Jump to content

சர்வதேசத்தை பகைத்தால் இலங்கைக்கே பேராபத்து!- ரணில், சஜித் போர்க்கொடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையிலிருந்து இலங்கை விலகினால் அது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும். இது நாட்டின் தலைவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியாதா? என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார் .

படையினருக்கு அழுத்தங்கள் கொடுக்கும் வகையிலும் நாட்டுக்கு அநீதியை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் தொடர்ந்து செயற்பட்டால் அவற்றின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ளத் தயங்கமாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போர் வெற்றி விழாவில் உரையாற்றியிருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் போர் வெற்றி விழா உரையை நான் கடுமையாகக் கண்டிக்கின்றேன். ராஜபக்சக்களின் செயற்பாடுகளினால்தான் இலங்கையை சர்வதேசம் ஒதுக்கி வைத்திருந்தது. இதற்கு கடந்த நல்லாட்சியில் நாம் தீர்வு கண்டிருந்தோம்.

சர்வதேசத்துடன் இணைந்து பயணித்தோம். இலங்கை மீதான சர்வதேசத்தின் கொடிய பார்வையை விலக்கியிருந்தோம். ஆனால், மீண்டும் அதே நிலைமைக்கு இட்டுச் செல்லும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றியுள்ளார்.

சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையிலிருந்து இலங்கை விலகினால் அது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும்.

இது நாட்டின் தலைவரான ஜனாதிபதிக்குத் தெரியாதா? ஜனநாயக ரீதியில் மக்கள் அளித்த வாக்குகளினால் நாட்டின் தலைவரான இவர் சர்வாதிகாரப் போக்கில் - சர்வதேசத்துக்குச் சவால் விடும் வகையில் செயற்படுவது நாட்டுக்கும் மக்களுக்கும் ஏன் படையினருக்கும் அழகல்ல என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன் எனது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் போர் வெற்றி விழா சர்வாதிகாரத்தின் உச்சநிலையை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றது. சர்வதேசத்தைப் பார்த்து - கை நீட்டி எச்சரிக்கை விடுவது நாட்டுக்குத்தான் ஆபத்தாக மாறும் என்பதை ஜனாதிபதி புரியாமல் இருப்பது வெட்கக்கேடாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் எமது நாடு பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்தவேளையில் சர்வதேச அமைப்புகளினதும் நிறுவங்களினதும் உதவிகளை நாம் நாட வேண்டும். அதைவிடுத்து சர்வதேசத்தைப் பகைப்பது எமது நாட்டுக்குத்தான் பாரிய பின்வினைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/246634?ref=home-feed

Link to comment
Share on other sites

அவர் ஒரு பேச்சுக்கு சொன்னால் அதையெல்லாம் தூக்கி பிடிப்பதா? அவர் சொன்னது சார்க் அமைப்பிலிருந்து விலகுவதைப்பற்றித்தான். அது ஒன்றுக்கும் உதவாத ஒரு அமைப்பு. மத்தபடி இதெல்லாம் ஒரு வெட்டி பேச்சுதான். சர்வதேச அமைப்பிலிருந்து அப்படி நினைத்த மாத்திரத்தில் இலகுவாக விலகி இவர்களால் தாக்கு பிடிக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Vankalayan said:

அவர் ஒரு பேச்சுக்கு சொன்னால் அதையெல்லாம் தூக்கி பிடிப்பதா? அவர் சொன்னது சார்க் அமைப்பிலிருந்து விலகுவதைப்பற்றித்தான். அது ஒன்றுக்கும் உதவாத ஒரு அமைப்பு. மத்தபடி இதெல்லாம் ஒரு வெட்டி பேச்சுதான். சர்வதேச அமைப்பிலிருந்து அப்படி நினைத்த மாத்திரத்தில் இலகுவாக விலகி இவர்களால் தாக்கு பிடிக்க முடியாது. 

சார்க் அமைப்பு சிறிலங்கா இராணுவத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லையே ....சார்க் அமைப்பு இராணுவங்களும் இந்த போர்குற்றத்திற்கு உடைந்தையாக இருந்தவைகள் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊத்தபாயவுக்கு (கோத்தா ஒரு ஊத்தை) இதொன்னும்.. புதிதல்ல. 2006 இல் வடக்குக் கிழக்கில் இருந்து ஐநா வையே ஓட ஓட விரட்டித்துதானே சாட்சியமற்ற இனப்படுகொலையை செய்தவர்.  மேலும் போர் முடிந்த கையோடு இணைத்தலைமை நாடுகளை கழட்டிவிட்டிட்டு..  அவற்றிற்கு அளித்திருந்த பொய் வாக்குறுதிகளில் இருந்தும் ராஸ்கொல் (ராஜபக்ச கும்பல் ரவுடிக் கும்பல் என்பதால்..) கும்பல்... செளகரியமாக வெளியேறிக் கொள்ள இடமளித்தது.. எல்லாமே... சர்வதேசம் சொறீலங்காவை செல்லப்பிள்ளை கணக்கா அதன் தவறுகளுக்கு எல்லாம் தட்டிக்கொடுத்ததன் விளைவு ஆகும். 

இதனை தமிழர் தரப்பும் சரியாகப் பாவிக்காமல்.. ராஸ்கொல் கும்பலின் காலின் போய் விழுந்ததும்.. அவர்களின் எடுபிடிகளை இனப்படுகொலையாலர்களை குறிப்பாக சரத்பொன்சேகாவை தமிழரை ரட்சிக்க வந்த சனநாயக போசகர் போலக் காட்டியதும்.. மைத்திரியை.. ரணிலை.. சந்திரிக்காவை.. சஜித்தை..  நல்லாட்சி நாயகர்கள்.. என்றதும் தான்.. இப்ப இந்த அதீத அடுத்த கட்ட திமிருக்கு காரணம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.