Jump to content

முன்னாள் புலிப் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை..!


Recommended Posts

விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக விரைவில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த டிலும் அமுனுகம, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் கைதிகள் குறித்து ஜனாதிபதியினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாகவும் கூறினார்.

முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன, சில போராளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் சிலருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றும் டிலும் அமுனுகம குறிப்பிட்டார்.

இந்நிலையில் நீண்ட காலமாக சிறையில் உள்ள கைதிகளின் நடத்தை குறித்து ஆராய ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட டிலும் அமுனுகம, முன்னாள் போராளிகள் மட்டுமல்லாமல் மற்ற கைதிகள் விடுதலை தொடர்பாகவும் பரிசீலிக்கப்படுகின்றதாக கூறினார்.

அத்தோடு எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி முன்னாள் போராளிகளை சிறையில் வைத்திருப்பது பயனற்றது என்று அரசாங்கம் நம்புவதாகவும் டிலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதனை தொடர்ந்து அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் விரைவில் கலந்துரையாடலை மேற்கொள்ளவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.vanakkamlondon.com/ltte-20-05-2020/

Link to comment
Share on other sites

தேர்தலுக்கு முன்னர் இதை செய்தாக வேண்டும். இல்லாவிடடாள் இன்னொரு தேர்தல் வரும்வரை யாருமே பேச மாடடார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Vankalayan said:

தேர்தலுக்கு முன்னர் இதை செய்தாக வேண்டும். இல்லாவிடடாள் இன்னொரு தேர்தல் வரும்வரை யாருமே பேச மாடடார்கள். 

கடந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் நல்ல சந்தர்பத்தை எமது தலைவர்கள் தவறவிட்டுள்ளார்கள்.இனியாவது இதுக்கு ஏதாவது செய்வார்களா பார்ப்போம்.

Link to comment
Share on other sites

20 minutes ago, ஈழப்பிரியன் said:

கடந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் நல்ல சந்தர்பத்தை எமது தலைவர்கள் தவறவிட்டுள்ளார்கள்.இனியாவது இதுக்கு ஏதாவது செய்வார்களா பார்ப்போம்.

கடந்த அரசாங்கத்துக்கு சிங்கள மக்களின் ஆதரவு மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்பட்ட்து. உண்மையாகவே அவர்களுக்கு தமிழ்,முஸ்லீம் ஆதரவு இல்லாதிருந்தால் அவர்களால் ஆட்சி அமைத்திருக்கவே முடியாது. எனவே ராஜபக்சே அரசு சிங்கள மக்களை எப்போதும் உசுப்பேற்றிக்கொண்டே இருந்தது. இத்தகு பயந்து ரணில் அரசும் ஆக்கபூர்வமான ஒன்றாயும் செய்யவில்லை. தமிழனுக்கு சிறிய உதவி செய்தாலும் விமல், கம்மன்பில போன்றோம் அதை பூதகரப்படுத்தி விடுவார்கள். இதட்கு பயந்துதான் இந்த பொண்ண ---------------- களின் ஆட்சியும் நடந்தது. எதுவென்றாலும் ராஜபக்சேக்களின் ஆட்சியில் நடந்தால் ஒழிய , மற்றயவர்களின் ஆட்சியில் நடக்கும் எந்த காரியமமும் நிரந்தரமாக இருக்காது. இதுதான் யதார்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையானது என்றால் வரவேற்கப்பட வேண்டிய விடயம். 👍

செய்தி உண்மையானது என்றால் வரவேற்கப்பட வேண்டிய விடயம். 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.