Jump to content

யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது

image_19bb638b2a.jpgஎம்.றொசாந்த் 

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவர்களிடமிருந்த 10 இலட்சம் ரூபாய்க்கும்  அதிக பெறுமதியான நகைகளை மீட்டிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23, 24 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் எனவும் அவர்கள்  போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் தொடர்ச்சியாக கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. அவை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

முறைப்பாடுகளின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முனெடுத்து வந்த நிலையில், ஹெரோயின் போதைப்பொருளுடன் கடந்த சில நாள்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக  7 கொள்ளைச் சம்பவங்களுடன் மூவருக்கும் தொடர்புள்ளமை,  சந்தேக நபர்களிடம் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களின் மூலம் கண்டறியப்பட்டது. 

அதனை அடுத்து சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்படும் நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

4 சந்தேக நபர்களிடமிருந்தும் 10 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள்  தொலைக்காட்சிப் பெட்டி, மோட்டார் சைக்கிள் ஒன்று, 6 அலைபேசிகள், அப்பிள் ஐபாட்  உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழில்-கொள்ளை-சம்பவத்தில்-ஈடுபட்ட-குழு-சிக்கியது/175-250649

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது

கைது செய்யப்பட்டவர்கள் 23, 24 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் எனவும் அவர்கள்  போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அரச படைகளே ... தமிழ்ப் பகுதிகளில்,  போதைப்  பொருட்களை... உலாவ விட்டு,
தமிழ் மாணவர்களையும், இளைஞர்களையும்... பாழாக்கியதன் பலன்,
இப்போ... திருட்டு, கொலை என்று வந்து நிற்கின்றது. 😡

இதற்குள்... போதை கடத்தல் காரருக்காக  வாதாட, சுமந்திரனும் இருக்கிறார். 😞

Link to comment
Share on other sites

51 minutes ago, கிருபன் said:

யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது

image_19bb638b2a.jpg

இவர்கள் என்றுமே பிடிபட்டவர்களைக் காட்டிப் பொதுமக்களை இந்தக் களவாணிகளிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி செய்யமாட்டார்கள். குற்றவாளிகளைப் பிடித்த தங்களின் பதவிகளை வெளிக்காட்டும் சின்னங்கள் கொண்ட சீருடைப் படங்களையே போட்டுக் காட்டுவார்கள். இதன் பின்னணி என்னவாக இருக்கும்.....??

குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வரும்வரை ஒருவரைக் குற்றவாளியாக வெளிக்காட்டக் கூடாது எனச் சட்டமிருப்பதாக இங்கு வந்து தாளம்போடக்கூடாது. சிறீலங்காவில் நீதி, நியாயம், சட்டம், ஒழுங்கு என்பதெல்லாம் ஒரு கண்துடைக்கும் பம்மாத்துக் காரணிகளே.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அரச படைகளே ... தமிழ்ப் பகுதிகளில்,  போதைப்  பொருட்களை... உலாவ விட்டு,
தமிழ் மாணவர்களையும், இளைஞர்களையும்... பாழாக்கியதன் பலன்,
இப்போ... திருட்டு, கொலை என்று வந்து நிற்கின்றது. 😡

இதற்குள்... போதை கடத்தல் காரருக்காக  வாதாட, சுமந்திரனும் இருக்கிறார். 😞

உங்களை பொறுத்த வரை தமிழர்கள் எல்லோரும் சொக்க தங்கங்கள்😠 ...அவர்களுக்கு சொந்த புத்தி ,சுய புத்தி இல்லைtw_cry: ...தாமாக ஒன்றும் செய்ய மாட்டார்கள்...அவர்கள் கெட்டது எதுவும் செய்தால் சிங்களவனோ அல்லது வேறு இனத்தவனோ பழக்கியது...நல்லது எதுவும் என்றால் தாமாக செய்வார்கள் ...ஒருத்தரையும் சாட்டத் தேவையில்லை 🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

உங்களை பொறுத்த வரை தமிழர்கள் எல்லோரும் சொக்க தங்கங்கள்😠 ...அவர்களுக்கு சொந்த புத்தி ,சுய புத்தி இல்லைtw_cry: ...தாமாக ஒன்றும் செய்ய மாட்டார்கள்...அவர்கள் கெட்டது எதுவும் செய்தால் சிங்களவனோ அல்லது வேறு இனத்தவனோ பழக்கியது...நல்லது எதுவும் என்றால் தாமாக செய்வார்கள் ...ஒருத்தரையும் சாட்டத் தேவையில்லை 🙁

ரதி...  "தமிழர்கள், சொக்கத் தங்கங்கள்"  என்று, நான்... எங்கும்  கூறவில்லை. 

ஆனால்... தமிழர் பகுதியில், "ஆறு  தமிழருக்கு... ஒரு, அரச படை காவல் (இராணுவம் + காவல்துறை + கடற்படை) என்ற விகிதத்தில்... குவித்து, வைத்த போதும்.... கேரள  கஞ்சாவும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போதைப் பவுடர்களும்... தாராளமாக  மாணவர்கள் மத்தியில்,  புழக்கத்தில் இருப்பது எப்படி

இவர்களால்... அதை ஏன்?  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர  முடியாது உள்ளது... என்பதே இங்குள்ள ஆதங்கம். :)

பத்து நாட்களுக்கு  முதல்...  18 வயது சிறுவன் ஒருவன், வேறு சிறுவர்களுக்கு... போதைப் பொருட்களை விற்கிறான். அந்தச் சிறுவனுக்கு... இவ்வளவு காவல்துறை இருந்தும், இவைகள்... எப்படி கிடைத்தன?
அவைகள்... ஊருக்குள் வரும்  வழியை, கண்காணிப்பதுதான் அவர்களின் வேலை.

அதை விடுத்து...  தோட்ட வேலைக்குப் போய், களைத்து வரும் ஆட்களை, அடிப்பதும்.tw_confused:
வயோதிபர்களை, பெண்களை மிரட்டுவதும்... அவர்களின் வேலையல்ல.  :(

சென்ற, இரண்டு கிழமையில் மட்டும்..... அரச படைகள்...
சாதாரண மக்களை தாக்கும், சம்பவங்கள் பத்துக்கு மேல் நடந்து முடிந்துள்ளது. 😡

இவர்களுக்கு... உண்மையான அக்கறை இருந்தால்...
கடல் வழியாகவும், கொழும்பில் இருந்தும்,  முஸ்லீம் வியாபாரிகளுடாக...
யாழ்ப்பாணத்துக்கு... கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை  ஏன் தடுக்க முடியாது

தமிழன், நாசமாக... போகட்டும் என்று, வேண்டுமென்றே... 
அனுமதிக்கின்றார்கள்... என்பது, உங்களுக்கு, இன்னும் புரியவில்லையா 😯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

உங்களை பொறுத்த வரை தமிழர்கள் எல்லோரும் சொக்க தங்கங்கள்😠 ...அவர்களுக்கு சொந்த புத்தி ,சுய புத்தி இல்லைtw_cry: ...தாமாக ஒன்றும் செய்ய மாட்டார்கள்...அவர்கள் கெட்டது எதுவும் செய்தால் சிங்களவனோ அல்லது வேறு இனத்தவனோ பழக்கியது...நல்லது எதுவும் என்றால் தாமாக செய்வார்கள் ...ஒருத்தரையும் சாட்டத் தேவையில்லை 🙁

ராணுவத்தின் பெயரை சொல்லி களவெடுப்பது முழுவதும் நம்ம கழிசறைகள் பெரிய பைக்குகள் ,போண்கள், போதைக்கு காசு , இதற்கு எங்கே போவது களவுதான் இலகுவழி பல கும்பல்கள் சிக்கியிருக்கு தற்போது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அவர்கள் கூறிய விடையத்துடன் நான் நூறு விகிதம் உடன்படுகிறேன் நான் என்னதான் சல்ஜாப்புகள் கூறினாலும் எம்மவர்க்கு எங்கே போனது புத்தி.

மாறாக விடுதலைப் புலிகளில் அங்கத்துவர்களாக இருந்து இறுதிப்போரின் பின்பு இராணுவத்தின் புனர்வாழ்வு முகாமுக்குப் போய் வந்தவர்களில் அனேகமானவர்கள் புனர்வாழ்விலிருந்து வரும்போது போதைப்பழக்கத்துக்கு அடிமையாகவே வெளிவருகிறார்கள் அவர்களுக்கு மிகவும் திட்டமிட்டரீதியில் போதைப்பழக்கத்து உட்படிதி வெளியில் விடுகிறார்கள்.

அதை விட முன்னால் போராளிகளுக்கான சமூக அந்தஸ்து என்பது தமிழர்களிடையே மிகவும் அரிது இப்போது அதுவே தாம் வாழும் சமூகத்தின்மீதான கோபமாக அவர்களுக்குள் உருவாகியுள்ளது. உங்களைப் பழிவாங்குகிறேன் எனப் பலர் இந்தச் சமூக ஒழுக்கக்கேட்டுக்கு தெரிந்தே உடன்படுகிறார்கள்.அதுவே அவர்களை வாழ்வின் விளிம்புநிலைக்குத் தள்ளிவிடுகிறது.

நான் அறிய இரண்டுபேர் இப்படியுள்ளார்கள். ஆனால் பிரச்சனை அவர்களுடன் நின்றுவிடுவதில்லை சம்பந்தமே இல்லாதவர்கள் தெரிந்தும் இப்பிரச்சனைக்குள் வந்து விழுகிறார்கள்

பத்துக்கிலோ கஞ்சாவோ அல்லது பத்துக்கிராம் போதைப் பவுடரோ பிடிபட்டால் அதேவாளை அதைப்போல் பலமடங்கு போதை சமாச்சாரம் எங்கோ கைமாறுகிறது என ஊகிக்கலாம்.இது இப்போது தமிழர் பகுதியில் மிகப்பெரிய வலைப்பின்னல் சாம்ராச்சியம் எல்லாமே கைமீறிப்போவிட்டது.

தவிர பிடிபட்டவர்களுக்காக வாதாடும் வக்கீல்களுமே அறம்சார்ந்து சிந்திப்பதில்லை இதில் முக்கியமானவர் 
யாழ் மாநகரசபை அங்கத்தவர் ரெமீடியஸ். 

ஆவாக்குழு காவாலிக்காக யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் வக்கீல் ஆயராகியிருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம்.

குறிப்பாகச் சொல்லப்போனால் இப்போது இப்படித் தறிகெட்டவர்களது அப்பன் ஆத்தை வளர்ப்புச்சரியில்லை என்பதே.அதைவிட சாதியம் தொடர்பான பழிவாங்கலும் அதாவது ஒருகாலத்தில் மேசாதியினரால் துன்புறுத்தபட்டவர்கள் அவர்களைப் பழிவாங்குகிறேன்பேர்வழி எனவும் இப்படியான அனத்துரக விமுறைக் அளிலும் ஈடுபடுகிறார்கள் ஆனால் அதுவே அவர்கள் மீழமுடியாத சிக்கல்களுக்குள் கொண்டுவந்துவிடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ராணுவத்தின் பெயரை சொல்லி களவெடுப்பது முழுவதும் நம்ம கழிசறைகள் பெரிய பைக்குகள் ,போண்கள், போதைக்கு காசு , இதற்கு எங்கே போவது களவுதான் இலகுவழி பல கும்பல்கள் சிக்கியிருக்கு தற்போது

பல்சர் மோட்டார் சைக்கிள்க்கு பெற்றோல் முடிந்து வீதிகளில்  தள்ளுப்பட்டு உருளுது என்று கேள்வி கோவிட் வந்தது இப்படியும் ஒரு நன்மை . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

பல்சர் மோட்டார் சைக்கிள்க்கு பெற்றோல் முடிந்து வீதிகளில்  தள்ளுப்பட்டு உருளுது என்று கேள்வி கோவிட் வந்தது இப்படியும் ஒரு நன்மை . 

இருந்தாலும் அவர்களுக்கு எப்படி காசு வருகின்றது என்பது தெரியாமல்தான் இருக்கிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.