Jump to content

வித்யா பாலன்


Recommended Posts

வித்யா பாலன்

இவர் ஒரு தமிழ் பெண். இவரின் தந்தை ஒரு கிளார்க். தட்டச்சு பணி. அவர் தன்னுடைய எளிய வருமானத்தில் இளவரசியாகவே வித்யாவை வளர்த்தார். வித்யா அவருக்கு உண்மையில் மகள் அல்ல. உற்ற தோழி. அத்தனை விசயங்களையும் வெளிப் படையாக, ஆழமாக உரையாட முடிகிற தோழி. அப்படித்தான் வித்யா வளர்ந்தார். அந்த விசாலமான அன்பின் விஸ்வரூபமாக அவரின் கலைப்பயணம் பின்னாளில் இருக்கப் போகிறதென்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

அவர் திரைப்படத்துறையில் ஷோபா போல, ஸ்மிதா பாட்டீல் போல வரப் போகிறார் என்று அப்போது சொல்லியிருந்தால், ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள். வித்யாவை தவிர. 

வித்யா தமிழ் திரையுலகில் தான் முதலில் அடியெடுத்து வைத்தார். அது அவரை அவமானத்தின் உச்சத்திற்கு அழைத்துக் கொண்டு போய் ஆளில்லாத தீவின் அந்தரத்தில் கைவிட்ட கதை, வேறு எவருக்கும் நடந்திருந்து, இத்தனை எளிதாக அதை தாங்கிக் கொண்டு இயல்பாக கடந்து வந்திருக்க முடியுமா என்றால், அதற்கான பதிலை வார்த்தைகளில் சொல்வது கூட சிரமம் தான். 

‘மனசெல்லாம்’ படத்தின் நாயகியாக தேர்வு செய்யப்பட்டு, நடிகர் ஸ்ரீகாந்த்தோடு வெறிப்புறப்படப்பிற்கு சென்று நடிக்க துவங்கியாகி விட்டது. அவரின் மனதில் தன்னுடைய கனவுகளின் முதல் கதவு திறந்து விட்ட பரவசம். உற்சாகமாகவே ஒத்துழைப்பு கொடுத்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வேளையிலேயே தயாரிப்பாளரிடம் யாரோ இந்த பெண் செக்சியாகவே இல்லை என்று கொளுத்திப் போட, அவரிடம் சொல்லாமலே, அவரை நீக்கி விட்டு, திரிஷாவை நாயகியாக போட்டு, வேறொரு லொகேசனில் படம் பிடிக்க சென்றுவிட்டார்கள். வித்யா தன் தாயோடு அங்கிருக்கிற ஒரு சுமாரான ஹோட்டலில் தங்கியிருக்கிறார். எந்த தகவலும் அறியாமல், படப்பிடிப்பிற்கு கார் அனுப்புவார்கள் என்று மேக்கப் போட்டுக்கொண்டு வெகுநேரம் உட்கார்ந்திருக்கிறார். பிறகு தான் தெரிகிறது. அவரிடம் எதுவுமே தெரிவிக்காமல், அவரை அங்கேயே கைகழுவிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் யூனிட் கிளம்பிச் சென்று விட்ட சேதி. இப்போது வித்யா கையில் பணம் எதுவும் கொண்டு வரவில்லை. எப்படி சென்னைக்கு திரும்பி செல்வது. யார் வந்து ஹோட்டல் பணத்தை செட்டில் செய்வது. கையறு நிலை. வித்யா தளர்ந்துவிடவில்லை. அவருக்குள் இருந்த ஃபீனிக்ஸ் பறவை, தன் கழுத்தில் போட்டிருந்த தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு போய் அங்குள்ள அடகுக்கடையில் விற்று காசாக்கி, அந்த ஹோட்டலுக்கு தர வேண்டிய பணத்தை தந்து விட்டு, சென்னை திரும்பியிருக்கிறது. அப்போதும் வித்யாவின் மனதில் எந்த வன்மமும் ஏற்படவில்லை. யதார்த்தத்தை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, எளிதில் அந்த கசப்பை மருந்தாக விழுங்கி செறித்து விட்டார். அது தான் வித்யா. இது இருபது வருடத்திற்கு முன்னால் நடந்த கதை மட்டுமல்ல.. விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கியமான இந்திய நடிகைகளில் ஒருவராக அவரை முன்னெடுத்த வரலாற்றின் முதல் அத்தியாயம்.

எந்த மனிதர்கள் அவரை செக்சியாக இல்லை என்று நிராகரித்தார்களோ, அவர்களின் கண் முன்பாகவே அவர் செக்சியாக டர்ட்டி பிக்சர் படத்தில் நசுருதீன் ஷாவுடன் நடித்து ஓவர் நைட்டில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார்.  அந்த படத்திற்கு இந்தியாவின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது ஒரு நகைமுரண்.

அவர் தமிழ் திரையுலகம் தந்த அவமானத்தை எங்கும் டமாரம் அடிக்கவில்லை. அந்த கங்கை மனதிற்குள் சுடராக ஏற்றி வைத்துக்கொண்டு, வைராக்கியத்தோடு முயன்றார். 

சரியான தருணத்திற்காக அவர் காத்துக் கொண்டும், தன்னை தயார்படுத்திக் கொண்டுமிருந்தார். அந்த தருணம் அவர் எதிர்பாராத வகையில் இந்தி திரையுலகிலிருந்து வந்தது. அவர் நடித்த பரினித்தா என்கிற ஒரு திரைப்படம், இந்தி திரையுலகையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டது. 

அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம் தான். தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றி..வெற்றி தான்.. வெற்றியை தூரத்திலிருந்து மூன்றாவது மனுசி போல தரிசிக்கிற வித்யாவின் மனநிலை அவரை மகோனத உயரத்திற்கு அழைத்துச் சென்றது.

ரகோ சலாம் ஈ இஸ்க், ஏகலைவா, உருமி, பாம்பே டாக்கீஸ், மகாபாரத், சாடி கீ சைட்எஃபெக்ட்ஸ், பேகம் ஜான், நேர்கொண்ட பார்வை, சைனிகுடு, மிஷன் மங்கள், லகே ரகோ முன்னாபாய், பா, இஷ்கியா, நோ ஒன் கில்ட் ஜெசிகா, தேங்க் யூ, டீன், துமாரி சுலு என்று இவரின் கிராஃப் ஒன்றின் உச்சத்தை இன்னொன்று தாண்டிச் சென்றுகொண்டே இருந்தது. மணி ரத்தினத்தின் குரு படத்தில் ஃபிசிகலி சேலஞ்ட் பெண்ணாக வந்து அசத்தியிருப்பார். ஹே பேபி திரைப்படத்தில் சிங்கிள் மதராக வந்து அசத்துவார். பூல் புலய்யா படத்தில் டிசோஸியேட்டிவ் ஐடன்டிட்டி டிஸார்டர் குணாம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். டீன் திரைப்படத்தில் ஒரு பதின்பருவ பெண்ணிற்கு நிகழ்கிற செக்சுவல் அப்யூஸை எதிர்த்து, அந்த பதின்பருவ பெண்ணை எந்தவித வடுவும் மனதில் ஏற்படாமல் நுட்பமாக அந்த சிடுக்கிலிருந்து விடுவிக்க, அமிதாப்பச்சனின் உதவியோடு போராடுவார். அற்புதமான கதாபாத்திரம் அது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை முத்துகள்.

கஹானி, கஹானி 2, என்று தொடர்ந்து அவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன. கஹானியில் காணாமல் போன கணவனை, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வித்யா தேடிக் கொண்டிருப்பார். உண்மையில் அவர் தேடும் கணவன் ஒரு தீவிரவாதியா என்கிற சந்தேகம் காவல் துறைக்கு இருக்கும். அதை தாண்டி அதில் ஒரு காவல் அதிகாரி அவருக்கு உதவுவான். அவனுக்கு அவள் மீது மெலிதான ஒரு காதல் இருக்கும். இந்த நிலையில், அவள் அவளின் கணவனை தேடிக் கண்டுபிடித்ததும், ஒரு காளி மாதா திருவிழா கூட்டத்தில் அவனை சந்திப்பாள். சந்தித்ததும் சுடுவாள். காரணம் அவன் அவள் கணவனே அல்ல. அவன் தான் தன் கணவனை கொலை செய்தவன் என்பது அந்த உச்சக்கட்ட காட்சியில் தெரிய வரும். அதேசமயம் அவள் கர்ப்பிணியே அல்ல என்பதும் தெரிய வரும். 

இந்த உச்சக்கட்ட காட்சி ஏஞ்சலினா ஜுலி நடித்த ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து கையாளப்பட்டிருந்தாலும், அதை வித்யா தன்னுடைய நடிப்பின் பரிமாணத்தால் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று, உணர்வுகளை மனதிற்கு நெருக்கமாக ஆக்கியிருப்பார்.

துமாரி சுலு படத்தில் வித்யா நடித்த கதாபாத்திரத்தை தான் தமிழில் ஜோதிகா நடித்து தன் ரீஎன்ட்ரியை தக்க வைத்துக்கொண்டார். அந்த படம் தான் காற்றின் மொழி. துமாரி சுலுவில் செக்சியாக இரவில் எஃப்.எம்-ல் காமம் சார்ந்த செக்ஸ் பிரச்னைகள் குறித்து கேள்விகள் கேட்கிறவர்களுக்கு இதமாய், வருடலாய், ஆதூரமாய், ரஸமாய் பதில் சொல்கிற செக்ஸி குரலழகி ஆர்.ஜே-வாக வாழ்ந்திருப்பார். 

வித்யாவிற்கு அப்பா பாலன் என்றால் உயிர். அவரும் ஒரு புன்னகை மன்னன். எப்போதும் அவரிடமிருக்கிற சாசுவத புன்னகையையே வித்யாவிற்கும் உயில் எழுதி தந்திருந்திருக்கிறார். அடிக்கடி அதற்காகவே ரகசியமாக சென்னை வந்து தன் அப்பாவின் கையால் சமைத்த சுவையான உணவுகளை ருசித்துச் செல்வது அவருக்கு மிகவும் பிடித்த விசயம். அவரின் அப்பாவிற்கு கேன்சர். ஆனாலும், அவரின் புன்னகை அவரை இப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிற அருமருந்தாக இருக்கிறது. அவர் புன்னகையோடு தன் தந்தையை ஒருமையில் அழைக்கிற அழகை கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காகவே இயற்கை அவரின் ஆயுளை நீட்டித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதில் உண்மை அல்லாமல் இல்லை. இந்த சூழ்நிலையிலும் அந்த எளிய மனிதர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, வித்யாவின் பேரன்பு தோய்ந்த புன்னகைக்கும் முக்கிய உண்டு.

ஆறு ஃபில்ம் ஃபேர் விருது மற்றும் தேசிய விருது பெற்றாகி விட்டது. பத்மஸ்ரீ விருது பெற்றாகி விட்டது. பிரபலமான தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை காதலித்து கரம் பிடித்தாகி விட்டது. என்றாலும், திரைப்படத்துறையிலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரே நேரத்தில் இப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். 

மிகையில்லாத நடிப்பின் நளினம், அந்த மருளும் விழிகளின் ஜாலங்கள் அவரது தனித்தன்மை.

வித்யா பாலன் ஐந்து மொழிகளிலும் நடித்து வெற்றியை தன் வசப்படுத்திக் காட்டியிருந்தாலும், அவர் துவக்கத்தில் பட்ட அவமானங்களை வன்மங்களாக மனதில் ஒரு நாளும் ஏற்றிக் கொண்டதில்லை. அந்த ஸென் மனநிலை தான் அவரின் இந்த பரிபூரண வெற்றியின் பின்புலம் என்று எதனாலோ உள்ளுணர்வு சொல்லச் சொல்கிறது. அப்படியானால், அந்த சொற்கள் அப்பட்டமான உண்மையாக தானே இருக்க முடியும்.

வித்யா பாலன் இப்போது கணிதமேதை சகுந்தலாதேவியாக சகுந்தலாதேவி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னை காயப்படுத்தியவர்களுக்கும் சேர்த்தே மருந்திடும் மகோனத புன்னகைக்கு சொந்தக்காரான வித்யா, அதனாலேயே, தனதான எல்லா பக்கங்களிலும் நேர்த்தியான வெற்றிகளை சாசுவதமாய் தொட்டுக்கொண்டே இருக்கிறார்.

 

முகநூல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மை கோட் நான் இவ்வளவு நாளும் இவ மலையாளி என்றல்லவா நினைத்துக் கொண்டு இருக்கிறன்...என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகைகளில் ஒருவர் ...தமிழ்த் திரையுலகத்திற்கு தமிழர்களை பயன்படுத்த தெரியாது என்பது  மிகவும் துரதிஸ்ட்டமானது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

ஓ மை கோட் நான் இவ்வளவு நாளும் இவ மலையாளி என்றல்லவா நினைத்துக் கொண்டு இருக்கிறன்...என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகைகளில் ஒருவர் ...தமிழ்த் திரையுலகத்திற்கு தமிழர்களை பயன்படுத்த தெரியாது என்பது  மிகவும் துரதிஸ்ட்டமானது.

 

தமிழனுக்கே தமிழனை வைத்து பயன்படுத்த தெரியாது  படம் எடுக்கவும் தெரியாது 

ஒரு சிலபேரை மட்டும் சொல்லலாம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
    • நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்…. பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣 🤣
    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.