Jump to content

கொரோனாவினால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் – பேராசிரியர் சிறிமால் அபயரட்ண


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg

கொரோனாவினால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் – பேராசிரியர் சிறிமால் அபயரட்ண

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண தெரிவித்துள்ளார்.

வறுமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகரப்பகுதிகளில் வாழும் வறிய மக்களே இவ்வாறு வறுமையினால் அதிகளவு பாதிக்கப்படப்போகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் நாளாந்தம் உழைப்பவர்கள், முறைசார தொழில்துறைகளில் உள்ளவர்கள் மேலும் கிராமங்களில் உள்ள வறியவர்கள் போல இவர்கள் விவசாயத்திலும் ஈடுபடுவதில்லை எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கங்கள் குறுகிய கால நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண சுட்டிக்காட்டியுள்ளார்.

குறுகிய காலத்தில் வறுமையை கட்டுப்படுத்துவதற்காக பல வழிகளில் நிதியை செலவிடவேண்டியிருக்கும் எனவும், பல நாடுகளில் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளவர்களிற்கு கொடுப்பனவுகளை வழங்கவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

அத்துடன், வறியவர்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/கொரோனாவினால்-இலங்கையில-2/

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

இந்த நிலையை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கங்கள் குறுகிய கால நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண சுட்டிக்காட்டியுள்ளார்.

உந்த ஆலோசனைகளை சகோக்கள் புரிந்துகொண்டதன் விளைவே இராணுவமயமாக்கல். 

Link to comment
Share on other sites

இந்த வைரசு அதன் உலக பொருளாதார தாக்கம் காரணமாக, இலங்கை மிகவும் நெருக்கடியான பொருளாதார நிலைக்குள் செல்வதை தவிர்க்க முடியாது. மகிந்த அண்ட் கோ, அவர்களின் இராணுவ மயமாக்கல் மற்றும் இனவழிப்பு கொள்கைகளும் இந்த வறுமை நிலைக்கு காரணம். 

தமிழ் பேசும் மக்களும் பாதிக்கப்படுவார்கள். இன்றும் பாதிக்கப்பட்டே வாழ்ந்து வருகிறார்கள். 

ஆனால், அதிகளவில் சிங்கள மக்கள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள்  தமிழ் பேசும் மக்கள் போன்று அமைதியாக இருக்கமாட்டார்கள். 

மலேசியா சிங்கப்பூரை பொருளாதார சுமை என 'கழட்டி விட்டது' போன்று சிங்களமும் தமிழ் பேசும் மண்ணை விட்டு ஓடவேண்டும்.  

 

Sri Lankan President Gotabaya Rajapaksa has requested India to provide a special USD 1.1 billion currency swap facility to boost the country’s draining foreign exchange reserves in view of the economic slowdown due to the coronavirus pandemic.
 
 
 
Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இந்த வைரசு அதன் உலக பொருளாதார தாக்கம் காரணமாக, இலங்கை மிகவும் நெருக்கடியான பொருளாதார நிலைக்குள் செல்வதை தவிர்க்க முடியாது. மகிந்த அண்ட் கோ, அவர்களின் இராணுவ மயமாக்கல் மற்றும் இனவழிப்பு கொள்கைகளும் இந்த வறுமை நிலைக்கு காரணம். 

தமிழ் பேசும் மக்களும் பாதிக்கப்படுவார்கள். இன்றும் பாதிக்கப்பட்டே வாழ்ந்து வருகிறார்கள். 

ஆனால், அதிகளவில் சிங்கள மக்கள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள்  தமிழ் பேசும் மக்கள் போன்று அமைதியாக இருக்கமாட்டார்கள். 

மலேசியா சிங்கப்பூரை பொருளாதார சுமை என 'கழட்டி விட்டது' போன்று சிங்களமும் தமிழ் பேசும் மண்ணை விட்டு ஓடவேண்டும்.  

 

Sri Lankan President Gotabaya Rajapaksa has requested India to provide a special USD 1.1 billion currency swap facility to boost the country’s draining foreign exchange reserves in view of the economic slowdown due to the coronavirus pandemic.
 
 
 

இல்லாத பொல்லாத பொய்கள் எல்லாம் சொல்லி ஆட்சியை பிடித்ததன் தண்டனையை அனுபவிக்கிறார்கள்.

ஜ தே கவும் ஆட்சியை இவர்களிடம் ஒப்படைத்ததனால் குற்றம் சுமத்த யாரும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

100506457_10158084781891855_4718534922032119808_n.jpg?_nc_cat=103&_nc_sid=dbeb18&_nc_ohc=2hv187G4oZYAX_HE78B&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=71e4830350316b940c2ed436e1e6f5c4&oe=5EF11B8A

நல்லதொரு கேலிச்சித்திரம். 👍🏼

Link to comment
Share on other sites

வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் அனுப்பும்பணத்தில் ஏப்பிரலில் 32.3% வீழச்சி

சிறீலங்கா 2020இல் 19% வீழ்ச்சியைக் காணும் - உலகவங்கி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.