Jump to content

ஜேர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட முஸ்லிம்களுக்கு அனுமதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

112422905_tv061585021-720x450.jpg

ஜேர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட முஸ்லிம்களுக்கு அனுமதி!

ரமலானை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு உதவ, ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்று முன்வந்துள்ளது.

பெர்லினில் உள்ள தார் அஸ்லாம் மசூதியில் இட நெருக்கடியால் முஸ்லிம்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை.

இதனால், அங்குள்ள மார்தா லூதேரன் கிறிஸ்தவ தேவாலயத்தில் முஸ்லிம்கள் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மே 4ஆம் திகதி ஜேர்மனி மத சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதித்தது. ஆனால் வழிபாட்டாளர்கள் 1.5 மீ (5 அடி) தூரத்தை கடைபிடிக்க வேண்டும்.

இதன் விளைவாக, நகரின் நியூகால்ன் மாவட்டத்தில் உள்ள தார் அஸ்லாம் மசூதி அதன் சபையின் ஒரு பகுதியை மட்டுமே தொழுகைக்காக வைத்திருக்க முடியும். குறிப்பாக 50 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும்.

இந்தநிலையில், க்ரூஸ்பெர்க்கில் உள்ள மார்த்தா லூத்தரன் தேவாலயம் நெருக்கடியால் சிக்கியுள்ள முஸ்லிம்களுக்கு அரபு மற்றும் ஜேர்மன் மொழிகளில் தங்களது தொழுகையினை மேற்கொள்ள இடமளித்துள்ளது.

புதிய சமூக தொலைதூர விதிகளின் கீழ் முஸ்லிம்கள், தற்போது கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு மதத்தின் இன்னொரு மதத்தினருக்கு இவ்வாறு உதவுவது, ‘ஒற்றுமையின் அற்புதமான அடையாளம்’ என்று உலகநாடுகளால் பாராட்டப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஜேர்மனியில்-கிறிஸ்தவ-தேவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட முஸ்லிம்களுக்கு அனுமதி!

சேர்ச்சுக்கு போக  அல்லா ஓமெண்டு ஒத்துக்கொண்டவரோ?

Link to comment
Share on other sites

25 minutes ago, குமாரசாமி said:

சேர்ச்சுக்கு போக  அல்லா ஓமெண்டு ஒத்துக்கொண்டவரோ?

இங்கு  பல வருடகாலமாக அம்மன் கோவில் சேர்ச்சுக்குள்ளேயே இருந்த‍து. பின்னர் அம்மன் சற்று   பணக்காரிவிட்டதால் இப்போது சேர்ச்சில் இருந்து  புறப்பட்டு பெரிய மண்படம் எடுத்த அங்கு கோவில் கொண்டு விட்டா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக மதங்களைக் கடைப்பிடிப்போர் மற்றைய மதங்களை நிந்தனை செய்வதில்லை. மதங்கள் மனிதர்களால் அதிகாரங்களைக் கைப்பற்ற ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அது அமெரிக்கா முதல்  ஆரியகுளம் வரை ஒன்றே. இந்த உலகு முதலில் கடந்து செல்ல வேண்டியது மதவாதிகளையே. அன்றுதான் உலகில் அமைதியும் சமத்துவமும் தானாகத் தோன்றும். தன்தன் மதத்தை புனிதமெனக் கொண்டாடுவது போல் அடுத்தவர் மதத்தைக் கொண்டாட வேண்டாம். நிந்தனை செய்யாதிருந்தாலே உலகில் பாதிப் போர்கள் நின்றுவிடும். ஆனால் அதனைத் தடுப்பதிலும் தூண்டிவிடுவதிலும்  ஆயுத தளபாட விற்பனையாளர்கள் திறம்படச் செயலாற்றி வெற்றிபெற்றே வருகின்றார்கள்.  கொரோனா ஒரு புதிய உலகைத் தேடும் சூழலைத் தந்தபோதும் உலகால் மாறமுடியவில்லை என்பதை உலகப் பெருநாடுகளின் நிகழ்கால உரையாடல்களும் நகர்வுகளும்  சுட்டுகின்றன.  ஆயிரம்போர்களும் கோடிக்கனக்கான மக்களின் அழிவுகள் சூழந்தாலும் சுரண்டாலிதிக்க சக்திகள் என்றும் மாறப்போவதில்லை.  இதில் மதவாதிகள் இருந்துகொண்டேயிருப்பார்கள் என்பதும் நிதர்சனமானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

உண்மையாக மதங்களைக் கடைப்பிடிப்போர் மற்றைய மதங்களை நிந்தனை செய்வதில்லை. மதங்கள் மனிதர்களால் அதிகாரங்களைக் கைப்பற்ற ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அது அமெரிக்கா முதல்  ஆரியகுளம் வரை ஒன்றே. இந்த உலகு முதலில் கடந்து செல்ல வேண்டியது மதவாதிகளையே. அன்றுதான் உலகில் அமைதியும் சமத்துவமும் தானாகத் தோன்றும். தன்தன் மதத்தை புனிதமெனக் கொண்டாடுவது போல் அடுத்தவர் மதத்தைக் கொண்டாட வேண்டாம். நிந்தனை செய்யாதிருந்தாலே உலகில் பாதிப் போர்கள் நின்றுவிடும். ஆனால் அதனைத் தடுப்பதிலும் தூண்டிவிடுவதிலும்  ஆயுத தளபாட விற்பனையாளர்கள் திறம்படச் செயலாற்றி வெற்றிபெற்றே வருகின்றார்கள்.  கொரோனா ஒரு புதிய உலகைத் தேடும் சூழலைத் தந்தபோதும் உலகால் மாறமுடியவில்லை என்பதை உலகப் பெருநாடுகளின் நிகழ்கால உரையாடல்களும் நகர்வுகளும்  சுட்டுகின்றன.  ஆயிரம்போர்களும் கோடிக்கனக்கான மக்களின் அழிவுகள் சூழந்தாலும் சுரண்டாலிதிக்க சக்திகள் என்றும் மாறப்போவதில்லை.  இதில் மதவாதிகள் இருந்துகொண்டேயிருப்பார்கள் என்பதும் நிதர்சனமானதே.

எனக்கு இந்த ஜதி சாதியெல்லாம் ஒன்றே. இதை நான் கணக்கில் எடுகாது விட்டாதால் தான் இன்று வரை நிம்மதியாக சந்தோஷமாக இருக்கின்றேன், என் அறியா பருவத்திலிருந்து நான் இந்த ஜாதி சாதி ஏதிர்ந்து வந்துள்ளேன், 3ம் வகுப்பு படிக்கும் போது என்னுடன் படிக்கும் மாணவர்களை அவர்கள் கேலி செய்வதுண்டு, அவர்கள் 5ம் வகுப்பு, நான் அந்த மாணவர்களுடன் இணைந்து அவர்களை ஏதிர்த்துள்ளேன், அவர்களை ஓட ஓட அடித்து விரட்டியும் உள்ளோம். இன்றும் என்னுடன் படித்த அவர்களை ஊருக்கு போகும் போது சந்திப்பேன். சாதி மதம்  என்று கதைத்தவர்களை இன்று காணவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இங்கு  பல வருடகாலமாக அம்மன் கோவில் சேர்ச்சுக்குள்ளேயே இருந்த‍து. பின்னர் அம்மன் சற்று   பணக்காரிவிட்டதால் இப்போது சேர்ச்சில் இருந்து  புறப்பட்டு பெரிய மண்படம் எடுத்த அங்கு கோவில் கொண்டு விட்டா. 

அம்மன் எவ்வளவு சக்தி கொண்டவர் சேர்ச்சுக்குள்ளே போய் அடக்கமாக இருந்திருக்கிறாரே

 

3 hours ago, nochchi said:

மதங்கள் மனிதர்களால் அதிகாரங்களைக் கைப்பற்ற ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அது அமெரிக்கா முதல்  ஆரியகுளம் வரை ஒன்றே. இந்த உலகு முதலில் கடந்து செல்ல வேண்டியது மதவாதிகளையே.

💯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சேர்ச்சுக்கு போக  அல்லா ஓமெண்டு ஒத்துக்கொண்டவரோ?

இங்கு இரண்டாம் மாடியில்... மசூதியும், மூன்றாம் மாடியில் பிள்ளையார் கோவிலும் உள்ளது.
வெள்ளிக்கிழமை என்றால்... இரண்டு பகுதியிலும், ஒரே கூட்டமாக இருக்கும்.
பிள்ளையாரே என்று, இன்னும்... ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. :)

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

பிள்ளையாரே என்று, இன்னும்... ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. :)

உண்மைதான் தமிழ் சிறி, மசூதிக்காரருக்கும், பிள்ளையார் கோவில்காரருக்கும் இடையே எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால் பிள்ளையார் கோவில்காரர் தங்களிடையே அசம்பாவிதம்கொண்டு கோட் வாசலில் நிற்கிறார்கள். 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

உண்மைதான் தமிழ் சிறி, மசூதிக்காரருக்கும், பிள்ளையார் கோவில்காரருக்கும் இடையே எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால் பிள்ளையார் கோவில்காரர் தங்களிடையே அசம்பாவிதம்கொண்டு கோட் வாசலில் நிற்கிறார்கள். 😲

தமிழர்களிடம் உள்ள பலவீனமா? அல்லது பதவிமோகமா? உண்மையிலே பொதுத்தொண்டு நோக்கமாயின் இவை நிகழாது புரிந்தணர்வோடு நகரும் அல்லவா?

Link to comment
Share on other sites

28 minutes ago, ampanai said:

தமிழ் இஸ்லாமிய உறவுகளுக்கு ஈகைப் பெருநாள் வாழ்த்துகள்.
#TamileelamDefactoState

100090202_167872224757228_1612435185112973312_n.jpg?_nc_cat=100&_nc_sid=e3f864&_nc_ohc=4HkqkY1KT6IAX8xSZXa&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=ea2465e2228fbe04c56a14d752b78f4f&oe=5EF07059

தமிழர் ஆட்சிசெய்தால் எம்மதமும் சம்மதமே. :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

இங்கு இரண்டாம் மாடியில்... மசூதியும், மூன்றாம் மாடியில் பிள்ளையார் கோவிலும் உள்ளது.
வெள்ளிக்கிழமை என்றால்... இரண்டு பகுதியிலும், ஒரே கூட்டமாக இருக்கும்.
பிள்ளையாரே என்று, இன்னும்... ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. :)

அல்லா தான் எல்லாவற்றுக்கும் மேலே என்பவர்கள் மூன்றாம் மாடியில் பிள்ளையார் கோவிலும் கீழே இரண்டாம் மாடியில் மசூதியும் இருப்பதை எப்படி பொறுத்து கொள்வார்களோ எதற்கும் நீங்கள் அவதானமாக போய்வாருங்கள்.😂

Link to comment
Share on other sites

16 hours ago, nochchi said:

தமிழர்களிடம் உள்ள பலவீனமா? அல்லது பதவிமோகமா? உண்மையிலே பொதுத்தொண்டு நோக்கமாயின் இவை நிகழாது புரிந்தணர்வோடு நகரும் அல்லவா?

வடவர் தமிழரிடையே புகுத்தியுள்ள சாதிப்பிரச்சனை முதலாக, ஊர்ப்பிரிவினை, அதிகார மமதை, பதவிமோகத்துடன் மக்களிடம் இருந்தும், அரசியல்வாதிகளிம் இருந்தும் கிடைக்கும் செல்வாக்கு. பணத்தாசை இருந்தாலும் கோவில் பணத்தைக் கையாடச் சிறிது பயமிருக்கிறது. 

Link to comment
Share on other sites

5 hours ago, Paanch said:

வடவர் தமிழரிடையே புகுத்தியுள்ள சாதிப்பிரச்சனை முதலாக, ஊர்ப்பிரிவினை, அதிகார மமதை, பதவிமோகத்துடன் மக்களிடம் இருந்தும், அரசியல்வாதிகளிம் இருந்தும் கிடைக்கும் செல்வாக்கு. பணத்தாசை இருந்தாலும் கோவில் பணத்தைக் கையாடச் சிறிது பயமிருக்கிறது. 

 தமிழர்களின் பலவீனங்கள் எல்லாமே எப்போதுமே  எல்லாம் மற்றய இனத்தவரால் தான்  பரப்பப்பட்டதென்றால் தமிழர்களுக்கு சுய அறிவே இல்லையா?  

Link to comment
Share on other sites

23 hours ago, Paanch said:

கோட் வாசலில் நிற்கிறார்கள். 

தமிழர்களுக்கு நீதிமன்றின் மீது அலாதி பிரியம். 

Link to comment
Share on other sites

54 minutes ago, tulpen said:

 தமிழர்களின் பலவீனங்கள் எல்லாமே எப்போதுமே  எல்லாம் மற்றய இனத்தவரால் தான்  பரப்பப்பட்டதென்றால் தமிழர்களுக்கு சுய அறிவே இல்லையா?  

தமிழராக பிறந்த உங்களுக்கு இவ்வளவு காலமும் இதைப்பற்றி தெரியவரவில்லையா? நன்றாக சிந்தித்து பாருங்கள்! 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

தமிழராக பிறந்த உங்களுக்கு இவ்வளவு காலமும் இதைப்பற்றி தெரியவரவில்லையா? நன்றாக சிந்தித்து பாருங்கள்! 😀

வந்திட்டார் கேள்வி உங்களையும் நோக்கி உள்ளது .

Link to comment
Share on other sites

4 hours ago, tulpen said:

 தமிழர்களின் பலவீனங்கள் எல்லாமே எப்போதுமே  எல்லாம் மற்றய இனத்தவரால் தான்  பரப்பப்பட்டதென்றால் தமிழர்களுக்கு சுய அறிவே இல்லையா?  

 

41 minutes ago, பெருமாள் said:

வந்திட்டார் கேள்வி உங்களையும் நோக்கி உள்ளது .

😀

Link to comment
Share on other sites

14 hours ago, tulpen said:

 தமிழர்களின் பலவீனங்கள் எல்லாமே எப்போதுமே  எல்லாம் மற்றய இனத்தவரால் தான்  பரப்பப்பட்டதென்றால் தமிழர்களுக்கு சுய அறிவே இல்லையா?  

தமிழினத்திடம் சுயஅறிவு ஆற்றல் எல்லாமே உள்ளது, ஆனால் எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்ற பரந்த மென்மையான மனப்பான்மையே தமிழினத்தின் எதிரியாக இருக்கிறது. விலங்குகளிலும் மென்மையான விலங்குகளையே கொடிய  விலங்குகள் கொன்று தின்கிறது. அதுபோலவே மென்மையான தமிழினத்தை கொடியவர்கள் கொன்று தின்றார்கள், தின்றுவருகிறார்கள். தமிழினமும் கொடிய இனமாக இருந்திருந்தால் இன்றும் தமிழினத்தின் பல அரசுகள் உலகில் அழியாது இருந்திருக்கும். உதாரணத்திற்கு எங்கள் காலத்தில்கூட அதற்கான சாட்சியம் உள்ளது. பிரபாகரன் படைகளுக்கு இருந்த ஆற்றலுக்கு அவர்கள் மற்றைய இனங்களைக் கொத்துக் கொத்தாக அழித்திருக்க முடியும். உலகம்கூட அவர்கள் படைத்திறன் ஆற்றலை வியந்ததை மறுக்க முடியாது. கொடிய எதிரியானாலும் அவன்தரப்பின் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் ஏற்பட்ட கவனமே பிரபாகரன் படைகள் தோல்வியுறக் காரணமாக அமைந்ததாகவும் கருத முடியும்.    

Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:

தமிழினத்திடம் சுயஅறிவு ஆற்றல் எல்லாமே உள்ளது, ஆனால் எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்ற பரந்த மென்மையான மனப்பான்மையே தமிழினத்தின் எதிரியாக இருக்கிறது. விலங்குகளிலும் மென்மையான விலங்குகளையே கொடிய  விலங்குகள் கொன்று தின்கிறது. அதுபோலவே மென்மையான தமிழினத்தை கொடியவர்கள் கொன்று தின்றார்கள், தின்றுவருகிறார்கள். தமிழினமும் கொடிய இனமாக இருந்திருந்தால் இன்றும் தமிழினத்தின் பல அரசுகள் உலகில் அழியாது இருந்திருக்கும். உதாரணத்திற்கு எங்கள் காலத்தில்கூட அதற்கான சாட்சியம் உள்ளது. பிரபாகரன் படைகளுக்கு இருந்த ஆற்றலுக்கு அவர்கள் மற்றைய இனங்களைக் கொத்துக் கொத்தாக அழித்திருக்க முடியும். உலகம்கூட அவர்கள் படைத்திறன் ஆற்றலை வியந்ததை மறுக்க முடியாது. கொடிய எதிரியானாலும் அவன்தரப்பின் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் ஏற்பட்ட கவனமே பிரபாகரன் படைகள் தோல்வியுறக் காரணமாக அமைந்ததாகவும் கருத முடியும்.    

 

“எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்ற பரந்த மென்மையான மனப்பான்மையே தமிழினத்தின் எதிரியாக இருக்கிறது.”

பாஞ்ச் உங்களின் இந்த நகைச்சுவைக் கருத்துக்கு சிரிக்கவே இன்று முழுவதும் லீவு எடுக்க வேண டும். அதுக்கே நேரமில்லை. மிகுதிக் நகைச்சுவைக்கு........... ஐயோ ஒரு வாரம் என்னால் லீவு எடுக்க முடியாது.  

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

“எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்ற பரந்த மென்மையான மனப்பான்மையே தமிழினத்தின் எதிரியாக இருக்கிறது.”

பாஞ்ச் உங்களின் இந்த நகைச்சுவைக் கருத்துக்கு சிரிக்கவே இன்று முழுவதும் லீவு எடுக்க வேண டும். அதுக்கே நேரமில்லை. மிகுதிக் நகைச்சுவைக்கு........... ஐயோ ஒரு வாரம் என்னால் லீவு எடுக்க முடியாது.  

உங்கள் நகைச்சுவைக்கு நான் லீவெல்லாம் எடுக்கவேண்டிய தேவையில்லை. ஏன் என்றால் கொரோனா எனக்கும் நீண்டநாள் லீவை அளித்துள்ளது. வீட்டில் நிம்மதியாக இருந்து யாழ்களம் வரும்போது பலர் அங்கு கற்பூரம் ஏற்றுவதால் வரும் வாசனையையும் முகர்கிறேன்.  

Link to comment
Share on other sites

On 25/5/2020 at 22:39, tulpen said:

 தமிழர்களின் பலவீனங்கள் எல்லாமே எப்போதுமே  எல்லாம் மற்றய இனத்தவரால் தான்  பரப்பப்பட்டதென்றால் தமிழர்களுக்கு சுய அறிவே இல்லையா?  

அப்பாவிகள், நல்லவர்கள், சாதுக்கள் எப்பவுமே அடப்பாவிகளால், அயோக்கியர்களால், ரவுடிகளால் ஏமாற்றப்படுவதும் வஞ்சிக்கப்படுவதும் உலக வரலாறாச்சே  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.