Jump to content

முடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா

முடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா

 

ஹாங்காங் மீது புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனாவால் ஹாங்காங் முடிவுக்கு வருகிறது.
பதிவு: மே 22,  2020 10:33 AM
பெய்ஜிங்
 
2019-ல் ஹாங்காங்கை உலுக்கிய ஜனநாயக சார்பு போராட்டங்களுக்குப் பிறகு, சீனா இப்போது அதன் மீது ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கத் தயாராக உள்ளது.
 
நாடாளுமன்றம் அதன் ஆண்டு கூட்டத்தொடரை இன்று நடத்திய பின்னர் இந்த சட்டம் குறித்த விவரங்கள் வழங்கப்படும் என்று சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜாங் யேசுய் தெரிவித்துள்ளார்.
 
ஜாங் யேசுய் கூறியதாவது:-
 
"புதிய சூழ்நிலைகள் மற்றும் தேவைகளின் வெளிச்சத்தில், தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) அதன் அரசியலமைப்பு அதிகாரத்தை பயன்படுத்துகிறது" ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க ஒரு புதிய சட்ட கட்டமைப்பையும் அமலாக்க பொறிமுறையையும் நிறுவுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
புதிய சட்டம் ஹாங்காங்கின் நிலப்பரப்பில் அனுமதிக்கப்படாத பல சுதந்திரங்களை முடிவுக்குக் கொண்டு வந்து முன்னாள் பிரிட்டிஷ் காலனியின் மீது சீனாவுக்கு கூடுதல் கட்டுப்பாட்டைக் கொடுக்கும்.
 
ஹாங்காங் அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த நடவடிக்கை குறித்த கூறுகையில்., இது தொடர்பான விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் ஹாங்காங் ஊடகங்கள் இந்த சட்டம் பிரிவினை, வெளிநாட்டு தலையீடு, பயங்கரவாதம் மற்றும் மத்திய அரசைக் கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து தேசத்துரோக நடவடிக்கைகளையும் தடை செய்யும் என்று தெரிவித்துள்ளது.
 
இந்த நடவடிக்கை ஒரு நிதி மையமாக அதன் நற்பெயரை கடுமையாக பாதிக்கும் என்று ஹாங்காங்கில் உள்ள எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது நடந்தால்,` ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்` அதிகாரப்பூர்வமாக அழிக்கப்படும் "என்று ஜனநாயக சட்டமன்ற உறுப்பினர் டென்னிஸ் குவோக் கூறினார். 
 
ஹாங்காங்கின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால், அது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும், ஏனெனில் அங்கு வசிக்கும் குடிமக்களில் குறைந்தது 85,000 பேர் அமெரிக்கர்கள். மேலும் 1,300 க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன, இதில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய அமெரிக்க நிதி நிறுவனமும் பங்குகளை வைத்துள்ளது.
 
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறும் போது இந்த திட்டம் குறித்து இதுவரை யாருக்கும் தெரியாது". "அது நடந்தால் நாங்கள் அந்த பிரச்சினையை மிகவும் வலுவாக கையாளுவோம் செய்வோம்," என்று தெரிவித்தார். 
 
 
 
Link to comment
Share on other sites

சீனாவின் சட்டத்தில் என்ன இருக்கிறது?

சீன தேசிய மக்கள் காங்கிரஸால் இசைவு அளிக்கப்பட்ட இந்த சட்டத்தின் வரைவு அறிக்கை ஹாங்காங் தனது பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

தேவையான போது, சீன அரசு சில அமைப்புகளை ஏற்படுத்தி ஹாங்காங்கை பாதுகாக்கும் என அது கூறுகிறது.

அதாவது ஹாங்காங் விஷயத்தில் எப்போது வேண்டுமானாலும் சீனாவின் பாதுகாப்பு அமைப்புகள் தலையிடும், தங்கள் சட்டத்தை அமல்படுத்தும்.

இதுதான் ஹாங்காங் மக்களுக்கு அச்சமூட்டுகிறது.

https://www.bbc.com/tamil/global-52789085

Link to comment
Share on other sites

பிரித்தானிய அரசு எவ்வாறு ஈழத்தை சிங்கள கொடுங்கோல் ஆடசியாளர்களிடம் ஒப்படைத்ததோ அதேபோன்று ஹாங்கொங்கை அதன் மக்களையும் ஏமாற்றிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ampanai said:

பிரித்தானிய அரசு எவ்வாறு ஈழத்தை சிங்கள கொடுங்கோல் ஆடசியாளர்களிடம் ஒப்படைத்ததோ அதேபோன்று ஹாங்கொங்கை அதன் மக்களையும் ஏமாற்றிவிட்டது. 

பிரித்தானியா தனது பொருளாதார நலன்களின் அடிப்படையிலன்றி மக்கள் நலன் காக்கும் அரசல்ல என்பது அதனால் கைமாற்றிவிட்டுச் சென்ற இலங்கைத்தீவு படும்பாடே எடுத்தக்காட்டு. 23ஆணடுகளில் கொங்கொங் படும்பாடு. தமது நலன்களுக்காக மேற்கு மட்டுமல்ல கிழக்கும் எதையும் செய்யும் என்பதை வரலாறுப் பதிவுகளில் கொட்டிக்கிடக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nochchi said:

பிரித்தானியா தனது பொருளாதார நலன்களின் அடிப்படையிலன்றி மக்கள் நலன் காக்கும் அரசல்ல என்பது அதனால் கைமாற்றிவிட்டுச் சென்ற இலங்கைத்தீவு படும்பாடே எடுத்தக்காட்டு. 23ஆணடுகளில் கொங்கொங் படும்பாடு. தமது நலன்களுக்காக மேற்கு மட்டுமல்ல கிழக்கும் எதையும் செய்யும் என்பதை வரலாறுப் பதிவுகளில் கொட்டிக்கிடக்கிறது. 

இவர்களால் விடுவிக்கப்பட்ட நாடுகள் ஒன்று சண்டை போட்டபடி இருக்கணும் இல்லை இவர்களின் சப்பாத்தை  நக்கி கொண்டு இருக்கணும் உதாரணம் இந்தியா மோடி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹொங்கொங்கின் இறைமையை உறுதி செய்வோம்- சீன தளபதியின் கருத்தினால் அச்சம்

ஹொங்கொங்கின் இறைமையை உறுதிசெய்யப்போவதாக சீனா இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹொங்கொங்கிற்கான சீனா இராணுவத்தின் தளபதி சென்டாவோஜியாங் இதனை தெரிவித்துள்ளார்.

china-army-officer-hong-300x168.jpg
சீனா அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு சட்டங்களினால் ஹொங்கொங்கில் மீண்டும் பதட்டநிலையும் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்துள்ள நிலையிலேயே சீன இராணுவஅதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
சீனாவின் புதிய மிகவும் ஆபத்தான தேசிய பாதுகாப்பு சட்டம் ஹொங்கொங்கின் சிவில் உரிமைகளிற்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அச்சம் வெளியாகியுள்ள நிலையிலேயே சீன இராணுவ அதிகாரி இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

Hong-Kong-protests-300x169.jpg
ஹொங்கொங்கின் தேசிய இறைமையையும் அபிவிருத்தி நலன்களையும் நீண்டகால பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரதன்மையையும் பாதுகாப்பது குறித்து அதிகாரிகளும் படையினரும் உறுதிபூண்டுள்ளனர், நம்பிக்கையுடன் உள்ளனர் என தெரிவித்துள்ள இராணுவ அதிகாரி அவர்களால் அது முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

honghonk-2-300x169.jpg

புதிய பாதுகாப்பு சட்டம் முதற்தடவையாக சீன படையினர் ஹொங்கொங்கில் செயற்படுவதற்கு அனுமதித்துள்ளதால் அச்சநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தால் சீன படையினர் வீதிகளில் இறங்கலாம் என்ற அச்சம் ஹொங்கொங்கில் காணப்படுகின்றது.
சீனாவின் உத்தேச சட்டத்திற்கு சர்வதேச அளவிலும் கடும் எதிhப்பு உருவாகியுள்ளது.

http://thinakkural.lk/article/43543

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2020 at 22:23, ampanai said:

பிரித்தானிய அரசு எவ்வாறு ஈழத்தை சிங்கள கொடுங்கோல் ஆடசியாளர்களிடம் ஒப்படைத்ததோ அதேபோன்று ஹாங்கொங்கை அதன் மக்களையும் ஏமாற்றிவிட்டது. 

ஹாங் காங் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. அவர்கள் Han இனத்தவர்கள். 

பிரித்தானியவே , சீனாவின் 100 வருட மேற்கு காலனித்துவ அரசுகளின் அவமானகரப்படுத்துத்தில்  பிரித்து 100 வருட குத்தகைக்கு எடுத்து. 

சீனாவின் வளர்ச்சியை, அதுவும் ஹொங்ஹ காங் சீனாவிடம் மீண்ட பின்பும், இவ்வளவு குறுகிய காலத்தில் சீன அடைந்து விடும் என்பதை மேற்கு ஒரு போதுமே எதிர்பார்க்கவில்லை. 

சீனா இது வரை ஹாங் காங் இல் மிகவும் பொறுமையாக இருந்தது.

அமெரிக்கா, பிரித்தானிய, ஆஸ்திரேலியே உளவு துறைகளும், பெயரற்ற ராஜதந்திரிககளும் ஹாங் kong இல், ஆர்ப்பாட்டகாரர்களுடன் நடத்திய கூத்துக்கள் விளைவே இந்த சட்டம்.

Link to comment
Share on other sites

9 minutes ago, Kadancha said:

சீனாவின் வளர்ச்சியை, அதுவும் ஹொங்ஹ காங் சீனாவிடம் மீண்ட பின்பும், இவ்வளவு குறுகிய காலத்தில் சீன அடைந்து விடும் என்பதை மேற்கு ஒரு போதுமே எதிர்பார்க்கவில்லை. 

உண்மை, அனால் இந்த வளர்ச்சியை கட்டுப்படுத்தும் / குறைக்கும் வல்லமையையும் உலகம் கொண்டுள்ளது.  

9 minutes ago, Kadancha said:

சீனா இது வரை ஹாங் காங் இல் மிகவும் பொறுமையாக இருந்தது.

சீனா பொறுமையாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீனாவின் ஆட்சியாளர்கள் அவ்வாறானவர்கள் அல்லர்.  

11 minutes ago, Kadancha said:

அமெரிக்கா, பிரித்தானிய, ஆஸ்திரேலியே உளவு துறைகளும், பெயரற்ற ராஜதந்திரிககளும் ஹாங் kong இல், ஆர்ப்பாட்டகாரர்களுடன் நடத்திய கூத்துக்கள் விளைவே இந்த சட்டம்.

ஆம், உண்மை. ஆனால், சீனா ஒன்றும் செய்யாமல் இருக்கும் / இருந்த அப்பாவியும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ampanai said:

சீனா பொறுமையாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீனாவின் ஆட்சியாளர்கள் அவ்வாறானவர்கள் அல்லர்.  

 

18 minutes ago, ampanai said:

ஆம், உண்மை. ஆனால், சீனா ஒன்றும் செய்யாமல் இருக்கும் / இருந்த அப்பாவியும் இல்லை. 

கிந்தியா காஸ்மீர், Goa இற்குள்  படைகளை அனுப்பியது போல ஏதாவது செய்ததா?

இவ்வளுவுக்கும், ஹாங் கொங் சீனாவின் இறையாண்மை நிலப்பரப்பு, பிரித்தானியாவிடல் குத்தகைக்கு இருந்த போதே. 

One country, two  system என்பதை மிகவும் பொறுமையுடனும், அவதானத்துடனும் மதித்தே Hong Kong ஐ நடத்தி வந்தது.

இதை பாவித்து, வெளியார், அதுவும் சீனாவின் 100 வருட அவமானத்துக்கு காரணாமான அரசுகள், ஹாங் காங் ஐ சனநாயகம் என்ற போர்வையில் சீனாவை சீண்டி இழுத்து, குலைக்க முயல்வது தெரிந்தும் பொறுமையாகவே இருந்தது, ஹாங் காங் இல் இந்த குழப்பத்தை உண்டு பண்ணும் உள்ளூர் வாசிகளுடன்  பேசி தீர்க்கலாம் என்று.

எந்தவோர் அரசும், தன்னுடைய இறைமையுள்ள  நிலப்பரப்பிலேயே, அதனுடைய 100 வருடங்கள் அவமானப்படுத்திய  இந்த மேற்கு நாடுகளின்  உளவு துறைகளும், பெயரற்ற ராஜதந்திரிகளும் ஆர்ப்பாட்டகருடன் சேர்ந்து பின்னிற்றகிறார்கள் என்று தெரிந்தும் பொறுமையாக இதுவரைக்கும் இருப்பது  என்பது Statecraft இல்  நடப்பது அருமை அல்லது இல்லை.   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல்

ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல்

சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா - இப்போது சீனாவின் மூத்த தலைமை அமைப்புக்கு அனுப்பப்பட்டு உள்ளது - இது ஹாங்காங்கின் தனித்துவமான அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்ற ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
 
சீனா தனது பிராந்தியத்தில் முதன்முறையாக தனது சொந்த பாதுகாப்பு நிறுவனங்களை நிறுவுவதையும் இந்த சட்டம் வழி வகுக்கலாம்.
 
ஹாங்காங், சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சிப் பிரதேசம். வெளியுறவு, ராணுவம் ஆகிய இரு துறைகளில், ஹாங்காங்கை சீனா கட்டுப்படுத்தும். மற்ற அனைத்துத் துறைகளையும் ஹாங்காங் அரசே நிர்வகிக்கும்.
 
70 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஹாங்காங் பல்லாண்டு காலமாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு ஹாங்காங்கை, இங்கிலாந்து சீனாவிடம் ஒப்படைத்தது. அப்போது தொடங்கி தற்போது வரை ஹாங்காங், சீனாவின் காட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக உரிமைகள் கோரியும் பல ஆண்டுகளாக ஹாங்காங் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இதனிடையே ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.  
 
ஒட்டுமொத்த ஹாங்காங்கையும் உலுக்கிய இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த ஹாங்காங் நிர்வாகம் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை கைவிட்டது. ஆனாலும் சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள் கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இது சீனாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.
 
அதனை தொடர்ந்து, ஹாங்காங் நிர்வாகத்தின் உதவியோடு ஜனநாயக ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தை சீனா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கையோடு ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சீன நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. அப்போது தேசிய பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா அறிமுகப் படுத்தும் இந்த சட்டத்தின் உண்மையான விளைவு, Hong Kong எப்போதுமே One Country, Two System ஆக இருக்கும்.

இந்த சட்டம் வராவிட்டால், 2047 ஹாங் காங் சீனாவுடன் ஒன்னு Country ஆகி விடும்.

உண்மையில் இதை Hong Kong அரசாங்கமே செய்து இருக்க வேண்டும், சீனாவும் அதையே விரும்பியது.

ஆனால்.ஹாங் கொங் இன் வலிமையற்ற அரசாங்கம் அந்த சட்டத்தை இயற்ற முடியவில்லை.

மேலும், சீன, மேற்றுகின் உளவுத்துரையும், முகமற்ற ராஜதந்திரிகளும் செய்யும் நாரி வேலையை பார்த்துக் கொண்டு, தனது கவனத்தை பொருளதாரா  வளர்ச்சியில் இருந்து தளர்த்துவதத்திற்கு தயாரில்லை.

இந்த சட்டத்தின் நோக்கமம், நடைமுறையும், ஹாங் காங் இந்த நீதி துறைக்கும், நிர்வாகத்தின் கீழேயே இருக்கும் என்பதே சீனாவிநத்தம், ஹாங் காங் இணைத்தும் எதிர்பார்ப்பு, அதன் மூலம் கொங் காங் வாசிகள் நிம்மதியும், திருப்தியும் அடைகிறார்கள்.

மேலும், இது சீனாவை பாதுகாக்கும். West இன் தடைகள் சீனாவை விட West ஐயே அதிகம் தாக்கும், காலப்போக்கில் சீனாவுக்குள்ள தாக்கம் அகன்று விடும். இது West இற்கு கடுக்காய் குளிசை போல கைக்கிறது. 

இது தான் உண்மை நிலவரம், West இன் ஊதுகுழல்களும், US, UK தமது கண்கள், காதுகள், வாய்கள் அடைக்கப்பட்டு,   கைகளும்  கட்டப்பட்டதாலும் வந்த வெப்பியார துடிப்பே தவிர, உண்மையில் ஹாங் காங் மக்களின் அக்கறையில் துள்ளவில்லை. 

  
 "If HK didn't enact Article 23 National Security legislation then it would have to be 1 country 1 system after 2047. With National Security legislation it will be 1 country 2 systems.

As HK's weak Govt couldn't meet their commitments under Article 23 the PRC enacted it under Article 18.

So people who are domiciled here are happy to have the legislation if it is subject to HK's judicial systems, which looks like the intention."    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்

30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்

ஹாங்காகங்கில் உள்ள 30 லட்சம் குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதனால் சீனா கோபம் கொண்டுள்ளது.
பதிவு: மே 30,  2020 17:03 PM
லண்டன்

ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சீனா அமுல்படுத்தும் நிலையில், ஹாங்காகங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து  குடியுரிமை வழங்க இங்கிலாந்து 

உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.

இங்கிலாந்தின்  இந்த முடிவு சீனாவை கொந்தளிக்கச் செய்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் அதற்கென சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உரிமைகளைப் பறிக்கும்
வகையில் கடந்த ஆண்டு ஒரு சட்டத்தைச் சீனா கொண்டு வந்தது.அதன்படி, ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரைச் சீனாவுக்குக் கடத்தி விசாரிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு 
வரப்பட்டது.

மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தியதால் இதை தற்காலிகமாக அந்த சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கும் நேரத்தில் சீனா அரசு சத்தமில்லாமல் ஹாங்காங் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. முன்பு ஹாங்காங் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருந்துள்ளதால், அங்குள்ளோரில் பலர் வெளிநாடுவாழ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் வெளிநாடுவாழ் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.

ஆகவே, சீனா அவர்களை ஒடுக்க முயலும் நேரத்தில், தன் குடிமக்கள் என்ற முறையில், அவர்கள் மீதான அக்கறையால்,இங்கிலாந்து சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது.அதன்படி, 350,000 வெளிநாடுவாழ் 
நாட்டினரின் விசா உரிமைகளை நீட்டிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

இது குறித்துப் பேசிய வெளியுறவுச்செயலர் டொமினிக் ராப்  வெளிநாடுவாழ் இங்கிலாந்து நாட்டினரின் விசா உரிமைகள் ஆறு முதல் 12 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.இது, அவர்கள் எதிர்காலத்தில் 
இங்கிலாந்து குடியுரிமை பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும்.
ஆனால், இன்னொருபக்கம், புலம்பெயர்தலை கட்டுப்படுத்துவதற்காக நீண்ட காலம் போராடி, இப்போதுதான்  ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியே கொண்டுவந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினர், பல்லாயிரக்கணக்கான ஹாங்காங் குடிமக்கள் இங்கிலாந்திற்குள் வருவதை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/30170324/Three-million-Hong-Kong-residents-eligible-for-UK.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாங்காங் பிரச்சினையில் உலக நாடுகள் தலையீடு; சீனா கோபம்

ஹாங்காங் பிரச்சினையில் உலக நாடுகள் தலையீடு; சீனா கோபம்

இங்கிலாந்தின் காலனியாக இருந்து வந்த ஹாங்காங் இப்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. ஹாங்காங்கை சீனாவிடம் 1997-ம் ஆண்டு இங்கிலாந்து ஒப்படைத்தபோது, ஹாங்காங்கின் சுயாட்சிக்கு உத்தரவாதம் தரப்பட்டது.


ஆனால் தற்போது ஹாங்காங்கின் சுயாட்சியை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை சீனா அமல்படுத்த முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. இதற்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்தன.

இந்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் அணி திரள்கின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தனியார் அமர்வில் இங்கிலாந்தும், அமெரிக்காவும் சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தன. சீனாவின் பாதுகாப்பு சட்டம், ஹாங்காங்கின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் என கூறின.

முறையான கூட்டத்தை தடுத்த சீனா, இந்த தலையீடை நிறுத்துமாறு அவர்களை கோபத்துடன் எச்சரித்தது.

சீனா தனது நடவடிக்கையில் உறுதியாக இருந்தால் ஹாங்காங்கில் இங்கிலாந்து பாஸ்போர்ட்டு வைத்துள்ள 3½ லட்சம் பேருக்கு தாங்கள் குடியுரிமை வழங்குவதற்கு பாதை வகுப்பதாகி விடும் என்று இங்கிலாந்து கூறி உள்ளது. ஆனால் இதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அப்படிச்செய்தால், அது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என கூறியது.

ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவையும் சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை குறைகூறின. இதையொட்டி சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/World/2020/05/31031904/World-countries-intervene-in-Hong-Kong-issue-China.vpf?utm_source=vuukle&utm_medium=talk_of_town

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரை அடாவடியாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்த கிந்தியாவை இந்த உலகு கண்டிக்கவில்லையே. பிறகு  கொங்கொங் விடயத்தில் ஏனிந்தக் கொதிப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.