Jump to content

நிறமிழக்கும் வண்ணங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிறமிழக்கும் வண்ணங்கள்

image_9fca02380e.jpgசரி எங்குதான் போவது, ஒருவாறு சமாளித்துகொண்டு இருந்துவிடும் எம்மில் பலரும், இரண்டு வருடங்களுக்கு ஒருதடவையேனும், மாறிக்கொண்டே இருப்பர். இருப்பதை ஆங்காங்கே மாற்றிமாற்றி அடுக்கிவைப்பதைத் தவிர, புதிதாக வாங்குவதற்குக் கனவு கண்டாலும், அது கனவிலேயே கலைந்துவிடும்.

ஏனெனில், சில வாடகை வீடுகளில், மாடிவீட்டுக்கான ஏறுபடிகளைக் கூட, தங்கள் வீட்டுக்குள்ளே ஒழித்துவைத்துக் கொள்வர். அதனால்தான் என்னவோ, “கல்யாணம் கட்டிப்பார்; வீட்டைக்கட்டிப்பார்” என, முன்னோர் கூறிக்கொண்டிருப்பதை இன்னும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

கல்யாணத்தைக் கட்டிக்கொள்ளும் எம்மில் பலருடைய, வீட்டைக் கட்டுவதற்கான ஆசைகள், நிராசைகளாகவே முடிந்துவிடுகின்றன. இருக்கும் வரையிலும் சொந்த வீடிலில்லாமலே வாழ்க்கையைக் கழித்துவிடும் பலரும், வாடகை வீடுகளிலேயே பாட்டி, தாத்தாவென ஒவ்வொருவரை இழந்து, முழுக்குடும்பத்தையும் தொலைத்துவிடுவர். இன்னும் சிலருக்கு, வாடகை வீட்டிலேயே திருமணமும் நடைபெற்று, ஆரம்பப் புள்ளி இடப்படுகிறது.

“எலி வங்குக்கு ஒப்பான உன்வீட்டில், எத்தனை ஆண்டுகள்தான், தலையை குனிந்துகொண்டே பயணிப்பது” என, வீராப்பாக யோசித்தாலும், அடுத்த தவணைக்கான பணத்தைச் சேமிப்பதில், அதிக கவனத்தையே இன்னும் சிலர் செலுத்துகின்றனர்; இது கொடும் கனவாகும்.

பொதுவானதெனக் கூறி, மின்சாரம், தண்ணீர் மீற்றர்கள் எல்லாவற்றையும் ஒன்றென ஒற்றுமை பேசி, கட்டணத் தொகையைப் பிரிக்கும்போது மட்டும், ஆகக் குறைவாகத் தங்களுக்குப் பிரித்துக்கு கொள்வது, வீட்டு உரிமையாளர்களுக்கு மட்டுமே, கைவந்த கலையாக இருக்கிறது.

இதனால், இரண்டு வருடங்களுக்கான முற்பணத்தில் மாத வாடகையையும் கழித்து, அடுத்த இரண்டு வருடங்களுக்கு யாரிடமாவது கையேந்தும் நிலைமை ஏற்பட்டுகிறது. இதனால்தான் என்னவோ மகாகவி பாரதியார்,

காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும் - அங்கு

தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் - அந்தக்

காணி நிலத்தினிடையே - ஒருமாளிகை

கட்டித் தரவேண்டும்!

எனப்பாடி வைத்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் இந்தப் பாடல் வரிகளே, இன்று அநேக இல்லத்தரசர்களின் ஏக்கமாக உள்ளன. தமக்கெனச் சொந்தக் காணி, வீடு இருக்க வேண்டுமென்பதே அவர்களின் இலட்சியமாக உள்ளது. இதற்காகவே இரவு, பகலாக உழைக்கின்றனர்.

ஆனால், அந்த இலட்சியம் நிறைவேறும் வரை, வாடகை வீடுகளில் கூண்டுப் பறவைகளாக, இவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லிலடங்காதவை. ஆனால், என்ன அவஸ்தைகள் ஏற்பட்டாலும், தமக்கு மாற்று வழியொன்று இல்லாமையால், மீண்டும் மீண்டும் அதே வாடகைக் கூண்டுகளுக்குள்ளேயே சுற்றிவருகின்றனர்.

வேலைவாய்ப்பு, கல்வி எனப் பல தேவைகள் நிமித்தமும் வசதிவாய்ப்பு, நகர மோகம் போன்றவற்றாலும் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு நகரும் பலரே, வாடகை வீடுகளில் அல்லது, அறைகளில் பெரிதும் அல்லற்படுகின்றனர்.

பத்திரிகை, இணையத்தள விளம்பரங்கள் ஊடாகவே, அனேகமானோர் வாடகை வீடுகளை நாடுகின்றனர். விளம்பரத்தைப் பார்த்துச் செல்லும் பெரும்பாலானோருக்கு, ஏமாற்றமே கிட்டுகின்றது. காரணம், விளம்பரப்படுத்தப்பட்ட வீட்டுக்கும், நேரில் அவர்கள் பார்க்கும் வீட்டுக்கும் சம்பந்தமே இருக்காது. இரண்டு அறைகள் எனக் குறிப்பிட்டிருப்பார்கள். அங்கு சென்றால், ஓர் அறையே இருக்கும். வாகனத் தரிப்பிடம் உள்ளதென, வீடு அமைந்திருக்கும் வீதியோரத்தைக் காட்டுவார்கள்.

விளம்பரப் புகைப்படங்களில், வீடுகளை அழகாகக் காட்டியிருப்பர். ஆனால், அவ்வீட்டுச் சூற்றுச்சூழல் மிக மோசமானதாக இருக்கும். இவ்வாறு, பல்வேறு பிரச்சினைகள் அங்கிருக்கும்.

இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான், வாடகை வீட்டில் பலர் குடியேறுகின்றனர். இந்தச் சகிப்புத் தன்மையும் கால ஓட்டத்தில் பழகிப்போய்விடும்.

கொவிட்-19 தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, முடக்கங்கள் காரணமாக, பல நாடுகளின் அபிவிருத்திகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில், சுமார் 60 மில்லியன் மக்களைத் தீவிர வறுமைக்குள் இட்டுச் செல்லும் என, உலக வங்கி எச்சரித்துள்ளது.

மில்லியன் கணக்கானோர் தொழில்களை இழந்துள்ளதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடம், உலகளாவிய ரீதியில் பொருளாதாரம் மந்த நிலையிலேயே காணப்படும் என்றும், உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் தெரிவித்துள்ளார்.

இதுபோன்றதொரு சூழ்நிலையில், வாடகை வீடுகளில் இருப்பவர்கள் குறிப்பாக, கொழும்பு போன்ற பிரதான நகரங்களில் வாழ்பவர்கள், அறைகள், வீடுகள், கடைகள் என்பவற்றை வாடகைக்கு எடுத்திருப்போர், தற்போது பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். தமது வருமானத்தை இழந்திருக்கும் நிலையில், வாடகையைக் கட்டமுடியாது திணறுகின்றனர்.

அவர்கள் மாத்திரமல்லாது, தமது வீடு, அறை, கடை என்பவற்றை வாடகைக்கு விட்டு, அதில் வரும் வருமானத்தில் மட்டுமே தங்கியிருப்போரின், நிலைமையும் மோசமாகவே உள்ளது.

இதனால், பெரும்பாலானோர் இந்த இடர் காலத்தையும் பொருட்படுத்தாது, வாடகைப் பணத்தை வசூலிப்பதிலேயே குறியாக உள்ளனர். அதிலும், சிலர் வெளிநாடுகளில் இருந்துகொண்டும், மனிதாபிமானம் இல்லாது வாடகைகளை அறவிடுகின்றனர்.

எனவே, வாடகை கட்டுதல், பெறுதலில் பல முரண்பாடுகள் தோன்றியுள்ளன. வீட்டைக் காலி செய்யுமாறும், கடையைத் திருப்பித் தருமாறும் உரிமையாளர்கள் பலர் தகராறிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள், நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதைக் காண முடிகின்றது.

பலர் தொழில்களை இழந்து, அன்றாட வாழ்க்கையையே பெரும் போராட்டத்துக்கு மத்தியில் கொண்டு செல்கையில், இப்படியான பிரச்சினைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

அண்மைக் காலமாக, இந்த வாடகைப் பிரச்சினை குறித்த பல உரையாடல்கள், பேஸ்புக் ஊடாக உலா வருகின்றன. 

தனிநபரொருவர் தங்குவதற்கான, குளியலறையுடனான ஓர் அறைக்கு, சுமார் 6,000 முதல் 15,000 ரூபாய் வரை, மாதாந்த வாடகை அறவிடப்படுகின்றது. குளியலறை, சமையல் அறையுடன் கூடிய வீடுகள், 15,000 முதல் 150,000 ரூபாய் வரை அறவிடப்படுகின்றன. அதிலும், ஆரம்பர வீடுகளின் மாத வாடகை பல இலட்சங்கள் வரை செல்கின்றன. இவை, இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. இங்கு, வாடகைகளுக்கென ஒரு வரையறை நிர்ணயிப்பு கிடையாது.

வீடுகளை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள், தங்களுக்கு ஏற்றவாறு, வீட்டு வாடகைகளை உயர்த்திக் கூறுவதோடு, உரிமையாளர் பாவிப்பதற்கான மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம், சுத்தம் செய்பவர்களுக்கான கட்டணம், வீட்டுக்காவலர் கட்டணம், பராமரிப்புக் கட்டணம் எனப் பல வகைகளிலும் கட்டணங்களை வசூலிக்கின்றனர். இயலுமானவர்கள் குடியேறுகின்றர்; ஏனையோர் வேறு இடம் தேடுகின்றனர்.

மேலும், முற்பணம், வாடகை ஒப்பந்தம், குத்தகை உள்ளிட்ட பல விடயங்களில் வீட்டு உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையில் பலவேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில், வீடொன்றை வாடகைக்கு வழங்கும் போது, அங்குள்ள அறைகளுக்கு ஏற்ப வாடகைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எமது நாட்டில், மக்களுக்குத் தெரிந்த வகையில், வாடகை நிர்ணயிப்புத் தொடர்பான சட்டம் நடைமுறையில் இல்லையென்றுதான் கூற வேண்டும்.

ஆனாலும், வாடகை வீடுகளில் வசிப்பவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, வீட்டு வாடகை நிர்வாகக் குழுவொன்று இலங்கையில் செயற்படுகின்றது. இது, பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டாலும், அது பற்றி மக்கள் பெரிதாக அறிந்திருக்கவில்லை. எனினும், சில நகர சபைகளின் ஊடாக, இவ்வாறான பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படுவதும் உண்டு.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், எல்லோருக்கும் சொந்த வீடுகள் இருக்க வேண்டும். இந்த இடர் காலத்தில், வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு, நிவாரணமே மறுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், சொந்த வீடுகளா வழங்கப்படும்?

ஆனால், கொழும்பு மாவட்டத்தில் மூன்று இலட்சம் பேர், வாடகை வீடுகளில் வசிக்கின்றனர் என்றும் இவ்வாறு வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு, நிரந்தர வீடுகளை வழங்கவுள்ளதாக, நல்லாட்சி அரசாங்கத்தில், பெருநகரம், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக இருந்த பாட்டலி சம்பிக்க ரணவக்க, கடந்தாண்டு தெரிவித்திருந்தார். எனினும், தற்போது அது குறித்த பேச்சுக்கே இடமில்லாமல் போயுள்ளது.

இந்த வாடகைப் பிரச்சினை குறித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிர்கள், ஊடகவியலாளர்கள் சிலர், அரசாங்கத்தின் கவனத்துக்கு அண்மையில் கொண்டுசென்றனர். இதன் தொடராக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவைப் பத்திரமொன்றையும் சமர்ப்பித்திருந்தார்.

அத்துடன், “கொழும்பில் வாடகை வீடுகள், அறைகளில் தங்கியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீடுகளின் உரிமையாளர்கள், வாடகை அறவீட்டில் மனிதாபிமானமாக நடந்துகொள்ள வேண்டும்” என்றும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், வீடுகள், அறைகள், கடைகளை வாடகைக்கு விடுவோர், மனிதாபிமானமாக நடந்துகொள்ள வேண்டுமென, அரசாங்கமும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்ததுடன், ஒதுங்கிக்கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை, மனிதாபிமான முறையில் பரிசீலிப்பவர்கள் யார் என்பது இங்கு கோள்விக்குறியே.

கொரோனா வைரஸ் அனர்த்த வேளையில், வாடகை வீட்டில் தங்கியிருப்போர், வாடகை செலுத்த முடியாத பணநெருக்கடி ஏற்படும் பட்சத்தில், வாடகைக்குத் தங்கி இருப்பவரை வீட்டின் உரிமையாளர், வீட்டிலிருந்து வெளியேற்ற முடியாதளவுக்கு அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள், தற்போது கட்டுப்பாடுகளை விதித்து சட்டங்களை அமல்படுத்தியுள்ளன.

எமது நாட்டிலும், இந்த நடைமுறையைத் தற்சமயத்தில், எவ்வகையிலாவது கொண்டு வர முனையலாம். வேறுமனே வேண்டுகோளை விடுப்பதைத் தவிர்த்து, இந்த விடயத்தில் இரு தரப்பும் பாதிக்கப்படாதவாறு, அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குறைந்தது, ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில், இரண்டு மாத வாடகையை, உரிமையாளர்கள் அறவிடாமல், இலவசமாக இருக்க அனுமதிக்க வேண்டுமென, கண்டிப்பான அறிவித்தலை அரசாங்கம் விடுத்திருக்கலாம்.

அதேநேரத்தில், அறைகள், வீடுகள், கடைகள் ஆகியவற்றi வாடகைக்கு வழங்கி உள்ளவர்களுக்கு, சிறு நிவாரணத்தை வழங்கி, குடியிருப்பாளர்களிடமிருந்து வாடகையை அறவிடாத நிலையை உறுதிப்படுத்தி இருக்கலாம். எனினும், இவ்விரு தரப்பினரும், அரசாங்கத்தால் கவனிக்கத் தவறிய சமூகத்தினராகவே இன்று வரை உள்ளனர்.

இதனாலேயே, மாடிகளுக்கான எலிவங்குப் படிகளை, தங்கள் வீட்டுக்குள்ளேயே ஒழித்துவைத்துக் கொள்வோரும், மின்சாரம், தண்ணீர் மீற்றர்களைப் பொதுவெனக்கூறி, கட்டணத் தொகைகளைக் கழிப்பதிலும் கூட்டியே கணக்கிடும் வாடகை வீட்டாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அப்படியாயின், அறைகளின் சுவர்களையும் தரையையும் மட்டுமே நாம் பயன்படுத்தலாமென நினைக்கலாம். இல்லையில்லை; அவற்றையும் பயன்படுத்த முடியாது. தவறுதலாக அடித்த ஆணியை சொற்களால் பிடுங்கிவிட்டு, வாடகைக் குடியிருப்பாளர்களையும் தொங்கவிட்டுச் செல்வர். அவ்வளவுக்கு அவர்களுடைய வார்த்தைகள் சுத்தியல் அடியைவிடப் பலமானதாகவும் நிறையுடையதாகவும் இருக்கும்.

இன்னும் சில வீடுகளில், அவர்களின் செல்லக் குழந்தைகளெனக் கூறப்படும் செல்லப்பிராணிகள், வாடகைக் குடியிருப்பாளர்களின் வீட்டுக்கதவை சிறுநீரால் கழுவிச்செல்லும்; அது செல்லமாகும்.

ஆனால், தத்தித் தத்தித் தவழும் எமது செல்வங்கள், சுவரைத் தொட்டு நடக்கத் தொடங்கிவிட்டால், செல்லத்தின் கால்களுக்குக் கொலுசு போட்டு, அழகு பார்ப்பதற்கு யாருக்குதான் ஆசையிருக்காது.

ஆசையிருந்தாலும், ஏதாவது தொட்டு, சுவர்களில் கிறுக்கி விடுவாளோ(னோ) என்ற அச்சம், வாடகைக் குடியிருப்பாளர்களிடத்தில் சூழ்கொண்டுவிடும். இங்கு, எமது செல்வங்களின் எண்ணங்கள் மட்டுமல்ல, வண்ணங்களும் எமது எண்ணங்களும் கனவுகளும்கூட நிறமிழந்துவிடுகின்றன.
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நிறமிழக்கும்-வண்ணங்கள்/91-250767

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.