தயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..
-
Tell a friend
-
Topics
-
51
பெருமாள் · தொடங்கப்பட்டது
-
Posts
-
By kandiah Thillaivinayagalingam · பதியப்பட்டது
"ஒவ்வொரு நாளும் அநேகமாக இந்தியாவில் இருந்து வெளிவரும் எதாவது ஒன்று அல்லது பல நாளிதழ்களில் பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகள் அல்லது வழக்குகளைக் காண்கிறோம் அது ஏன் ?" பாரத பூமி புண்ணிய பூமி. அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி. இங்கேதான் ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம் ஆனால் அதே நேரத்தில் சமஸ்கிரத புராணங்களையும் நம்புகிறோம் போற்றுகிறோம். இந்த புராணங்கள் கடவுள்களின் கற்பழிப்பை நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்தியாவில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும்? இதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். அது மட்டும் அல்ல 'அர்த்த சாஸ்திரம்' (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்" என்கிறது. விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்? அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம். இதோ அந்த கதை. ஒரு ஊரில் ஜலந்தர் - பிருந்தா [துளசி] என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். பிருந்தா விஷ்ணு பக்தை. ஜலந்தர் சிவன் பக்தன். இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார். என்ன ஜலந்தர்?. நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே... எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ? ... என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர். “சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார். நீ என்ன பண்ணு... சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்... அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு ” இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க... நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர், ‘ஸ்வாமீ’ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள். கைலாயத்தில் இப்படி நடக்க ... ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?... கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள். இதைப் பார்த்த விஷ்ணு... நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவளை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து... கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு..... தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப் பிடித்துக் கொண்டாடினாள். இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்... நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’ தென வந்து விழுந்தது ஒரு தலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப் பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை.... வேதத்தின் மயக்கத்தை... பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?... என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார். அந்த தலையே இந்த தலை! பார்த்தாள் பிருந்தா... தன் உடலோடு [ஒன்று இணைந்தவன்] விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க... அப்போது திடீர் என உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். ‘நான்தான் பக்தையே...’ என அறிமுகம் கொடுக்கிறார். இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’ அடப்பாவி... பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? என்கிறாள் ? From "Tulsi Vivah - Wikipedia, the free encyclopedia" [According to Hindu scripture, the Tulsi plant was a woman named Vrinda (Brinda), a synonym of Tulsi. She was married to the demon-king Jalandhar. Due to her piety and devotion to Vishnu, her husband became invincible. Even god Shiva, the destroyer in the Hindu Trinity could not defeat Jalandhar. So Shiva requested Vishnu - the preserver in the Trinity - to find a solution. Vishnu disguised himself as Jalandhar and violated Vrinda. Her chastity destroyed, Jalandhar was killed by Shiva] இந்த கற்பழிப்பை எவரும் கண்டிக்கவும் இல்லை? விஷ்ணுவை தூக்கி எறியவும் இல்லை ? இப்படி பல பல. இவையை, இந்த புராணங்களை இன்னும் போற்றி வாழும் இந்த சமுதாயத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் ? இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து இன்னும் அங்கீகரிக்கின்றோம்? இப்படி அங்கு நடக்கிற கேவலங்களை கேட்டு கேட்டு காது பழகிவிட்டது. இப்படி பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் ஏராளம் . "இந்த முள்ளுச் செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா? இவற்றை எல்லாம் ஊக்குவித்து வளர்த்துக் கொண்டு அதன் பலன்களை கண்டு பொங்கி எழுவதில் என்ன பயன்?” [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] -
By goshan_che · Posted
தினக்குரல் குழப்புகிறது. பிரதமர் மீதல்ல அவர் கட்சி பாஉக்கள் இருவர் மீதே 2003 ஆரம்பத்தில் ஊழல் புகார் வைக்கப்பட்டது. 2003 இறுதியில் ஏலவே முடிவு செய்த பதவிக்கால நிர்ணய நிரல்படி, அடுத்த தேர்தலுக்கு புதிய தலைமையை கொடுக்கும் வண்ணம், 2024 இல் தான் பதவி விலகுவதாக பிரதமர் அறிவித்தார். வேணும் எண்டால், இதை தன் கட்சியினரின் மீதான குற்றச்சாட்டுக்கான தார்மீக பொறுபேற்றல் என கொள்ளலாம். -
அரசியல் ஏற்றம் தாழ்வு இருப்பது சகஜம் தானே..................ஊடகங்களில் வரும் தேர்தல் கணிப்பு என்ற பெயரில் தேர்தல் திணிப்பு இந்த தேர்தல் திணிப்பு ஊடகங்கள் ஒவ்வொருமுறையும் இவர்களின் கணிப்பு பிழையா சொன்னது தான் அதிகம்.................கூலிக்கு மார் அடிக்கும் ஊடகங்கள் தமிழ் நாட்டில் அதிகம் அண்ணா உதாரணத்துக்கு தந்தி புதியதலைமுறை இந்த இரண்டு ஊடகங்களும் வீஜேப்பிக்கு ஆதரவான ஊடகங்கள்........................... எனது கணிப்பு 7/ 9 பாராள மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெறக் கூடிய வாக்கு சத வீதம்................... புதிய இளம் வாக்காளர்கள் வந்து விட்டினம் இளைஞர்களின் அதிக ஓட்டு அண்ணன் சீமானுக்கு தான் என்று மற்ற கட்சியினருக்கே நங்கு தெரியும்........................தேர்தல் ஆணையம் மேல் தான் அதிக சந்தேகம்.........அண்ணாமலைக்கு சாதகாமாய் ஏதும் குளறு படிகள் செய்யக் கூடும் ...................... நாம் தமிழர் கட்சி சின்னம் பறி போக அண்ணாமலை தான் காரணம்...................அண்ணன் சீமான் அண்ணாமலைய ஊடகம் மூலம் கேட்டு விட்டார் பல வாட்டி வா இரண்டு பேரும் ராமர் கோவிலுக்கு போவோம் ராமர் மேல் சத்தியம் பண்ணு விவசாயி சின்னம் பறி போனதுக்கு உனக்கும் ஒரு தொடர்வும் இல்லை என்று....................... அண்ணாமலை குற்றம் செய்யாட்டி அந்த இடத்திலே சொல்லி இருக்கலாம் ராமர் கோவில் மேல் சத்தியம் இட்டு சொல்லுறேன் நாம் தமிழர் விவசாயி சின்ன விடையத்தில் எனக்கு ஒரு வித தொடர்வும் இல்லை என்று.............................. நான் அறிந்தவரை மைக் சின்னம் கிட்ட தட்ட எல்லா மக்களையும் சென்று அடைந்து விட்டது ஈவிம் மிசினில் மைக் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு குடுத்த சின்னம் மாதிரி கிளியர் இல்லை இப்படி பல குளறு படிகளை தேர்தல் ஆனையமே செய்கினம் உண்மையில் இது ஜனநாயக தேர்தல் மாதிரி தெரியல😁..........................
-
By kandiah Thillaivinayagalingam · பதியப்பட்டது
"போதும் இந்த நரகம்..!" குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோநிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards][and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற் பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi ] ஒன்று குடியை போற்றுகிறது. அதேபோல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமும் புறநானுறு 235 இல், "சிறியகட் பெறினே, எமக்கீ யும் மன்னே; பெரிய கட் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே;" என்று பெண் புலவரான ஒளவையார் புகழ்ந்து கூறுகிறார். அப்படி என்றால் "போதும் இந்த நரகம்..!" என, என் மனைவி என்னை திட்டுவது எனக்கு புரியவில்லை? ஒருவேளை அவள் ஒளவையார் ஆக இருந்து இருந்தால், அவளும் என்னுடன் சேர்ந்து குடிப்பாளோ, பட்டிணப்பாலை [106-110] சில அடிகளும் சேர ஒரு கற்பனை, எங்கள் அத்தியடி வீட்டின், முன் விறாந்தையில் இருந்த குந்தில் சாய்ந்த படி வந்தது. "துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" அதாவது,தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந் திருந்த பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால், தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு, மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என ஒரு கூத்தே கனவில் வந்தது. கண்ணை திறந்து பார்த்தேன், அருகில் மனைவி, ஒரு திருக்குறள் ஒன்றை தூக்கி என் கண்முன் எறிந்தார். இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதியதே . சத்தப் போட்டு “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926) என்று பாடி காட்டினார். உறங்கினவர் இறந்த வரை விட வேறு பட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே என்று அவர் என்னை திட்டுவது எனக்கு அப்பத்தான் மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது. என்னை எதுக்கும் தொட்டுப் பார்த்தேன். நான் இன்னும் சாகவில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டேன். எனக்கு வள்ளுவரின் மேல் கோபம் தான் வந்தது. இவருக்கு ஏன் இந்த வேலை ? நேரம் போக ஒரே பசி, மனைவி அறை கதவை மூடிக்கொண்டு உறங்கி விட்டாள். இது மார்கழி முன்பனி காலம். குளிரும் என்னை வாட்ட தொடங்கிற்று. மெல்ல அடுப்படி கதவை திறந்து உள்ளே பார்த்தேன். அடுப்பு வெறிச்சோடி இருந்தது. சட்டி , பானை எல்லாம் கவுண்டு இருந்தன. என்ன செய்வது என்று புரியவில்லை. கிணற்றடிக்கு போய் , வாளியால் தண்ணீர் அள்ளி வயிற்றை கொஞ்சம் நிரப்பினேன். பின், எம் வீட்டுக்கு முன் நின்ற பாண்டி மாங்காயை தட்டி வீழ்த்தி, அதை கடித்துக்கொண்டு, அதே குந்தில், போர்க்கவும் துணி இன்றி கூனிக்குறுகி படுத்துவிட்டேன். "கதிரவன் காலில் ஒளி வீச, காற்று கொஞ்சம் முகத்தை வருட, வயிறு மெல்ல பசி எழுப்ப குந்தில் இருந்து எட்டி பார்த்தேன்!" அறைக்கதவு திறந்து இருந்தது, ஆனால் அவளைக் அங்கு காணவில்லை. அடுப்படி இன்னும் அவள் திறக்கவில்லை. ஆனால் கிணற்றடியில் குளித்த அடையாளம் கண்டேன். அப்படி என்றால் எங்கே ? அப்பத்தான் ஞாபகம் வந்தது, இன்று சனிக்கிழமை. அவள் சனிபகவானை எண்ணி விரதம் இருப்பது வழமை. பொதுவாக காலை எனக்கு சமைத்து தந்து விட்டு தான் ஆலயம் போவாள். இன்று எனோ நேற்றைய கோபம் போல்! நான் தினம் தினம் குடிப்பவன் அல்ல, கொண்டாடம்களில் மட்டும், அல்லது பொதுவாக வெள்ளிக் கிழமைகளில் நல்லாக குடித்து, என் கவலை தீர ஆடுவேன். அதில் என்ன தவறு. என் அறிவுக்கு புரியவில்லை, தேன் மதுவை விடவும் காட்டமான சுரா, சோம பானங்களை தயாரித்து அந்த காலத்திலேயே ஒரு கிளர்ச்சியூட்டியவர்கள் வேதாதி ரிஷிகள் ! அது போகட்டும், ”ஊக்கமளிப்பதும், உற்சாகமளிப்பதுமான இந்த சோமத்தை இந்திரனுக்கு அளியுங்கள்” என அன்று அறை கூவல் விட்டதையும் காண்கிறோம். ”சோமனே, நீ பல பாண்டங்களில் வைக்கப்பட்டிருக்கிறாய், பகல் வேள்வியில் பாலோடும், மாலை வேள்வியில் தயிரோடும் கலக்கப்படுகிறாய், நீ தீரனுக்கு மிக்க மதமளிக்கும் பானமாயிருக்கிறாய்”என்ற வரி எனக்கு நல்லாகவே பிடிக்கும். கொண்டாட்டங்களில் நான் முன்னின்று தீரனாய் இருப்பதும் அதனாலேயே! இது எல்லாம் எங்கே மனைவிக்கு புரியப் போகிறது? "போதை கொள்ளும் அழகை ரசிக்க பேதை உன்னை தினம் நாடி கோதை புனைந்த கூந்தல் வருட கீதை சொல்லி விரதம் இருப்பவளே!" "காதை பொத்தி கண்ணை மூடி கதை கதையாய் புராணம் சொல்லி புதைத்து விடுவாய் ஆசை எல்லாம் பதைத்த உள்ளம் தேடுதே போத்தலை!" போதும் இந்த நரகமென போத்தலில் வாழ்வு நான் காண, போதும் இந்த நரகமென ஆலயம் போகிறவளே, கொஞ்சம் நில் ! யாரால் யாருக்கு நரகம் ? ஏன் சிந்திக்க மாட்டாய்! இருவரின் வாழ்வும் புரிந்துணர்வு இல்லாமல் அழிகிறதே ! நரகம் நாடி போகிறதே!! இந்த உலகில் வாழ்வதே எவ்வளவு சிக்கலாக இருக்கிறது ? எத்தனை பிரச்சனைகள் ? ஒரு நாள் போல் இன்னொரு நாள் இல்லை. ஒரு நாள் மகிழ்ச்சியாக இருக்கிறது... இன்னொரு நாள் துன்பம் வருகிறது. இந்த உலக வாழ்வே இப்படி என்றால் நரக வாழ்வு எப்படி இருக்கும் ? "கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும், நள்ளேன் என் மனைவியோடு அல்லால்; நரகம் புகினும், எள்ளேன் அவள் அன்பாலே இருக்கப் பெறின்; தேவியே உள்ளேன் பிற மகளீர் உன்னை அல்லாது; என் உத்தமியே !" தேவியே, இந்திரன், திருமால், பிரமன் வாழ்வு எனக்கு வேண்டாம். என் குடியே (குடும்பமே) கெட்டாலும், வேறு ஒருவளுடன் உறவு கொள்ள மாட்டேன். என் மனவியைத் தவிர. நரக வாழ்வே கிடைக்கும் என்றாலும், அதற்காக வருத்தப் படமாட்டேன், அவள் அன்பு இருக்கப் பெற்றால். தேவியே, உன்னைத் தவிர, வேறு மங்கையரை நினைக்க மாட்டேன், எ ன் உத்தமியே என கத்த வேண்டும் போல் இருந்தது, அவள் காதில் விழும் என்றால் ? அப்பொழுது தான் அவள் ஆலயத்தால் வந்துகொண்டு இருந்தாள்! 'சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்று மாற்றம் பெற்றுவிட்டது என்று நம்புபவள் என் மனைவி. சஷ்டி திதியிலே விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று ஒரு பிரசாங்கமே செய்வாள். பாவங்கள்! இவளிடம் கேட்கும் நண்பர்கள்? இப்படி எத்தனையோ விரதங்கள். சொல்லுவாள். ஆனால் நான் 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்பதைத்தான், இப்படி ஏமாற்றி பிழைக்கிறார்கள் என்பேன். சட்டியும் அகப்பையும் சேர்ந்தால் தானே அதில் செய்ததை [விளைந்ததை] வெளியே எடுக்கலாம் என்பேன். இவன் குடித்து விட்டு உளறுகிறான் என, "போதும் இந்த நரகம்..!" என்பது போல, என்னை விட்டு போய் விடுவார்கள்? ஆமாம். எனக்கும் போதும் இந்த நரகம்..!, என்றவாறு ஒரு உயிரியல் புத்தகத்தை , அவள் வரும் காலடியில் விழும்படி தூக்கி எறிந்தேன். எனக்கு வேறு இனி இருப்பதாக தெரியவில்லை. புத்தகத்தை காலடியில் எறிவது பாவம் என்று குனிந்து எடுத்தவள், அவள் எடுத்த பக்கத்தின் படத்தினதும் அதன் விளக்கத்தையும் பார்த்தவுடன் , அப்படியே நின்று விட்டாள். எனக்கு ஒரே ஆச்சரியம்.. எட்டிப் பார்த்தேன். வெட்கத்தில் தலை குனிந்தபடி, காலால் எதோ தரையில் கிறுக்கினபடி, போதும் இந்த நரகம்..! என , அர்ச்சனை தட்டை , குந்துக்கு அருகில் உள்ள தூண் அருகில் வைத்துவிட்டு என்னையே கண்கலங்கி பார்ப்பதை கண்டேன்! "யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே." என்னுடைய தாயும் அவளுடைய தாயும் யார் யாரோ? என் தந்தையும் அவள் தந்தையும் எந்த முறையில் உறவினர்? நானும் அவளும் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல, அன்புடைய எம் நெஞ்சம் தாமாக முதல் முதல் ஒன்றுபட்டனவே! இதுவரை நிலவிய இருவரின் நரகமும் எங்கே என்று இருவருக்கும் தெரியவில்லை? "போதும் இந்த நரகம்..!" இருவரின் வாயும் ஒரே நேரம் ஒலித்தது!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] -
By goshan_che · Posted
இது வெறும் சந்தேகமே….தனியே இது மட்டும் அல்ல….மேலும் சில சந்தர்ப சாட்சியங்களும், circumstantial evidence இருக்கிறது….இது நீண்ட நாளாக அவதானித்து வந்த ஒரு விடயம்தான். ஆனால் குற்றசாட்டு இல்லை. சந்தேகம் மட்டுமே. பார்ப்போம்….பெருமாள் என்ன சொல்கிறார் என.
-
-
Our picks
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
narathar posted a topic in பேசாப் பொருள்,
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
-
- 5 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.