Jump to content

ஐ.நா தீர்மானத்தில் இருந்து இலங்கை வெளியேறினாலும் காத்திருக்கும் ஆபத்து! அமெரிக்காவின் முக்கியஸ்தர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா தொடர்பிலா ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்தில் இருந்து சிறிலங்கா வெளியேறியிருந்தாலும், இப்போதும் சிறிலங்காவை கட்டுப்படுத்தும் ஒர் தீர்மானமாகவே அது உள்ளதோடு, சிறிலங்கா அதற்கு கட்டுப்பட வேண்டிய நிலையில் உள்ளதென போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாளர் தூதுவர் ஸ்டீபன் ராப் தெரிவித்துள்ளார்.

இணையவழியூடாக தொடங்கியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில், சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே இக்கருத்தினை தெரிவித்திருந்த தூதுவர் ஸ்டீபன் ராப், சிறிலங்கா உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நிலையில் உள்ளதென தெரிவித்துள்ளார்.

 

கடந்த காலங்களில் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் பல உலகளவில் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

சர்வதேச சட்டங்களை மீறி குற்றங்களை புரிகின்றவர்கள் தண்டிக்கப்படுவர் என பண்பாட்டை வளர்க்க வேண்டிய தேவையுள்ளது. இதற்கு கட்டுப்படாமல் சிறிலங்கா இருப்பதனை நம்மால் ஏற்கமுடியாது.

சிறிலங்காவில் போர்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் கூண்டில் ஏற்றப்படாமை, தண்டிக்கப்படாமை ஓர் தவறான சமிக்ஞையாக சிறிலங்காவுக்கு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/srilanka/01/246788?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா, நீங்களும் உங்களிண்ட வியாக்கியானமும்... 🙄🤧

Link to comment
Share on other sites

#இனப்படுகொலை (ஜெனோசைட்) என்ற சொல்லே 1944ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது.
 
இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹிட்லரிடம் சிக்கி குடும்பத்தை இழந்த போலந்து நாட்டு யூத வழக்கறிஞரான ரஃபேல் லெம்கின் என்பவர், கிரேக்க சொல்லான ஜெனோவையும் லத்தீன் சொல்லான சைடையும் சேர்த்து ஜெனோசைட் என்ற சொல்லை உருவாக்கினார்.
 
ஆனால், இனப்படுகொலை என்ற இந்த வார்த்தை புழக்கத்துக்கு வரும் முன்பே இந்த புவிப்பந்தில் ஒரு பெரும் இனப்படுகொலை நடந்து முடிந்திருந்தது. அது ஆர்மீனிய இனப்படுகொலை.
 
ஆர்மீனியா நாட்டுக்கும் நம்மூர் சென்னைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் ‘ஆர்மீனியன் தெரு’ என்றே ஒரு தெரு உண்டு. யாரோ ஒரு புண்ணியவான் அதை தமிழில் அற்புதமாக ‘அரண்மனைக்காரன் தெரு’ என மொழிபெயர்த்து விட்டார். (ஆள் யார் என்று தெரியவில்லை. தெரிந்தால் ஒரு யுனெஸ்கோ விருது கொடுக்கலாம்).
 
ஆர்மீனியா என்ற தனிநாடு காகசஸ் பகுதியில் இருக்கிறது. கிறிஸ்துவத்தை அதிகாரபூர்வ மதமாக ஏற்றுகொண்ட முதல் நாடு ஆர்மீனியாதான். 3000 ஆண்டுகால பாரம்பரிய பெருமையுடன் வாழ்ந்த பெருமைக்குரிய ஆர்மீனியர்கள் நாளடைவில்
தமிழர்களைப் போலவே பெருமை இழந்தார்கள்.
 
இலங்கையில் தமிழர்கள் வாழும் தமிழ்ஈழப் பகுதி எப்படி சிறீலங்காவுக்குள் சிக்கிக் கொண்டதோ, அதைப்போல ஆர்மினியா பகுதிகள் அந்தக்காலத்தில் அந்தல சிந்தலயாகி, அவற்றின் பெரும்பாதி துருக்கி நாட்டுக்குள் சிக்கிக் கொண்டன.
ஆரம்பத்தில் இருந்தே ஆர்மீனியர்களைக் கண்டால் துருக்கியர்களுக்கு ஆகாது. அப்படி ஒரு வெறுப்பு. துருக்கிய சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீது, முதல் முதலாக ஓர் இனப்படுகொலையை ஆர்மீனியர்கள் மீது கட்டவிழ்த்து விட்டார். ‘ஆர்மீனியர்களின் கணக்கை முடிப்பேன்’ என சுல்தான் நடத்திய அந்த ரத்தக்களறி வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.
 
அதன்பிறகு சுல்தானின் ஆட்சி கவிழ்ந்து, இளம் துருக்கியர்களின் ஆட்சி வந்தது. இனி தங்கள் வாழ்வில் வசந்தகாலம்தான் என்று ஆர்மீனியர்கள் கனாக் கண்டார்கள். ஆனால் அது அவர்களுக்கு கசந்த காலமாகப் போனது. சுல்தானே பரவாயில்லை என்பதுபோல இருந்தது இளம் துருக்கியர்கள் ஆட்சி.
 
முதல் உலகப்போர் தொடங்கிய நேரம் ஜெர்மனி, ஆஸ்திரியா ஹங்கேரிய பேரரசுடன் கூட்டு வைத்துக் கொண்ட ஒட்டோமான் துருக்கி அரசு, 1915ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம்தேதி ஒரு சிவப்பு ஞாயிறன்று ஆர்மீனியர்களுக்கு எதிரான வேட்டையைத் தொடங்கியது.
 
இஸ்தான்புல் நகரில், ஆர்மீனிய இனத்தைச் சேர்ந்த 300 அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இது சும்மா ஓர் முன்னோட்ட நிகழ்ச்சிதான். அதன்பிறகுதான் முழுதிரைப்படம் தொடங்கியது.
வீடுகள், வீதிகள், நகரத் திடல்கள் எங்கெங்கும் ஆர்மீனியர்கள் படுகொலையானார்கள். வீதிகள் எங்கும் பிணக்குவியல்கள். 20ஆம் நூற்றாண்டின் முதல் இனப் படுகொலை சுர்ரென சூடுபிடிக்கத் தொடங்கியது.
 
ஆர்மீனியர்களை உயிருடன் எரிப்பது, சிலுவையில் அறைவது, மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிடுவது, ஆறுகளில் மூழ்கடிப்பது, ஆர்மீனியக் குழந்தைகளைப் படகுகளில் ஏற்றிச்சென்று கடலில் வீசுவது, அழகிய ஆர்மீனியப் பெண்களை அடிமைகளாகப் பிடித்து அந்தப்புரங்களுக்கு அனுப்புவது என்று இனப்படுகொலையில் எத்தனையோ தினுசு தினுசான புதுசு புதுசான உத்திகளை கடைப்பிடித்தார்கள் துருக்கியர்கள்.
ஆர்மீனியர்கள் ஆயிரக்கணக்கில் கொத்தாகப் பிடிக்கப்பட்டு உணவு, தண்ணீர் எதுவுமில்லாமல் சிரியா நாட்டு பாலைவனத்தில் நடக்கவிடப்பட்டார்கள்.. வழியில் ஓய்வுக்காக அவர்கள் எங்காவது நின்றால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இப்படி மெசப்பட்டோமிய பாலைவனத்தில் இறந்து எலும்புக்கூடுகளான ஆர்மீனியர்களின் எண்ணிக்கையே பல ஆயிரம் தேறும்.
 
1915ல் தொடங்கி 1918 வரை ஓர் இனப்படுகொலை. அதன்பிறகு 1920ல் தொடங்கி 1923 வரை ஒரு வெறியாட்டம். ஒரு கணக்கீட்டின்படி பார்த்தால் துருக்கி ஒட்டோமான் பேரரசில் வாழ்ந்து மொத்த ஆர்மீனியர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 20 லட்சம். ஆனால் இந்த இனப்படுகொலைகளுக்குப் பிறகு எஞ்சியிருந்த ஆர்மீனியர்கள் வெறும் 3 லட்சத்து 88 ஆயிரம் பேர்தான்! அதிலும் சிற்றாசியா, மேற்கு ஆர்மீனியா பகுதிகளில் ஆர்மீனிய இனம் பூண்டோடு நசுக்கி விரட்டப்பட்டது.
 
முதலாம் உலகப்போரில் துருக்கி தோற்றதும் இளம் துருக்கியர்கள் துண்டைக் காணும் துணியைக் காணும் என்று நட்பு நாடான ஜெர்மனிக்குத் தப்பியோடி விட்டார்கள்.
சரி! ஆர்மீனிய இனப்படுகொலைக்காகத் துருக்கியர்களுக்குத் தண்டனை எதுவும் கிடைத்ததா? இல்லை. வெற்றிகரமாக கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் உருண்டோடி விட்ட பிறகு இப்போதுதான் திடீர் ஞானோதயம் வந்ததுபோல, ‘துருக்கி செய்தது இனப்படுகொலை’ என்ற முடிவுக்கு மேற்கு நாடுகள் வந்திருக்கின்றன. நியூயார்க் டைம்ஸ் இதழ் 2004ஆம் ஆண்டுதான் துருக்கி செய்தது இனப்படுகொலை என்றே எழுதியிருக்கிறது. (அப்பாடா!)
 
அமெரிக்க செனட் அவை ஆர்மீனிய இனப் படுகொலையை அங்கீகரித்து அதை நினைவுகூர்ந்து தீர்மானம் (என்ற பெயரில்) ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது. வாடிகன் போன்ற நாடுகள் ஆர்மீனியர்களுக்கு துருக்கி நாடு செய்த கொடூரங்களை இனப்படுகொலை என்று இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கின்றன.
 
துருக்கி நாடு, அன்றும் சரி இன்றும் சரி. லேசுபட்ட நாடு இல்லை. முதல் உலகப்போரில் அரேபியர்களையே அந்தப் பாடுபடுத்தியவர்கள் துருக்கியர்கள். இஸ்ரேல் நாடு 1948ல் உருவானபோது அதை அங்கீகரித்த முதல் ‘இஸ்லாமிய’ நாடு துருக்கி. சூயஸ் கால்வாய் போரின்போது அரபு நாடான எகிப்து மீது இங்கிலாந்தும், பிரான்சும் போர் தொடுத்தபோது இங்கிலாந்து, பிரான்சு பக்கம் நின்ற நாடு துருக்கி. சைப்பிரஸ் நாட்டின் படையெடுத்த நாடு துருக்கி. அதுமட்டுமல்ல, தற்போது அமெரிக்காவின் மிகமிக நெருங்கிய நட்புநாடு துருக்கி.
 
ஓர் இனப்படுகொலை நடந்து நூறாண்டுகள் கடந்த பிறகுதான் அது இனப்படுகொலை என்றே இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் ஆர்மீனியர்களுக்காகப் பேச ஆர்மீனியா என்று ஒரு நாடு இருக்கிறது. அப்படி இருந்தும் இந்தநிலை.
 
இந்த அழகில், ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை, இனப்படுகொலைதான் என்று பன்னாட்டு சமுதாயம் ஒத்துக்கொள்ள இன்னும் எத்தனை யுகங்கள் ஆகுமோ தெரியவில்லை. தமிழர்களுக்கு என்று பேச நமக்கென்று தனிநாடும் இல்லை.
 
பதிவு -மோகன ரூபன்
Link to comment
Share on other sites

இவர்கள் அப்படி எல்லாம் வெளியேற மாடடார்கள். ஆனாலும் இவர்களுக்கு தண்டனை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
    • இதே போல் அளுத்கடையில் 1000 ரூபா கொத்தை 1900 ரூபாய்க்கு விற்றவர் கைது.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.