Jump to content

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் பெண்கள் சுயத்தொழில் பிரிவு தலைவராக இலங்கை தமிழ் பெண் நியமனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் பெண்கள் சுயத்தொழில் பிரிவு தலைவராக இலங்கை தமிழ் பெண் நியமனம்

raji-2-3-300x175.jpgஉலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் பெண்கள் சுயத்தொழில் பிரிவு தலைவராக கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் ராஜி பாற்றாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் உள்ள பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கவும், பயிற்சி பெற்ற பின் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப் படுத்தவும், விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண்களின் முன்னேற்றம், வாழ்வாதாரம் பெருகும்.

இதற்காக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு பல்வேறு தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்து பயிற்சி வழங்கவும், பயிற்சி பெற்றபின் சிறிய நிதி ஆதாரம் பெற்றுத் தரவும், விரிவான திட்ட அறிக்கையை செய்து கொண்டு வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், இலங்கையில் தயாரிக்கும் பொருட்களை வாங்கி ஆதரவு தெரிவித்தால் போதும், நம் தமிழ் உறவுகள் தலை நிமிர்ந்து வாழ பேருதவியாக இருக்கும்.

இக்கட்டமைப்பின் தலைவராக திருமதி ராஜி பாற்றாசனும், உதவியாக 7 துணை தலைவர்களும், 14 செயற்பாட்டாளர்களும் நியமிக்கப்பட்டிருப்பதாக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் செல்வகுமார் தெரிவித்திருக்கின்றார்.

http://thinakkural.lk/article/42933

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.