Jump to content

தீவிரமடையும் ஹுலுடனான முரண்பாடு; அரசமைப்புப் பேரவையில் முறையிட ஆணைக்குழு முடிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரமடையும் ஹுலுடனான முரண்பாடு; அரசமைப்புப் பேரவையில் முறையிட ஆணைக்குழு முடிவு

Election-Commissionors-2-300x170.jpgசுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுலின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் ஆணைக்குழு, அரசமைப்புச் பேரவைக்கு முறைப்பாடுகளை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகத தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அண்மைக்காலமாகப் பேராசிரியர் ஹுலின் செயற்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பெரும் நெருக்கடிகளை தோற்றுவிப்பதன் காரணமாகவே இவ்வாறானதொரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

“சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். ஆணைக்குழுவின் தவிசாளராக நான் நியமிக்கப்பட்டுள்ள ஆரம்ப காலம் தொட்டே பேராசிரியர் ரட்னஜீவன் ஹுலின் செயற்பாடுகள் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதனவாகவே காணப்பட்டன. ஆனால் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அவரது குறுக்கீடுகள் தடையாக அமையவில்லை.

ஆணைக்குழு உறுப்பினர்களுக்குரிய கூட்டுப் பொறுப்பைக் கூட பல சந்தர்ப்பங்களில் அவர் மீறியுள்ளார். இதனை நான் பல தடவை அவரிடம் எடுத்துக் கூறி இருக்கின்றேன். ஆனால் பேராசிரியர் ஹுல் ஆணைக்குழு தீர்மானங்களுக்கு முரண்பட்டவராகவே எப்போதும் காணப்படுகின்றார். அவர் ஒரு தலைப்பட்சமாக கருத்துக்களை ஆணைக்குழுவிலும் வெளியேயும் தெரிவித்து வருகின்றார். இதனால் தேர்தல்கள் ஆணைக்குழு பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் தேர்தல் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உருவாகி வருகின்றது.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்கள், முடிவுகள் ஏகமனதாக இருக்க வேண்டும். முடிவுகளில் எவரொரு உறுப்பினரும் முரண்பட முடியாது. இந்த நிலையில் பேராசிரியர் ஹுல் ஆணைக்குழுக் கூட்டங்களில் பங்கேற்று எடுக்கப்படும் முடிவுகள் ஆலோசனைகள் தொடர்பில் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். ஆனால் இறுதியில் அவருக்கு ஆதரவு அளித்துவிட்டு வெளியே விமர்சித்து வருகின்றார். இந்த விமர்சனங்களால் ஆணைக்குழு பெரும் சவாலுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவரது இவ்வாறான செயற்பாடுகள் தொடருமானால் அது பெரும் பிரச்சினைக்கு வழி வகுக்கலாம் என அச்சமடைகின்றேம். ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும் அச்சம் கூட எம்மிடம் காணப்படுகின்றது. இது தொடர்பில் அரசமைப்புப் பேரவைக்கு தெளிவுபடுத்திக் கடிதம் எழுதத் தீர்மானித்துள்ளேன்.”

http://thinakkural.lk/article/43125

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda-Deshapriya.jpg

ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகளில் அதிருப்தி – ஆணைக்குழுவிற்குள் மோதல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் ஆணைக்குழு, அரசமைப்புச் பேரவைக்கு முறைப்பாடுகளை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகத தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அண்மைக்காலமாகப் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பெரும் நெருக்கடிகளை தோற்றுவிப்பதன் காரணமாகவே இவ்வாறானதொரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள மஹிந்த தேசப்பிரிய, “சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். ஆணைக்குழுவின் தவிசாளராக நான் நியமிக்கப்பட்டுள்ள ஆரம்ப காலம் தொட்டே பேராசிரியர் ரட்னஜீவன் ஹுலின் செயற்பாடுகள் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதனவாகவே காணப்பட்டன. ஆனால் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அவரது குறுக்கீடுகள் தடையாக அமையவில்லை.

ஆணைக்குழு உறுப்பினர்களுக்குரிய கூட்டுப் பொறுப்பைக் கூட பல சந்தர்ப்பங்களில் அவர் மீறியுள்ளார். இதனை நான் பல தடவை அவரிடம் எடுத்துக் கூறி இருக்கின்றேன். ஆனால் பேராசிரியர் ஹுல் ஆணைக்குழு தீர்மானங்களுக்கு முரண்பட்டவராகவே எப்போதும் காணப்படுகின்றார்.

அவர் ஒரு தலைப்பட்சமாக கருத்துக்களை ஆணைக்குழுவிலும் வெளியேயும் தெரிவித்து வருகின்றார். இதனால் தேர்தல்கள் ஆணைக்குழு பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் தேர்தல் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உருவாகி வருகின்றது.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்கள், முடிவுகள் ஏகமனதாக இருக்க வேண்டும். முடிவுகளில் எவரொரு உறுப்பினரும் முரண்பட முடியாது. இந்த நிலையில் பேராசிரியர் ஹுல் ஆணைக்குழுக் கூட்டங்களில் பங்கேற்று எடுக்கப்படும் முடிவுகள் ஆலோசனைகள் தொடர்பில் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

ஆனால் இறுதியில் அவருக்கு ஆதரவு அளித்துவிட்டு வெளியே விமர்சித்து வருகின்றார். இந்த விமர்சனங்களால் ஆணைக்குழு பெரும் சவாலுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அவரது இவ்வாறான செயற்பாடுகள் தொடருமானால் அது பெரும் பிரச்சினைக்கு வழி வகுக்கலாம் என அச்சமடைகின்றேம். ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும் அச்சம் கூட எம்மிடம் காணப்படுகின்றது. இது தொடர்பில் அரசமைப்புப் பேரவைக்கு தெளிவுபடுத்திக் கடிதம் எழுதத் தீர்மானித்துள்ளேன்” என கூறியுள்ளார்.

http://athavannews.com/ரட்னஜீவன்-ஹூலின்-செயற்பா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஹுல் பனை செமையா முறியுது போல ... தலைகீழா நின்று ததுங்கினத்தோம் ஆடினாலும் சிங்களவனுக்கு எப்போதுமே தமிழன் பற தெமளு தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, அக்னியஷ்த்ரா said:

என்ன ஹுல் பனை செமையா முறியுது போல ... தலைகீழா நின்று ததுங்கினத்தோம் ஆடினாலும் சிங்களவனுக்கு எப்போதுமே தமிழன் பற தெமளு தான் 

பாமர மக்களின் வரிப்பணத்தில்  கற்று வசதி வாய்ப்புகள்  பெருகியதும் பெரும்பான்மையினத்துக்கு தோள்கொடுப்பதென்பது  பொன்னம்பலம் இராமநாதன் காலம் முதல் தொடர்கதை. எனவே தொடர்கதைகள் தொடர்கின்றன. மானம் கெட்டாலும் விசுவாசத்தை விடமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பதிவில் எழுதிய பதில்.. இங்கும் பொருந்தும் என்பதால்..

Quote

 

எனி தேர்தல் ஆணைக்குழுவை விட்டே துரத்தப் போகிறார்கள். தேவையா இது. சிங்களவனோடு ஒட்டி உறவாடினால்.. தமது தகுதிக்கு தலையில் வைச்சுக் கொண்டாடுவாங்கள் என்ற பழைய கற்பிதத்தில் இன்னும் நம்மவர்கள் சிலர். சும்.. சம்... மற்றும் இவர் உள்ளடங்க.

ஆனால் சிங்களவன்.. இவர்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க நன்கு கற்றுக்கொண்டு விட்டான். இவர்கள் தான் இன்னும் சிங்களவனை சரியாகப் படிக்கவில்லை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ரஜனி திரணகம அவர்களது முறிந்தபனையை வெளியிட ரெட்ண ஜீவன் கூல் அவர்கள் பெரும் முனைப்புடன் அவ்வேளையில் ஈடுபட்டதாக எங்கோ ஒரு சதர்ப்பத்தில் வாசித்திருக்கிறேன் சிலவேளை அது யாழ் களத்திலாகவும் இருக்கலாம். 

அவருக்கே இந்த நிலைமை 

மெலதிக செய்தியாக 

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின்போது ஏறக்குறைய முடக்கநிலையிலிருந்த திரணகம் அப்புத்தகத்தை வெளியிடுவதைப் பின்போட்டதாகவும் சிலருக்கு அம்முடிவு பிடிக்காமைல் போனதும் அவரது கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் கதை அடிபட்டது. தவிர யாழ் பல்கலையில் மருத்துவபீடத்தை மீழவும் திறக்க முயற்சித்தது அல்லது முழுமையாக இயங்கவைக்க காரணம் எஙிறார்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Elugnajiru said:

 ரஜனி திரணகம அவர்களது முறிந்தபனையை வெளியிட ரெட்ண ஜீவன் கூல் அவர்கள் பெரும் முனைப்புடன் அவ்வேளையில் ஈடுபட்டதாக எங்கோ ஒரு சதர்ப்பத்தில் வாசித்திருக்கிறேன் சிலவேளை அது யாழ் களத்திலாகவும் இருக்கலாம். 

அவருக்கே இந்த நிலைமை 

மெலதிக செய்தியாக 

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின்போது ஏறக்குறைய முடக்கநிலையிலிருந்த திரணகம் அப்புத்தகத்தை வெளியிடுவதைப் பின்போட்டதாகவும் சிலருக்கு அம்முடிவு பிடிக்காமைல் போனதும் அவரது கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் கதை அடிபட்டது. தவிர யாழ் பல்கலையில் மருத்துவபீடத்தை மீழவும் திறக்க முயற்சித்தது அல்லது முழுமையாக இயங்கவைக்க காரணம் எஙிறார்கள் 
 

முறிந்த பனைகளில் கூடிய பங்காற்றி இருந்தது இவருடைய சகோதரர் ராஜன் கூல். அவர் தான் பின்னர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான மனித உரிமைகள் அமைப்பு என்று சந்திரிக்கா அம்மையார் காலத்தில் விடுதலைப்புலிகளினதும்.. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினதும் செயற்பாடுகளை வன்மையாக வெறுத்து வெறுப்பூட்டும் அறிக்கைகளை மனித உரிமைகள் அமைப்பு என்ற ரீதியில் வெளியிட்டு வந்தனர்.

சூரியக் கதிர் நடவடிக்கையின் போது சிங்களப் படைகள் மேற்கொண்ட அத்தனை மனித உரிமை மீறல்களையும் புலிகள் மீது சுமத்தி சந்திரிக்கா அம்மையாரை வெண்புறா சமாதானத் தேவதையாகக் காட்டியது இவர்களே. இதில் ராஜன் கூல்.. மற்றும் சிறீதரனின் பங்கு மிக அதிகமாக இருந்தது. 

ஆனாலும்.. செம்மணி புதைகுழிகள் விவகாரம்.. கிருசாந்தி குமாரசாமி மற்றும் குடும்பத்தினர் படுகொலை.. நாகர்கோவில் பள்ளிக்கூடம் மீதான குண்டுவீச்சும் படுகொலையும்... யாழ்ப்பாண இடம்பெயர்வு.. வன்னி இடம்பெயர்வு என்பன இவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு இனங்காட்டியது. 2002 சமாதான உடன்படிக்கையோடு புலிகளின் யாழ் மீள் பிரவேசத்தோடு.. இவர்கள் அடங்கிவிட்டார்கள்..தங்கள் ஆட்டத்தை.

இப்போ மீண்டும் 2009 மே க்குப் பின் கூல் குடும்பம்.. தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க கிளம்பி இருக்குது. ஏன் தான் படித்தும் இதுகளுக்கு புத்தி மத்தி என்பது மட்டும் புரியவில்லை. ஒருவேளை.. ஏதாவது விருதுகளுக்கு ஆசைப்படுகிறார்களோ தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்கோ தவறு விடுவதாகத் தோன்றுகிறது.🤔

ராஜன் ஹூல், நீலன் திருச் செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், ரட்ணஜீவன் ஹூல், DBS மற்றும் இன்னோரன்ன இவர்களின் சகாக்களின் கல்வி, சாதி, சமயம், இவர்கள் முன்னிறுத்தும் அல்லது சார்ந்திருக்கும் ideology போன்றவற்றையும் முக்கியமாக இவர்களின் கடந்தகாலச் செயற்பாடுகளையும் நோக்கினால் இவர்கள் யார் என்பதையும் அவர்களின்  உண்மையான நோக்கத்தையும் அறிய முடியும் என நம்புகிறேன். 🙂

Link to comment
Share on other sites

தேர்தல்கள் ஆணைக்குவுக்கு ஹூல் சாபக்கேடு -மகிந்த அணி கடும் தாக்கு

"பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சாபக்கேடாகும். இவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது."

இவ்வாறு மஹிந்த அணி குற்றம்சாட்டியுள்ளது.

"தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் எதிரணியினரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுகின்றார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்லப்பிள்ளையாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இவர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சாபக்கேடாகும். இவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகக் ஹுலை நியமித்த அரசமைப்புப் பேரவை அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/143941

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.