Jump to content

வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க?


Recommended Posts

spacer.png

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக ஓய்வு பெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார் என நம்பகரமாகத் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் இருக்கிறார். தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார். அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வு பெறவுள்ளார் என்பது நம்பகமாக அறிய வருகின்றது.

அடுத்து யார் என்பதில் குழப்பம் சிறிது இருந்தாலும், அவர் இராணுவ முகமே என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பதவிக்கு வந்த புதிதில் சகோதரர் மகிந்த ராஜபக்ச வழங்கிய அழுத்தத்தால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனக்கு நம்பகமான சிவில் அதிகாரிகளை தேடிப் பிடித்து பதவிகளில் அமர்த்தினார்.

இப்போது எந்தத் தலையீடும் இல்லாமல் இராணுவத்தினரைப் பதவிகளில் அமர்த்தி வருகின்றார். அவரின் 6 மாத ஆட்சிக் காலத்துக்குள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் 26 பேரை சிவில் நிர்வாக உயரதிகாரிகளாக நியமித்துள்ளார். இதனையே அவர் தொடரவுள்ளார்.

தேர்தல் முடிவடைந்ததும் அவரின் முதல் வேலையாக இருக்கப் போவது வடக்கு மாகாணத்துக்கு ஆளுநரை நியமிப்பதுதான். இந்தப் பதவிக்குப் பலர் முந்தியடித்தாலும், இருவர் தேர்வில் இருக்கிறார்கள்.

ஒருவர், இறுதிப் போர்க் காலத்தில் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறி. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் வலது கையாக இருந்த இவர் ராஜபக்ச சகோதரர்களுக்கும் மிக வேண்டியவரானார். போர் முடிவடைந்தபின் ராஜபக்ச சகோதரர்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டமையால் வடக்கு ஆளுநர் பதவி இலகுவாகக் கிடைத்தது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர் கிட்டத்தட்ட அந்த ஆட்சி ஆட்டம் கண்ட தருணத்தில் நாடு திரும்பினார். ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபயவுக்கு ஆதரவாக நின்றவர். இவர் இப்போது வடக்கு ஆளுநர் பதவியைக் குறி வைத்துக் காய்களை நகர்த்தியுள்ளார்.

ஆனால், இதே பதவிக்கு மற்றொரு மேஜர் ஜெனரலும் யாழ். மாவட்ட முன்னாள் தளபதியுமான ஹத்துருசிங்க போட்டியிடுகிறார். 1980 களில் இராணுவத்தில் சேர்ந்த இவர், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அதிக காலம் சேவையிலிருந்தார். 65 ஆவது படைப்பிரிவின் 652 ஆவது பிரிவான பீரங்கிப் படைக்குப் பொறுப்பாகவும் பின்னர் அந்தப் படைக்கு கட்டளையிடும் தளபதியாகவும் செயற்பட்டவர். இறுதியுத்தத்தில் முல்லைத்தீவில் படை நடத்தியவர்.

தமிழ் அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்ட இவரின் காலத்தில்தான் – போர் முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டம் முழுமையாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டது. இராணுவப் புலனாய்வை யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக செயற்படுத்தியதில் வெற்றி கண்ட இவரையே, இப்போது அரச உயர் மட்டம் அதிகம் விரும்புகிறது.

காரணம் வடக்கு முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் நினைவேந்தல்களை தடுக்கவும் பொருத்தமான ஒருவர் ஹத்துருசிங்க என்று அரச உயர்மட்டம் கருதுவதால் தேர்தல் முடிவடைந்ததும் வடக்கு ஆளுநராக அவர் நியமிக்கப்படும் அறிவிப்பு வெளியாகலாம்.

https://thamilkural.net/importantnews/40343/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி, பத்திரிகைகளில் வருமுன்னே நான் சொல்லிவிட்டேன்.

இவரல்ல.

வரப்போவது.... ஆறு மாதத்தில் ஓய்வு பெறும் தற்போதைய வடக்கு இராணுவத்தளபதி, ரூவான் வணிகசூரிய.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய திட்டம்?

hathurusinghe-2.jpgவடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்க வுள்ளார் என ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் இருக்கின்றார். தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார். அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வுபெறவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல் வருமாறு;

அடுத்து யார் என்பதில் குழப்பம் சிறிது இருந்தாலும், அவர் இராணுவ முகமே என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பதவிக்கு வந்த புதிதில் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அழுத்தத்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு நம்பகமான சிவில் அதிகாரிகளை தேடிப் பிடித்து பதவிகளில் அமர்த்தினார்.

இப்போது எந்தத் தலையீடும் இல்லாமல் இராணுவத்தினரைப் பதவிகளில் அமர்த்தி வருகின்றார். அவரின் 6 மாத ஆட்சிக் காலத்துக்குள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் 26 பேரை சிவில் நிர்வாக உயரதிகாரிகளாக நியமித்துள்ளார். இதனையே அவர் தொடரவுள்ளார்.

தேர்தல் முடிவடைந்ததும் அவரின் முதல் வேலையாக இருக்கப் போவது வடக்கு மாகாணத்துக்கு ஆளுநரை நியமிப்பதுதான். இந்தப் பதவிக்குப் பலர் முந்தியடித்தாலும், இருவர் தேர்வில் இருக்கிறார்கள். ஒருவர், இறுதிப் போர்க் காலத்தில் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறி. பீல்ட் மார்ல் சரத் பொன்சேகாவின் வலது கையாக இருந்த இவர் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் மிக வேண்டியவரானார். போர் முடிவடைந்தபின் ராஜபக்ச சகோதரர்களுக்கு விசுவாச மாக நடந்து கொண்டமையால் வடக்கு ஆளுநர் பதவி இலகுவாகக் கிடைத்தது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றவர் கிட்டத்தட்ட அந்த ஆட்சி ஆட்டம் கண்ட தருணத்தில்நாடு திரும்பினார். ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவாக நின்றவர். இவர் இப்போது வடக்கு ஆளுநர் பதவியைக் குறி வைத்துக்காய்களை நகர்த்தியுள்ளார். ஆனால், இதே பதவிக்கு மற்றொரு மேஜர் ஜெனரலும் யாழ். மாவட்ட முன்னாள் தளபதியுமான ஹத்துருசிங்க போட்டியிடுகிறார்.

1980 களில் இராணுவத்தில் சேர்ந்த இவர், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அதிக காலம் சேவையிலிருந்தார். 65 ஆவது படைப்பிரிவின் 652 ஆவது பிரிவான பீரங்கிப் படைக்குப் பொறுப்பாகவும் பின்னர் அந்தப் படைக்கு கட்டளையிடும் தளபதியாகவும் செயற் பட்டவர். இறுதியுத்தத்தில் முல்லைத்தீவில் படை நடத்தியவர். தமிழ் அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்ட இவரின் காலத்தில்தான் – போர் முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டம் முழுமையாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டது. இராணுவப் புலனாய்வை யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக செயற்படுத்தியதில் வெற்றிகண்ட இவரையே, இப்போது அரசஉயர் மட்டம் அதிகம் விரும்புகின்றது.

காரணம் வடக்கு முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் நினைவேந்தல்களை தடுக்கவும் பொருத்தமான ஒருவர் ஹத்துருசிங்க என்று அரச உயர்மட்டம் கருதுவதால் தேர்தல் முடிவடைந்ததும் வடக்கு ஆளுநராக அவர் நியமிக்கப்படும் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரியவருகின்றது.

http://thinakkural.lk/article/43249

Link to comment
Share on other sites

சார்லஸ் அம்மையார் இருந்ததையும் இழந்துவிடடார்ப்போல. அவர் அமைச்சின் செயலராகவே இருந்திருக்கலாம். இருந்தாலும் அந்த அமைச்சும் ராணுவத்தால் நிரப்பட்டுவிட்ட்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.