Jump to content

கோட்டாபயவின் அருவருப்பான உரைக்கு பொறுத்திருந்து உரிய பதில் வழங்குவேன்! சம்பந்தன் தெரிவிப்பு


Recommended Posts

போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

படையினரைக் கெளரவிக்கும் அரசின் போர் வெற்றி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய ஜனாதிபதி, 'எம்மைப்போன்ற ஒரு சிறிய நாட்டில் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ள படைவீரர்கள் தேவையற்றஅழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.

எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் தங்கள் நிலைபாடு என்னவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை தொடர்பில் பேசிய அவர், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட்டமைப்பு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/246624?ref=home-top-trending

 

Link to comment
Share on other sites

7 hours ago, போல் said:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன்

எப்ப பதில்? அடுத்த தீவாளிக்கா? அடுத்த பொங்கலுக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Rajesh said:

எப்ப பதில்? அடுத்த தீவாளிக்கா? அடுத்த பொங்கலுக்கா?

கோட்டாபாய சொன்னதை ஊடகங்கள் திரிபு படித்து கூறிவிட்டார்கள்...இனங்களுக்கு இடையே முறுகலை உண்டாக்குவதற்காக

Link to comment
Share on other sites

"ஜனாதிபதி கூறியது தமிழ் மக்களின் பிரச்சினையை நோக்கிய விடயம் இல்லை"

 

Link to comment
Share on other sites

50 minutes ago, ampanai said:

"ஜனாதிபதி கூறியது தமிழ் மக்களின் பிரச்சினையை நோக்கிய விடயம் இல்லை"

தமிழின அழிப்புக்கு துணை செய்யும் வியாக்கியானத்தை செய்வது சுமந்திரனா? டக்ளசா? என்ற போட்டி கொலைகாரர்களின் எடுபிடிகளுக்கிடையே நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, போல் said:

தமிழின அழிப்புக்கு துணை செய்யும் வியாக்கியானத்தை செய்வது சுமந்திரனா? டக்ளசா? என்ற போட்டி கொலைகாரர்களின் எடுபிடிகளுக்கிடையே நடக்கிறது.

உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருடம் வைகாசி 19 சதுர்தசி திதி - கார்த்திகை நாள் நல்லா இருக்கு..👌

WUfWw_HjhsFRgerqDItU2sRkdo62d6GSiFi18Wcf

டிஸ்கி :

நல்ல நாள் குறித்தான கருத்து..👍

Link to comment
Share on other sites

சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது தான் ஆயுதப்போராட்டம்
தந்தை செல்வாவின் அடிப்படைக் கொள்கைகளை தமிழரசுக் கட்சி கைவிட்டு விட்டதா? என கேள்வியெழுப்பியுள்ள அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் சர்ச்சைக்குரிய சுமந்திரனின் நேர்காணல் தொடர்பில் விளக்கமளிக்கிறார்.
 
(சிங்கக் கொடியின் உருவாக்கம், தந்தை செல்வா, சுதந்திர தினம் )
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனைப்போல ஒரு நல்லவர், வல்லவர், தீரன், வீரன் இல்லை என்று ஒரு சில தமிழர் கனவில் நீந்திக்கொண்டு இருக்கிறார்கள். அதை தொடர்ந்து  வைத்துக்கொள்ள வேண்டுமானால், சுமந்திரனைப்போல் பச்சோந்திகள் பலர் சம்பந்தன் ஐயாவுக்கு தேவை. இவர்களை விலக்கினால் சிங்களத்திடம் இவர்கள் பெற்ற கையூட்டு பட்டியல் வெளிவந்துவிடும் என்கிற பயமாக இருக்கலாம், அல்லது இவருக்குப் பதிலாக   வேறொரு  திறமையானவர் தெரிவு செய்யப்பட்டால், சம்பந்தனின் திறமை இன்மையால் தமிழரின் உடமை, உயிர் இழப்புகளுக்கு இவரது இழுத்தடிப்பு  காரணம். திறமையற்ற அரசியல்வாதி. என்கிற உண்மை வெளிவந்து விடும். சம்பந்தரைப்போல் ராஜதந்திரி இல்லை  என்ற பெயரைத் தக்க  வைத்திருப்பதற்காக,  சுமந்திரனை கக்கத்திற்குள் வைத்தே இருப்பார் சம்பந்தன்.  

Link to comment
Share on other sites

சம்பந்தன் ஐயா அறிக்கை விடடவுடன் கோத்த தனது உரையை வாபஸ் வாங்கி  விடுவார். ஏன் என்றால் அது மிகவும் கடுமையான அறிக்கையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

On 22/5/2020 at 08:08, Rajesh said:

எப்ப பதில்? அடுத்த தீவாளிக்கா? அடுத்த பொங்கலுக்கா?

அடுத்த கிரிஸ்மசுக்கா இருக்கும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2020 at 21:25, போல் said:

போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பார்த்து.....மெல்லமாய்.... பிறகு நாடு  சின்னாபின்னமாய் போயிடும் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கப்படும் சன்மானத்தைப்பொறுத்து.

Link to comment
Share on other sites

3 hours ago, satan said:

கொடுக்கப்படும் சன்மானத்தைப்பொறுத்து.

அதான் உண்மை!
சம்பந்தனுக்கு கிடைச்ச ஒரு ஆடம்பர வீடு போதாதுனு நினைக்கிறன்.
சுமந்திரன் புதுசு புதுசா புகுத்துற ஆக்களுக்கும் ஆடம்பர வீடு கேக்கிறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு விரைவாக முடிவுகளுக்கு வந்திடாதீர்கள் இதுவும் தனிப்பட்ட கருத்தாக இருக்கப்போகுது,
பிறகு உங்களுக்கு தான் நஷ்ட்டம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2020 at 07:25, Vankalayan said:

சம்பந்தன் ஐயா அறிக்கை விடடவுடன் கோத்த தனது உரையை வாபஸ் வாங்கி  விடுவார். ஏன் என்றால் அது மிகவும் கடுமையான அறிக்கையாக இருக்கும்.

சம்மந்தர்ட ஜோக்கெல்லாம் பெரிசா கோட்டா எடுக்கமாட்டார் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2020 at 18:19, போல் said:

தமிழின அழிப்புக்கு துணை செய்யும் வியாக்கியானத்தை செய்வது சுமந்திரனா? டக்ளசா? என்ற போட்டி கொலைகாரர்களின் எடுபிடிகளுக்கிடையே நடக்கிறது.

சரியாகச் சொன்னீர்கள். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் இந்திய றோவின் அனுசரனையுடன் நான்றாக கையாளுகின்றான் எம் அரசியல்வாதிகளை. கடைசி காலத்தில் பெட்டி பெட்டியாக வாங்கி பிற்கால சந்ததிகள் சந்தோஷமிழந்து வாழ இப்பவே சேமிக்கனும்

Link to comment
Share on other sites

4 hours ago, உடையார் said:

சிங்களவன் இந்திய றோவின் அனுசரனையுடன் நான்றாக கையாளுகின்றான் எம் அரசியல்வாதிகளை.

அதால தானே அவங்களை எல்லை தாண்டிய இந்திய பயங்கரவாதிகள் என்டு அழைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.