Jump to content

“இரத்தத்தின் கதை”- போர்க்கால அனுபவக்குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Justin said:

என் கருத்தில் கோபம் இல்லை கப்ரன், கேள்வி தான் இருந்தது! பதில் "வரும் ஆனா வராது!"😎 என்பது அறிந்தே கேட்டேன்.

ஓம், எழுதுபவனை "எழுதாதே" என்று தடுப்பவன்  நியாயவாதி! தடுக்காதீர்கள் என்று சொல்பவன் "யாரிடமோ கூலி வாங்கிக் கொண்டு வெள்ளை அடிக்கிற துரோகி" 

ஆனால், நன்றி உங்களுக்கு, அடியில கிடந்த அலெக்சின் கதை இப்ப யாழ் முகப்பில் முன்னுக்கு வந்து நிற்குது!👍

உண்மையில் நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்களோ தெரியாது.. ☹️

அவரின் எழுத்தை நான் உண்மையில் வரவேற்கிறேன்/ விரும்புகிறேன். . உழிக்காலம் தொடர்பான தகவல்கள் பதியப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாறுதலும் இல்லை. ஆனால் இடையிடையே அலெக்ஸ் தனது தனிப்பட்ட புலிகளின் மீதான விருப்பமின்மையை வெளிப்படுத்தும் முறைதான் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துவது. 

அதைத்தான் நாசூக்காக என்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

உண்மையில் நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்களோ தெரியாது.. ☹️

அவரின் எழுத்தை நான் உண்மையில் வரவேற்கிறேன்/ விரும்புகிறேன். . உழிக்காலம் தொடர்பான தகவல்கள் பதியப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாறுதலும் இல்லை. ஆனால் இடையிடையே அலெக்ஸ் தனது தனிப்பட்ட புலிகளின் மீதான விருப்பமின்மையை வெளிப்படுத்தும் முறைதான் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துவது. 

அதைத்தான் நாசூக்காக என்கிறேன்.

எந்த உலகத்தில் நான் இருந்தாலும் மற்றவர்களுக்கு தணிக்கை அதிகாரியாக இல்லை என்பது தான் முக்கியம்!

அலெக்ஸ் யார் மீதும் விருப்பு வெறுப்பைக் காட்ட அவருக்கு உரிமை இருக்கிறது! அதைப் பற்றி வருத்தம் தெரிவிக்க உங்களுக்கும் யாருக்கும் உரிமை இருக்கிறது! 

இதற்குள் நண்டு, ஈ.பி, பூச்சுப் பூசல் என்ற பதங்கள் அவசியமற்றவை என்பதே என் கருத்து.

ஆரோக்கியமான உரையாடலுக்கு வழி இருக்கிறது, பிடிக்காத கருத்தைச் சொல்பவனை எதிரிப் படையாகப் பார்க்காத வரை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

ஶ்ரீலங்கா அரசு, அதிலும் மகிந்த - கோட்டா அரசு மிகமோசமான அழிவுகளை தமிழ் மக்களுக்கு எதிராக செய்தது என்பதை அழுத்தி சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

அதுவும் 2005 ஜனாதிபதித் தேர்தலில், வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்கள்  வாக்களிக்காமல் விட்டதால்  தான் தான் பதவிக்கு வரமுடிந்தது என்பதைத் தேர்தல் புள்ளிவிபரங்களின் மூலம் அறிந்தும்,  அந்த  உதவியை செய்து  தன்னை பதவிக்கு கொண்டுவர உதவிய மக்கள் மீது நன்றி உணர்வு கூட இல்லாமல் மகிந்த அந்த மக்கள் மீது கொலைவெறித்தாக்குதலை மேற்கொண்டார்.   

இந்தியாதான் இந்த அழிவை நடத்தி முடித்தது என்று இங்கே யாழ்களத்தில் பல இடங்களில் விவாதிக்கப்பட்டது. அத்துடன் சர்வதேசமும்அதற்கு ஒத்துழைத்ததாகவும் சொல்லப்பட்டது. இதன் படி பார்க்கப்போனால்  மகிந்தவும் அவர் சார்பானவர்களும் அப்பாவிகள் அல்லவா?

 30 வருடங்களுக்கு மேலாக சிங்களத்தால் அடக்க முடியாததை ஒரு சில வருடங்களில் அடக்க முடிந்தது என்றால்....???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

 தனது தனிப்பட்ட புலிகளின் மீதான விருப்பமின்மையை வெளிப்படுத்தும் முறைதான் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துவது. 

அதைத்தான் நாசூக்காக என்கிறேன்.

முழுமையாக வாசித்ததில்:

அகிம்சை வழியில் இருந்து ஆயுதவழி வரை தவறு என்று தனது மனதில் உள்ள ஒரு வித நக்கலுடன் (அடிக்கடி சிரித்துக் கொண்டேன் என்றார்) நிறுவவும் இராணுவம் வந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் அப்படி இராணுவம் வந்த இடங்களை புலிகள் மீண்டும் பிடித்து விடக்கூடாது அந்தளவுக்கு இராணுவமும் சிங்கள அரசும் தமிழர் வாழ்வில் எந்த குற்றமோ எந்த நிலையிலும் துன்புறுத்தல்களையோ பாரபட்சமோ காட்டாதவர்கள் என்பதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றுகிறார்கள்.

உண்மையில் கிருபன் மேலே எழுதிய போல யாரோ வீசியதற்கு வரலாற்றை எழுதினால் இப்படித்தான். (நன்றி கிருபன் ஐயா)

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இரத்தத்தின் கதை-கூடுதல் பொறுப்பினைக் கோருகிறது- சுகன்யா ஞானசூரி

 

அலெக்ஸ் பரந்தாமன்
 

என் இரத்தத்தின் இரத்தங்களே எனும் பெண் சிங்கத்தின் கணீர் குரலில் எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு. அதனைக் கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு. மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்றபோது அது தன் முடிவுரையை எழுதிக்கொண்டது. மூர்க்கத்தின் உச்சத்தில் இரத்தம் பார்க்காமல் விடமாட்டேன் என்பார்கள் அதை பார்த்ததும் அத்தனையும் அடங்கிவிடும் இல்லையா? அரசர் காலம் முதல் இன்றைய நவீன யுகத்திலும் இந்த இரத்தம் பார்த்தல் என்பது தொடரவே செய்கிறது. இது ஆதியில் மனிதன் வேட்டைச் சமூகமாக உருவாகிய போதிருந்தே தொற்றிப் படர்ந்து வருகின்ற ஒரு செயல்.

உணவின் தேவைக்காக இரத்தம் பார்க்க வெளிக்கிட்டவர்கள் தங்களுக்குள் இனக்குழுக்களாக பிரிந்து பின்னர் அதிகாரத்தினை கைக்கொள்வதில், கைக்கொண்ட அதிகாரத்தினை நிலத்தினை தக்கவைத்துக்கொள்ளவென இரத்தம் பார்த்தல் தொடரும் ஒரு செயலாகி இன்றைக்கு கார்ப்பரேட் பெரு முதலாளிகளிடம் இரத்தம் சுண்டச் சுண்ட அடிமைகளாகிக் கொண்டிருக்கிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி மீது எப்போதும் ஒரு விருப்பம். அதனை கையிலேந்தி நடக்கும்போதே உள்ளத்துள் இனம்புரியாத ஒரு கம்பீரம் ஏற்படும். பெரியார் கருப்புக் கொடிக்கு மத்தியில் ஏன் சிவப்பினை வைத்தார்? தர்க்கரீதியாக சமூகத்தின் சிந்தனைக்குள் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் இரத்தம் சிந்தாமல் புரட்சி செய்யாமல் மனிதர்களின் விடியல் சாத்தியம் இல்லையென்பதனை அவர் நம்பியிருக்கக்கூடும். தமிழீழ தேசியத்தின் கொடியில் சிவப்பு மஞ்சள் காரணத்தோடுதான் வைக்கப்பட்டிருக்கும். மங்கல வாழ்வு வேண்டும் எனில் நாம் இரத்தம் சிந்தித்தான் ஆகவேண்டும். புரட்சி செய்துதான் ஆகவேண்டும். என்பதனை நோக்கமாகக்கொண்டே உருவாகியிருக்க வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு கம்யூனிச எண்ணம் இல்லை என்றால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவாகவும் இருக்க முடியாது. ஏன் இவற்றையெல்லாம் இங்கே சொல்கிறேன் என்றால் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும் செவ்வண்ணம் இல்லாமல், இரத்தம் சிந்தாமல் விடுதலை சாத்தியமில்லை.

போர் என்றால் இரத்தம் சிந்தாமல் வெற்றி இல்லை என்பார் புரட்சியாளர் மாவோ. ஆனால் ஈழத்தில் அளவுக்கதிகமாகவே இரத்தம் சிந்தப்பட்டும் ஏன் புலிகளால் வெற்றியினை ஈட்டமுடியவில்லை? இறுதிக்காலத்தில் அது மக்கள் புரட்சியாக மாறவில்லை. துரோகத்தின் சதிராட்டங்களால் மாற்றுச் சக்திகளின் ஊடறுப்பினால், மக்கள் மனங்களில் ஏற்பட்ட வெறுப்பினால், காலம் கடந்துவிட்ட போரினால் தலைமையின் கட்டளைகளுக்குள் இல்லாமல் சிதறிப்போன போராளிகளின் விரக்தியான மனநிலையென எல்லாம் சேர்ந்து ஈழப்போரினை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

கிட்டத்தட்ட போர் நிறைவுற்று பத்தாண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் தமிழ்ச்சமூகம் தன் விடியலை கண்டடைய முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமைதிவழியில் செல்வநாயகத்தின் போராட்டம் முடிவுற்ற தறுவாயில் ஆயுதவழியே தீர்வென அன்றைய இளையசமூகம்  நம்பியது. அதனை தொடர்ந்து பல குழுக்கள் உருவாகின. ஒன்றையொன்று தின்று செரித்தன. யாழிலிருந்து இரண்டு வெளியேற்றங்களை செய்தபோதே அவர்கள் தம் தோல்வியை ஒப்புக் கொள்ளத் தவறிவிட்டனர் என்றே கொள்ளலாம். இறுதியாக வன்னியைவிட்டு வெளியேற முடியாமல் முடித்துக்கொண்டனர். இதுதான் ஈழப்போராட்டத்தின் சுருக்க வரலாறு.

இறுதி யுத்தகாலத்தில் எப்படியான மனிதர்கள் இருந்தார்கள் இறந்தார்கள் இப்போது வாழ்கிறார்கள் என்பதனை பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவருகின்ற எழுத்தாளர் கோமகன் அவர்களின் “நடு” இதழில் ஈழ எழுத்தாளர் அலெக்ஸ் பரந்தாமன் அவர்கள் “இரத்தத்தின் கதை” என தலைப்பிட்டு போர்க்கால அனுபவங்கள் என எழுதி வருகிறார். இதுவரை பதினோரு தொடர் வெளியாகியிருக்கிறது. சரியாக யாராலும் கவனப்படுத்தப்படவில்லை என முகநூலில் அவர் பதிவு பார்த்ததும் ஏன் என்ற கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. அதுவரை நான் மூன்று தொடரே வாசித்திருந்தேன். மற்றவைகள் ஏன் நம் தொடர்புக்குள் வரவில்லை என்ற கோள்வியோடு பதினோரு தொடரையும் ஒரே மூச்சாக வாசித்து முடித்தேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விபரங்களை குறிப்பிட்டு எழுதியிருந்தாலும் அத்தனையிலும் இரத்தத்தின் வீச்சம் பிரதானமாக உள்ளது. பொருத்தமான தலைப்புதான்.

இவைகள் சிறுகதைகளுக்குள்ளும் அடங்காமல் கட்டுரைக்குள்ளும் அடங்காமல் ஒரு பத்தி எழுத்தாக இருந்தாலும் எல்லாவற்றையும் சீராகத் தொகுத்தால் ஒரு நாவலுக்கான வடிவம் கிட்டும் என்பது என் கணிப்பு. அதேபோல் தன்வரலாற்றுக் குறிப்பு என வாசித்தாலும் (போர்க்கால அனுபவங்கள் என்பதால்) புனைவுத்தன்மை வெளியே துருத்திக்கொண்டிருக்கிறது. அதற்கொரு உதாரணம் கர்ப்பிணிப் பெண்ணின் மேல்ப்பகுதியையும் கீழ்ப்பகுதியையும் விட்டு பனங்குற்றி வயிற்றின் நடுப்பகுதியில் வீழ்ந்து இறப்பது போன்ற விவரணையை மிகு புனைவு என்பதை வாசிப்பவர்கள் உணரமுடியும். ஒருவேளை அப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் அதை எதார்த்தமாக முன்வைக்கலாம். இதேபோல் வளவைப் பார்த்துவரச் சென்றவர் மரவள்ளித் தடிகள் கிண்டிக் கிடப்பதையும் ஆடு ஒன்று உரிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்வில் பிஸ்டல் வைத்திருந்தவர்கள் மிரட்டல் விடுவதாக மொட்டையாக எழுத வேண்டியது இல்லை இல்லையா? அவர்கள் யார்? புலிகளா அல்லது புலித்தோல் போர்த்திய கயவர்களா என்பதை தெளிவாக்க வேண்டிய பொறுப்பு தன் அனுபவக் குறிப்புகளை எழுதுகின்ற  எழுத்தாளருக்கு இருக்கிறது இல்லையா? ஏனெனில் ஏற்கனவே பல குழப்பங்கள் தமிழ்சூழலை கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு தொடரிலும் பிள்ளைபிடிகாரர்கள் வருகிறார்கள். அவர்களால் போராளிகள் மீது மக்களுக்கு எழுகின்ற வெறுப்பும், இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வலையத்துக்குள் சென்றவர்கள் மீதான செல் வீச்சு, இராணுவப் பகுதிகளுக்குள் செல்ல விரும்பிய மக்களுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு சாவொறுப்பு செய்யப்படும் நிகழ்வுகள் என இறுதியுத்தத்தின் நாட்கள் மிகவும் கொடூரமான மனவுளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

சிவத்தார் மூலம் சாதி வெறியர்களுக்கு இந்த விடுதலைப்போர் பிடிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துவைத்துள்ளார். சாதிய துவேசத்திற்கு புலிகள் சிவத்தாருக்கு வழங்கிய தண்டனை அதுமுடித்து வெளியே வந்தபின்பும் அடங்காத சாதியத் திமிர். போருக்குப் பின்னான ஈழத்தில் அவர்கள் தங்கள் சாதிய தடிப்புகளை எண்பதுகளுக்கு முன்னான இலங்கையைப்போல் கட்டமைக்கத் துடிக்கிறார்கள். இப்போது அதை நிகழ்த்துகிறார்கள்.  செந்தூரன் போன்றே பல போராளிகள் இறுதி யுத்தகாலத்தில் உண்ண உணவில்லாமல் நாள்கணக்காக குளிக்காமல் விரக்தியான மனநிலையோடு இராணுவத்திடம் சரணடைந்தார்கள் என்பது தீர்க்கமான உண்மை. எவ்வளவுக்கெவ்வளவு கெளரவமாக இருந்த போராளிகள் ஏன் இப்படி ஆக்கப்பட்டார்கள்? வெளிநாடுகளில் தலைமறைவு வாழ்க்கை, புனர்வாழ்வு முகாம்களில் அவலமான வாழ்க்கை என இந்த நிலைக்கு யார் பொறுப்பேற்பது? சமர்க்களங்களில் வெற்றிபெற்ற போதெல்லாம் உடனிருந்துவிட்டு தோற்றுப்போன பின்னால் தூற்றுகின்ற மக்களாகிய நாமும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இல்லையா?

எம் துயர்மிகு வாழ்வை நாம் எழுதித்தான் கடக்கவேண்டும். கவிதையாக, சிறுகதையாக, நாவலாக, ஓவியமாக நாடகமாக ஒவ்வொரு படைப்பாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இதில் எதிர், ஆதரவு என்ற நிலைப்பாடுகளில் இல்லாமல் உண்மைத்தன்மை இருக்கவேண்டும். அவைகள் காலம் கடந்தும் நிற்கும். மற்றவர்களாலும் கவனிக்கப்பட்டு பேசப்படும். முடிந்துபோன இறுதியுத்த நிலப்பகுதியிலிருந்து அனுபவக் கதைகளை எழுதுகையில் கூடுதல் பொறுப்புகள் இருக்கின்றன. இதைத்தான் இரத்தத்தின் கதைகளும் கோருகின்றன.

சுகன்யா ஞானசூரி-இந்தியா
 

https://naduweb.com/?p=16824

 

Link to comment
Share on other sites

போரை போராட்ட களத்தை என்ன பார்வையில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து ஒவ்வொரு சம்பவங்களுக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அதில் இந்த கதாசிரியரின் பார்வையை நான் மதிக்கிறேன். அங்கே களமாடிய களத்தில் இருந்த அனைவருக்கும் அவரது பார்வையில் போரை எழுதும் தார்மீக உரிமை எல்லாருக்கும் உண்டு. அவர் கவனிக்கபடவில்லை என்று வருந்தவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

போர் விட்டுச்சென்ற வரலாறை எழுதுவதில் கவனிப்பு இல்லை என்ற கருத்துக்கே இடமில்லை, காலச்சக்கரத்தில் பதிவுகளை நினைவுகள் அழியமுதல் பதிவிடுவதில் எதிர்பார்ப்புகளுக்கு இடமில்லை.

போரில் 4 தரப்புகள் இருந்தன. போரிடும் இரு தரப்புகள் இராணுவம், புலிகள் மற்றும் பொதுமக்கள், சர்வதேசம்.

புலிகளாக போரிட்டவர்களுக்கு ஒரே எண்ணம் தான் இருந்தது, தங்களின் கடைசி மூச்சு உள்ளவரை போரிடுவது. இறுதி நாட்களில் அந்த எண்ணங்களில் தளம்பல் அடைந்தவர்கள் சரணடைவுக்கு தயாரானார்கள்.

போருக்குள் இருக்கும்போது இந்த காதாசிரியரின் பார்வையில் போரை பார்க்கும் மனநிலை யாருக்கும் இருக்கவில்லை. இது இறுதி யுத்தமாக நினைத்து எந்த அர்பணிப்பு எல்லைக்கும் செல்லும் மனநிலையில் தான் போராளிகள் இருந்தார்கள். அவற்றில் சில புல்லுருவிகளால் களங்கங்கள் ஏற்பட்டது உண்மை. 

இப்போ வெளியில் இருந்து அந்த போர் மனநிலைக்கு சென்று சரி பிழை பார்க்கும் தளம் வேறு, போராட்டகளம் வேறு என்பதை உணர்ந்தால் அவரின் எழுத்துக்களுக்கு கூடுதல் வலிமை இருக்கும் என்பது என் கருத்து. 

போரின் போக்கை தீர்மானித்த முடிவுகளின் ஆழங்கள் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் சம்பவங்களின் மறுபக்கங்களை இலகுவாக எழுத முடிகின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.