Jump to content

இனிய மலை நடைப்ப‍யணம்


Recommended Posts

நீண்ட காலத்தின் பின்னர் குடும்பத்துடன்  ஒரு நாள்  இனிய மலை நடைபயணம் செய்ய கூடிய சந்ததப்பம் நேற்று  கிடைத்த‍து. சுவிற்சர்லாந்தில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை.  நான் வசிக்கும் இடத்தில் இருந்து கிட்ட தட்ட 100 கி. மீ தூரத்தில் உள்ள Grindelwald  என்னும் இடத்தை தெரிவு செய்தோம்.  கடல் மட்டத்தில் இருந்து 1030 மீற்றர் உயரமான பிரதேசம்.  நடந்து போகும் பாதை மிகவும் அழகான இயற்கை காட்சிகளை கொண்டதாக இருந்த‍து. மிக ரம்மியமான காற்றுடன் கூடிய காலநிலை பயணத்தை இன்பமூட்டியது.  அல்ப்ஸ் மலை தொடரின்  Wetterhorn, Eiger,Faulhorn, Mittelhorn, Mättenberg  மலைகளின் சிகரங்களின்  அழகான காட்சிகள் மனதிற்கு இதம் தருவதாக இருந்த‍து. கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் அங்கு செலவிட்டோம். அங்கு எடுத்த படங்களை யாழ் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

சுவிற்சர்லாந்திற்கு வர சந்தர்ப்பம் கிடைத்தால் யாழ்கள உறவுக்கள் மலை நடைப்பயணத்திற்கு இந்த பிரதேசத்தை தெரிவு செய்யயலாம். மிக அழகான இயற்கை காட்சிக்கள்  மனத்திற்கு மிகவும் சந்தோசத்தை கொடுக்கும்.  Bernerhighland  ல் இருக்கும் Interlanken  நகரத்தை அண்டியுள்ள இப்பிரதேசம் இயற்கை அழகு கொண்டது. 

large.D25452D0-5D4D-4AC2-A1C1-4C468F8594BD.jpeg.1ac6eb95bb13cd0e27af238f6c318be5.jpeglarge.49AC5612-1944-4A1B-B9F6-ACB0640AEF16.jpeg.8910d8c0bb6a40f066291b012b6a5dac.jpeglarge.091DCEFC-2719-451A-8375-D64E529EC7C3.jpeg.0f9bd57e6a2d435bf4f768fcf5a0343d.jpeglarge.0EF6EC94-8F8A-4856-8EF2-C49945BF2D8E.jpeg.2fd7fcca92f75d9d93f192b6fc087bac.jpeglarge.2825F971-5DF7-48B0-A341-12F7DAC70480.jpeg.043f738258ee134633f1b2dffa2b4d45.jpeglarge.1F1A25EB-B51E-4138-8342-2D511E42D95A.jpeg.201259c6d6972262f6105aa72c1c8711.jpeglarge.21A5C076-EA74-470B-8FC0-433EB9CB7AAE.jpeg.87d382bbc8f203b812ac63620b14d407.jpeglarge.AB8AB868-60C6-482D-885B-638C76D0879E.jpeg.20902dd8971d7d8af0deac0ffcfcdc3d.jpeglarge.78C7736C-E3FA-4A1A-B4DF-14B9AEAAA7F1.jpeg.ab8d689ba6e7b5434cecb5d8c6efd9b8.jpeg

large.F4F0F3D9-802F-4EA4-959C-62FB71467798.jpeg.623bbea1191a393857e390c2a0ea5f16.jpeglarge.07044075-A18A-44A5-8CCA-FE3BCD0F93D4.jpeg.8d5d961d517d13b4924210cbee141b15.jpeglarge.90A0EB17-B26E-410F-9B9F-33605C0AD58D.jpeg.a6ff9ab6c7a18900d05c325f25bd6486.jpeglarge.F2DE892D-CB4E-445C-8143-B6509D749173.jpeg.dfe5288f8256c0cf518fce168338474c.jpeglarge.D25452D0-5D4D-4AC2-A1C1-4C468F8594BD.jpeg.1ac6eb95bb13cd0e27af238f6c318be5.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ருல்ப்பன்.... 
சுவிற்சலாந்து.... எனக்குப் பிடித்த நாடுகளில் ஒன்று.
ஜேர்மனியில்... நான், வசிக்கும் இடத்திலிருந்து, 
"சூறிச்" நகரம் 250 கிலோ மீற்றர்கள் மட்டுமே.

காரில், மெதுவாக.... அழகை ரசித்துக் கொண்டு போனாலும், 
மூன்று மணித்தியாலம் போதும்.
 
நான், திருமணம் செய்த... காலங்களில், மனைவியுடன்....
அடிக்கடி... அங்கு சென்று.. ஜெனிவா வரையும்,
மற்றையை பகுதியான.... இத்தாலிய எல்லையை தாண்டி... இத்தாலிக்குக்கும்... 
குறுக்கும், மறுக்குமாக... சென்று வருவோம்.

பிள்ளைகள்... பிறந்த பின், பொறுப்புகள் அதிகமாகி... 
அங்கு... சென்று வரமுடியவில்லை, என்ற கவலை இன்றும் மனதை உறுத்தினாலும்.
உங்கள்,  படங்கள்.... மனதை, கிளறி  விட்டது.

எனக்கு... இங்கு, தூரதேசங்களில், உறவினர்கள் வந்தால்....
அவர்களை.... "போர்டன் சீ " வரை கூட்டிக்  கொண்டு போய்....
ஒரே.... ஒரு,  இடத்தில் நின்று....
ஒஸ்ரியா, சுவிற்சலாந்து, ஜேர்மனி.... எல்லைகளை காட்டும் போது...
அவர்களின்... முகத்தில், பார்க்கும் சந்தோசம்... மிகப் பெரியதாக இருக்கும். 

ருல்ப்பன்....  உங்கள்... பயணத்தை, மேலும் எதிர் பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை அழகு கொஞ்சும் சுற்றுலாத்தலம்......படங்களும் மிக அழகாக இருக்கின்றன.....பகிர்வுக்கு நன்றி tulpen ...முடிந்தால் பயண அனுபவங்களையும் பகிரலாமே......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான சுவிஸ் நாட்டுக்கு அடிக்கடி வந்தாலும் குறுகிய பயணங்களால் Interlaken பகுதிக்கு இரண்டு தடவைகள்தான் போயிருந்தேன்.

2014 இல் Meiringen எனும் இடத்தில் சில நாட்கள் தங்கியிருந்தோம். மலைப்பகுதியில் உள்ள மரங்கள் உள்ள பகுதியில் பறவைகளின் கூச்சல் இல்லாமல் அமைதியாக இருந்தது. அங்கு ஏன் பறவைகள் வருவதில்லை என்ற கேள்வி பல காலமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸின் அழகே மலைகள் தானே. இயற்கை ரம்மியம் நிறைந்த நாடு. படங்களின் பகிர்விற்கு நன்றி.

அதுசரி.. அவுஸில் இருந்து சுவிஸுக்கு எப்போ வந்தீர்கள். சொல்லவே இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துல்பன் இயற்கை அழகை உங்கள் கமராவுக்குள் அடக்கியிருக்கிறீர்கள்.
இவ்வளவும் எவ்வளவு தூரம், நேரம்?

Link to comment
Share on other sites

பார்வையிட்ட  நிழலி, விளங்க நினைப்பவர்,   மற்றும் கருத்து எழுதிய தமிழ் சிறி, சுவி, கிருபன் ,ஈழப்பிரியன் ஆகியோருக்கு நன்றகள். 

சுவி  பயண அனுபவங்கள் என்றால் இது ஒரு  நீண்ட காலப் பயணம் அல்ல. மிக குறுகிக காலத்தில் திட்டமிட‍ப்பட்ட ஒரு நாள் பயணம் தான். காலநிலை மிகவம் எமக்கு கை கொடுத்த‍த‍து. பொதுவாக  இந்த பிரதேசம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். பிரபல்யமான சுற்றுலா மையமான  Jungfraujoch (3434 மீற்றர் உயரத்தில் உள்ளது) போகும் பாதை இது. கொரோனா பிரச்சனைக்கு பிறகு எல்லா Bergbahn  களும் நிறுத்தி வைக்கபட்டுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை காணவில்லை. வந்த எல்லோரும் சுவிஸ் பயணிகளாகவே இருந்தனர். நேற்று  சுவிற்சர்லாந்தில் பொது விடுமுறை என்பதால் பல பகுதிகளில் இருந்து Bergwandern செய்வதற்காக மக்கள் வந்திருந்தார்கள்.  அமைதியான சுற்றுலா, இதமான சுத்தமான காற்று  மனதிற்கு மகிழ்வை கொடுத்த‍து. பொதுவாக வக்கேசனில் வரும் ரென்சன் இருக்க வில்லை.

இப்பிரதேசத்தில்  நடைப் பயணத்திற்காக பல்வேறு ரூட்கள் உண்டு.  மிக கடினமான மலை ஏற்றங்கள் உள்ள ரூட் உம் உண்டு. நாம் இலகுவான பாதையை தான் தெரிவு செய்தோம்.  படத்தில் காட்டப்பட்ட மலை சிகரங்கள் எல்லாம் கிட்டத்தட்ட 4000 மீற்றர் உயரமானவை.

 

3 hours ago, ஈழப்பிரியன் said:

துல்பன் இயற்கை அழகை உங்கள் கமராவுக்குள் அடக்கியிருக்கிறீர்கள்.
இவ்வளவும் எவ்வளவு தூரம், நேரம்?

நடை தூரம் கிட்டத்தட்ட 11  கிலோ மீற்றர் வரும். கிட்டத்தட்ட 400 மீற்றர் ஏற்றம் இறக்கதுடன்  ஆறுதலாக சுற்றி நடக்க 2 -15 நிமிடம் மணித்தியாலம் எடுத்த‍து.  இதை விட கடினமான ஏற்றம் உள்ள பாதைகளும் உண்டு.  எடுத்த எல்லா படங்களையும்  யாழ் களத்தின் சேர்வர்  நலன்  கருதி இங்கு இணைக்கவில்லை. 

3 hours ago, nedukkalapoovan said:

சுவிஸின் அழகே மலைகள் தானே. இயற்கை ரம்மியம் நிறைந்த நாடு. படங்களின் பகிர்விற்கு நன்றி.

அதுசரி.. அவுஸில் இருந்து சுவிஸுக்கு எப்போ வந்தீர்கள். சொல்லவே இல்லை. 

நெடுக்கு நான் அவுஸில் இருந்த‍தாக உங்களுக்கு யாரப்பா கூறியது. அன்றும் என்றும் சுவிஸில் தான் அடியேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

நெடுக்கு நான் அவுஸில் இருந்த‍தாக உங்களுக்கு யாரப்பா கூறியது. அன்றும் என்றும் சுவிஸில் தான் அடியேன்.

உங்களை மாதிரியே வேறு ஒருவரும்.. இப்படியான பதிவுகளை பகிர்வதால்.. நீங்கள் தான் அவரோன்னு நினைச்சம். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, tulpen said:

----நெடுக்கு நான் அவுஸில் இருந்த‍தாக உங்களுக்கு யாரப்பா கூறியது. அன்றும் என்றும் சுவிஸில் தான் அடியேன். 

 

14 minutes ago, nedukkalapoovan said:

உங்களை மாதிரியே வேறு ஒருவரும்.. இப்படியான பதிவுகளை பகிர்வதால்.. நீங்கள் தான் அவரோன்னு நினைச்சம். 😀

இண்டைக்கு... முழுக்க, நல்ல   "தமாசாக..."   இருக்கப்பு. 👏 😂
ம்ம்ம்... நடக்கட்டும்,   அப்ப தானே... எங்களுக்கும்  சந்தோசம்.  :grin: 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகான இயற்கை . சுவிற்சர்லாந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஊர். ஆனால் இன்னும் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஜெர்மனி எல்லை (Bavaria ) இல் இருந்து பார்த்தோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tulpen படங்களின் பகிர்விற்கு நன்றி. நான் ஒரு தடவை 1994 இல் Grindelwald  என்ற இடத்திற்கு போய் இருக்கின்றேன். மிகவும் அழகான பிரதேசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதுக்கு ரம்மியமான இடம், நல்லயிருக்கு, சுவிஸும் பயணத்திலிருக்கு, வரும்போது சொல்லிவிட்டு வருகிறோம், தங்குமிடம் சாப்பாடு சுற்றி காட்டுவது எல்லாம் Tulpen னின் பொறுப்பு😀

Link to comment
Share on other sites

6 hours ago, உடையார் said:

மனதுக்கு ரம்மியமான இடம், நல்லயிருக்கு, சுவிஸும் பயணத்திலிருக்கு, வரும்போது சொல்லிவிட்டு வருகிறோம், தங்குமிடம் சாப்பாடு சுற்றி காட்டுவது எல்லாம் Tulpen னின் பொறுப்பு😀

சரி உடையார் வாங்கோ. 🙏உங்களுக்காக Tourist guide அக மாறினால் போச்சு😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு சூம் பாக்ரவுண்டுக்கு ஏற்ற இனிமையான படம்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான இடங்களும் அழகான படங்களும் கண்ணுக்கு குளிர்ச்சி தருகின்றன.

large.78C7736C-E3FA-4A1A-B4DF-14B9AEAAA7F1.jpeg.ab8d689ba6e7b5434cecb5d8c6efd9b8.jpeg

இந்த அழகான படத்தை பார்க்கும் போது சிவபெருமான் வீற்றிருக்கும் இமயமலைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. 🪔 🙏🏿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tandoori-Love.jpg

சாதாரண புது அல்லு சில்லு ஹீரோக்கள் கூட கதை கேட்கும் போதே எனக்கு சுவிஸ்ல் கதாநாயகிய இறுக்கமா கட்டிபிடிச்சு ஆடுற "ரூயற் சாங்" ஒன்டு வேணும் என்டு அடம் பிடிச்சு தயாரிப்பாளர் தலையில் துண்டை போடும் மர்மம் இப்போதான் விளங்குது..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அழகான இடங்களும் அழகான படங்களும் கண்ணுக்கு குளிர்ச்சி தருகின்றன.

large.78C7736C-E3FA-4A1A-B4DF-14B9AEAAA7F1.jpeg.ab8d689ba6e7b5434cecb5d8c6efd9b8.jpeg

இந்த அழகான படத்தை பார்க்கும் போது சிவபெருமான் வீற்றிருக்கும் இமயமலைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. 🪔 🙏🏿

அண்ணா , உங்கட குசும்பிற்கு ஒரு அளவில்லையாtw_lol: 

 

Link to comment
Share on other sites

வந்து பார்வையிட்டு கருத்துகளை தெரிவித்த உறவுகள் அனைவருக்கும் நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான, மனதை கொள்ளைகொள்ளும் படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள். 

நான் ஒரு தரம் சுவீடனிற்கு வந்திருக்கிறேன்,வாவிகளும்,மரங்களும் அழகான ஒரு நாடு. 4நாட்கள் மட்டுமே தங்கியிருந்தேன், துக்கமான சம்பவம் ஒன்றிற்கு வந்தமையால் இடங்கள் பார்க்கவில்லை, ஆனாலும், பார்த்தளவில், கண்ணுக்குஎட்டியவரை, வாவிகளும்,மரங்களும் நிறைந்திருந்தது.

ஆனால், சுவிஸ்லாந்து இன்னமும் அழகாக தெரிகிறது.

அவுஸ்ரேலியாவிலிருந்து ஐரேப்பா ... மிகவும் நீண்ட பயணம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.