யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்? கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம்

By
உடையார்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
1
By யாயினி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
விடுதலை அரசியலின் பாதை - இதயச்சந்திரன் இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது. ஆனால் இப்பாரிய இயந்திரத்தின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் தமிழ்த்தேசிய அரசியலிடம் என்ன இருக்கிறது?. இதுவே சமகால அரசியலில் பேசுபொருளாகும் விடயம். கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை நிறைவேற்ற, தொல்லியல் திணைக்களம் முதல் காணித்திணைக்களம் வரையான சகல அரச நிர்வாக இயந்திரங்களையும் சிங்கள தேசம் வைத்திருக்கிறது. எமது தமிழ்த்தேசத்திடம் தேர்தல் கட்சிகளைத்தவிர வேறு என்ன இருக்கிறது?. வெகுசன மக்கள் திரள் அரசியலிற்குரிய கட்டமைப்புகள் இருக்கின்றனவா?. ஒடுக்குமுறையாளர் எம்மீது திணிக்கும் அழுத்தங்களை எதிர்கொள்ள நாடாளுமன்ற மேடை மட்டும் போதுமா?என்கிற கேள்வியும் எழுகிறது. தூபி தகர்ப்பிற்கு எதிரான தன்னெழுச்சிப் போராட்டம் ஏன் மக்கள் போராட்டமாக விரிவடையவில்லை?. தாயகத்தில் ஆங்காங்கே நிகழும் பல்வேறுவகைப்பட்ட போராட்டங்கள் ஏன் ஒருங்கிணைக்கப்படவில்லை?. தமிழ்த்தேசிய அரசியல் தளத்தில் கட்சி மோதல்கள் குறித்து பேசப்படும் அளவிற்கு, பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்த மக்கள் திரள் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஏன் விவாதிக்கப்படுவதில்லை?. விடுதலை அரசியலிற்குரிய உள்ளார்ந்த பண்புகளை கட்சிகள் புரிந்து கொள்ளவில்லையா?. அல்லது இலக்கினை அடையும் பாதையில் தெளிவில்லையா?. ‘எதிரியே நாம் தேர்ந்தெடுக்கும் பாதையைத் தீர்மானிக்கிறான்’ என்பது விடுதலை அரசியலின் நடைமுறைத் தத்துவம். நாடாளுமன்றத்திலோ அல்லது அரசியல் யாப்பினைத் தூக்கிப் பிடிக்கும் நீதிமன்றத்திலோ, அரச அடக்குமுறையை எம்மால் எதிர்கொள்ள முடியாவிட்டால் நாம் என்ன செய்வது?. தீர்வினை எங்கே தேடுவது?. கட்சிகளுக்கு அப்பாலுள்ள மக்கள் திரள் கட்டமைப்புகளே அதனைச் சாத்தியமாக்கும் என்பதே வரலாற்று உண்மை. இக்கட்டமைப்புகளை தேசவிடுதலைக் கோட்பாட்டில் உறுதியாக நிற்கும் கட்சிகளும் உருவாக்கலாம். ஆனால் அவை வெகுசன அமைப்புகளோடு இணைந்து பொதுத்தளத்தில் செயலாற்ற வேண்டும். ஏனெனில் எதிரி பலமானவன். சகல அரச நிர்வாக இயந்திரங்களையும் தன்னகத்தே கொண்டவன். நாட்டின் இறைமை, தனது அரச உயர்பீடத்திடமே உள்ளதென உலகமகா சபையிலும் சொல்பவன். அச்சபையின் தீர்மானங்களுக்கு அடங்காதவன். தேசிய இனங்களை சிறுபான்மை மக்களென ‘ஜனநாயக’ அரசியல் பேசுபவன். இத்தகைய அரச அதிகார வல்லானை எதிர்த்து நிற்க நாடாளுமன்றக் கட்சிகள் மட்டும்போதாது. அதற்குள் எமது விடுதலைக்கான அரசியலை மட்டுப்படுத்தவும் கூடாது. எமது அரசியல் போராட்ட வெளி விரிவடைய வேண்டும். சகல முற்போக்குச் சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். 2009 இற்குப் பின்னான அரசியல் பாதை இதுதான். -இதயச்சந்திரன். https://vanakkamlondon.com/stories/2021/01/99690/ -
நானும் உங்க ஆள்தான் பாஸ் .
-
விடுங்க நெடுக் இந்த அம்மாவை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை கூகிளில் கூட பெரிதாக இல்லை ஆனால் தனக்கு தானே மனித உரிமை ஆர்வலர் என்று பெயர் போட்டு விளம்பரம் தேடும் ஒருவர் காலி பெருங்காய டப்பாக்களை பற்றி கதைப்பது அவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் புதிய வேடதாரிகளுக்கு உவப்பாக இருக்கும் .
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.! சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 'உதயன்' - 'சுடர் ஒளி' ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடகவியலாளர் மையத்தில் நடைபெற்றது. கடந்த 2006 இல் உயர்தரக் கல்வியை முடித்த பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் வைத்து ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை சுகிர்தராஜன் புகைப்படம் எடுத்து செய்தி வெளியிட்டிருந்தார். மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப அரசு முயற்சித்தபோது, இவர் எடுத்த புகைப்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட அழுத்தங்களை இலங்கை அரசு சந்தித்தது என்று இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவித்திருந்தன. சுகிர்தராஜன் போர்ச்சூழலிலும் துணிச்சலுடன் ஊடகப் பணியாற்றியபோதே 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு அருகாமையில் வைத்து ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார். மட்டக்களப்பு - குருமண்வெளியைப் பிறப்பிடமாகக்கொண்ட சுகிர்தராஜன் அம்பாறை, வீரமுனையில் வசித்துவந்த நிலையில் திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், ஊடகத்துறை சமூகத்தினர் உட்படப் பலரும் கலந்துகொண்டனர். http://aruvi.com/article/tam/2021/01/24/21914/ டிஸ்கி கண்ணீர் அஞ்சலிகள்.. -
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
எனது அறிவுறுத்தலை மீறியதாலேயே பவித்ராவுக்குக் கொரோனாத் தொற்று- தம்மிக்க பண்டார.! சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதையடுத்து கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனாத் தடுப்புப் பாணி தொடர்பில் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. எனினும், தமது அறிவுறுத்தல்களை மீறியதன் காரணமாகவே அவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தம்மிக்க பண்டார சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுகாதார அமைச்சர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானமைக்கு தம்மால் பொறுப்பேற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொரோனாத் தடுப்புப் பாணி வழங்கப்பட்டபோது புகைப்பிடித்தல், மதுபான பாவனை, மாமிசம் உட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் எனத் தம்மால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார். எனினும், அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தாம் தவிர்க்கும்படி கூறிய இரண்டு விடயங்களைச் செய்ததன் காரணமாகவே இப்போது கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அன்மையில், தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனாத் தடுப்புப் பாணியை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உட்கொண்டார். இது இலங்கையில் பேசு பொருளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2021/01/24/21909/ டிஸ்கி வாய்ல வாஸ்து சரியில்ல .. எங்கயோ வாங்கி கட்ட போறார்.👌
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.