Jump to content

கதிர்காமம் நோக்கிய யாத்திரைக்கு அனுமதி கிடைத்துள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமம் நோக்கிய யாத்திரைக்கு அனுமதி கிடைத்துள்ளது

May 23, 2020

Kathirkamam-800x340.jpg

யாழிலில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக யாத்திரைக்கு தலமை தாங்கி செல்லவுள்ள சி. ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் , இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம். ஆனால் முருகனின் அருளால் இம்முறை யாத்திரைக்கு அருள் கிடைத்துள்ளது. எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து , மோகனதாஸிடம் வேல் பெற்று , கதிர்காமத்தை நோக்கி யாத்திரையை தொடங்கவுள்ளோம். தொடர்ந்து 46 நாட்கள் கால் நடையாக கதிர்காமத்தை நோக்கி சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று அங்கு சென்றடைவோம்.

கடந்த காலங்களில் போன்று இம்முறையும்  யாத்திரையை தொடங்கவுள்ளோம். கொரோனோ தொற்று அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை போணி நடக்கவுள்ளோம். அத்துடன் யாத்திரை செல்லும் அனைவரும் இரண்டு மீற்றர் சுற்றளவு இடைவெளியை தொடர்ந்து பேணி நடக்கவுள்ளோம் என தெரிவித்தார். #யாத்திரை  #அனுமதி #கதிர்காமம்  #கொரோனோ
 

http://globaltamilnews.net/2020/143486/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

தனி வெளிக்கிட ஆய்த்தமோ

அது தொடரும் அண்ணை நிலமையை பொறுத்தே அரசு இன்று அனுமதி அளித்துள்ளது  சில வேளை கொரானோ அதிகரிக்குமானால் தடைப்படலாம் அப்படி தடைப்படாவிட்டால் தனிக்காட்டுராஜாவும் காட்டுவழி பயணம் தொடருவார்

 

3 hours ago, விவசாயி விக் said:

இந்த யாத்திரைகள் எம்மக்களுக்கு கடடாயம் தேவை.  வீட்டுக்குள் அடைபட்டு இருக்கிறார்கள்.  கோவில் தேவாலய யாத்திரைகள், பாடசாலை பயணங்கள் என்று  உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிக்கவேண்டும்.

இப்போது சிங்கள மக்கள் தமிழர் பிரதேசத்தில் சுற்றுலா செல்கிறார்கள்.

பல லட்சத்தை தாண்டிச்செல்லும் பக்தர்கள். விவசாயி அவர்களே வருடா வருடம் சில நேரம் இந்தவருடம் குறைவாகலாம் இந்த கொரானோ வைரசின் தாக்கத்தினால் செல்ல முடிந்தால் படங்களை இணைக்கிறேன்.

கொழும்பிலிருந்து சிங்கள நண்பர்களும் வருவார்கள் உகந்தை வழியாக காட்டினூடாக செல்வதற்கு . சில நேரம் வெள்ளைக்காரர்கள் கூட வருவார்கள் காவியுடன் ஆரம்பகாலத்தில் அமெரிக்கர் ஒருவரே முன்னின்று வருவார் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி தடைப்படாவிட்டால் தனிக்காட்டுராஜாவும் காட்டுவழி பயணம் தொடருவார்

தனியாவா மனைவியோடா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

தனியாவா மனைவியோடா?

நாங்கள் வருடா வருடம் செல்வது நண்பர்களுடன் மட்டுமே மனைவி இதுவரை செல்லவில்லை அதுபோக அவாக்கு ஆரம்ப மாணவர்களின் கற்கைகளுக்கு ஆசிரியர் அண்ணா அதனால் வரவும் மாட்டா எங்கள் குழந்தையும் சின்ன ஆள் அதனால் வரவே மாட்டார்

IMG-0760.jpg

படம் எடுத்தது நான் போகிறவர்கள் என் நண்பர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தனியாவா மனைவியோடா?

பிறகேன் அங்க போவான்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பிறகேன் அங்க போவான்......!   😁

இல்ல சிலவேளை விட்டுட்டு வர ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமம் நோக்கிய யாத்திரைக்கு அனுமதி கிடைத்துள்ளது....

இதுக்கு தடையில்லை...கோட்டையில் 10 ..15 சனம் கூடி தொழுகையில்  ஈடுபட அவர்கள் கைது...இசுலாமியருக்கு சனிமாற்றம் ..குரு மாற்றம் சரியில்லையோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விவசாயி விக் said:

மிக்க மகிழ்ச்சி தனிக்காட்டு ராஜா.  இன்னும் படங்கள் இணையுங்கள்.  நன்றி.

எனது ஒரு யாத்திரை எனும் தலைப்பில் பல படங்கள் இணைத்திருக்கிறேன் விவசாயி அவர்களே

 

15 hours ago, suvy said:

பிறகேன் அங்க போவான்......!   😁

அதுவும் சரிதான் 

 

13 hours ago, ஈழப்பிரியன் said:

இல்ல சிலவேளை விட்டுட்டு வர ...........

ஹாஹா வீட்ட விட்டு துரத்த போறிங்கள் போல

Link to comment
Share on other sites

கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்

In ஆன்மீகம்     May 28, 2020 9:52 am GMT     0 Comments     1216     by : Dhackshala

Katharagama-2-720x450.jpg

யாழ். தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய கப்புறாளையால் யாத்திரைக்கு தலைமை தாங்கி செல்லும் அடியவரின் கையில் முருக பெருமானின் வேல் கையளிக்கப்பட்டது.

வேலினை பெற்றுக்கொண்ட அடியவர்கள் கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையை ஆரம்பித்தனர். இந்த யாத்திரை குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி விசாகம் அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் நடைபெறும் விசேட பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரையாக சுமார் 46 நாட்கள் சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று ஆலயத்தைச் சென்றடையவுள்ளனர்.

இம்முறை கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக யாத்திரை தடைபடும் என எதிர்ப்பார்த்தபோதிலும் முருக பெருமானின் அருளால் இம்முறை யாத்திரை தடங்கல் இன்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முருக பெருமானின் அருலாசியுடன் கதிர்காம கந்தனை சென்றடைவோம் என யாத்திரையில் பங்கேற்ற அடியவர் ஒருவர் தெரிவித்தார்.

Katharagama-4-720x405.jpg

Katharagama-3-720x405.jpg

Katharagama-2-720x405.jpg

Katharagama-1-720x405.jpg

Katharagama-5-720x405.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2020 at 17:55, ஈழப்பிரியன் said:

தனியாவா மனைவியோடா?

 

On 23/5/2020 at 20:29, suvy said:

பிறகேன் அங்க போவான்......!   😁

 

On 23/5/2020 at 21:56, ஈழப்பிரியன் said:

இல்ல சிலவேளை விட்டுட்டு வர ...........

இவை இரண்டு பேர்ரை குசும்பை பாரன்...😎

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

பின்னர் அங்கிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரையாக சுமார் 46 நாட்கள் சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று ஆலயத்தைச் சென்றடையவுள்ளனர்.

ஒரு நாளைக்கு 10 -  15 கிலோமீட்டர் நடப்பார்கள் போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 

 

இவை இரண்டு பேர்ரை குசும்பை பாரன்...😎

பெடியள் கதைக்கிற இடத்தில பெருசுகளுக்கு என்ன வேலை?

Link to comment
Share on other sites

யாழ் - கதிர்காமம் பாதயாத்திரை கைவிடப்பட்டது

யாழ்.கதிர்காம பாதயாத்திரை கைவிடப்பட்டுள்ளதாக பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சாமி தெரிவித்தார்.

வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை ஆரம்பமானது.

எனினும் மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் கைதடிசிவன் ஆலயத்தைச் சென்றடைந்ததும் கைவிட நேரிட்டது என குறிப்பிட்டுள்ளர்.

கொரோனோ வைரஸ் தாக்கத்தினால், இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்ததாக பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி இருந்த சி.ஜெயசங்கரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/144406

Link to comment
Share on other sites

2 hours ago, Rajesh said:

யாழ் - கதிர்காமம் பாதயாத்திரை கைவிடப்பட்டது

யாழ்.கதிர்காம பாதயாத்திரை கைவிடப்பட்டுள்ளதாக பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சாமி தெரிவித்தார்.

வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை ஆரம்பமானது.

எனினும் மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் கைதடிசிவன் ஆலயத்தைச் சென்றடைந்ததும் கைவிட நேரிட்டது என குறிப்பிட்டுள்ளர்.

கொரோனோ வைரஸ் தாக்கத்தினால், இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்ததாக பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி இருந்த சி.ஜெயசங்கரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/144406

நந்த வனத்திலோர் ஆண்டி, அவன் நாலாறுமாதமாய் குயவனை வேண்டி, கொண்டுவந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி. 😩

Link to comment
Share on other sites

நீண்ட ஊரடங்கு காலத்தில் நடைபயணம் சாத்தியமில்லை

தவிர்ப்பதே மேலான முடிவு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.