Jump to content

வித்யா பாலன்


Recommended Posts

வித்யா பாலன்

இவர் ஒரு தமிழ் பெண். இவரின் தந்தை ஒரு கிளார்க். தட்டச்சு பணி. அவர் தன்னுடைய எளிய வருமானத்தில் இளவரசியாகவே வித்யாவை வளர்த்தார். வித்யா அவருக்கு உண்மையில் மகள் அல்ல. உற்ற தோழி. அத்தனை விசயங்களையும் வெளிப் படையாக, ஆழமாக உரையாட முடிகிற தோழி. அப்படித்தான் வித்யா வளர்ந்தார். அந்த விசாலமான அன்பின் விஸ்வரூபமாக அவரின் கலைப்பயணம் பின்னாளில் இருக்கப் போகிறதென்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

அவர் திரைப்படத்துறையில் ஷோபா போல, ஸ்மிதா பாட்டீல் போல வரப் போகிறார் என்று அப்போது சொல்லியிருந்தால், ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள். வித்யாவை தவிர. 

வித்யா தமிழ் திரையுலகில் தான் முதலில் அடியெடுத்து வைத்தார். அது அவரை அவமானத்தின் உச்சத்திற்கு அழைத்துக் கொண்டு போய் ஆளில்லாத தீவின் அந்தரத்தில் கைவிட்ட கதை, வேறு எவருக்கும் நடந்திருந்து, இத்தனை எளிதாக அதை தாங்கிக் கொண்டு இயல்பாக கடந்து வந்திருக்க முடியுமா என்றால், அதற்கான பதிலை வார்த்தைகளில் சொல்வது கூட சிரமம் தான். 

‘மனசெல்லாம்’ படத்தின் நாயகியாக தேர்வு செய்யப்பட்டு, நடிகர் ஸ்ரீகாந்த்தோடு வெறிப்புறப்படப்பிற்கு சென்று நடிக்க துவங்கியாகி விட்டது. அவரின் மனதில் தன்னுடைய கனவுகளின் முதல் கதவு திறந்து விட்ட பரவசம். உற்சாகமாகவே ஒத்துழைப்பு கொடுத்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வேளையிலேயே தயாரிப்பாளரிடம் யாரோ இந்த பெண் செக்சியாகவே இல்லை என்று கொளுத்திப் போட, அவரிடம் சொல்லாமலே, அவரை நீக்கி விட்டு, திரிஷாவை நாயகியாக போட்டு, வேறொரு லொகேசனில் படம் பிடிக்க சென்றுவிட்டார்கள். வித்யா தன் தாயோடு அங்கிருக்கிற ஒரு சுமாரான ஹோட்டலில் தங்கியிருக்கிறார். எந்த தகவலும் அறியாமல், படப்பிடிப்பிற்கு கார் அனுப்புவார்கள் என்று மேக்கப் போட்டுக்கொண்டு வெகுநேரம் உட்கார்ந்திருக்கிறார். பிறகு தான் தெரிகிறது. அவரிடம் எதுவுமே தெரிவிக்காமல், அவரை அங்கேயே கைகழுவிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் யூனிட் கிளம்பிச் சென்று விட்ட சேதி. இப்போது வித்யா கையில் பணம் எதுவும் கொண்டு வரவில்லை. எப்படி சென்னைக்கு திரும்பி செல்வது. யார் வந்து ஹோட்டல் பணத்தை செட்டில் செய்வது. கையறு நிலை. வித்யா தளர்ந்துவிடவில்லை. அவருக்குள் இருந்த ஃபீனிக்ஸ் பறவை, தன் கழுத்தில் போட்டிருந்த தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு போய் அங்குள்ள அடகுக்கடையில் விற்று காசாக்கி, அந்த ஹோட்டலுக்கு தர வேண்டிய பணத்தை தந்து விட்டு, சென்னை திரும்பியிருக்கிறது. அப்போதும் வித்யாவின் மனதில் எந்த வன்மமும் ஏற்படவில்லை. யதார்த்தத்தை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, எளிதில் அந்த கசப்பை மருந்தாக விழுங்கி செறித்து விட்டார். அது தான் வித்யா. இது இருபது வருடத்திற்கு முன்னால் நடந்த கதை மட்டுமல்ல.. விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கியமான இந்திய நடிகைகளில் ஒருவராக அவரை முன்னெடுத்த வரலாற்றின் முதல் அத்தியாயம்.

எந்த மனிதர்கள் அவரை செக்சியாக இல்லை என்று நிராகரித்தார்களோ, அவர்களின் கண் முன்பாகவே அவர் செக்சியாக டர்ட்டி பிக்சர் படத்தில் நசுருதீன் ஷாவுடன் நடித்து ஓவர் நைட்டில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார்.  அந்த படத்திற்கு இந்தியாவின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது ஒரு நகைமுரண்.

அவர் தமிழ் திரையுலகம் தந்த அவமானத்தை எங்கும் டமாரம் அடிக்கவில்லை. அந்த கங்கை மனதிற்குள் சுடராக ஏற்றி வைத்துக்கொண்டு, வைராக்கியத்தோடு முயன்றார். 

சரியான தருணத்திற்காக அவர் காத்துக் கொண்டும், தன்னை தயார்படுத்திக் கொண்டுமிருந்தார். அந்த தருணம் அவர் எதிர்பாராத வகையில் இந்தி திரையுலகிலிருந்து வந்தது. அவர் நடித்த பரினித்தா என்கிற ஒரு திரைப்படம், இந்தி திரையுலகையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டது. 

அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம் தான். தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றி..வெற்றி தான்.. வெற்றியை தூரத்திலிருந்து மூன்றாவது மனுசி போல தரிசிக்கிற வித்யாவின் மனநிலை அவரை மகோனத உயரத்திற்கு அழைத்துச் சென்றது.

ரகோ சலாம் ஈ இஸ்க், ஏகலைவா, உருமி, பாம்பே டாக்கீஸ், மகாபாரத், சாடி கீ சைட்எஃபெக்ட்ஸ், பேகம் ஜான், நேர்கொண்ட பார்வை, சைனிகுடு, மிஷன் மங்கள், லகே ரகோ முன்னாபாய், பா, இஷ்கியா, நோ ஒன் கில்ட் ஜெசிகா, தேங்க் யூ, டீன், துமாரி சுலு என்று இவரின் கிராஃப் ஒன்றின் உச்சத்தை இன்னொன்று தாண்டிச் சென்றுகொண்டே இருந்தது. மணி ரத்தினத்தின் குரு படத்தில் ஃபிசிகலி சேலஞ்ட் பெண்ணாக வந்து அசத்தியிருப்பார். ஹே பேபி திரைப்படத்தில் சிங்கிள் மதராக வந்து அசத்துவார். பூல் புலய்யா படத்தில் டிசோஸியேட்டிவ் ஐடன்டிட்டி டிஸார்டர் குணாம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். டீன் திரைப்படத்தில் ஒரு பதின்பருவ பெண்ணிற்கு நிகழ்கிற செக்சுவல் அப்யூஸை எதிர்த்து, அந்த பதின்பருவ பெண்ணை எந்தவித வடுவும் மனதில் ஏற்படாமல் நுட்பமாக அந்த சிடுக்கிலிருந்து விடுவிக்க, அமிதாப்பச்சனின் உதவியோடு போராடுவார். அற்புதமான கதாபாத்திரம் அது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை முத்துகள்.

கஹானி, கஹானி 2, என்று தொடர்ந்து அவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன. கஹானியில் காணாமல் போன கணவனை, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வித்யா தேடிக் கொண்டிருப்பார். உண்மையில் அவர் தேடும் கணவன் ஒரு தீவிரவாதியா என்கிற சந்தேகம் காவல் துறைக்கு இருக்கும். அதை தாண்டி அதில் ஒரு காவல் அதிகாரி அவருக்கு உதவுவான். அவனுக்கு அவள் மீது மெலிதான ஒரு காதல் இருக்கும். இந்த நிலையில், அவள் அவளின் கணவனை தேடிக் கண்டுபிடித்ததும், ஒரு காளி மாதா திருவிழா கூட்டத்தில் அவனை சந்திப்பாள். சந்தித்ததும் சுடுவாள். காரணம் அவன் அவள் கணவனே அல்ல. அவன் தான் தன் கணவனை கொலை செய்தவன் என்பது அந்த உச்சக்கட்ட காட்சியில் தெரிய வரும். அதேசமயம் அவள் கர்ப்பிணியே அல்ல என்பதும் தெரிய வரும். 

இந்த உச்சக்கட்ட காட்சி ஏஞ்சலினா ஜுலி நடித்த ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து கையாளப்பட்டிருந்தாலும், அதை வித்யா தன்னுடைய நடிப்பின் பரிமாணத்தால் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று, உணர்வுகளை மனதிற்கு நெருக்கமாக ஆக்கியிருப்பார்.

துமாரி சுலு படத்தில் வித்யா நடித்த கதாபாத்திரத்தை தான் தமிழில் ஜோதிகா நடித்து தன் ரீஎன்ட்ரியை தக்க வைத்துக்கொண்டார். அந்த படம் தான் காற்றின் மொழி. துமாரி சுலுவில் செக்சியாக இரவில் எஃப்.எம்-ல் காமம் சார்ந்த செக்ஸ் பிரச்னைகள் குறித்து கேள்விகள் கேட்கிறவர்களுக்கு இதமாய், வருடலாய், ஆதூரமாய், ரஸமாய் பதில் சொல்கிற செக்ஸி குரலழகி ஆர்.ஜே-வாக வாழ்ந்திருப்பார். 

வித்யாவிற்கு அப்பா பாலன் என்றால் உயிர். அவரும் ஒரு புன்னகை மன்னன். எப்போதும் அவரிடமிருக்கிற சாசுவத புன்னகையையே வித்யாவிற்கும் உயில் எழுதி தந்திருந்திருக்கிறார். அடிக்கடி அதற்காகவே ரகசியமாக சென்னை வந்து தன் அப்பாவின் கையால் சமைத்த சுவையான உணவுகளை ருசித்துச் செல்வது அவருக்கு மிகவும் பிடித்த விசயம். அவரின் அப்பாவிற்கு கேன்சர். ஆனாலும், அவரின் புன்னகை அவரை இப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிற அருமருந்தாக இருக்கிறது. அவர் புன்னகையோடு தன் தந்தையை ஒருமையில் அழைக்கிற அழகை கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காகவே இயற்கை அவரின் ஆயுளை நீட்டித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதில் உண்மை அல்லாமல் இல்லை. இந்த சூழ்நிலையிலும் அந்த எளிய மனிதர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, வித்யாவின் பேரன்பு தோய்ந்த புன்னகைக்கும் முக்கிய உண்டு.

ஆறு ஃபில்ம் ஃபேர் விருது மற்றும் தேசிய விருது பெற்றாகி விட்டது. பத்மஸ்ரீ விருது பெற்றாகி விட்டது. பிரபலமான தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை காதலித்து கரம் பிடித்தாகி விட்டது. என்றாலும், திரைப்படத்துறையிலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரே நேரத்தில் இப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். 

மிகையில்லாத நடிப்பின் நளினம், அந்த மருளும் விழிகளின் ஜாலங்கள் அவரது தனித்தன்மை.

வித்யா பாலன் ஐந்து மொழிகளிலும் நடித்து வெற்றியை தன் வசப்படுத்திக் காட்டியிருந்தாலும், அவர் துவக்கத்தில் பட்ட அவமானங்களை வன்மங்களாக மனதில் ஒரு நாளும் ஏற்றிக் கொண்டதில்லை. அந்த ஸென் மனநிலை தான் அவரின் இந்த பரிபூரண வெற்றியின் பின்புலம் என்று எதனாலோ உள்ளுணர்வு சொல்லச் சொல்கிறது. அப்படியானால், அந்த சொற்கள் அப்பட்டமான உண்மையாக தானே இருக்க முடியும்.

வித்யா பாலன் இப்போது கணிதமேதை சகுந்தலாதேவியாக சகுந்தலாதேவி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னை காயப்படுத்தியவர்களுக்கும் சேர்த்தே மருந்திடும் மகோனத புன்னகைக்கு சொந்தக்காரான வித்யா, அதனாலேயே, தனதான எல்லா பக்கங்களிலும் நேர்த்தியான வெற்றிகளை சாசுவதமாய் தொட்டுக்கொண்டே இருக்கிறார்.

 

முகநூல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மை கோட் நான் இவ்வளவு நாளும் இவ மலையாளி என்றல்லவா நினைத்துக் கொண்டு இருக்கிறன்...என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகைகளில் ஒருவர் ...தமிழ்த் திரையுலகத்திற்கு தமிழர்களை பயன்படுத்த தெரியாது என்பது  மிகவும் துரதிஸ்ட்டமானது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

ஓ மை கோட் நான் இவ்வளவு நாளும் இவ மலையாளி என்றல்லவா நினைத்துக் கொண்டு இருக்கிறன்...என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகைகளில் ஒருவர் ...தமிழ்த் திரையுலகத்திற்கு தமிழர்களை பயன்படுத்த தெரியாது என்பது  மிகவும் துரதிஸ்ட்டமானது.

 

தமிழனுக்கே தமிழனை வைத்து பயன்படுத்த தெரியாது  படம் எடுக்கவும் தெரியாது 

ஒரு சிலபேரை மட்டும் சொல்லலாம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.