Jump to content

யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்? கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்? கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம்

jaffna-uni-300x175.jpgயாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிப்பதற்கென பல்கலைக்கழக பேரவையினால் மூன்று மூத்த பேராசிரியர்கள் கொண்ட தேடற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிறப்புப் பேரவைக் கூட்டத்திலேயே மூன்று மூத்த பேராசிரியர்கள் கொண்ட இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் அ.அற்புதராஜா தலைமையில், வரலாற்றுத் துறை பேராசிரியர் பி.புஷ்பரட்ணம் மற்றும் பெளதிகவியல் துறை பேராசிரியர் பு.ரவிராஜன் ஆகியோர் பேரவையினால் தேடற் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய சுற்றறிக்கையை இம்மாதம் 4 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளரால் இம்மாதம் 15 ஆம் திகதி பத்திரிகைகள் வாயிலாக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவு தினம் எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி ஆகும். இந்த விண்ணப்பங்கோரலுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் பதிவாளரால் பெறப்பட்டிருந்தது.

சுற்றறிக்கையின் படி துணைவேந்தர் பதவிக்குப் பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, அவர்களைத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் பேரவையினால் இன்று தேடற்குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவுக்கு அனுபவமும், ஆளுமையும் மிக்க மூத்த பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதனால், அவர்களின் தேடலில் மிகப் பொருத்தமானவர்கள் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பார்கள் எனஎதிர்பார்க்கப்படுவதாகப் பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

http://thinakkural.lk/article/42979

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஊறிப்போயுள்ள சாதி,  சமயம், பிரதேசவாதம் போன்றவற்றில் முன்னனியில் உள்ள  வயதுபோனவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து,  அதில் யார் அதிக கூழைக் கும்பிடு போடுகிறார்களோ அவரைப் பிடித்தால் போயிற்று. 😜

இதற்கெல்லாம் ஏன் இந்த ஆலாபனை ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் ஒழுங்காய் படித்து தத்தம் துறைகளில் நிபுணத்துவம் பெற்று ஆரோக்கியமான, வலுவான சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு உகந்த ஒரு கல்வியியலாளரை தெரிவு செய்தால் புண்ணியமாய் போகும்.

அரசியல் சாக்கடைகள் யாழ் பல்கலைக்கழகத்தின் திறனை வலுவிழக்க செய்யாது பார்த்துகொள்ள வேண்டிய சமூக பொறுப்பு துணைவேந்தர் தெரிவு குழுவுக்கு உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து..ஆமிக்காரன் ஒருவர் வருவார்  அதுக்கு ஏன் குழு..

Link to comment
Share on other sites

துணைவேந்தர் மதிப்பீட்டுக் குழுவுக்கான பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் தெரிவு!

In இலங்கை     May 30, 2020 10:06 am GMT     0 Comments     1132     by : Yuganthini

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிடமாகக் காணப்படும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான மதிப்பீட்டுக் குழுவுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக மூதவைப் பிரதிநிதிகள், பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் மூத்த பேராசிரியர் கி.விசாகரூபன் மற்றும் விலங்கியல் துறையின் மூத்த பேராசிரியர் எஸ்.நோபிள் சுரேந்திரன் ஆகியோரே மூதவையின் சார்பில் பேரவையினால் துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீட்டுக் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சுற்றுநிரூபத்தின் வழிகாட்டுதல்களுக்கமைய துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களில் இருந்து தகுதி, தராதரங்களின் அடிப்படையில் புள்ளியிட்டு, பொருத்தமானவர்களில் ஆகக் கூடியது ஐந்து (ஐந்துக்குக்கு குறைவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறின் ஆகக் குறைந்தது மூன்று) விண்ணப்பதாரிகளைப் பட்டியலிடும் பணியை மேற்கொள்வதற்கென மதிப்பீட்டுக் குழு ஒன்று விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் ஜுன் 9) அமைக்கப்படுதல் வேண்டும்.

இந்த மதிப்பீட்டுக்குழுவில் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் மூதவையில் அங்கம் வகிக்கும் மூத்த பேராசிரியர்கள் இருவரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் மூவரும் இடம்பெறுவர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் மூவரில் ஒருவர் குறிப்பிட்ட பல்கலைக்கழகம் சாராத பிறிதொரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகவும் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் பேரவையில் அங்கம் வகிக்காத ஒருவராகவும் இருத்தல் வேண்டும். அவரே துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீட்டுக் குழுவின் தலைவராகச் செயற்படுவார். அத்தகைய ஒருவர் துணைவேந்தர் தெரிவுக்கான விண்ணப்பதாரிகளில் ஒருவராக முடிவுத் திகதியின் பின்னர் தெரிய வந்தால் பல்கலைக்கழகப் பேரவையின் செயலாளர் (பதிவாளர்) இது பற்றி உடனடியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தி, புதிதாக வேறொருவரை நியமிக்குமாறு கோருதல் வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் ஏனைய இருவரில் ஒருவர் இலங்கை நிருவாக சேவையைச் சேர்ந்த மூத்த அதிகாரியாகவும் அமைச்சரவை அங்கீகாரமுள்ள அமைச்சு ஒன்றின் செயலாளராகவும் இருப்பார். மூன்றாமவர் பிரபல்யமான அரச அல்லது தனியார் நிறுவனமொன்றின் தலைவராகவோ பிரதம நிறைவேற்று அதிகாரியாகவோ இருப்பார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் மதிப்பீட்டுக் குழுவுக்கு நியமனம் செய்யப்படுபவர்களின் விபரங்கள் எதிர்வரும் யூன் முதல் வாரத்துக்கு முன்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைத்தது.

கடந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் காரணம் எதுவும் கூறப்படாமல் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின் துணைவேந்தருக்கான அதிகாரங்களுடன் கடந்த வருடம் மே மாதம் முதல் மூன்று மாத காலத்துக்கு வாழ்நாள் பேராசிரியர் க.கந்தசாமி தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர் துணைவேந்தர் தெரிவுக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த போதிலும், கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அந்தப் பணிகளைப் பிற்போடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டதுக்கமைய தெரிவு பிற்போடப்பட்டிருந்தது.

அதன்பின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் பல்கலைக்கழகங்களின் பேரவைகளும் செயலிழந்ததன் காரணமாக இழுபறிப்பட்ட துணைவேந்தர் தெரிவு, கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய ரத்துச் செய்யப்பட்டிருந்ததுடன் பேராசிரியர் க.கந்தசாமிக்குத் தகுதி வாய்ந்த அதிகாரியாக மூன்று மாதங்களுக்கொரு முறை நியமனம் நீடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் கோரப்பட்டிருந்தது. இதற்கான முடிவுத் திகதி எதிர்வரும்  ஜுன் 9 ஆகும்.

http://athavannews.com/துணைவேந்தர்-மதிப்பீட்டு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kali said:

எதுக்கு? 

Noble Surenthiran பன்முக ஆழுமையுள்ளவர்.   அவரின் வளர்ப்பு முறையும் கல்வியும் வெளியுலகத் தொடர்புகளும்  அவருக்கு வழங்கியுள்ள பிரத்தியேக அனுகூலங்கள். யாழ் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியில்   மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர அவரால் முடியும். 👏

அது தவிர, இவரது தெரிவின் மூலம் யாழ் பல்கலைக் கழகத்தின் மீதுள்ள எதிர்மறையான பிம்பங்களை உடைத்து தமிழர்களாக எல்லோரையும் திரும்பவும் ஒன்றுசேர்க்கும் அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம். 👍

ஆனால் வாக்களிப்போரில் மிகப் பெரும்பான்மையானோர் மிக மிகக் குறுகிய சிந்தனையுடையவர்களாயிருந்ததே வரலாறு. ☹️

Link to comment
Share on other sites

14 minutes ago, Kapithan said:

Noble Surenthiran பன்முக ஆழுமையுள்ளவர்.   அவரின் வளர்ப்பு முறையும் கல்வியும் வெளியுலகத் தொடர்புகளும்  அவருக்கு வழங்கியுள்ள பிரத்தியேக அனுகூலங்கள். யாழ் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியில்   மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர அவரால் முடியும். 👏

அது தவிர, இவரது தெரிவின் மூலம் யாழ் பல்கலைக் கழகத்தின் மீதுள்ள எதிர்மறையான பிம்பங்களை உடைத்து தமிழர்களாக எல்லோரையும் திரும்பவும் ஒன்றுசேர்க்கும் அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம். 👍

ஆனால் வாக்களிப்போரில் மிகப் பெரும்பான்மையானோர் மிக மிகக் குறுகிய சிந்தனையுடையவர்களாயிருந்ததே வரலாறு. ☹️

அவர் மதிப்பீடு குழுவில் தானே உள்ளார்
சோ அவர், துணைவேந்தர் ஆக முடியாது என நினைச்சன். 

அவரே தன்னை மதிப்பீடு செய்ய முடியாதல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kali said:

அவர் மதிப்பீடு குழுவில் தானே உள்ளார்
சோ அவர், துணைவேந்தர் ஆக முடியாது என நினைச்சன். 

அவரே தன்னை மதிப்பீடு செய்ய முடியாதல்லவா?

நீங்கள் கூறுவது சரியானதாக இருக்கலாம். துணைவேந்தர் தொடர்பான தெரிவு முறை பற்றி தெளிவான அறிவு எனக்கில்லை. 🙂

ஆனால் யாழ் பல்கலைக் கழகம் தனது வழமையான பழைய பஞ்சாங்கம் கணக்கில் தொடர்ச்சியாக இருக்க முடியாது. சடுதியான வேகமான மாற்றம் தேவை என்பதை மட்டும் உறுதியாகச் என்னால் கூற முடியும். 🙂

Link to comment
Share on other sites

12 hours ago, Kapithan said:

ஆனால் யாழ் பல்கலைக் கழகம் தனது வழமையான பழைய பஞ்சாங்கம் கணக்கில் தொடர்ச்சியாக இருக்க முடியாது. சடுதியான வேகமான மாற்றம் தேவை என்பதை மட்டும் உறுதியாகச் என்னால் கூற முடியும்.

வேகமான செயல்திறன் உள்ளவராகவும் ராக்கிங் போன்ற அடாவடிகளை கட்டுப்படுத்தும் முதுகெலும்புள்ளவராகவும் இருந்தா நல்லது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.