Jump to content

2001ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை புலிகள் உருவாக்கினரா? - -டி.பி.எஸ். ஜெயராஜ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

2001ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை புலிகள் உருவாக்கினரா? - -டி.பி.எஸ். ஜெயராஜ்

  • சுமந்திரனுக்கெதிரான அரசியல் தாக்குதல்கள் புதியவையல்ல.
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் மறைமுக ஆதரவுடன் சுயாதீனமாக த.தே.கூ உருவாக்கப்பட்டது
  • கட்சி யாப்பு அல்லது கட்டமைப்பில்லாமல் பலவீனமாகவே த.தே.கூ உருவானது
  • அரசியல் சூறாவளி ஒன்றின் கண்ணாக யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான மதியாபரணன் ஏப்ரஹாம் சுமந்திரன் தற்போதுள்ளார்.

image_7ad5d23b2b.jpg
-டி.பீ.எஸ். ஜெயராஜ்

(சிரேஷ்ட பத்தியெழுத்தாளர் டி.பீ.எஸ்.ஜெயராஜ், டெய்லிமிரர் பத்திரிகையில் கடந்தவாரம் எழுதிய பத்தியின் தமிழாக்கம் இது. தமிழாக்கம்: சண்முகன் முருகவேல்)

சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவால் நடாத்தப்படும் சமுதிதவுடன் உண்மை நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும் அரசியல்வாதியுமான சுமந்திரன் வழங்கிய யூடியூப் நேர்காணலே சர்சைக்குரிய காரணமாகக் காணப்படுகிறது. சிங்களத்திலுள்ள சில கேள்விகளும், பதில்களும் தமிழ் ஊடகத்தின் பகுதியொன்றால் எடுக்கப்பட்டு வேண்டுமென்றே சுமந்திரனின் கருத்துகளைப் போலியான திருப்பங்கள், குறும்புக்கார தகவல்களுடன் பிழையாக மொழிபெயர்த்ததாகத் தெரிகிறது. இது இலங்கைக்குள்ளும் வெளியேயும் பிரதான தமிழ் ஊடகங்கள், சமூக வலைத்ததளங்களில் சுமந்திரனுக்கெதிராக அவர் குறிப்பிட்டது போன்றதற்கு கோபாவேசக் குரல்களுக்கு வழிவகுத்தது. கோபாவேசமாக சுமந்திரன் தாக்கப்பட்டிருந்தார்.

சுமந்திரனுக்கெதிரான அரசியல் தாக்குதல்கள் புதியவையல்ல. தாராள, ஏறத்தாழ மிதவாதக் கொள்கைகளுடைய சுமந்திரன், இனப் பிரிப்பின் இரண்டு பக்கத்திலும் விருப்பத்துக்குரிய இலக்காகக் காணப்படுகின்றார். தமிழர்களைப் பொறுத்தவரையயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு/ தமிழரசுக் கட்சிக்குள்ளேயும், வெளியேயுமுள்ள பல அரசியல்வாதிகளின் இதயங்களில், பொறாமைக் கண் கொண்டு பார்க்கப்படுபவராக சுமந்திரன் காணப்படுகின்றார். தமிழ், தேசிய அரசியலில் குறுகிய காலத்தில் சுமந்திரனின் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியே இதற்கான காரணமாகும். எனவே குறித்த நேர்காணலானது தங்களது தாக்குதல்களை இணைந்து சுமந்திரன் மீது மேற்கொள்ள வாய்ப்பை வழங்கியிருந்தது.

விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தாமல் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட சுமந்திரனின் முன்னாள் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனைச் சாடும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து சுமந்திரனைக் கட்சியின் பேச்சாளர் மற்றும் தமிழரசுக் கட்சியிலிருந்து அகற்றுவது குறித்து த.தே.கூவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாவையால் தொடர் கலந்துரையாடல்கள் ஒழுங்கமைக்கப்பட்டனவென தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. தவிர, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, சுமந்திரனுக்கிடையிலான திட்டமிடப்பட்ட சந்திப்பொன்றை நிறுத்துவதற்கான தோல்வியில் முடிவடைந்த முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இறுதியாக யூடியுப் காணொளியொன்றை வெளியிட்டிருந்த சுமந்திரன், தனது நேர்காணலானது தன்னைத் தாக்குவதற்காக எவ்வாறு மாற்றப்பட்டது என விளக்கமொன்றை வழங்கியிருந்தார். தவிர, மாவை உள்ளிட்ட தனது சகபாடிகள் தன்னிடம் விளக்கத்தைக் கோராமல் தன்னைச் சாடி அறிக்கைகளை வெளியிட்டது குறித்து மனம் வருந்தியிருந்தார்.

புலிகளின் உருவாக்கம்

சுமந்திரனுக்கெதிரான நாடகத்தில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கியமான விடயமொன்று த.தே.கூவின் தோற்றமாகும். புலிகள் மூலமாக த.தே.கூ தோற்றுவிக்கப்பட்டதாக சமுதித சமரவிக்கிரம தனது ஆக்ரோஷமான கேள்விகள் மூலம் நிரூபிக்க முயன்றார். த.தே.கூவின் ஆரம்பக் கூட்டத்துக்கு தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கியதாகக் கூறியிருந்தார். குற்றச்சாட்டுகளைச் சுமந்திரன் நிராகரித்ததுடன், கூட்டமைப்பானது புலிகளால் 2001ஆம் ஆண்டு உருவாக்கப்படவில்லை என வலியுறுத்தியிருந்தார்.

இது சுமந்திரனுக்கெதிரான முகாமுக்கு மேலும் தாக்குதல் நடத்த சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தது. கூட்டமைப்பானது பிரபாகரனால் உருவாக்கப்பட்டதாக அவர்கள் கூறியிருந்தனர். புலிகளால் கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை என அதன் தலைவர் சம்பந்தன் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றபோதும், புலிகளின் உருவாக்கமே கூட்டமைப்பு என கூட்டமைப்பின் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கூட்டமைப்பானது புலிகளாலேயே உருவாக்கப்பட்டதாக அதன் சில உறுப்பினர்கள் தெரிவிப்பது நிலைமையை சிக்கலாக்கிறது. இந்நிலையில், கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு உருவாக்கும்போது புலிகளின் பிரிவு கூட்டமைப்பு எனத் தெரிவிக்கும் பல கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருந்திருக்கவில்லை.

அப்பிடியெனில் எது உண்மை? பொதுவான நம்பிக்கைக்கு மாறாக கூட்டமைப்பு புலிகளின் உருவாக்கமல்ல. புலிகளின் மறைமுக ஆதரவில் சுயாதீனமாகக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. பின்னர் புலிகள் பொறுப்பெடுத்துக் கட்டுப்படுத்தியிருந்தனர்.

தேவை கருதி 2001ஆம் ஆண்டு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இலங்கையரசு, அதன் ஆயுதப்படைகளுக்கெதிராக தமது இராணுவ நடவடிக்கையை புலிகள் தொடர்ந்திருந்தனர். சில தமிழ் அரசியல் இயக்கங்கள் ஆளும் அரசாங்கங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டிருந்தன. சில ஏனைய புலிகளல்லாத அரசியல் கட்சிகள், இருந்த கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் இடைவெளியில் ஜனநாயக அரசியலில் ஈடுபட்டன. எனினும் அவை புலிகள், அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்படும் துணை இராணுவக் குழுக்களால் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தன. தவிர தமிழ்த் தேசியத்துக்கான இக்கட்சிகளின் ஆதரவு பிளவுபட்டிருந்தது. இதனால் வாக்குகள் பிரிவடைந்து, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் உடைந்தது. ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பெரிய கட்சிகள், தமது தமிழ் சகபாடிகளுடன் இணைந்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். மேலதிக வாக்குகள், தமிழ்த் தேசிய சக்திகளுக்குப் போதுமான பிரதிநிதித்துவத்துக்கு அரசியல் ஒற்றுமை தேவை என பல தமிழர்கள் உணர்ந்தனர்.

ஒக்டோபர் 10, 2000 தேர்தல்

2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலில் எச்சரிக்கை மணிகள் உரத்து ஒலித்தன. வட-கிழக்கில் முடிவுகள் தமிழர்களுக்குப் பொதுவாகவும், சில தமிழ்க் கட்சிகளுக்கு குறிப்பாகவும் அதிர்ச்சியையளித்திருந்தன. அரசியல் ரீதியாக முக்கியத்துவமிக்க திருகோணமலை மாவட்டத்தில் சம்பந்தன் உட்பட எந்தத் தமிழரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மட்டக்களப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து இரண்டு தமிழர்கள் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்நேரம் கூட்டணியானது தமிழரசுக் கட்சியையும், தமிழ் காங்கிரஸின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரையும் உள்ளடக்கியிருந்தது. தற்போது தமிழரசுக் கட்சியை தனது முன்னைய கட்சியாக கூட்டணி நோக்குகிறது. ஆளும் மக்களின் கூட்டணியிலிருந்து 2000ஆம் ஆண்டுத் தேர்தலில் மட்டக்களப்பில் இன்னொரு தமிழர் வென்றிருந்தார். அம்பாறையில் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியால் ஆதரவளிக்கப்பட்ட தமிழரொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

வன்னி மாவட்டத்திலுள்ள ஆறு ஆசனங்களில் மக்கள் கூட்டணி, ஐ.தே.கவிலிருந்து இரண்டு சிங்களவர்களும், ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழீழ விடுதலைக் கழகத்திலிருந்து மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்டனர். யாழ்ப்பாணத்தில் ஒன்பது ஆசனங்களில், போனஸ் ஆசனத்துடன் நான்கை ஈ.பி.டி.பி பெற்றது. கூட்டணி மூன்றைப் பெற்றது. தமிழ் காங்கிரஸ் ஒன்றைப் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சி ஒன்றைப் பெற்றது. 48 ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க வென்றது. 1952ஆம் ஆண்டு சேர் பொன் இராமநாதனின் மருமகன் சுப்பையாப்பிள்ளை நடேசன் வென்றிருந்தார். 2000ஆம் ஆண்டு தியாகராஜா மகேஸ்வரன் வென்றிருந்தார்.

தேசியப்பட்டியல் ஆசனமொன்றைப் பெறுவதற்கு போதுமான வாக்குகளை எந்த தமிழ்க் கட்சியும் பெறவில்லை. 2000ஆம் ஆண்டு வட-கிழக்கில் தமிழர்கள் குறைவாக பிரதிநிதித்துவப்படுத்தியிருந்ததுடன், சிங்களம் ஆதிக்கம் செலுத்தும் தேசிய கட்சிகளும், அரசாங்கத்துடன் இணைந்த ஈ.பி.டி.பி போன்ற தமிழ்க் கட்சிகளும் சிறப்பாகச் செயற்பட்டன.

கிழக்கு பல்கலைக்கழக செயலமர்வு

நிலைமையின் மோசமானது ஏறத்தாழ ஒரே குழுமத்தைக் கொண்ட வடக்கை விட இனப்பல்வகைமை கொண்ட கிழக்கிலேயே உணரப்பட்டது. நிலைமையை ஆராயும் செயலமர்வொன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதற்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராம் தலைமை தாங்கியிருந்தார். சில விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், தொழில்துறையினர், சமூகப் பணியாளர்கள், பட்டதாரிகள் மற்றும் அரசியல் பிரதிதிகள் கலந்துகொண்டிருந்தனர். அந்தவகையில், வாக்குகள் பிரிவதைத் தடுப்பதற்காக ஒரு குடை நிறுவனத்தின் கீழ் எதிரணியிலுள்ள வெவ்வேறான அரசியல் கட்சிகள் திரள வேண்டும் என குறித்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. புலிகளுக்கு ஆதரவாக அவ்வாறானதொரு நிறுவனம் இருக்க வேண்டும் என உணரப்பட்டது. இந்நகர்வுக்கு புலிகளின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்விடயத்தை நிறைவேற்றுவதை ஒருங்கிணைக்க மூன்று இணைத்தலைவர்களைக் கொண்ட வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டது.

நடவடிக்கை மூன்று விடயங்களைக் கொண்டிருந்தது. முதலாவது புலிகளின் அனுமதி, ஆதரவைப் பெற்றுக் கொள்வது. அதில், எதிரணியிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளை புலிகள் கொல்ல மாட்டோம் என அவர்களிடம் பாதுகாப்பு உறுதிமொழியைப் பெற வேண்டும். பதிலாக, குறித்த தமிழ்க் கட்சிகள், எந்தவொரு பேரம்பேசலிலும் புலிகளைத் தமிழர்களின் தனிப் பிரதிநிதியாக அங்கிகரிப்பதோடு, அவர்களின் முன்னிலையை ஏற்க வேண்டும்.

இரண்டாவதாக, ஆயுதக்குழு வரலாற்றொன்றுடனுள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புளொட், டெலோ போன்ற அரசியல் கட்சிகள், தாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுவதாகவும், புலிகளை அழிப்பதில் அரசுடன் இணையக்கூடாது எனவும் பிரகடனப்படுத்த வேண்டும். கிழக்கிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப் ராசிக் குழு, புளொட் மோகன் குழு, டெலோ ரஞ்சன் குழு போன்ற துணை இராணுவக் குழுக்களுடன் மேற்குறித்த அரசியல் கட்சிகள் தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும்.

மூன்றாவதாக, கூட்டணி, தமிழ் காங்கிரஸ் போன்ற ஆயுதக்குழுக்களற்ற அரசியல் கட்சிகள் பொது நோக்கத்துடன் முன்னாள் ஆயுதக்குழுக்களுடன் பணியாற்ற வேண்டும். முன்னாள் ஆயுதக்குழுக்களின் கைகளில் இரத்தம் படிந்துள்ளன என கூட்டணியும், தமிழ் காங்கிரஸும் தயங்கின. தவிர கூட்டணி, தமிழ் காங்கிரஸுக்கிடையே நீண்ட காலப் பகை காணப்பட்டது.

உத்தியோகபற்றற்ற முறையில் கரிகாலன் பங்கெடுப்பு

பேரம்பேசல் நடைமுறையில் வன்னியிலுள்ள உயர் மட்டம் நேரடியாகப் பங்கேற்கவில்லை. எனினும், மட்டக்களப்பு-அம்பாறைக்கான புலிகளின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் ஆதரவாக இருந்ததுடன், உத்தியோகபூர்வமற்ற முறையில் பங்கெடுத்திருந்தார். பேச்சுகள் நடைபெற்றபோது ஆரியம்பதி பிரேதேச சபையின் டெலோ தலைவர் றொபேர்ட்டை புலிகள் கொலை செய்திருந்தனர். இதன் காரணமாக பேச்சுகளிலிருந்து வெளியேற விரும்பியது.

எனினும் தமது நடவடிக்கைகளை தொடர்ந்ததுடன், கிழக்கிலிருந்த புலிகளின் இராணுவத் தலைமைக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. கிழக்கு பிராந்திய தளபதி அப்போது கேணல் கருணா ஆவார். புலனாய்வுப் பிரிவுக்கும், அரசியல் பிரிவுக்குமிடையிலான தொடர்பாடல் இடைவெளி காரணமொன்று காரணமான தவறொன்றால் கொலை இடம்பெற்றதாகப் புலிகள் விளக்கமளித்திருந்தது. தொடர்ந்து டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்பின் முன்னிலை உறுப்பினர்கள் இரகசியமாக கரிகாலனைச் சந்தித்து விடயங்களைக் கலந்துரையாடியிருந்தனர். உறுதிமொழிகள் பெறப்பட்டிருந்தன. இதேபோல கூட்டணி உறுப்பினர்களும் புலிகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

ஆரம்பத்தில் இரண்டு தடைகள் காணப்பட்டன. சித்தார்த்தனால் தலைமை தாங்கப்பட்ட புளொட்டானது ஒன்றிணைப்புக்குத் தயாராகவிருந்தபோதும், வவுனியாவிலிருந்த புளொட் போராளிகள், வவுனியாவில் பலமாகவிருந்த டெலோவுடன் இணைய சம்மதிக்கவில்லை. இதேபோல, வன்னியில் ஆதரவு அழிவடைந்துவிடும் என்ற அச்சத்தில் புளொட்டுடன் இணைய டெலோ உயர்மட்டம் தயங்கியது. இறுதியில் புளொட்டோ அல்லது அதன் அரசியல் கட்சி ஜனநாயக மக்களின் விடுதலை முன்னணி பங்கேற்கவில்லை.

இரண்டாவது, தமிழரசுக் கட்சியும், அதன் பின்னையநாள் கூட்டணி மீதான தமிழ் காங்கிரஸின் நீண்ட கால பகையாகும். கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தை விட கூட்டணியின் சைக்கிள் சின்னத்தின் கீழ் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய தமிழ் காங்கிரஸ் விரும்பியது. காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்துபவராக இருந்த குமார் பொன்னம்பலத்தின் மனைவியான யோகலக்ஷ்மி பொன்னம்பலத்தின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் ஒன்றிணைய, உதயசூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிட அனுமதி வழங்கியிருந்தார். இதேபோல கூட்டணியின் பழைய உறுப்பினர்கள், காங்கிரஸ், ஏனைய ஆயுதக் குழுக்களுடன் இணையத் தயங்கிய நிலையில் பின்னர் அவர்கள் சம்மத்தினர் அல்லது அமைதியாக்கப்பட்டனர்.

இரண்டு சமாந்தர நடைமுறைகள்

மேற்குறித்த கலந்துரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருந்தபோதே இரண்டு சமாந்தர நடவடிக்கைகள் நடைபெற்றன. ஒன்று, அறியப்படாத சங்கிலியன் படை, குளக்கோட்டன் படை, வன்னியன் படை பெயரில் ஊடகங்களுக்கு தமிழ் ஒற்றுமையை வலியுறுத்தியும், இணங்காதவர்களுக்கு நடவடிக்கை என எச்சரித்தும் அறிக்கைகள் வெளியாகியிருந்தன. இவைகளுக்கு தமிழ் பத்திரிகைகளில் பரவலாக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

அடுத்த சமாந்தர நடைமுறையாக ஒட்டுமொத்த தமிழ் ஒன்றிணைப்பு தொடர்பாக கொழும்பைத் தளமாகக் கொண்ட பிரபலமான தமிழர்களால் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன. அதில், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், சமூகப் பணியாளர்கள் அடங்கியிருந்தனர். இதில் சில ஒன்றிணைவுக்காக மட்டக்களப்பிலுள்ள தமது சகபாடிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். கொழும்பைத் தளமாகக் கொண்ட குறித்த தமிழர்களின் நடவடிக்கைகளானவை ஒன்றிணைந்த பேச்சுகளில் பிரதான வகிபாகமொன்றை வகித்திருந்தன.

இறுதிக்கு முந்தைய கட்டங்களில் வன்னியிலுள்ள புலிகள் நேரடியாகப் பங்கேற்றிருந்தனர். கூட்டணி, காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்பின் சில தலைவர்கள் அலைபேசியில் தொடர்பு கொள்ளப்பட்டு, ஒன்றிணையுமாறும், உதயசூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிடுமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தனர். புலிகள் காரணமாக பேரம்பேசும் கட்சிகளின் பேச்சுகள் வெற்றிகரமாக முடிவடைந்தன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

கூட்டணி, காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்க்குமிடையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற அறியப்பட்ட கூட்டணியை உருவாக்க இணக்கம் ஏற்பட்டது. கூட்டணியின் சின்னத்தின் கீழ் கூட்டமைப்பு போட்டியிடும். வெவ்வேறு தேர்தல் மாவட்டங்களில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் எத்தனை பேர் போட்டியிடுவதும் இணங்கப்பட்டது. வர்த்தகர் வீ.ஆர். வடிவேற்கரசனின் கொழும்பு வதிவிடத்தில் ஆரம்பக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கமானது ஊடக வெளியீட்டொன்றின் மூலம் 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. குறித்த ஊடக வெளியீடானது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கமானது கூட்டணி, காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்பை பிரதிநிதித்துவப்படுத்தியோரால் கைச்சாத்திடப்பட்டது. சம்பந்தன், குமரகுருபரன், ஶ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே குறித்த கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் ஆவர். கூட்டமைப்பின் இணக்கத்தின் சரத்துகளாக நான்கு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

முதலாவது, எவ்வாறு நான்கு கட்சிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் பட்டியல் ஒதுக்கப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தியிருந்தது. அதன்படி,

யாழ்ப்பாணம்: கூட்டணி - 7; காங்கிரஸ் - 3, டெலோ - 1, ஈ.பி.ஆர்.எல்.எஃப் – 1

வன்னி: கூட்டணி – 3; காங்கிரஸ் - 1; டெலோ – 4; ஈ.பி.ஆர்.எல்.எஃப் – 1

மட்டக்களப்பு: கூட்டணி – 5; காங்கிரஸ் – 1; டெலோ – 2; ஈ.பி.ஆர்.எல்.எஃப் – 1

திருகோணமலை: கூட்டணி 3; காங்கிரஸ் – 1; டெலோ 2; ஈ.பி.ஆர்.எல்.எஃப் – 0

அம்பாறை: கூட்டணி 5; காங்கிரஸ் – 1; டெலோ – 1; ஈ.பி.ஆர்.எல்.எஃப் – 0

இரண்டாவது விடயமானது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு தொடர்பானது. முன்னுரிமையானது கூட்டணி, காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப் என்ற முன்னுரிமையில் வழங்கப்படும்.

மூன்றாவது விடயமானது பங்காளிக் கட்சிகள் ஒன்றையொன்று பொதுவெளியில் தாக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்தில் சக பங்காளிக்கட்டிக்கெதிராக விமர்சனம், எதிர்விமர்சனம் செய்வது தொடர்பில் சிறப்புக் கவனம் எடுக்கப்படும்.

நான்காவது விடயமானது கூட்டமைப்புக்குள் ஏற்படும் பிரச்சினைகள். பிரச்சினைகள் ஏற்படுமிடத்து பங்களாளிக் கட்சிகள் தமக்கிடையே அமைதியான முறையில் கலந்துரையாடி பெரும்பான்மை வாக்கின் மூலம் பொருத்தமான தீர்வுக்கு வர வேண்டும். அது சாத்தியமில்லாத பட்சத்தில் வெளி அனுசரணையாளர் குழுவொன்று பிரச்சினையைத் தீர்க்க உதவ வேண்டும்.

ஆறு நபர் அனுசரணையாளர் குழு

1. வீ. கைலாசப்பிள்ளை

2. கந்தையா நீலகண்டன்

3. வீ.ஆர். வடிவேற்கரசன்

4. நிமலன் கார்த்திகேயன்

5. எஸ். தியாகராஜா

6. கே. ஜெயபாலசிங்கம்

கொழும்பைப் பிரதானமாக தளமாகக் கொண்ட தமிழ் சமூகத்தின் மதிக்கப்படும் அங்கத்தவர்களே அனுசரணையாளர்கள் ஆவர். இவர்கள் பிரதானமாக தொழில் நிபுணர்கள் அல்லது வெற்றிகரமான வர்த்தகர்கள். தியாகாராஜா மாத்திரம் கூட்டணியின் பொருளாளர். ஏனையவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்லர்.

குறித்த நிலைமைகளின் கீழ் கட்சி யாப்பு அல்லது கட்டமைப்பில்லாம பலவீனமாகவே கூட்டமைப்பு பிறந்தது. 2001ஆம் ஆண்டு டிசெம்பர் ஐந்தாம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது தேர்தல் பிரசாரம் இடம்பெற்றபோது கூட்டமைப்புக்கு புலிகள் வெளிப்படையாக ஆதரவளிக்கவில்லை. பிரசாரமானது புலிகளின் பங்களிப்பில்லாமல் நடைபெற்றது. புலிகளின் வன்முறை அச்சமில்லாமல் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொண்டது அவர்களுக்கு பெரும் சாதகமானதாகக் காணப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பு சிறந்த முடிவுகளைப் பெற்றிருந்தது.

யாழ்ப்பாணத்தில் ஒன்பது ஆசனங்களில் ஆறு ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றிருந்தது. வன்னியில் ஆறு ஆசனங்களில் மூன்று ஆசனங்களைப் பெற்றிருந்தது. கிழக்கில் திருகோணமலையில் ஒன்றையும், அம்பாறையில் ஒன்றையும், மட்டக்களப்பில் மூன்றையும் கூட்டமைப்பு பெற்றிருந்தது. பெற்ற வாக்குகளின் பலத்தில் கூட்டமைப்புக்கு தேசியபட்டியலில் ஓர் ஆசனம் கிடைத்தது. 14 தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ஒரு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரையும் 2001ஆம் ஆண்டில் கூட்டமைப்பு பெற்றிருந்தது. 15-இல், கூட்டணி ஏழு, டெலோ நான்கு, காங்கிரஸ் மூன்று, ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஒரு ஆசனங்களைக் கொண்டிருந்தது.

கூட்டமைப்பின் புலிமயமாக்கம்

இதுதான் அப்போது கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு எவ்வாறு உருவாக்கப்பட்டது அப்போதைய கதை. புலிகள் ஆதரவளித்திருந்ததுடன், மறைமுகமாக உத்தரவிட்டிருந்தபோதும் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் அவர்கள் நேரடியான எவ்வகிபாகத்தையும் கொண்டிருக்கவில்லை. 2001ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிக்கனியைக் கூட்டமைப்பு சுவைத்த பின்னரே கூட்டமைப்பைப் புலிமயமாக்கல் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. படிப்படியாக கூட்டமைப்பைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் புலிகள் கொண்டு வந்திருந்தனர்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/2001ஆம்-ஆண்டில்-தமிழ்த்-தேசிய-கூட்டமைப்பை-புலிகள்-உருவாக்கினரா/91-250702

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் இந்த மனுசன (கட்டுரையாளரை) முன்ணனுக்குக் கொண்டுவாற வேலய கன கச்சிதமா மெல்ல மெல்லச் செய்கிறான்கள். 🤥

நேர்மையும்,  சிறந்த ஆய்வுகளைச் செய்யும் திறனுள்ள ஆய்வாளர்களும்  எமது சமூகத்தில் இல்லாமலே போய்விட்டது. எங்களுக்கு உண்மைகளை குட்டிக் குட்டிச் சொல்ல எவருமே இல்லை. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளதே, முதலில் நீங்கள் ஒரு முடிவிற்கு வாங்கோ, புலிகளை பற்றி பின்னர் கதைக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kapithan said:

திரும்பவும் இந்த மனுசன (கட்டுரையாளரை) முன்ணுக்குக் கொண்டுவாற வேலய கன கச்சிதமா மெல்ல மெல்லச் செய்கிறான்கள். 🤥

நேர்மையும்,  சிறந்த ஆய்வுகளைச் செய்யும் திறனுள்ள ஆய்வாளர்களும்  எமது சமூகத்தில் இல்லாமலே போய்விட்டது. எங்களுக்கு உண்மைகளை குட்டிக் குட்டிச் சொல்ல எவருமே இல்லை. ☹️

கோத்தா  கலைத்து  விட்டவர் அவரின் ஆட்ட்சியில் ஊர்வந்து பிலிம் காட்டுவம் என்று நினைக்கிறார் ஆக்கும் .டி பி எஸ் எழுதினால் உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இருக்காது என்று எண்ணிய காலம்களும் உண்டு . பொய்  ஊடகவியல் மேகங்கள் கருகட்டுது இன்று தமிழ் நெட்டும்  ஐபிசியை திட்டி தள்ளுது https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39830

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, MEERA said:

இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளதே, முதலில் நீங்கள் ஒரு முடிவிற்கு வாங்கோ, புலிகளை பற்றி பின்னர் கதைக்கலாம்..

நான் புனைவுகளை அதிகம் வாசிப்பேன். டி.பி.எஸ். புனைவுக் கதைகளை போராட்டம் நடந்தபோது வாசித்து கிளுகிளுப்பு அடைந்ததும் உண்மைதான்.

ஆனால் பல ஆண்டுகளாக இவரின் கட்டுரைகளைத் தேடி வாசிப்பதில்லை😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

நான் புனைவுகளை அதிகம் வாசிப்பேன். டி.பி.எஸ். புனைவுக் கதைகளை போராட்டம் நடந்தபோது வாசித்து கிளுகிளுப்பு அடைந்ததும் உண்மைதான்.

ஆனால் பல ஆண்டுகளாக இவரின் கட்டுரைகளைத் தேடி வாசிப்பதில்லை😁

உண்மை கிருபன்.

நாங்கள் சுய திருப்திப்படுத்துதலில் செலுத்திய கவனத்தை உண்மையை நோக்கித் திருப்பியிருந்தோமானால் எங்கள் வலியின் அளவைக் குறைத்திருக்கலாம் என நம்புகிறேன். 🙂

எல்லாம் காலம் கடந்த ஞானம். ☹️அனுபவிக்கிறோம். ☹️

(உண்மையில் இந்தக் கட்டுரையின் தலைப்பையும்,  எழுதியவர் யார் என்று பார்த்த பின்னர் மேற்கொண்டு எதனையும் வாசிக்கவில்லை. தற்போது சம்பந்தப்பட்டவர்கள் இல்லாத சூழல் யாரும் எதனையும் கூறலாம் என்கின்ற நிலை. உண்மை பொய்யை நிரூபிக்க ஆதாரங்களில்லை ☹️)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

கோத்தா  கலைத்து  விட்டவர் அவரின் ஆட்ட்சியில் ஊர்வந்து பிலிம் காட்டுவம் என்று நினைக்கிறார் ஆக்கும் .டி பி எஸ் எழுதினால் உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இருக்காது என்று எண்ணிய காலம்களும் உண்டு . பொய்  ஊடகவியல் மேகங்கள் கருகட்டுது இன்று தமிழ் நெட்டும்  ஐபிசியை திட்டி தள்ளுது https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39830

ஆயுதப் போராட்டமும் புலிகளும் இல்லாதது பலரய்து வருமானத்திற்கு வேட்டு வைத்துவிட்டது.  அதில் இந்த DBS ம் ஒருவர். ☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.