Jump to content

ரட்னஜீவன் ஹூல் மீதான அரசாங்கத்தின் அழுத்தம் வெட்கம் கெட்டது – மனோ கணேசன் சீற்றம்


Recommended Posts

 

Manoganeshan.jpg

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வரலாறு முழுக்க சுயாதீனமானவர் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நியமிக்கப்பட முன்னமேயே, அவர் பக்க சார்பற்றவர் என நாட்டுக்கு நீரூபித்தவர் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் விடுதலை புலிகள் பலம்பெற்று இருந்த காலத்தில் கூட அவர் துணிச்சலுடன் தனது கருத்துகளை முன்வைக்க தவறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மனோ கணேசன், அவர் மீதான வெட்கம் கெட்ட அழுத்தத்தை அரசு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது என்றும் இதன் நடுநிலையாக தேர்தல்கள் அணைக்குழுவும், அதன் மூன்று அங்கத்தவர்களும் செயற்படுவதை நாடு அவதானிக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பின்னணியில் இந்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம், இந்த சுயாதீன செயற்பாட்டில் தீவிர முன்முயற்சியுடன், பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களை இந்த அரசாங்கம் குறிவைத்து அழுத்தம் செலுத்த முயலுகின்றமை எமக்கு தெளிவாக தெரிகிறது என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளின் தேவைக்காக செயற்படுகிறார் என்றும், அவர் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் மீது பழி தீர்க்க முயல்வதாகவும் மனோ கணேசன் குற்றம் சாட்டினார்.

தாம் இழுத்த இழுப்புக்கு அவர் உடன்படவில்லை என்ற காரணத்தால், நீண்ட காலமாகவே அவர் மீது அரசாங்கத் தரப்பு காட்டாமாக உள்ளார்கள் என்றும் இன்று அது அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டிய மனோ கணேசன் இந்த வெட்கம் கெட்ட செயலை உடன் தலையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/143745?ref=ibctamil-recommendation

Link to comment
Share on other sites

வடக்கில் மே18 இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோஷ்டியை சொறிலங்கா போலீஸ் காடையர்கள் அச்சுறுத்தியபோது  வாய்திறக்காத மனோ கணேசன் இப்ப வேதனைப்படுறது எவ்வளவு நடிப்பு?

மனோ கணேசன் சுய ஆதாயத்துக்காக பலருக்கு அடிமை சேவகம் செய்றது புதுசில்லையே!

Link to comment
Share on other sites

ரத்னஜீவன் ஹூல் மீதான அரசின் அழுத்தம் வெட்கத்திற்குரியது : மனோ கணேசன்

சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது. இதன் நடுநாயகமாக தேர்தல் ஆணையகமும், அதன் மூன்று அங்கத்தவர்களும் செயற்படுவதை நாடு அவதானிக்கின்றது.

இந்த பின்னணியில் இந்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம், இந்த சுயாதீன செயற்பாட்டில் தீவிர முன்முயற்சியுடன், செயற்படும்  தேர்தல் ஆணையகத்தின் அங்கத்தவர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலை இந்த அரசாங்கம் குறிவைத்து அழுத்தம் செலுத்த முயலுகின்றமை எமக்கு தெளிவாக தெரிகிறது.

அரசியல் கட்சிகளின் தேவைக்காக செயற்படுகிறார் என்றும், அவர் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் மீது பழி தீர்க்க முயல்வதாக நாம் கருதுகிறோம்.

தாம் இழுத்த இழுப்புக்கு அவர் உடன்படவில்லை என்ற காரணத்தால், நீண்ட காலமாகவே அவர் மீது அரசாங்க அமைச்சர்கள் காட்டாமாக உள்ளார்கள்.

இது இன்று அதிகரித்துள்ளது. இந்த வெட்கம் கெட்ட செயலை உடன் தலையிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நிறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பேராசிரியர் ரத்னஜீவன்  ஹூல் வரலாறு முழுக்க சுயாதீனமானவர்தான். தேர்தல்கள் ஆணைக்குழுவில்  நியமிக்கப்பட முன்னமேயே, அவர் பக்கச்சார்பற்றவர் என நாட்டுக்கு நீரூபித்தவர்.

கடந்த காலங்களில் விடுதலை புலிகள் பலம் பெற்று இருந்த காலத்தில் கூட அவர் துணிச்சலுடன் தனது கருத்துகளை முன்வைக்க தவறவில்லை. இன்று அவர் எந்தவொரு கட்சிக்கும் சார்பாக செயற்படவில்லை. எமக்கும் அப்படி ஒரு சார்பு நிலை தேவைப்படவும் இல்லை.

அவர் சார்பு நிலை எடுப்பாரெனில் மக்கள் நலன் சார்ந்ததாகவும், ஜனநாயகம் சார்ந்ததாகவே இருக்கின்றது. இந்த அடிப்படையில் இலங்கையிலும், இலங்கை விவகாரங்களில் அக்கறை கொண்ட சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் அவர் மீதான  ஏற்புடைமை பழுதுபடாமல் இருக்கின்றது.

நாடு திரும்பியுள்ள, பேராசிரியர் ரத்னஜீவன்  ஹூலின் புதல்வி, தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு,  ரத்னஜீவன்  ஹூலின் மீது புதிய அழுத்தங்கள் செலுத்தப்படுகின்றன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்  சென்ற பயணத்தில் வீதி தடைகளில் அவருக்கு தொல்லை தரப்பட்டுள்ளது.

அவரையும் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி முடக்க அரசாங்கம் திட்டமிடுவதாக தெரிகிறது. இவை சிறுபிள்ளைத்தனமான செயல்களாகும். அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளை பார்த்து ஏற்கனவே நாடும், உலகும் சிரிக்க தொடங்கி விட்டன. மென்மேலும் நகைப்புக்கு  ஆளாக வேண்டாம் என அரசாங்கத்துக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.    

https://www.virakesari.lk/article/82500

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

இவை சிறுபிள்ளைத்தனமான செயல்களாகும். அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளை பார்த்து ஏற்கனவே நாடும், உலகும் சிரிக்க தொடங்கி விட்டன

சீனா  தான் இன்று உலகம் அந்த உலகம் மகிந்தாவின் /கொத்தவின் பொக்கற்றுக்குள்....

Link to comment
Share on other sites

மனோ கணேசன் அவர்களே நீங்கள் உண்மையை கூறினாலும் சிலருக்கு அது புரிவதில்லை. புரிந்தாலும் புரியாதவர்கள் போல இருப்பார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது போல நீங்கள் பேச வேண்டுமாம். இல்லாவிடடாள் இங்கு இந்த திரியில் கிழித்து (?) போடுவார்கள். இனி பேசும் முதல் இந்த களத்தில்வந்து அவர்களின் கருத்தை கேட்டு விட்டு பேசவும்.

Link to comment
Share on other sites

5 hours ago, Rajesh said:

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்  சென்ற பயணத்தில் வீதி தடைகளில் அவருக்கு தொல்லை தரப்பட்டுள்ளது.

பலமாதங்களா தமிழ் மக்களை சோதனை சாவடிகளில அகோர வெயிலில இறக்கி சோதனை செய்யேக்க வாய்திறக்காத மனோ கணேசன் இப்ப வேதனைப்படுறது எவ்வளவு நடிப்பு?

மனோ கணேசன் சுய ஆதாயத்துக்காக பலருக்கு அடிமை சேவகம் செய்றது புதுசில்லையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனோகணேசன் அரசியல்வாதி. அரசியல்வாதிகளிடம் அதிகமாக எதிர்பார்ப்பது ஏமாற்றத்திலே முடியும். ☹️

3 hours ago, Vankalayan said:

மனோ கணேசன் அவர்களே நீங்கள் உண்மையை கூறினாலும் சிலருக்கு அது புரிவதில்லை. புரிந்தாலும் புரியாதவர்கள் போல இருப்பார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது போல நீங்கள் பேச வேண்டுமாம். இல்லாவிடடாள் இங்கு இந்த திரியில் கிழித்து (?) போடுவார்கள். இனி பேசும் முதல் இந்த களத்தில்வந்து அவர்களின் கருத்தை கேட்டு விட்டு பேசவும்.

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுதானே அரசியல்வாதிகளின் வேலை 🤔😂

Link to comment
Share on other sites

7 hours ago, விவசாயி விக் said:

ராஜபக்ச சகோதரர்கள் சிங்கள ஒற்றுமையை சிதைத்து வருகிறார்கள்.  தமிழர் குறுக்கால போகாமல் எட்ட நிண்டு வேடிக்கை பார்க்கவேண்டும்.

சரியா சொல்லி இருக்கிறீர்கள் 

Link to comment
Share on other sites

பேரா.ஹூல் சுய தனிமைப்படுத்தல் செய்யவேண்டியதில்லை – தேர்தல் ஆணையத் தலைவர்

 
 
தேர்தல் ஆணையாளர்களில் ஒருவராகிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் அவரது மகள் எழிலினி தொடர்பாகத் தென்னிலங்கை ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை என ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மே 04, லண்டனிலிருந்து திரும்பிய எழிலினி, இதர பயணிகளைப் போல், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்ட பின்னர் பரிசோதனையில் நோயில்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். அதற்கான அத்தாட்சிப் பத்திரத்தில் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவும், மருத்துவ அதிகாரி அனில் ஜசிங்கவும் கையெழுத்திட்டிருந்தார்கள்.

மகளை அழைத்துக்கொண்டு, ஆணையப் பணிமனைக்குச் சென்றபோது பேரா. ஹூல் ஆணையத்தின் வாகனத்தைத் தனிப்பட்ட காரணங்களுக்குப் பாவித்தார் எனவும், எழிலினி மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் செல்லாது தேர்தல் ஆணையத்துக்குச் சென்றது தவறு என்றும் தென்னிலங்கை ஊடகங்கள் சில குற்றம்சாட்டியிருந்தன. அதே வேளை யாழ்ப்பாணம் சென்ற பேராசிரியர் ஹூலின் வீட்டிற்குச் சென்ற காவற்துறையினரால் பேராசிரியர் ஹூல், எழிலினி மற்றும் ஹூலின் வாகனச் சாரதி அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் சென்றிருக்கவேண்டுமென நிர்ப்பந்திகப்பட்டிருந்தார்கள் எனவும், வாகனச்சாரதி தடுத்துவைக்கப்பட்டு 3 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டிருந்ததாகவும் பேரா. ஹூல் நேற்று ‘கொலொம்பொ ரெலிகிராஃப்’ பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் தேர்தல் ஆணையத் தலைவர் தலையிட்டு வாகனச் சாரதியை விடுவித்திருந்தார். இன்றய அறிக்கையில், ஆணையத் தலைவர் “எழிலினியைத் தவிர மற்றவர்கள் சுய தனிமைப்படுத்தல் செய்யவேண்டியதில்லை எனவும், ஆணைய அலுவலகத்தின் பணிப்பின் பேரிலேயே பேராசிரியர் அலுவலக வாகனத்தைப் பாவிக்கவேண்டி வந்தது” எனவும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதால், யாழ்ப்பாண அலுவலகத்தின் வாகனத்தையே பாவிக்கும்படி அலுவலகம் அவருக்குப் பணித்திருந்தது. ஊரடங்கு நடைமுறையின் காரணமாகத் தனியார் வாகனத்தைப் பாவிக்க முடியவில்லை எனவும், பொதுப் போக்குவரத்து பாவனையில் இல்லாமையால், மே 20 கொழும்பு அலுவலகத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹூல், ஆணையத்தின் அனுமதியுடன் அலுவலக வாகனத்தில் கொழும்பு வந்திருந்தார். அவர் மீண்டும் யாழ் போகும்போது , அலுவலகத்தின் அனுமதியுடன், மகளையும் அவ்வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக அவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், தென்னிலங்கை ஊடகங்கள், எழிலினி சுய தனிமைப்படுத்தலில் செல்லாதமை, ஹூல் அலுவலக வாகனத்தைப் பாவித்தமை பற்றித் தவறான செய்திகளை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இன்றய அறிக்கையின் மூலம் ஆணையத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சம்பவத்தின் பின்னணியைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

https://marumoli.com/பேரா-ஹூல்-சுய-தனிமைப்படு/

Link to comment
Share on other sites

20 hours ago, Kapithan said:

மனோகணேசன் அரசியல்வாதி. அரசியல்வாதிகளிடம் அதிகமாக எதிர்பார்ப்பது ஏமாற்றத்திலே முடியும். ☹️

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுதானே அரசியல்வாதிகளின் வேலை 🤔😂

அது சரி . அது இலங்கை வாழ்  மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்வதாக அமைந்தால் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Vankalayan said:

அது சரி . அது இலங்கை வாழ்  மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்வதாக அமைந்தால் போதும்.

அடிக்கடி same side goal அடிக்கிறீரே goal post எந்தப் பக்கம் இருக்கிறது என்று கவனிப்பதில்லையா 😂

Link to comment
Share on other sites

47 minutes ago, Kapithan said:

அடிக்கடி same side goal அடிக்கிறீரே goal post எந்தப் பக்கம் இருக்கிறது என்று கவனிப்பதில்லையா 😂

அப்படி இல்லை. இலங்கை மக்களின் அபிலாஷை என்று எழுதினேன். கவனிக்கவும் இலங்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

goal post எந்தப் பக்கம் இருக்கிறது என்று கவனிப்பதில்லையா 😂

இரண்டு பக்கமும் இருக்கு தானே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.