Jump to content

முள்ளிவாய்க்கால் போர் முடிவதற்கு முன்னர் வகுக்கப்பட்ட சூழ்ச்சி! ஈழத் தமிழினம் சந்தித்து நிற்கும் பெரும் அழிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் போர் முடிவதற்கு முன்னர் வகுக்கப்பட்ட சூழ்ச்சி! ஈழத் தமிழினம் சந்தித்து நிற்கும் பெரும் அழிவு

தமிழ் தேசிய அரசியலில் பேரம் பேசும் சக்திகள் மெல்ல மெல்ல இல்லாமல் அல்லது சூழ்ச்சுமமான முறையில் அழிக்கப்படும் தந்திரத்தை அரச எந்திரம் மிக இலகுவாக செய்து கொண்டிருப்பதனை அண்மைய நாட்களில் நிகழும் அரசியல் காய் நகர்த்தல்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் இல்லாமல் செய்யப்பட்டதன் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியில் தமிழர்களின் குரலாக ஒலிக்கும் என்று தமிழ் மக்கள் நம்பினார்கள். போருக்குப் பின்னர், வந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் கூட தமிழர்களின் நம்பிக்கை கொஞ்சம் உயிர்ப்படையத் தொடங்கியது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மைத்திரி ரணில் தலைமையிலான கூட்டரசு ஆட்சியை பொறுப்பெடுத்ததன் பின்னர், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் நகர்வுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக இலகுவான வகையில், கையாளும் என்றும், அரசியல் தீர்வில் அரசாங்கத்தோடு இணைந்து தீர்வை விரைவில் பெற்றுவிடுவார்கள் என்றுமே தமிழர்கள் நம்பினார்கள்.

ஆனால், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் அரசை வீழ்ந்துவிடாமல் காப்பாற்றும் முயற்சியை மாத்திரமே கொள்கையாகக் கொண்டிருந்ததேயன்றி, தமிழர் அரசியல் விவகாரத்தில் 1 வீதத்தை தானும் வெற்றியின் பக்கம் திருப்பவில்லை என்பது வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், 2009ஆம் ஆண்டு புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கும் வரையில் ஈழ அரசியலோடோ அல்லது ஈழப் போராட்டத்தோடோ தொடர்பே இல்லாத நபர்களை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ளீர்க்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.

இங்கே ஈழப் போராட்டத்தில் தொடர்பில்லாதவர்கள் அல்லது ஈழ அரசியல் பின்புலம் இல்லாதவர்கள் ஈழத் தமிழர் அரசியல் பேசக் கூடாது என்பதல்ல வாதம். ஈழ அரசியலில் ஈழப் போராட்டமும் விடுதலைப் புலிகளின் வகி பாகமும் யாது என்பதை புரிந்து, மக்கள் எதை எதிர் பார்க்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் நபர்களையே அரசியல் அரங்கில் அழைத்து வரப்பட வேண்டும்.

ஆனால், இங்கோ தலைகீழாக நடந்திருக்கிறது. அரசியலுக்கு வந்த நாட்களில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ளீர்க்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் விடுதலைப் புலிகள் தொடர்பிலும் ஆயுதப் போராட்டம் தொடர்பிலும் பேசிவருவது தமிழ் தேசிய அரசியலில் பெருத்த அடியாகவே இருக்கிறது.

ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் பேசுவது அவரது தனிப்பட்ட கருத்து என்று வைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் அல்ல. அவருக்கு ஆயுதத்தின் மீதோ, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட அணுமுறை தொடர்பிலோ அவர் தனிப்பட்ட ரீதியில் விமர்ப்பதற்கு உரிமையுண்டு. அது அவர் ஜனாதிபதி சட்டத்தரணியாக இருக்கும் வரை தாராள உரிமையினைப் பெறுகிறார்.

எவரையும் கட்டாயப்படுத்தி நீங்கள் இதை ஏற்றாக வேண்டும் என்று குறிப்பிடது அழகல்ல. ஆனால் சுமந்திரன் தற்போது இருக்கும் இடம், அவரின் பொறுப்பு என்பன என்ன என்பதை ஆராய வேண்டும். விடுதலைப் புலிகளின் அரசியல் பலமாக கட்டமைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக இருந்து கொண்டு சுமந்திரன் ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக பேசுவதை ஈழத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

கூட்டமைப்பு என்பது எதற்காக உருவாக்கப்பட்டது அதன் பின்னணி என்ன என்பது தொடர்பில் தமிழ் மக்களும் சரி சிங்கள மக்களும் சரி தெரியாதவர்கள் அல்ல. ஆனால், மீண்டும் மீண்டும் சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கம், விடுதலைப் போராட்டம், விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்பது தொடர்பில் மாறுபட்ட அரசியல் பேச்சுக்களை வரலாற்றை மாற்ற நினைப்பதில் ஏதோவொரு நிகழ்வு தொக்கி நிற்பதனை மிக நுண்ணாய்ந்து கொள்ள முடியும்.

குறிப்பாக, ஈழத் தமிழர்களின் பேரம் பேசும் சக்தியை இல்லாது செய்து, அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை அடியோடு திசைமாற்றும் மிகப் பெரும் கைங்கரியத்தை மேற்கொள்கிறார்கள். ஈழ அரசியலோடு தொடர்பற்றவர்களை, ஈழப் போராட்டத்தினால் பாதிக்கப்படாதவர்களை, ஈழ விடுதலையின் தார்ப்பரியத்தைப் புரிந்து கொள்ளாதவர்களை, உள்ளே கொண்டுவந்ததன் நோக்கம் சிதைப்பது, அழிப்பது, தமிழர்கள் விரும்பாதவற்றை திணிப்பது போன்ற செயற்பாடுகளை இலகுவாக செய்வதற்காகவே.

சந்திரிகா அம்மையார் ஆட்சியின் போது எவ்வாறு லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச ரீதியாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு சூழ்ச்சியை கட்டமைத்து, அதன் வாயிலாக பயங்கரவாத முத்திரை குத்துவதற்கான வேலைகளை செய்தாரோ, எவ்வாறு ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் பேரினவாத அரசுக்காக செய்து கொடுத்தாதோ அதையே தான் இன்று சுமந்திரன் போன்ற முக்கிய நபர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தென்னிலங்கை அரசியலில் ஏற்படும் மாற்றங்களை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அதேநேரம், தங்களுக்கான சலுகைகளைப் பெற்றுக் கொண்டு தற்போது ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளை மிகமிக சாதுர்யமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில், இந்தப் பின்னணி இன்று நேற்று உருவாக்கப்பட்டது அல்ல, முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைவதற்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டது. மிக நிதானமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதில், புலம்பெயர் தமிழர்களுக்கும், களத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகளை உருவாக்கி பிரிப்பது, விடுதலைப் புலி ஆதரவு எதிர்ப்பு என்னும் பிளவை உருவாக்குவது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளை பிளவுபடுத்துவது, வடக்கு கிழக்கு என்னும் பிரிவினை வாதத்தை ஆழப்பதித்து விடுவது, போன்ற ஏராளமான வேலைகள் நகர்த்தப்படுகின்றன.

முன்னர் ரணில், தரப்போடு உள்ளார்ந்தமாக இருந்த பிணைப்பு இப்போது மகிந்த கோட்டாபய ராஜபக்ச தரப்போடு நகர்த்தப்படுகிறது. அதற்கு மூத்த ஊடகவியலாளராக சொல்லப்படும் முக்கியமான ஒருவர் பின்னணியிலிருந்து செயலாற்றுவதும் கூடுதல் தகவல்.

எவ்வாறாயினும், தற்போது பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்ச்சியை ஈழ, புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உடைக்கப்போகின்றார்? திசை மாறிப் நகர்ந்து கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் எவ்வாறு மாற்றுவது? புல்லுருவிகளாக மாறியிருக்கும் நபர்களை எவ்வாறு கையாளுவது? அவர்களை பொது மக்களிடையே தோலுரித்துக் காட்டுவது? போன்ற ஏராளமான நகர்வுகளை எப்படி கையாளப் போகிறார்கள் என்பதை வகுக்காது விடின், இன்னும் சிறிது காலத்தில் முள்ளிவாய்க்காலில் இழந்ததை விடவும் பல மடங்கு இழக்க வேண்டிவரும்.

இதை எச்சரிக்கையாக கையாள்வது தற்போதைய கட்டாயமாகும். அரசியல் அவதானிகள் தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருப்பார்களாயின் நிலைமை மோசமாகிவிடும். களத்தில் இறங்கி வேலை செய்யாது இளைஞர்கள் முகநூல்களில் பதிவுகள் போடுவதோடு நிறுத்தாமல் தேர்தல் காலங்களில் விரிவான வேலைத் திட்டங்களை வகுக்க வேண்டிய சூழல் வரவேண்டும்.

https://www.ibctamil.com/articles/80/143726

 

Link to comment
Share on other sites

6 hours ago, உடையார் said:

ஆனால், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் அரசை வீழ்ந்துவிடாமல் காப்பாற்றும் முயற்சியை மாத்திரமே கொள்கையாகக் கொண்டிருந்ததேயன்றி, தமிழர் அரசியல் விவகாரத்தில் 1 வீதத்தை தானும் வெற்றியின் பக்கம் திருப்பவில்லை என்பது வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.

ஆனால், வே. பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு ரனில் அரசை உருவாகாமாமல் தவிர்க்கும் முயற்சியில் வெற்றி பெற்றதேயன்றி தமிழீழ மக்களின் விடுதலையை நிரந்தர தோல்வியில் முடித்து விட்டது என்பது வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.