Jump to content

இருண்ட யுகம் மீளத் திரும்புகிறதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இருண்ட யுகம் மீளத் திரும்புகிறதா?

கே. சஞ்சயன்   / 2020 மே 23

கொரோனா வைரஸ் தொற்றுச் சூழலையும் அதைத் தடுப்பதற்காகக் கையாளப்படும் தனிமைப்படுத்தல் சட்டத்தையும்இராணுவபொலிஸ் அதிகாரங்களைவலுப்படுத்திக் கொள்வதற்காகஅரசாங்கம் பயன்படுத்துவதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

image_ef362499a2.jpg

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுப்பதில்படைத்தரப்பும் பொலிஸாரும் காட்டிய ஆர்வம்வடக்கில் கொந்தளிப்பை ஏற்பத்தியது.

கூடவேஅவர்கள் சட்டரீதியாகச் செயற்படுகிறார்களா என்ற விவாதத்தையும் கிளப்பி விட்டிருக்கிறது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம்யாருடைய கையில் இருக்கிறதுஅதை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்யாருக்கு இருக்கிறதுபோன்ற கேள்விகள் நீதிமன்றம் வரைக்கும் சென்று விட்டன.

வடக்கின் பல்வேறு இடங்களிலும்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டுதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிநினைவுச் சுடர்களை ஏற்றிஅஞ்சலி செலுத்தியது.

கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அவரது கட்சியின் பிரமுகர்கள்இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்ஒவ்வோர் இடத்திலும் இவர்கள்,பொலிஸார்இராணுவத்தினரின் கெடுபிடிகளை எதிர்கொள்ள நேரிட்டது.

இந்தநிலையில்கஜேந்திரகுமார் உள்ளிட்ட 11 பேர்தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிநினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியதால்அவர்களைத் தனிமைப்படுத்தவேண்டும் என்றுமே 17ஆம் திகதியாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில்பொலிஸ் தரப்பால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அதை ஆராய்ந்த நீதிவான் பீற்றல் போல்கஜேந்திரகுமார் உள்ளிட்ட 11 பேரையும் 14 நாள்கள்அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்குமாறுசுகாதார வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கைமறுநாள்மே 18ஆம் திகதிமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில்கஜேந்திரகுமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்பதைத்தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையே என்பதுவெளிப்படையாகத் தெரிந்தது.

இந்தநிலையில்மே 18ஆம் திகதியாழ்நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள்அந்தஉத்தரவுக்கு எதிராக வாதிட்டனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ்சுகாதார அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்அதை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபொலிஸாருக்குஅதிகாரம் அளிக்கப்படவில்லை என்றும் மூத்த சட்டத்தரணிகளில் ஒருவரான அன்ரன் புனிதநாயகம் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதன் அடிப்படையில்முதல் நாள் (17) பிறப்பித்த தனிமைப்படுத்தல் உத்தரவையாழ்நீதிவான் நீதிமன்ற நீதிவான் விலக்கிக் கொண்டார்.

ஏற்கெனவேஊரடங்குச் சட்டத்தைஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவுஅறிக்கையின் மூலம் நடைமுறைப்படுத்துவது சட்டரீதியானது அல்ல என்றபிரச்சினையைஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமந்திரன்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் எழுப்பியிருந்தார்.இப்போதுதனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில்பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகக்கூறப்படவேயில்லை என்றுசட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.அவர்இந்த வாதத்தை முன்வைத்த அன்று பிற்பகல்பாதுகாப்பு அமைச்சில் இருந்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டிருந்ததுஅந்த அறிக்கையில், 'மாகாணசுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளைப் புறக்கணித்துமுள்ளிவாய்க்கால் நினைவு நாளை நினைவு கூரும் வகையில்பல குழுக்கள் ஆள்களை ஒன்றுதிரட்டத் திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளதுஇதனால்விசேட வர்த்தமானி இலக்கம், 2167/18 இன் மூலம் திருத்தப்பட்ட, 1897ஆம் ஆண்டின் 3ஆம் இலக்கதனிமைப்படுத்தல் மற்றும்நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தைகண்டிப்பாகப் பின்பற்றுமாறுவடக்கில் உள்ளபாதுகாப்புப் படைத் தளபதிகளுக்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுஎனஅந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனிமைப்படுத்தல் மற்றும்நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்திவடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத்தடுக்குமாறுபடையினர்பொலிஸாருக்குபாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்தாலும்அந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைளை எடுப்பதற்குப்படையினருக்கோபொலிஸாருக்கோ அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கவில்லையாழ்ப்பாணம் நீதிமன்றத்தில்இந்த வாதம்  முன்வைக்கப்பட்டிருக்கிறது.

image_0848c10f6e.jpg

தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம்அரச படையினருக்கு அளிக்கப்படாவிட்டாலும்பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ்தான்,அவர்கள்தற்போது வீதிகளில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள்சோதனைகள்ஏனைய தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதேஉண்மை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தடுப்பதற்காகபல இடங்களில் வழக்கத்துக்கு மாறாகபடையினரும் பொலிஸாரும் பொல்லுகள்போன்றஆயுதங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நினைவேந்தலுக்குச் செல்பவர்களைத் தடுப்பதற்காகமக்களைப் பயமுறுத்தும் வகையில்இராணுவத்தினர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தனர்.

ஆனாலும்அவர்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்துக்கு அமைவாகவேதாங்கள் செயற்படுவதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள்யாழ்ப்பாணத்தில் இருந்துமுள்ளிவாய்க்காலுக்குச் செல்ல முயன்ற போதுகேரதீவில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் தடுக்கப்பட்டனர்அதற்கு, ''அப்பால் செல்வதற்குஅனுமதிக்க முடியாது'' என்று கூறினர்.

இதனால்ஒரு மணித்தியாலத்துக்கு மேல் காத்திருந்து விட்டுமுன்னாள் முதலமைச்சர்யாழ்ப்பாணத்துக்கே திரும்ப வேண்டியிருந்தது.

''சங்குபிட்டிப் பாலத்தைக் கடந்து செல்வதற்குஅத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால்விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களிடம்அதற்கான அனுமதி இருக்கவில்லைஅவர்கள்அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட வேண்டிய தேவைஇல்லை'' என்றுயாழ்படைகளின் கட்டளைத் தளபதிமேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியபின்னர் ஒரு விளக்கத்தைக் கூறியிருந்தார்கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக,நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்களித்துஅவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும்அவர் கூறியிருக்கிறார்.

அப்போதுவடக்கு மாகாணத்துக்குள் பயணம் செய்வதற்குஎந்த அனுமதியும் தேவைப்பட்டிருக்கவில்லைஅதற்கான அனுமதி வழங்கும் முறையும்அமலில்இருக்கவில்லை என்பதுமுக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம் ஆகும்.

முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதைத் தடுப்பதேபடையினரின் தேவையாகஇலக்காக இருந்ததுஅதற்குத் தனிமைப்படுத்தல் சட்டத்தைஅவர்கள் கையில்எடுத்திருந்தார்கள்.

ஊரடங்கு அமலில் இல்லாதஇயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக அளிக்கப்பட்ட காலஇடைவெளியில் தான்இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

இதன் மூலம்கொரோனா வைரஸ் தொற்றையும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் சட்டத்தையும்படைத்தரப்பு எந்தளவுக்குத் தவறாகப்பயன்படுத்த முனைகிறது என்பது வெளிச்சமாகியுள்ளது.

அதனால்த்தான்,''எமது கட்சியினருக்கு எதிராகப் பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராகநீதிமன்றத்தைநாடப்போகிறேன்'' எனதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.

இவ்வாறான மனுக்கள்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டால்தான்பொலிஸ்இராணுவம் என்பனதன்னிச்சையாகக் கையாளும் அதிகாரங்கள்மட்டுப்படுத்தப்படும்கட்டுக்குள் கொண்டு வரப்படும்.

கொவிட்-19க்குப் பின்னர்இராணுவ அதிகாரம்வடக்கில் மேலோங்கி விட்டது என்ற குற்றச்சாட்டுதீவிரமடைந்து வருகிறது.

வடக்கில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினரின் குடும்பத்தினரை ஏற்றிச் செல்வதற்குபருத்தித்துறை டிப்போவில் இருந்துபஸ்களை அனுப்புமாறுகடந்தவாரம் இராணுவத்தினரால் கேட்கப்பட்டதுஆனால்சாரதிகள் எவரும் பஸ்களை ஓட்டுவதற்கு முன்வராததால்பருத்தித்துறை டிப்போவில் உள்ளபஸ்களை இயக்கத் தடைவிதிக்கப்பட்டதுஇதனால்கடந்த 16ஆம் திகதிபருத்தித்துறையில் இருந்து எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை என்ற தகவலும்உள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள்,2015இற்கு முற்பட்ட காலங்களில் இடம்பெறுவது சாதாரணம்.

அதுபோன்ற நிலைக்கேகொரோனா வைரஸ் பரவலும் அதைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் சட்டமும்மீண்டும் வடக்கை கொண்டுவந்து நிறுத்தி இருக்கின்றன.

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இருண்ட-யுகம்-மீளத்-திரும்புகிறதா/91-250718

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.