Jump to content

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் 107 பேருடன் விபத்தில் சிக்கியது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் 107 பேருடன் விபத்தில் சிக்கியது

5000-2-22.jpgபாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்த கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தான் விமான சேவைக்குச் சொந்தமான பாகிஸ்தான் எயர் லைன்ஸ் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதாக ஏஜென்ஸிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

5000-3-14-179x300.jpgகராச்சி பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்து நொருங்கி விபத்தில் சிக்கிய இந்த விமானத்தில் 107 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர்.

விமானம் விபத்துக்குள்ளான இடம் புகைமூட்டமாகக் காணப்படுவதாகவும், அவசர உதவிகள் விரைந்துகொண்டிருப்பதாகவும் கராச்சி செய்திகள் தெரிவிக்கின்றன. கராச்சியில் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் ஒரு பகுதியிலேயே விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

கோவிட் 19 பிரச்சினையையடுத்து பாகிஸ்தானில் நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் சில தினங்களுக்கு முன்னர்தான் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள் விரைவில்..

 

http://thinakkural.lk/article/42899

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமானம்

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து இன்று (22) விபத்துக்குள்ளானது. 

லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்தது. 

விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் 107 பயணிகள் பயணம் செய்தனர். 

அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/பகஸதனல-வழநத-நறஙகய-வமனம/50-250681

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானவோட்டி தெரிவித்தார்- பாக்கிஸ்தான் அதிகாரிகள் தகவல்

பாக்கிஸ்தானில் 107 பயணிகளுடன் விழுந்து நொருங்கிய விமானத்தின் விமானவோட்டி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் என பிஐஏ விமானசேவையின் தலைவர் அர்சாட் மலிக் தெரிவித்துள்ளார்.

paki-plane-crash1-300x200.jpg

இது துயரமான சம்பவம் நான் கராச்சிக்கு செல்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கப்டனிடமிருந்து இறுதியாக நாங்கள் கேட்டது விமானத்தில் தொழில்நுட்ப கோhளறு ஏற்பட்டுள்ளது என்பதையே என அவர் தெரிவித்துள்ளார்.

pakistanaircrash-759-300x167.jpgவிமானம் தரையிறங்க தயாரானவேளை அவர் இதனை தெரிவித்தார்,நாங்கள் விமானம் தரையிறங்குவதற்காக தயாராகயிருக்கின்றோம் என தெரிவித்தோம்,விமான ஒடுபாதையில் வேறு விமானங்கள் இல்லை நீங்கள் தரையிறங்கலாம் என தெரிவித்தோம் அவர் விமானத்தை வேறுபக்கத்தில் இறக்க முயன்றார் என அர்சாட் மலிக் தெரிவித்துள்ளார்.

pakistan-plane-crash-300x200.jpg

இதற்கு என்ன காரணம் தொழில்நுட்ப கோளாறு என்னவென்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விமானவிபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து 11 உடல்களை ஜின்னா மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://thinakkural.lk/article/42922

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம்

இஸ்லாமாபாத்: கராச்சி விமான விபத்து நடந்ததற்கு கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலை விமானி அலட்சியம் செய்ததே காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


 

latest tamil news


 


கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற, பி.ஐ.ஏ., எனப்படும், 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 97 பேர் இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணையில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.


latest tamil news


 


விபத்து நடந்த அன்று மதியம் 2.30க்கு கராச்சியில் தரையிறங்க இருந்த விமானம் 15 நாட்டிகல் மைல் தொலைவில் 7,000 அடி உயரத்தில் பற்ப்பதற்கு பதிலாக 10,000 அடி உயரத்தில் பறந்ததாக கூறப்படுகிறது. மேலும் கராச்சி விமானநிலையத்தை அடைய 10 நாட்டிகல் மைல் இருக்கும் போது 3,000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 7,000 அடி உயரத்தில் பறந்துள்ளது.


latest tamil news


 


இந்நிலையில் உயரத்தை குறைக்கும் படி இரண்டு முறை கட்டுப்பாட்டு மையம் விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை பின்பற்றாததே விபத்து நடந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2545989

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.