Jump to content

ஜெனிவாவரை அம்பிகா சென்றதன் இரகசிய பின்னணி! சுமந்திரனால் கூறமுடியாது - சுதா பகீர்த் தகவல்


Recommended Posts

625.187.560.350.160.300.053.800.330.160.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் வேட்பாளராகக் சுமந்திரனால் களமிறக்கப்பட்டவர் அம்பிகா.

இவர் கடந்த ஜெனீவா பயணத்தின் போது அங்கு சிவில் சமூக பிரதிநிதியாக கலந்துகொண்டிருந்தார்.

அங்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை ஒருங்கிணைப்பாளர்களரோடு சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

அப்போது இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் கலந்துரையாடிய வேளையில் ஸ்பெஷல் கோர்ட் எதுவும் தேவையில்லை, இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இலங்கை நீதிமன்றங்களினூடாகவே நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தமை ஏனையோருக்கு வேடிக்கையாவே இருந்தது என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளரான சுதா தெரிவித்திருந்தார்.

லங்காசிறியின் 24 மணிநேர செய்திச் சேவையில் கலந்துகொண்டு இலங்கையின் இனப்படுகொலை தொடர்பிலும் மேலும் பல விடயங்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/246631?ref=imp-news

Link to comment
Share on other sites

22 minutes ago, போல் said:

அப்போது இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் கலந்துரையாடிய வேளையில் ஸ்பெஷல் கோர்ட் எதுவும் தேவையில்லை, இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இலங்கை நீதிமன்றங்களினூடாகவே நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தமை

நாங்கள் ஒரு பொய் சொல்லி எமது இனத்தை ஏமாற்றி அரசியல் செய்ய விரும்புவார்கள் இல்லை 

எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்'  

Link to comment
Share on other sites

அக்கா தேர்தலில் ஆசனம் கொடுக்கவிலை என்று கடுப்பில இருக்கின்ற. உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பாக்கின்றோம். 

Link to comment
Share on other sites

இங்குள்ள கள உறுப்பினர்கள் இலங்கை நீதி துறையில் நிறைய நமிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அவர் சொன்ன கருது சரியாக இருக்கலாம். அவருக்கு போட்டியிட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்பதட்காக அவர் அப்படி கூறியும் இருக்கலாம் அல்லது அப்படி இல்லாமலுமிருக்கலாம்.

Link to comment
Share on other sites

On 22/5/2020 at 01:20, போல் said:

இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் கலந்துரையாடிய வேளையில் ஸ்பெஷல் கோர்ட் எதுவும் தேவையில்லை, இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இலங்கை நீதிமன்றங்களினூடாகவே நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தமை

தமிழினப் படுகொலைகளை மறைக்க முயன்ற அம்சும் கோஷ்டி!

Link to comment
Share on other sites

20 hours ago, Rajesh said:

அம்சும்

சம்சும் தொல்லை போதாதென்று அம்சும் வேற வேணுமோ? 

Link to comment
Share on other sites

சுமந்திரன் போன்ற சட்டத்தரணிகளின் சுபாவங்கள் நகைச்சுவையா விளக்கப்பட்டுள்ளது 

 

Link to comment
Share on other sites

சுமந்திரன் தனக்கு அம்பிகாவுடன் உள்ள தொடர்புகள், இருவரும் போர்க்குற்றவாளிகள் தப்புவதற்கு செய்த இரகசிய வேலைகளை பகிரங்கமாக சொல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

On 22/5/2020 at 01:44, ampanai said:

நாங்கள் ஒரு பொய் சொல்லி எமது இனத்தை ஏமாற்றி அரசியல் செய்ய விரும்புவார்கள் இல்லை 

எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்'  

சதா பொய் தான்.
சர்வதேச விசாரணை முடிஞ்சு என்று ஒரு பொய்.
ஒற்றை ஆட்சியை சமஸ்டி என்று  ஒரு பொய்.
அம்பிகா பற்றி ஒரு பொய்.
நளினி பற்றி ஒரு பொய்.
இது மாதிரி அடுக்கினா லொறி லோட் காணாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎05‎-‎2020 at 11:14, Vankalayan said:

இங்குள்ள கள உறுப்பினர்கள் இலங்கை நீதி துறையில் நிறைய நமிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அவர் சொன்ன கருது சரியாக இருக்கலாம். அவருக்கு போட்டியிட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்பதட்காக அவர் அப்படி கூறியும் இருக்கலாம் அல்லது அப்படி இல்லாமலுமிருக்கலாம்.

நித்தியானந்தரிடம் பயிற்சி எடுத்திருப்பீர்களோ ஒருவேளை .. ம்ம் .. எப்படியும் இருக்கலாம் , அல்லது இல்லாமலும் இருக்கலாம் ...

Link to comment
Share on other sites

On 21/5/2020 at 13:14, ampanai said:

எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்'  

“எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்' “ என்று கவலைப்படுகிறீர்கள். படிக்காதவர்களை பிடித்து ஆயுதமும் கொடுத்த தமிழ் மக்கள் அதனால் சிறப்பாக வாழ்ந்தார்களா? இந்த ஆயுதங்களால் படிக்காதவர்கள் தமிழ் மக்களை அழித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

52 minutes ago, கற்பகதரு said:

“எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்' “ என்று கவலைப்படுகிறீர்கள். படிக்காதவர்களை பிடித்து ஆயுதமும் கொடுத்த தமிழ் மக்கள் அதனால் சிறப்பாக வாழ்ந்தார்களா? இந்த ஆயுதங்களால் படிக்காதவர்கள் தமிழ் மக்களை அழித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

தந்தை செல்வா பின்னரான அரசியல் தலைமைகள் எமது மக்களை ஏமாற்றி வருகின்றனர். 

படிப்பை விட இனப்பற்றையும் பலவேறு பொருளாதார, செயல்திட்ட, தொழில்நுட்ப, சர்வதேச அரசியல் திறமையையும் கொண்டிருந்தவர்கள். தமக்கு தெரியாததை தெரிந்து கொண்டவர்கள் இல்லை தெரிந்தவர்களை அணுகி உதவிகளை பெற்றவர்கள், நியமித்தவர்கள். 

ஆயுதம் தாங்கிய தலைமைகளுக்குள், குறிப்பாக விடுதலைப்புலிகள், நாட்டில் பற்றும் மக்கள் பால் நேர்மையாகவும் நடந்தவர்கள். அதனால் தான் தமிழர்கள் மத்தியில் இருந்து சகல தரப்பினரும் அவர்களுடன் இணைந்தார்கள், பயணித்தார்கள், இன்றும் அந்த போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

23 minutes ago, ampanai said:

படிப்பை விட இனப்பற்றையும் பலவேறு பொருளாதார, செயல்திட்ட, தொழில்நுட்ப, சர்வதேச அரசியல் திறமையையும் கொண்டிருந்தவர்கள். தமக்கு தெரியாததை தெரிந்து கொண்டவர்கள் இல்லை தெரிந்தவர்களை அணுகி உதவிகளை பெற்றவர்கள், நியமித்தவர்கள். 

25 வைகாசி,  நேற்று, அமெரிக்காவில் போர் வீரர்கள் தினம் கொண்டாடினார்கள். நாட்டை ஆயுதம் தாங்கி, பயங்கரவாதி என பிரித்தானியாவில் அழைக்கப்பட்டவர் கூட கல்வி அதிகம் கற்காதவர். ஆனால், உலகின் தலைசிறந்த ஒரு குடியரசு கொள்கையை பொருளாதாரத்தை நிறுவ அடித்தளம் போட்டவர். 

கல்வி அறிவை விட தலைமைத்துவம், நேர்மை, நாட்டுப்பற்று போன்ற குணாதியசயங்கள் அவரிடம்  இருந்தன.அதனால் தான் அவரை அமெரிக்க  மக்கள் மதிக்கின்றனர். 

Link to comment
Share on other sites

2 hours ago, கற்பகதரு said:

“எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்' “ என்று கவலைப்படுகிறீர்கள். படிக்காதவர்களை பிடித்து ஆயுதமும் கொடுத்த தமிழ் மக்கள் அதனால் சிறப்பாக வாழ்ந்தார்களா? இந்த ஆயுதங்களால் படிக்காதவர்கள் தமிழ் மக்களை அழித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

அன்று பிரபாகரன் படைகளால் கைதிகளாகச் சிறைப்பட்டிருந்த சிங்களப் படையைச் சேர்ந்தவர்கள், சிலகாலத்தின்பின் அவர்களின் பெற்றோரின் வேண்டுதலுக்கு இரங்கி விடுவிக்கப்பட்டார்கள். கல்வி அறிவோ, பிறமொழி அறிவோ அற்ற தங்கள் பிள்ளைகள், தமிழர் சிறையிலிருந்து மீண்டுவந்தபோது கொண்டிருந்த கல்வி அறிவுடன், சரளமாக ஆங்கிலம் பேசும் திறனும்கண்டு வியந்ததை, சிங்களப் பத்திரிகைகள் சிலவும் அன்று மறைக்காது வெளியிட்டிருந்தன. இத்தனை சிறப்புடைய பிரபாகரன்படையானது, படிக்காத தமிழர்களின் கையில் ஆயுதம் கொடுக்கும்போது, அவர்களுக்கு அறிவூட்டாமலா கொடுத்திருக்கும்..??   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2020 at 03:14, Vankalayan said:

இங்குள்ள கள உறுப்பினர்கள் இலங்கை நீதி துறையில் நிறைய நமிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அவர் சொன்ன கருது சரியாக இருக்கலாம். அவருக்கு போட்டியிட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்பதட்காக அவர் அப்படி கூறியும் இருக்கலாம் அல்லது அப்படி இல்லாமலுமிருக்கலாம்.

வங்காலையில் கடற்படையினர் தாயை வல்லுறவு செய்து கொலை செய்தும், கணவனையும் மகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்தபின்னர் கழுத்தில் சுருக்கிட்டு கூரையில் கட்டித் தொங்க விட்டிருந்தனரே அந்த வழக்கின் நிலை என்னவென்று வங்காலையானுக்குத் தெரியுமா ☹️

 

அது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் பெயரில்தானே வங்காலையான். சொந்த இடம் வங்காலை இல்லைத்தானே ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

“எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்' “ என்று கவலைப்படுகிறீர்கள். படிக்காதவர்களை பிடித்து ஆயுதமும் கொடுத்த தமிழ் மக்கள் அதனால் சிறப்பாக வாழ்ந்தார்களா? இந்த ஆயுதங்களால் படிக்காதவர்கள் தமிழ் மக்களை அழித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

படித்த, சமூகத்தில் பொருளாதார ரீதியில்  பலமாக இருந்த,  சாதிக் கட்டமைப்பில் உயர் நிலையிலிருந், தமிழர் அரசியலைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு பிரிவினரே ஆயுதப் போராட்டத்திற்கான அடித்தளத்தை போட்டார்கள் என்பதை அன்பர் கற்பகதரு அடிக்கடி மறந்து போகின்றீர்களா அல்லது மறைக்க முயல்கின்றீர்களா அல்லது தமிழர் அரசியல் போராட்ட வரலாறு தெரியாமல் கதைக்கின்றீர்களா ☹️

அந்த ஆயுதப் போராட்டம், அரசியல்  அதிகாரத்தை இக் குறிப்பிட்ட பிரிவினரிடமிருந்து  ஆயுதம் தாங்கியோரிடம் கையளித்தபோது , ஆயுதம் தூக்க வைத்தவர்களே பின்னர் ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக திரும்பியது கற்பகதரு தெரிந்திருக்க நியாயம் இல்லை. ☹️

Link to comment
Share on other sites

On 26/5/2020 at 09:45, Gowin said:

சதா பொய் தான்.
சர்வதேச விசாரணை முடிஞ்சு என்று ஒரு பொய்.
ஒற்றை ஆட்சியை சமஸ்டி என்று  ஒரு பொய்.
அம்பிகா பற்றி ஒரு பொய்.
நளினி பற்றி ஒரு பொய்.
இது மாதிரி அடுக்கினா லொறி லோட் காணாது.

மிதிலா சிறிபத்மநாதனிடம் கேட்டா கப்பல் லோட் பொய்கள் கிடைக்கும்

Link to comment
Share on other sites

On 26/5/2020 at 03:33, Kapithan said:

அந்த ஆயுதப் போராட்டம், அரசியல்  அதிகாரத்தை இக் குறிப்பிட்ட பிரிவினரிடமிருந்து  ஆயுதம் தாங்கியோரிடம் கையளித்தபோது , ஆயுதம் தூக்க வைத்தவர்களே பின்னர் ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக திரும்பியது கற்பகதரு தெரிந்திருக்க நியாயம் இல்லை. ☹️


அதிகம் படித்த  ஆயுதம் தூக்க வைத்தவர்களே பின்னர்   அதிகம் படிக்காதவர்களின்  ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக திரும்பியது எனக்கு நிச்சயமாக தெரியும். அதிகம் படிக்காதவர்களாதலால்  ஆயுதம் தூக்கியவர்களால் தாமும் அழிந்து மற்றவர்களையும் தாம் அழிப்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.  ஆயுதப் போராட்டம் பெரும் அழிவில் முடியும் என்று கண்டவுடன்   அதிகம் படித்தவர்கள் அதற்கு எதிராக திரும்பினார்கள். அதிகம் படிக்காதவர்களோ எல்லாம் அழிந்தபிறகே ஆயுதப்போராட்டத்தை கைவிட்டார்கள். படிப்பு வித்தியாசம் தெரிகிறது,  இல்லையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கற்பகதரு said:


அதிகம் படித்த  ஆயுதம் தூக்க வைத்தவர்களே பின்னர்   அதிகம் படிக்காதவர்களின்  ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக திரும்பியது எனக்கு நிச்சயமாக தெரியும். அதிகம் படிக்காதவர்களாதலால்  ஆயுதம் தூக்கியவர்களால் தாமும் அழிந்து மற்றவர்களையும் தாம் அழிப்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.  ஆயுதப் போராட்டம் பெரும் அழிவில் முடியும் என்று கண்டவுடன்   அதிகம் படித்தவர்கள் அதற்கு எதிராக திரும்பினார்கள். அதிகம் படிக்காதவர்களோ எல்லாம் அழிந்தபிறகே ஆயுதப்போராட்டத்தை கைவிட்டார்கள். படிப்பு வித்தியாசம் தெரிகிறது,  இல்லையா?

 

ஆக,

நான் சொல்லிய, சொல்ல விரும்பிய விடயத்தை விடயத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் 😂😂

நான் கூறியது இதுதான்;

படித்த, பொருளாதார பலம் மிக்க, சைவ  வேளாள + முக்கியமாக,  படித்த, பொருளாதார பலம் மிக்க, தென்னிந்திய திருச்சபையினைப் பின்னணியாகக் கொண்ட,  ஆங்கிலக் கல்வியறிவு ஊட்டப்பட்ட (தெரியாதவர்களுக்கு - அமெரிக்கன் மிசன்) வேளாள அதிகார வர்க்கத்தினர் தமது அதிகாரத்திற்காக தமிழர் நலன் என்கின்ற போர்வையில் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆனால் ஆயுதப் போராடத்தின் விளைவாக, அரசியல் அதிகாரம் சாமானியர் கைகளுக்குப் போனவுடன் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் வெகுசன ஆயுதப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தனர். 

ஆயுதப் போராட்டத்தை தொடங்கியோரே அதனைக் காட்டிக் கொடுத்தனர்.

😂😂நான் கூறியதை திரித்துக் கூறி, விடயத்தை வேறுபக்கம் திருப்பலாம் என நினைக்காதீர். 😂😂

உண்மையான, நேர்மையான தலைமை எப்போதுமே போராட்டத்தை வழிநடாத்துமே தவிர, அதனைக் காட்டிக் கொடுக்காது.

ஆனால் உமது ஆட்களெல்லோருமே தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தனர். அது மட்டுமல்ல எதிரியோடு சேர்ந்து நின்றுகொண்டு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிராக செயற்பட்டனர்.

ஏன் ? 

அதிகாரத்திற்காக. அதிகாரத்திற்காக மட்டுமே 😏😏

எனக்கு கதை விடலாமென்று நினைக்காதீர். அமெரிக்கன் மிசன் தொடர்பாக ஆதியோடந்தமறிந்தவன். என்னால் புடுப் புட்டு வைக்க முடியும். 

1977 கலவரத்திற்கு முன்னையா நாட்களில் நாட்டின் அரசியற் சூழல் எவ்வாறிருந்தது,  உம்மவர்களில்  எவர் எவரெல்லாம் UK விற்கும் US ற்கும் போனவர்கள். ஏன் போனவர்கள். யார் யாருடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள் என்கின்ற தகவலெல்லாம் என்னிடமுண்டு. அவர்கள் திரும்பி வந்தவுடன் கலவரம் எப்படி ஆரம்பித்தது  என்பதும் எனக்குத் தெரியும்.

நீர் ஆயத்தமென்றால் நானும் விடயங்களை வெளிப்படுத்த  ஆயத்தம். 😏

எப்படி வசதி ? 😡

(குறிப்பு; பிரச்சனையின் ஆரம்பத்தைக் காட்டவே / பின்னணியைக் காட்ட / வாசிப்போர் புரிந்து கொள்ள சாதியை இங்கே குறிப்பிட்டேன். சாதியைக் குறிப்பிட்டு அதனை ஒரு பேசு பொருளாக்கும் நோக்கம் எனக்கில்லை என்பதை வாசிப்போர் கவனத்திற் கொள்க)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:


அதிகம் படித்த  ஆயுதம் தூக்க வைத்தவர்களே பின்னர்   அதிகம் படிக்காதவர்களின்  ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக திரும்பியது எனக்கு நிச்சயமாக தெரியும். அதிகம் படிக்காதவர்களாதலால்  ஆயுதம் தூக்கியவர்களால் தாமும் அழிந்து மற்றவர்களையும் தாம் அழிப்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.  ஆயுதப் போராட்டம் பெரும் அழிவில் முடியும் என்று கண்டவுடன்   அதிகம் படித்தவர்கள் அதற்கு எதிராக திரும்பினார்கள். அதிகம் படிக்காதவர்களோ எல்லாம் அழிந்தபிறகே ஆயுதப்போராட்டத்தை கைவிட்டார்கள். படிப்பு வித்தியாசம் தெரிகிறது,  இல்லையா?

 

இப்படிக்கதைப்பதன் மூலம், நீங்கள் மெத்த படித்தவர் என்று சொல்லுகிறீர்களா. அது சரி படித்தவர் என்பதன் அர்த்தம். என்ன?  PhD வரை படித்திருக்க வேண்டுமா. 

என்னதான் ஆணவம், படித்தவர்கள் ஆயுதப்போராட்டத்தை அங்கீகரிக்கவில்லையாம்!

நீங்கள் படித்தறிவை புலிகள் பட்டறிவால் அறிந்துகொன்டார்கள்.

நிறைகுடம் தழும்பாது குறைகுடங்கள் இப்படித்தான் தழும்பிக்கொன்று கெக்கரிக்கும்

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

படித்த, பொருளாதார பலம் மிக்க, சைவ  வேளாள + முக்கியமாக,  படித்த, பொருளாதார பலம் மிக்க, தென்னிந்திய திருச்சபையினைப் பின்னணியாகக் கொண்ட,  ஆங்கிலக் கல்வியறிவு ஊட்டப்பட்ட (தெரியாதவர்களுக்கு - அமெரிக்கன் மிசன்) வேளாள அதிகார வர்க்கத்தினர் 

 

1 hour ago, Kapithan said:

ஆனால் உமது ஆட்களெல்லோருமே தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தனர். அது மட்டுமல்ல எதிரியோடு சேர்ந்து நின்றுகொண்டு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிராக செயற்பட்டனர்.

 

1 hour ago, Kapithan said:

எனக்கு கதை விடலாமென்று நினைக்காதீர். அமெரிக்கன் மிசன் தொடர்பாக ஆதியோடந்தமறிந்தவன். என்னால் புடுப் புட்டு வைக்க முடியும். 

இந்த தரத்தை சேர்ந்தவர்களுடன் நான் கருத்து பரிமாறுவதில்லை. 

2 minutes ago, ragaa said:

நீங்கள் படித்தறிவை புலிகள் பட்டறிவால் அறிந்துகொன்டார்கள்.

நிறைகுடம் தழும்பாது குறைகுடங்கள் இப்படித்தான் தழும்பிக்கொன்று கெக்கரிக்கும்

முள்ளிவாய்க்கால் நினைவுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கற்பகதரு said:

இந்த தரத்தை சேர்ந்தவர்களுடன் நான் கருத்து பரிமாறுவதில்லை. 

இதற்கு இன்னுமொரு பெயர் இருக்கிறது - எஸ்கேப்பிசம்.😂 Escape-ism 😎

 

நான் பிறருடைய தரத்தை ஒருபோதும் அளவிடேன். எனக்கூட்டப்பட்ட கல்வி எல்லோருமே சமமானவர்கள் என எனக்கு புகட்டியுள்ளது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கற்பகதரு said:

 

 

இந்த தரத்தை சேர்ந்தவர்களுடன் நான் கருத்து பரிமாறுவதில்லை. 

முள்ளிவாய்க்கால் நினைவுகள்.

அந்த முள்ளவாய்காலிற்கு வித்திட்டவர்கள் ந்நீங்களும் உங்களைப்போன்று படித்தவரகள் என்று கொக்கரிப்பவர்களும் தான். 

ஒரு தகவல்: சிங்கப்பூர் மற்றும் இஸரேல் போன்ற நாடுகளில் கட்டாய ராணுவ சேவை உள்ளது. மற்றும் மேற்கத்தய நாடுகளில் ஒரு போர் என்று வந்தால் 50 வயதிறகு உடபட்டோர் எல்லோரும் ராணுவ சேவைக்கு போக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

 

 

இந்த தரத்தை சேர்ந்தவர்களுடன் நான் கருத்து பரிமாறுவதில்லை. 

முள்ளிவாய்க்கால் நினைவுகள்.

உங்களைப் பற்றி அறிய இந்த பொன்னான கருத்து போதும், தரம் பார்த்துதான் பழகுவீர்களா, உங்களில் மேட்டுகுடி இரத்தம் நன்றாக ஊறிபோயுள்ளது. படித்தவனைவிட படிக்காத பல மேதைகள் உண்டு, அவர்களால்தான் நாம் உண்ணும் உணவிலிருந்து உடுப்பு வரை உற்பத்தியாகின்றது. அவர்களை போன்று சுத்தமான இதயம் யாருடமும் இல்லை. அதுதான் அவர்களில் பலர் சுயநலமின்றி போராடினார்கள் நம் விடுதலைக்காக. நாம் கோழைகள், இப்ப இணைய போராளிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

உங்களைப் பற்றி அறிய இந்த பொன்னான கருத்து போதும், தரம் பார்த்துதான் பழகுவீர்களா, உங்களில் மேட்டுகுடி இரத்தம் நன்றாக ஊறிபோயுள்ளது. படித்தவனைவிட படிக்காத பல மேதைகள் உண்டு, அவர்களால்தான் நாம் உண்ணும் உணவிலிருந்து உடுப்பு வரை உற்பத்தியாகின்றது. அவர்களை போன்று சுத்தமான இதயம் யாருடமும் இல்லை. அதுதான் அவர்களில் பலர் சுயநலமின்றி போராடினார்கள் நம் விடுதலைக்காக. நாம் கோழைகள், இப்ப இணைய போராளிகள் 

உண்மையில் இவர் மேட்டுக் குடி அல்ல. மேட்டுக் குடியாகும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர் என எண்ணுகிறேன்.😏

ஒரு கருத்தை முன்வைத்தால் அதிலுள்ள குறைகளை அல்லது தவறான வாதத்தை சுட்டிக் காட்டி வாதாடுவதுதான் முறை. அதை விடுத்து , வாதாடுபவரின் நிறம் சரியில்லை, வாதாடுபவர் மீசை வைத்திருக்கிறார். அவர் அப்படி. இவர் இப்படி. அதனால் இவருடன் வாதாடமாட்டேன் என்று கூறுவது நகைப்பிற்குரியது. 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.