைத்துப்போடுகின்றது.  

அப்படியான ஒரு இந்த புதிய ஒழுங்கில் இந்தியாவின் கிழக்கு கரையோரங்கள் புதிய பொருளாதார மையங்களாக உருப்பெற்றால், அதனால் வங்ககடலும் கடல்சார் பயணங்களும் பாதுகாப்பும் மேற்குலக - இந்திய பொருளாதார நலன்களுக்கு தேவையாகின்றது, அதுவே, வட-கிழக்கு இலங்கை (தமிழர் தாயகம்). 

=====================================================================

ஆப்கானிஸ்தானில் ஹமீட் கர்ஸாய் என்ற அமெரிக்க ஆஃப்கானியை அமெரிக்க நாடு அதிபராக நியமித்து தனது விருப்பங்களை சில காலம் வெற்றிகரமாக நிறைவேற்றியது 

 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

அம்பனை, வித்தியாசமான கோணத்தில்... சிந்தித்து இருக்கின்றீ ர்கள். அது, நடந்தால் நல்லது.

சில வருடங்களுக்கு முன்னராக ஒரு நாடு கடந்த அரசின் பிரதிநிதியை சந்தித்தேன். அப்பொழுது நான் அவருக்கு கூறிய சில கருத்துக்கள் :

- நாடு நடந்த அரசு சட்ட ரீதியாக அமெரிக்க / இந்திய அரசுகளுடன் பொருளாதாரத்தை முன்வைத்து பேச்சுக்களை நடாத்த வேண்டும் 

- எங்கள் தாயக பிரதேசத்தில் நாம் நிலம், பாதுகாப்பு, பொருளாதரம் ஆகியவனவற்றை ஆளும் அதிகாரம் தரப்பட்டல் வேண்டும் 

- நாம் பொருளாதர வலயங்களை, துறைமுகங்களை உங்களுக்கு தருவோம் 

- இவற்றை நிறுவ, உலகளாவிய ரீதியில் தமிழர்கள் மத்தியில் தமிழீழ அரசின் பதிவுசெய்யப்பட்ட திறைசேரிகளை விற்று நிதி திரட்டுவோம் (~ 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) 

- அதன் மூலம் மற்றும் புலம்பெயர் வாழ் மக்களை உள்வாங்கி நவீன பொருளாதார வலயங்களை உருவாக்குவோம் 

Link to comment
Share on other sites

இன்று ஈழத் தமிழினத்திற்காக உலக ராசதந்திரிகளுடன் பேசக்கூடிய சக்தியையும், சந்தர்ப்பங்களையும் நாடுகடந்த தமிழீழ அரசுமட்டுமே கொண்டுள்ளதாகத் தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

==================================================================

நடக்கும் கோவிட் 19 என்ற தொற்றால் உலகம் மீண்டும் ஒரு ஆரம்ப நிலைக்குள் (reset) சென்றுகொண்டு இருக்கின்றது.

அதில் வர இருக்கும் போட்டி, மேற்குலகம் ( இந்தியா சார்ந்து) சீனாவிற்கு எதிராக வடிவம் பெற்று வருகின்றது. சீனாவும், தனக்கு ஆதரவாக ஆசிய, ஆபிரிக்க நாடுகளை ( சந்தைகளை) கடன் கொடுத்து வளைத்துப்போடுகின்றது.  

அப்படியான ஒரு இந்த புதிய ஒழுங்கில் இந்தியாவின் கிழக்கு கரையோரங்கள் புதிய பொருளாதார மையங்களாக உருப்பெற்றால், அதனால் வங்ககடலும் கடல்சார் பயணங்களும் பாதுகாப்பும் மேற்குலக - இந்திய பொருளாதார நலன்களுக்கு தேவையாகின்றது, அதுவே, வட-கிழக்கு இலங்கை (தமிழர் தாயகம்). 

=====================================================================

 

தொடர்ச்சியாகத் தமிழினத்தை அழிவுக்குள்ளாக்கிவரும் கொள்கையைக் கொண்டுள்ள இந்தியா எப்படித் தமிழருக்குச் சாதகமாக நிலையெடுக்கும். தமிழரைத் தலையெடுக்கவிடக்கூடாது என்ற கொள்கையுடையதே அவர்களது வெளியுறவுக் கொள்கையெனும்போது இவை சாத்தியமா? இந்தியாவை  நம்பமுடியுமா? பூமாலையென்று வந்து பேரழிவுகளை விதைத்தவர்கள். அதன்தொடர்ச்சியாகவே இன்றுவரை செயற்படும் நிலையில் இவை சாதகமா பாதகமா என்றும் சிந்திக்க வேண்டும். இங்கு அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை .நிரந்தர எதிரியும் இல்லை என்று கூறலாம். ஆனால் இந்தியா என்ற கொடுமரசு தனது ஒன்றியத்தில் இருக்கும் தமிழர்கள் சிங்களத்தால்கடலிலே சுட்டுப்படுகொலைசெய்யும்போதே பேசாதிருக்கும் அரசை எப்படி நம்புவது. நல்லது நடந்தால் மாற்றம் நிகழ்ந்தால் நல்லதே.பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

1 hour ago, nochchi said:

இங்கு அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை .நிரந்தர எதிரியும் இல்லை என்று கூறலாம்.

இங்கே கோத்தா / மகிந்தா மீண்டும் ஆட்சியில் என்பதும் அவர்கள் சீனா பக்கமே பலமாக சாய்ந்துள்ளார்கள் என்பது புது டெல்லிக்கு நிச்சயம் தெரியும். அவர்களும் கடினமாக ஒன்றில் சகோதரர்களை வளைத்துப்போட இல்லை ரணில் / சஜித் குழுக்களை இணைத்து பலமாக்க முயலுவார்கள். ஆனால், அதையும் சகோக்கள் கணித்தே நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

ஆக, தற்போதைக்கு சிங்கள அரசின் பக்கம் இருந்து புது டெல்லிக்கு சாதகமான தரப்புகள் / வாய்ப்புக்கள் இல்லை. 

இந்த நிலை எவ்வளவு காலம் நீடிக்கும்? இந்த மாற்றம் ( சிங்கள / பௌத்தம் ) ஆழமாக ( சீனாவின் ஆதரவுடன்) தீவில் பதிந்துவிடுமா? , இந்த கேள்விகளுக்கான விடைகளிலேயே புது டெல்லி நிரந்தரமாக தமிழர் பக்கம் சாயலாம். அதாவது அவர்களின் நலன்களும் எமது நலன்களும் ஒரே கோட்டில் வரும் பொழுதே எமக்கு நன்மைகள் கிட்டும். 

அதற்கான சாத்தியங்கள் கோத்தாவின் பலத்தாலும் கோவிட்19 னாலும் அதிகரித்துள்ளன.  

Link to comment
Share on other sites

1 hour ago, nochchi said:

தொடர்ச்சியாகத் தமிழினத்தை அழிவுக்குள்ளாக்கிவரும் கொள்கையைக் கொண்டுள்ள இந்தியா எப்படித் தமிழருக்குச் சாதகமாக நிலையெடுக்கும். தமிழரைத் தலையெடுக்கவிடக்கூடாது என்ற கொள்கையுடையதே அவர்களது வெளியுறவுக் கொள்கையெனும்போது இவை சாத்தியமா? இந்தியாவை  நம்பமுடியுமா? பூமாலையென்று வந்து பேரழிவுகளை விதைத்தவர்கள். அதன்தொடர்ச்சியாகவே இன்றுவரை செயற்படும் நிலையில் இவை சாதகமா பாதகமா என்றும் சிந்திக்க வேண்டும்.

உலகின் மிகப்பெரிய யுத்தமான இரண்டாம் உலக மாக யுத்தத்தின் முடிவில், ஜப்பான் சரணடைந்தும் அமேரிக்கா அணு குண்டை வீசியது. வெற்றி பெற்ற நாடுகள் ஜெர்மனியையும் இரண்டாக பிளந்தனர்.

ஆனால், அதே அமெரிக்க நாட்டின் உதவியுடன் இன்று ஒரு மிகப்பெரிய பொருளாதார பலமுள்ள நாடாக இந்த இரண்டு நாடுகளும் வளர்ந்துள்ளன. 1945-1955 காலப்பகுதிகளில் ஜெர்மனியர்களும் ஜப்பானியர்களும்  கூட அமெரிக்காவை சந்தேகத்துடனேயே பார்த்திருப்பார்கள். 

அதற்காக நாமும் கண்ணை மூடிக்கொண்டே இந்தியாவை இல்லை யாரையும் முழுமையாக  நம்ப கூடாது, ஆனால் நம்ப நடப்போம்.  

Link to comment
Share on other sites

9 hours ago, பையன்26 said:

ந‌ல்ல‌ செய்தி  , எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியாய் அமைந்தால் ம‌கிழ்ச்சி /
 

Guyana நாடும் கிரிக்கெட்டில் வெஸ்சின்டீஸ் அணிக‌ளுட‌ன் இருக்கும் ஒரு அணி  

இந்த நாட்டின் பிரதம மந்திரி தமிழர் வழி வந்தவரே, பெயர் :Hon. Moses Veerasammy Nagamootoo.
இந்த நாட்டில் நிறைய தமிழர்கள் வாழ்கிறார்கள் (இவர்களுக்கு தமிழ் தெரியாது ஆனால் பெயர்கள் மட்டும் அழகான தமிழ் பெயர்கள்) இவர்கள் தென்னிந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் குடியேற்றப்படடவர்கள்.

இங்கே கனடாவில் உள்ள எம்மவர்கள் இந்த நாட்டில் காணி வாங்கி பெருமளவில் விவசாயம் செய்கிறார்கள், கனடாவுக்கு  எமது மரக்கறி {கத்தரிக்காய், முறுக்கங்கய் ), மீன் என்பன பெருமளவில்  இந்த நாட்டில் இருந்தே வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் விவகாரத்தில் கொழும்பு தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் : கிழக்குத் திமோரின் முன்னாள் ஜனாதிபதி

5000-2-21-1024x520.jpgதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ்-ஹோர்தா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தக்கு வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேரையில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு திமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் தெரிவித்திருப்பதாவது, கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, ஸ்காட்டுகள் பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்று இலண்டன் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, கொழும்பில் இடம்பெற்றுள்ள அரசாங்கமும் தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழர்களைப் போன்றுக மிகப்பெரும் இன அடையாள உணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட ஒரு தேசிய இன மக்கள் தனித்திருக்க விரும்புவது ஏன்? தம்மைத்தாமே கேட்டுக் கொள்ளும் பொறுப்பு ஆளும் அரசுகளுக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார். ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்பதையும் அரசுகள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்;. ஸ்பெயினில் கத்தலோனியர்களும், துருக்கியில் குர்துகளும், ஐக்கிய பிரித்தானிய முடியரசில் ஸ்காட்டுகளும் நடத்தி வரும் நிகழ்காலப் போராட்டங்களைச் சிறப்பு எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டவர் தமிழ்மக்களின் போராட்டத்தையும் அதே வரிசையில் வைத்து கருத்துரைத்தார்.

இலங்கையில் தமிழர் இனவழிப்பு என்பதை குறிப்பிட்ட அவர், சென்ற நூற்றாண்டில் ஜெர்மனியில் யூதர்கள் இனவழிப்பு, சிரியாவிலும் சூடானிலும் இப்போதும் தொடரும் இனவழிப்பு ஆகியவற்றின் விரிவான சூழலில் பொருத்திக் காட்டினார். தேசிய இனக் குழுக்கள் ஒன்றையொன்று அரக்கராக்கிக் காட்டுவதற்கு மேல் உயர்ந்து, தேசிய இனச் சிக்கல்களைத் தீர்க்க ஆக்கவழியில் உரையாட வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

தன்னாட்சிக்கும் தேசியத்துக்குமான போராட்டம் ஒரு வரலாற்று உண்மையாகும், ஒவ்வொரு தேசமும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் அந்த சுதந்திரத்தின் பொருள் பிரிவினையாகத்தான் இருக்க வேண்டும். என்பதில்லை என்றார். இந்தோனேசியாவில் தன்னுடைய அவருடைய கிழக்கு திமோரிய மக்களின் போராட்டம் கடந்து சென்ற பாதையை எடுத்துரைத்தவர் எப்படிப் பின்னொரு கட்டத்தில் தங்களின் எதிர்ப்பியக்கம் ஐநாவின் நடுவாண்மையில் இந்தோனேசிய அரசாங்கத்துடன் உரையாடல் என்ற முயற்சியில் ஈடுபட்டது என்பதையும், எப்படி முடிவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்று அது தங்கள் சுதந்திரத்துக்கு வழிகோலிற்று என்பதையும் குறிப்பிட்டார்.

இந்தோனேசிய அரசு ஒடுக்குமுறை வழிகளைக் கடைப்பிடித்த காலத்தில் எந்தக் கட்டத்திலும் கிழக்கு திமோரியர்கள் தங்கள் ஒடுக்குமுறையாளரை அரக்கராக்கிக் காட்டியதில்லை என்றார்.
சிறிலங்கா அரசாங்கம் கூடுதல் வலுவாற்றலாக இருப்பதால் பௌத்தத்தின் கருணையைக் காட்டி, தமிழ் மக்களைத் தேடிச்சென்று உதவலாம் என்பது முனைவர் ரமோஸ்-ஹோர்தாவின் கருத்து. ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீகள், ஒருபோதும் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளாதீர்கள் என்று அவர் தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார். எது வரினும் வெற்றி உங்களுக்கே என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.

மே18-முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவிற்கொள்ளும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வை ஒழுங்கு செய்து வருகிறது. பலவாறான பின்னணிகள் கொண்டோரும் அமெரிக்கா, கொசோவோ, தெற்கு சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருமான புகழார்ந்த பேச்சாளர்கள் முன்சென்ற ஆண்டுகளில் இந்தப் பேருரை ஆற்றியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

http://thinakkural.lk/article/42885

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.