Jump to content

முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி

5000-3-15-300x204.jpgகிளிநொச்சி – முகமாலையில் பெருந்தொகை எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகளும் காணப்பட்டதாகவும் யாழ்ப்பாண ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்று வரும் பகுதியில் இன்று இந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் காணப்படும் எலும்புக் கூடுகள், விடுதலைப் புலிகளின் சீருடைகள் பெண் போராளிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவனபணியாளர்கள் தகவல் வழங்கியுள்ளனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவலரண் முன்னர் அமைந்திருந்தது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

http://thinakkural.lk/article/42930

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சோடு துப்பாக்கியை அணைத்தபடி போராளியின் உடல் எச்சம்

FB_IMG_1590155168495.jpg?189db0&189db0

கிளிநொச்சி – முகமாலையில் முன்னரங்கு பதுங்குழி ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கியுடன் உடல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் இன்று (22) உடல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நெஞ்சோடு துப்பாக்கியை அணைத்தவாறு குறித்த எச்சங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவன பணியாளர்களால் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ முன்னரங்க நிலைக்கு சமீபமாக போய் வீழ்ந்த வேவுப் புலியாக இருக்கக் கூடும்.

வீழ்ந்து அநாதையாக தூங்கிவிட்ட அந்த வீரப் புலித் தமிழச்சிக்கு.. வீர வணக்கம். 

அண்மையில் பிரித்தானியா கட்டியமைத்த பெரும் விமானந்தாக்கிக் கப்பலை கொண்டு வருவதற்காக பிரித்தானிய தென்கோடியில் உள்ள துறைமுக கடலடியை துப்பரவு செய்த போது.. சிதைந்த ஜேர்மனிய விமானப் பகுதிகளோடு பல மனித உடல்கூறுகளையும் கண்டெடுத்தனர்.

போர் எங்கு நிகழினும் விளைவு ஒன்று தான். என்ன வெற்றி பெற்றவன் மனிதனின் மரணத்தை கொண்டாடுறான்.. தோற்றவன் தொண்டைக்குழிக்குள் அழுகையை நிறுத்திக் கொண்டு மெளனித்துக் கடந்து போய்க் கொண்டிருக்கிறான்.

போர்கள் தவிர்க்கப்படுவது.. பேச்சுக்களால் வெல்லப்படுவதின் தார்ப்பரியத்தை உரைக்கும். ஆனால்.. பேசவே மாட்டேன் என்ற அகங்காரிகளிடம்.. பேசி எதைப் பெறுவது எனும் நிலையில்...???! 

Link to comment
Share on other sites

புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பம்

In இலங்கை     May 26, 2020 10:40 am GMT     0 Comments     1540     by : Dhackshala

Kili-2-3-720x450.jpg

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வு பணிகள் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அகழ்வு பணிகள் ஆரம்பமாகி நடைபெற்ற வருகின்றன.

Kili-5-2-428x285.jpg

Kili-4-3-428x285.jpg

Kili-3-3-428x240.jpg

Kili-1-3-428x285.jpg

கிளிநொச்சியில் புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் இன்று மீண்டும் அகழ்வு

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டது.

அதன்பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டார்.

குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதிபதி அவற்றை பார்வையிட்டதுடன், எதிர்வரும் 26ஆம் திகதி அதாவது இன்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டார்.

அதற்கமைய குறித்த பகுதியில் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்கதக்கது.

http://athavannews.com/புலிகளின்-சீருடைகள்-காணப/

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் - இன்றும் அகழ்வுப்பணி

கிளிநொச்சி - முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வு இன்றைய தினம் இடம் பெற்றது.

கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 22 ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் விடுதலைப்புலிகளின் சீருடைகளுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதற்கமைய கடந்த 26 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த. சரவணராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் சீருடையுடனான மனித எச்சங்கள் மற்றும் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டன.

இந்த நிலையில் இன்றையதினம் இரண்டாம் கட்ட அகழ்வு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் இடம் பெற்றது.இன்றைய தினமும்

  • மகசின் 02,
  • வெடிக்கும் தோ 34,
  • வெடித்த கப் 6,
  • சைநட் 1 ,
  • தகடு 1
  • பச்சை இராணுவ சீருடையுடனான மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டன.

குறித்த அகழ்வு தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வு எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற உள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/144524

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலை மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 9 ஆம்திகதி வரை ஒத்திவைப்பு

spacer.png
கிளிநொச்சி, முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுப் பணிகள், எதிர்வரும் 9 ஆம்திகதி மீண்டும் நடைபெறவுள்ளன.குறித்த பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியாக தெரிவிக்கப்படும் நிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், இதுதொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 22ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் சீருடைகளுடன் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, கடந்த 26ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிபதி சரவணராஜா முன்னிலையில் முதலாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.Mukamalai__10_

இதன்போது, துப்பாக்கிகள், விடுதலைப் புலிகள் அமைப்பினரின் சீருடைகள் மற்றும் மனித எச்சங்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நீதிபதி முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.இதன்போதும், இரண்டு மகசின்கள், 34 வெடிக்கும் தோட்டார்கள், 1 சயனைட், தகடு மற்றும் இராணுவ சீருடையுடனான மனித எச்சங்கள் என்ன மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/முகமாலை-மனித-எச்சங்கள்-த/

Link to comment
Share on other sites

  • 3 months later...

முகமாலையில் சீருடைகள் எலும்புத் துண்டுகள்! ஸ்தலத்திற்கு விரைந்த இராணுவம் மற்றும் பொலிஸார்

பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் மாலை கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட போதே இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் உடனடியாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகத்திற்குரிய பொருட்களை பார்வையிட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து பளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/150735?ref=rightsidebar

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.