Jump to content

வித்யா பாலன்


Recommended Posts

வித்யா பாலன்

இவர் ஒரு தமிழ் பெண். இவரின் தந்தை ஒரு கிளார்க். தட்டச்சு பணி. அவர் தன்னுடைய எளிய வருமானத்தில் இளவரசியாகவே வித்யாவை வளர்த்தார். வித்யா அவருக்கு உண்மையில் மகள் அல்ல. உற்ற தோழி. அத்தனை விசயங்களையும் வெளிப் படையாக, ஆழமாக உரையாட முடிகிற தோழி. அப்படித்தான் வித்யா வளர்ந்தார். அந்த விசாலமான அன்பின் விஸ்வரூபமாக அவரின் கலைப்பயணம் பின்னாளில் இருக்கப் போகிறதென்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

அவர் திரைப்படத்துறையில் ஷோபா போல, ஸ்மிதா பாட்டீல் போல வரப் போகிறார் என்று அப்போது சொல்லியிருந்தால், ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள். வித்யாவை தவிர. 

வித்யா தமிழ் திரையுலகில் தான் முதலில் அடியெடுத்து வைத்தார். அது அவரை அவமானத்தின் உச்சத்திற்கு அழைத்துக் கொண்டு போய் ஆளில்லாத தீவின் அந்தரத்தில் கைவிட்ட கதை, வேறு எவருக்கும் நடந்திருந்து, இத்தனை எளிதாக அதை தாங்கிக் கொண்டு இயல்பாக கடந்து வந்திருக்க முடியுமா என்றால், அதற்கான பதிலை வார்த்தைகளில் சொல்வது கூட சிரமம் தான். 

‘மனசெல்லாம்’ படத்தின் நாயகியாக தேர்வு செய்யப்பட்டு, நடிகர் ஸ்ரீகாந்த்தோடு வெறிப்புறப்படப்பிற்கு சென்று நடிக்க துவங்கியாகி விட்டது. அவரின் மனதில் தன்னுடைய கனவுகளின் முதல் கதவு திறந்து விட்ட பரவசம். உற்சாகமாகவே ஒத்துழைப்பு கொடுத்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வேளையிலேயே தயாரிப்பாளரிடம் யாரோ இந்த பெண் செக்சியாகவே இல்லை என்று கொளுத்திப் போட, அவரிடம் சொல்லாமலே, அவரை நீக்கி விட்டு, திரிஷாவை நாயகியாக போட்டு, வேறொரு லொகேசனில் படம் பிடிக்க சென்றுவிட்டார்கள். வித்யா தன் தாயோடு அங்கிருக்கிற ஒரு சுமாரான ஹோட்டலில் தங்கியிருக்கிறார். எந்த தகவலும் அறியாமல், படப்பிடிப்பிற்கு கார் அனுப்புவார்கள் என்று மேக்கப் போட்டுக்கொண்டு வெகுநேரம் உட்கார்ந்திருக்கிறார். பிறகு தான் தெரிகிறது. அவரிடம் எதுவுமே தெரிவிக்காமல், அவரை அங்கேயே கைகழுவிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் யூனிட் கிளம்பிச் சென்று விட்ட சேதி. இப்போது வித்யா கையில் பணம் எதுவும் கொண்டு வரவில்லை. எப்படி சென்னைக்கு திரும்பி செல்வது. யார் வந்து ஹோட்டல் பணத்தை செட்டில் செய்வது. கையறு நிலை. வித்யா தளர்ந்துவிடவில்லை. அவருக்குள் இருந்த ஃபீனிக்ஸ் பறவை, தன் கழுத்தில் போட்டிருந்த தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு போய் அங்குள்ள அடகுக்கடையில் விற்று காசாக்கி, அந்த ஹோட்டலுக்கு தர வேண்டிய பணத்தை தந்து விட்டு, சென்னை திரும்பியிருக்கிறது. அப்போதும் வித்யாவின் மனதில் எந்த வன்மமும் ஏற்படவில்லை. யதார்த்தத்தை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, எளிதில் அந்த கசப்பை மருந்தாக விழுங்கி செறித்து விட்டார். அது தான் வித்யா. இது இருபது வருடத்திற்கு முன்னால் நடந்த கதை மட்டுமல்ல.. விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கியமான இந்திய நடிகைகளில் ஒருவராக அவரை முன்னெடுத்த வரலாற்றின் முதல் அத்தியாயம்.

எந்த மனிதர்கள் அவரை செக்சியாக இல்லை என்று நிராகரித்தார்களோ, அவர்களின் கண் முன்பாகவே அவர் செக்சியாக டர்ட்டி பிக்சர் படத்தில் நசுருதீன் ஷாவுடன் நடித்து ஓவர் நைட்டில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார்.  அந்த படத்திற்கு இந்தியாவின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது ஒரு நகைமுரண்.

அவர் தமிழ் திரையுலகம் தந்த அவமானத்தை எங்கும் டமாரம் அடிக்கவில்லை. அந்த கங்கை மனதிற்குள் சுடராக ஏற்றி வைத்துக்கொண்டு, வைராக்கியத்தோடு முயன்றார். 

சரியான தருணத்திற்காக அவர் காத்துக் கொண்டும், தன்னை தயார்படுத்திக் கொண்டுமிருந்தார். அந்த தருணம் அவர் எதிர்பாராத வகையில் இந்தி திரையுலகிலிருந்து வந்தது. அவர் நடித்த பரினித்தா என்கிற ஒரு திரைப்படம், இந்தி திரையுலகையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டது. 

அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம் தான். தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றி..வெற்றி தான்.. வெற்றியை தூரத்திலிருந்து மூன்றாவது மனுசி போல தரிசிக்கிற வித்யாவின் மனநிலை அவரை மகோனத உயரத்திற்கு அழைத்துச் சென்றது.

ரகோ சலாம் ஈ இஸ்க், ஏகலைவா, உருமி, பாம்பே டாக்கீஸ், மகாபாரத், சாடி கீ சைட்எஃபெக்ட்ஸ், பேகம் ஜான், நேர்கொண்ட பார்வை, சைனிகுடு, மிஷன் மங்கள், லகே ரகோ முன்னாபாய், பா, இஷ்கியா, நோ ஒன் கில்ட் ஜெசிகா, தேங்க் யூ, டீன், துமாரி சுலு என்று இவரின் கிராஃப் ஒன்றின் உச்சத்தை இன்னொன்று தாண்டிச் சென்றுகொண்டே இருந்தது. மணி ரத்தினத்தின் குரு படத்தில் ஃபிசிகலி சேலஞ்ட் பெண்ணாக வந்து அசத்தியிருப்பார். ஹே பேபி திரைப்படத்தில் சிங்கிள் மதராக வந்து அசத்துவார். பூல் புலய்யா படத்தில் டிசோஸியேட்டிவ் ஐடன்டிட்டி டிஸார்டர் குணாம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். டீன் திரைப்படத்தில் ஒரு பதின்பருவ பெண்ணிற்கு நிகழ்கிற செக்சுவல் அப்யூஸை எதிர்த்து, அந்த பதின்பருவ பெண்ணை எந்தவித வடுவும் மனதில் ஏற்படாமல் நுட்பமாக அந்த சிடுக்கிலிருந்து விடுவிக்க, அமிதாப்பச்சனின் உதவியோடு போராடுவார். அற்புதமான கதாபாத்திரம் அது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை முத்துகள்.

கஹானி, கஹானி 2, என்று தொடர்ந்து அவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன. கஹானியில் காணாமல் போன கணவனை, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வித்யா தேடிக் கொண்டிருப்பார். உண்மையில் அவர் தேடும் கணவன் ஒரு தீவிரவாதியா என்கிற சந்தேகம் காவல் துறைக்கு இருக்கும். அதை தாண்டி அதில் ஒரு காவல் அதிகாரி அவருக்கு உதவுவான். அவனுக்கு அவள் மீது மெலிதான ஒரு காதல் இருக்கும். இந்த நிலையில், அவள் அவளின் கணவனை தேடிக் கண்டுபிடித்ததும், ஒரு காளி மாதா திருவிழா கூட்டத்தில் அவனை சந்திப்பாள். சந்தித்ததும் சுடுவாள். காரணம் அவன் அவள் கணவனே அல்ல. அவன் தான் தன் கணவனை கொலை செய்தவன் என்பது அந்த உச்சக்கட்ட காட்சியில் தெரிய வரும். அதேசமயம் அவள் கர்ப்பிணியே அல்ல என்பதும் தெரிய வரும். 

இந்த உச்சக்கட்ட காட்சி ஏஞ்சலினா ஜுலி நடித்த ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து கையாளப்பட்டிருந்தாலும், அதை வித்யா தன்னுடைய நடிப்பின் பரிமாணத்தால் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று, உணர்வுகளை மனதிற்கு நெருக்கமாக ஆக்கியிருப்பார்.

துமாரி சுலு படத்தில் வித்யா நடித்த கதாபாத்திரத்தை தான் தமிழில் ஜோதிகா நடித்து தன் ரீஎன்ட்ரியை தக்க வைத்துக்கொண்டார். அந்த படம் தான் காற்றின் மொழி. துமாரி சுலுவில் செக்சியாக இரவில் எஃப்.எம்-ல் காமம் சார்ந்த செக்ஸ் பிரச்னைகள் குறித்து கேள்விகள் கேட்கிறவர்களுக்கு இதமாய், வருடலாய், ஆதூரமாய், ரஸமாய் பதில் சொல்கிற செக்ஸி குரலழகி ஆர்.ஜே-வாக வாழ்ந்திருப்பார். 

வித்யாவிற்கு அப்பா பாலன் என்றால் உயிர். அவரும் ஒரு புன்னகை மன்னன். எப்போதும் அவரிடமிருக்கிற சாசுவத புன்னகையையே வித்யாவிற்கும் உயில் எழுதி தந்திருந்திருக்கிறார். அடிக்கடி அதற்காகவே ரகசியமாக சென்னை வந்து தன் அப்பாவின் கையால் சமைத்த சுவையான உணவுகளை ருசித்துச் செல்வது அவருக்கு மிகவும் பிடித்த விசயம். அவரின் அப்பாவிற்கு கேன்சர். ஆனாலும், அவரின் புன்னகை அவரை இப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிற அருமருந்தாக இருக்கிறது. அவர் புன்னகையோடு தன் தந்தையை ஒருமையில் அழைக்கிற அழகை கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காகவே இயற்கை அவரின் ஆயுளை நீட்டித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதில் உண்மை அல்லாமல் இல்லை. இந்த சூழ்நிலையிலும் அந்த எளிய மனிதர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, வித்யாவின் பேரன்பு தோய்ந்த புன்னகைக்கும் முக்கிய உண்டு.

ஆறு ஃபில்ம் ஃபேர் விருது மற்றும் தேசிய விருது பெற்றாகி விட்டது. பத்மஸ்ரீ விருது பெற்றாகி விட்டது. பிரபலமான தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை காதலித்து கரம் பிடித்தாகி விட்டது. என்றாலும், திரைப்படத்துறையிலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரே நேரத்தில் இப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். 

மிகையில்லாத நடிப்பின் நளினம், அந்த மருளும் விழிகளின் ஜாலங்கள் அவரது தனித்தன்மை.

வித்யா பாலன் ஐந்து மொழிகளிலும் நடித்து வெற்றியை தன் வசப்படுத்திக் காட்டியிருந்தாலும், அவர் துவக்கத்தில் பட்ட அவமானங்களை வன்மங்களாக மனதில் ஒரு நாளும் ஏற்றிக் கொண்டதில்லை. அந்த ஸென் மனநிலை தான் அவரின் இந்த பரிபூரண வெற்றியின் பின்புலம் என்று எதனாலோ உள்ளுணர்வு சொல்லச் சொல்கிறது. அப்படியானால், அந்த சொற்கள் அப்பட்டமான உண்மையாக தானே இருக்க முடியும்.

வித்யா பாலன் இப்போது கணிதமேதை சகுந்தலாதேவியாக சகுந்தலாதேவி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னை காயப்படுத்தியவர்களுக்கும் சேர்த்தே மருந்திடும் மகோனத புன்னகைக்கு சொந்தக்காரான வித்யா, அதனாலேயே, தனதான எல்லா பக்கங்களிலும் நேர்த்தியான வெற்றிகளை சாசுவதமாய் தொட்டுக்கொண்டே இருக்கிறார்.

 

முகநூல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மை கோட் நான் இவ்வளவு நாளும் இவ மலையாளி என்றல்லவா நினைத்துக் கொண்டு இருக்கிறன்...என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகைகளில் ஒருவர் ...தமிழ்த் திரையுலகத்திற்கு தமிழர்களை பயன்படுத்த தெரியாது என்பது  மிகவும் துரதிஸ்ட்டமானது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

ஓ மை கோட் நான் இவ்வளவு நாளும் இவ மலையாளி என்றல்லவா நினைத்துக் கொண்டு இருக்கிறன்...என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகைகளில் ஒருவர் ...தமிழ்த் திரையுலகத்திற்கு தமிழர்களை பயன்படுத்த தெரியாது என்பது  மிகவும் துரதிஸ்ட்டமானது.

 

தமிழனுக்கே தமிழனை வைத்து பயன்படுத்த தெரியாது  படம் எடுக்கவும் தெரியாது 

ஒரு சிலபேரை மட்டும் சொல்லலாம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.