Jump to content

காதல்,காமம், ஓரினச் சேர்க்கை, பாலியல் அத்துமீறல்: ஒரு செக்ஸ் தெரபிஸ்டின் அனுபவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதல்,காமம், ஓரினச் சேர்க்கை, பாலியல் அத்துமீறல்: ஒரு செக்ஸ் தெரபிஸ்டின் அனுபவம்

காதல்,காமம், ஓரினச் சேர்க்கை, பாலியல் அத்துமீறல்: ஒரு செக்ஸ் தெரபிஸ்டின் அனுபவம்Getty Images

பீட்டர் சேடிங்டன் மற்ற செக்ஸ் தெரபிஸ்ட்களைப் போல, தன் வாடிக்கையாளர்களிடம் பேசும் விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர், அவர்களைப் பற்றி வெளியில் பேசி நம்பகத்தன்மையை கெடுத்துக் கொள்ளாதவர். ஒரு தெரபிஸ்ட்டாக பல ஆண்டுகளாக இள வயதினருக்கு அவர் அளித்த சிகிச்சைகள் அடிப்படையில் அவருடைய வாடிக்கையாளர் பற்றிய கதைகள் உள்ளன.

மிகவும் அந்தரங்கமான ரகசியங்கள் பற்றி அவர்களுடன் நான் பேசுவேன். ஆனால், என்னைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அப்படி தான் இருக்க வேண்டும்.

நான் ஒரு செக்ஸ் தெரபிஸ்ட். ஆண்களின் விரைப்புத்தன்மை குறைபாடு, உடலுறவின் போது பெண்ணுறுப்பு இறுக்கமாகிக் கொள்ளக் கூடிய வலி மிகுந்த பெண்ணுறுப்புக் கோளாறு போன்ற விஷயங்களுக்காக உதவிநாடி என்னிடம் வருவார்கள். `உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா' என்று ஒரு வாடிக்கையாளர் கேட்டால், ஆமாம் ஆகிவிட்டது என்று கூறுவேன். அதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டேன். தொழில் சார்ந்து மட்டும் பேசுவோம். இவர்களிடம் ஒரு தெரபிஸ்ட் ஆக நான் பேசுவேன், நண்பராக அல்ல. அதனால் சில வாடிக்கையாளர்களுடன் ஒரு பிணைப்பு ஏற்படும். இத்தகைய பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவும் செயல்பாடுகள் காரணமாக அப்படி ஏற்படும்.

நான் பணியாற்றும் கிளினிக்கில், தெரபி அளிக்கப்படும் அறைகள் வீட்டின் ஹால் போல இருக்கும் - யாரும் இல்லாத ஹால் போல இருக்கும். செளகரியமான மூன்று இருக்கைகள் இருக்கும் - ஒன்று எனக்கு, வாடிக்கையாளர்களுக்கு இரண்டு. குடும்ப புகைப்படங்களோ, தனிப்பட்ட பொருட்களோ அங்கு வைத்திருக்க மாட்டேன். அதனால் ஒரு இடைவெளியை கடைபிடிக்க உதவியாக இருக்கும்.

ஜோடிகளையும் பார்ப்பேன், தனியாக வருபவர்களையும் பார்ப்பேன். தனியாக வரக் கூடியவர் அல்லது துணைவர் இருந்து, தனியாக ஆலோசனை பெற வருபவராக இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு, ராப் என்ற 29 வயது ஆண் என்னை சந்திக்க வந்தார். தன்னுடைய புதிய பெண் தோழி, ஏற்கெனவே அதிக அனுபவம் உள்ள அந்தத் தோழியுடன் தன்னுடைய செயல்பாடு குறித்து அவருக்கு அதிக கவலை இருந்ததால் என்னிடம் வந்தார். அந்தப் பெண்ணையும் தெரபிக்கு உள்ளாக்க அவர் விரும்பவில்லை. ஏனெனில் அவ்வாறு செய்வது சங்கடத்தை உருவாக்கும் என்று நினைத்தார்.

செக்ஸ் தெரபிஸ்டாக இருப்பது எப்படிப்பட்ட உணர்வை தரும்?VICKY LETA / BBC Three

அனுபவம் குறைவாக இருப்பதால் கெல்லியை வேறு மாதிரியாக பார்ப்பீர்களா என்று பேச்சின் இடையே நான் கேட்டேன். இந்த நிலை அவருடைய தோழிக்கு இருந்தால் எப்படி இருக்கும் என கேட்டேன். இது எந்த அளவுக்கு முக்கியமற்றது என்பதை அவர் விரைவாக உணரத் தொடங்கினார். தன்னுடன் வருமாறு தோழியை அவர் கேட்டுக் கொண்டார். கெல்லியும் வரத் தொடங்கியதும், ராப்-க்கு நம்பிக்கை திரும்பிவிட்டது. தனக்கு தெரிந்தவற்றைவிட, நிறைய தெரிந்தவனைப் போல காட்டிக் கொள்ளாமல், தன்னுடைய கவலைகளை நேர்மையாக வெளிப்படுத்தியதால் மாற்றம் ஏற்பட்டது.

20 வயதுகளின் முடிவில் இருப்பவர்கள் தொடங்கி 40 வயதுகளின் ஆரம்பத்தில் இருப்பவர்கள் வரை என் வாடிக்கையாளராக வருகிறார்கள். ஆனால், நீங்கள் நினைப்பதைப் போல, இள வயதினர் செக்ஸ் தெரபியை நாடுவதற்கு அச்சப்படுவது கிடையாது. உண்மையில், கடந்த 15 ஆண்டுகளில் என்னை நாடி வரும் இளவயதினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிக வயதானவர்களும், வாழ்வின் பிற்பகுதயில் புதிய உறவுகள் கிடைத்த நிலையில் தெரபிக்கு வருகிறார்கள்.
 

பாலியல் குறைபாடுகள்

பாலியல் குறைபாடுகள் என்பது இப்போது பெரிய சங்கடங்களை ஏற்படுத்துவதாக இல்லை. ஆபாச வீடியோக்கள், செக்ஸ் குறித்த மாறிவரும் எதிர்பார்ப்புகள் இதற்குக் காரணமாக உள்ளன. மக்கள் பல வகையான பிரச்சினைகளை இளவயதில் எதிர்கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆறாவது பாரம் படிக்கும் வயதில் உள்ளவர்கள் முதல் என்னிடம் வருகிறார்கள். விரைப்புத்தன்மை இல்லை என்பது முதல், செக்ஸ் குறித்த குழப்பங்கள் வரையிலான கேள்விகளுடன் அவர்கள் வருகிறார்கள். 2018 ஆம் ஆண்டில் ஒரு செக்ஸ் தெரபி மையத்தில் ஆலோசனைக்கு வந்தவர்களில் 42 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், 35 வயதுக்கும் கீழானவர்களாக இருந்தனர் என்று நான் பணியாற்றும், ரிலேட் (Relate) அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேசமயத்தில், என்னுடைய வாடிக்கையாளர்களில் முதியவருக்கு வயது 89. ஓரிரு ஆண்டுகளாக புதியவருடன் அவர் உறவில் இருந்து வருகிறார். துரதிருஷ்டவசமாக, அவரும், புதிய துணையும் பாலியல் உறவு வைத்துக் கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். அவர்கள் பொது மருத்துவரிடம் சென்றிருக்கிறார்கள். அந்த வயதிலும் அவர்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து டாக்டர் அதிர்ச்சி அடைந்ததைப் போல அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் என்னிடம் வந்திருந்தனர்.

செக்ஸ் தெரபிஸ்டாக இருப்பது எப்படிப்பட்ட உணர்வை தரும்?VICKY LETA / BBC Three

செக்ஸ் தெரபிக்கு வருபவர்களில் பலர் ஏற்கெனவே வேறு டாக்டரிடம் சென்றிருப்பார்கள். தங்களுடைய பிரச்சினை பற்றி யாராவது ஒருவரிடம் விரிவாகப் பேசுவதற்கான வாய்ப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பலரும் பதற்றமாக இருப்பார்கள் - அறைக்குள் எனக்கு எதிரே செக்ஸ் பிரச்சினைகளை செய்முறையில் காட்ட வேண்டி இருக்குமோ என்று நினைப்பார்கள். அப்படி நடப்பது கிடையாது! 

விரைப்புத்தன்மைக் குறைபாடு

என்னுடைய மிக இளவயது வாடிக்கையாளர், 17 வயது பையன். அவனுக்கு விரைப்புத்தன்மைக் குறைபாடு இருந்தது. அவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ள அவனுடைய தோழி முயற்சி செய்திருக்கிறார். அவனால் முடியவில்லை. அதனால் இருவரும் பிரிந்துவிட்டனர். தனது விரைப்புத்தன்மை கோளாறு தான் இதற்குக் காரணம் என்றான் அந்தப் பையன். பிறகு விலை மாதர்களிடம் முயற்சி செய்து பார்த்திருக்கிறான். மது அருந்தி பிரச்சினையை மறந்திருக்கிறான். ஆனால் எதுவுமே அவனுக்கு கை கொடுக்கவில்லை. என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. இப்போது அவனுடைய வகுப்பில் அவன்பால் ஈர்ப்பு கொண்ட ஒரு மாணவி இருக்கிறாள். அவனை அவள் விரும்புவது போலவும் தெரிகிறது. ஆனால் அந்த நட்பைத் தொடருவதற்கு அவன் பயப்படுகிறான்.

செக்ஸ் தெரபிஸ்டாக இருப்பது எப்படிப்பட்ட உணர்வை தரும்?VICKY LETA / BBC Three

ஆலோசனை கேட்டு பொது மருத்துவரை நாடியிருக்கிறான். இப்போது சிறிய வயதுதான் என்பதால், தானாக பிரச்சினை சரியாகிவிடும் என்று அந்த மருத்துவர் கூறியிருக்கிறார். அங்கே இருந்தபோது செக்ஸ் தெரபி பற்றிய ஒரு பிரசுரத்தை பார்த்திருக்கிறான். அதனால் இதை முயற்சித்துப் பார்க்கலாம் என வந்திருக்கிறான். முதலில் அவன் வந்தபோது பதற்றமாக இருந்தான். நாங்கள் பேசிய நேரம் முழுக்க முகம் முழுவதும் சிவந்து இருந்தது.

ஒவ்வொரு செக்ஸ் தெரபி ஆலோசனை நேரமும் வித்தியாசமாக இருக்கும். பெரும்பாலும் நாங்கள் அளிப்பது செக்ஸ் கல்வி தான். உடல் பாகங்களின் வரைபடங்களைப் பார்த்து பேசுவோம். உங்களுக்கு எப்படி இருந்தது, விரைப்பு எப்படி இருந்தது என்பது பற்றி படங்களைக் காட்டி பேசுவோம். அவனைப் பொருத்த வரையில் ஆர்வம் தான் பிரச்சினையாக உள்ளது என்று புரிய வைத்தேன்.

வீட்டில் விரைப்புத்தன்மை பெறுவதற்கும், தொடர்ந்து மூன்று முறை அதைக் குறைப்பதற்கும் நான் பயிற்சி கொடுத்தேன். தனக்கு மீண்டும் விரைப்புத்தன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த இவ்வாறு செய்தேன். படிப்படியாக, அவனுக்கு அதிக நம்பிக்கையாக உணர்ந்தான். ஏழு சந்திப்புகளில் அவனுடைய பிரச்சினை தீர்ந்து போனது. தெரபி முடிந்து ஒரு மாதம் கழித்து, மையத்துக்கு வந்த அவன் ஒரு குறிப்பை கொடுத்துவிட்டு சென்றான். தன் வகுப்பில் உள்ள அந்த மாணவியுடன் வெளியில் செல்வதாகவும், விரைவில் தாங்கள் உறவு கொள்ள வாய்ப்புள்ளதாக நினைப்பதாகவும் அதில் எழுதியிருந்தான்.
 

தெரபிஸ்ட் பணியைத் தொடங்குவதற்கு முன்பு, இருப்பிடப் பள்ளிக்கூடம் ஒன்றில் சிறப்புக் கல்வி தேவைகளுக்கான ஆலோசகராக இருந்தேன். பள்ளிக்கூடத்தில் பணி செய்வது எவ்வளவு கஷ்டமானது, மாணவர்களால் தம்பதியினரின் உறவுகளை சரியாக பராமரிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பதை அறிந்து கொண்டேன். அவர்களுக்கு உதவியாக நிறைய செய்ய வேண்டும் என்று விரும்பினேன். என் வேலைகளுடன் சேர்த்து, தம்பதியினரின் ஆலோசகராக இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். பிறகு முழுநேர பணிக்கு மாறினேன்.

உறவுகள் குறித்த பிரச்சினை தொடர்பாக தம்பதியினருக்கு நான் உதவி செய்யும்போது, அவர்களுடைய பிரச்சினைகள் பாலியல் சார்ந்ததாகவும், உணர்வுகள் சார்ந்ததாகவும் இருப்பதை அறிந்தேன். எனவே அனைத்து நிலைகளிலும் அவர்களுக்கு உதவிட, செக்ஸ் தெரபி பயிற்சி அளிப்பது என்று நான் முடிவு செய்தேன்.

செக்ஸ் தெரபிஸ்டாக இருப்பது எப்படிப்பட்ட உணர்வை தரும்?VICKY LETA / BBC Three

ஓரினச் சேர்க்கையாளர்கள்

செக்ஸ் தெரபிஸ்ட் ஆக நான் தகுதி பெற்றதும் நான் பார்த்த ஒரு ஜோடியினர், உணர்வு ரீதியாக பலமான பிணைப்பு கொண்டிருந்தனர். ஆனால் 20கள் மற்றும் 30கள் என்ற வயதில் இருந்த மேட் மற்றும் அலெக்ஸ் என்ற அவர்கள் செக்ஸ் வாழ்வில் உதவி தேவைப்படும் நிலையில் இருந்தனர்.

முதலாவது அமர்வில் நாங்கள் பேசியபோது, இருவருமே வெட்கப்பட்டனர். இருக்கையில் முழுதாக அமரவில்லை, என் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்தனர். பின்புறம் வழியாக உறவு கொள்தல் போன்ற, வெளிப்படையான செக்ஸ் விஷயங்கள் பற்றி என்னிடம் பேச அவர்கள் தயங்கினர். நான் அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டேனோ என்று தயங்கியதைப் போல தெரிந்தது. ஏனெனில் அவர்கள் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள். விரைப்புத் தன்மை தான் பிரச்சினையாக இருக்கும் என்று யூகித்தேன். எனவே வெளிப்படையாக நேர்மையாக செக்ஸ் பற்றி பேச தயாரா என்ற கேள்வியை எழுப்பினேன்.

விரைப்புத்தன்மை கோளாறுகள், விந்து முந்துதல் ஆகியவைதான் நிறைய ஆண்கள் என்னைப் பார்க்க வருவதற்கான காரணங்களாக உள்ளன. ஆண் ஓரினச் சேர்க்கை உறவுகளில், இருவருக்கும் விரைப்புத்தன்மை எதிர்பார்க்கப்படும் நிலையில், செயல்படுதலில் அதிக மன அழுத்தம் இருக்கும். இருபால் உறவு தம்பதிகளைப் பொருத்த வரையில், குறைந்தபட்சம் அந்தத் தருணத்தில் ஆணுக்கு ஒப்பீடு எதுவும் இருக்காது.

அந்தரங்கத் தொடுதலில் மன அழுத்தத்தை நீக்குவதற்கு மேட் மற்றும் அலெக்ஸ்-க்கு தொடுதலுக்கான பயிற்சிகளை அளித்தேன். ஒருவர் இன்னொருவரை அரை மணி நேரத்துக்கு தொட வேண்டும் - அவருடைய உடலின் பாகங்களை தொட்டு ஆனந்தம் அளிக்க வேண்டும். அவர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். ஆனால், அடுத்தவரின் பிறப்புறுப்பைத் தொடுவதற்கு இருவருக்குமே அனுமதி கிடையாது. இது உறவுக்கு முந்தைய விளையாட்டு அல்ல. ஆனால் உணர்வுகளில் கவனம் செலுத்தும் விஷயம்.

இறுதியாக, அவர்கள் உடல் முழுக்க தொட்டுக் கொண்டனர். உறவில் இறங்குவதற்கு முன், அடுத்தவரின் உணர்ச்சியை எப்படி தூண்டுவது என புரிந்து கொண்டனர். அவர்கள் நிறைய முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். இந்த ஆலோசனை நேரங்களை, உறவுக்கான இரவுகளைப் போல கருதிக் கொண்டனர். மெழுகுவர்த்திகள் வைத்து, உணர்ச்சியைத் தூண்டும் இசையை கேட்டனர். மேட்டின் நம்பிக்கை சீக்கிரமாக அதிகரித்துவிட்டது என்பது மகிழ்ச்சியான செய்தி.

15 வார கால தெரபிக்குப் பிறகு, இருவருமே உறவு கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். பிறகு சில வாரங்களில், எல்லா நேரங்களிலும் உறவு கொள்ள முடிவதாக அவர்கள் என்னிடம் கூறினர். தெரபி முடிந்து 3 மாதங்கள் கழித்து, தொடர் ஆலோசனைக்காக அவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் அதிக காதலாக இருந்தனர். தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அவர்கள் கூறினர்! அவர்கள் மகிழ்வாக இருக்கிறார்கள், நன்றாக இருக்கிறார்கள் என அறிந்ததில் மகிழ்ச்சியாக இருந்தது.

என்னுடைய வேலை கிளர்ச்சி தருவதாக இருக்கிறது என என் நண்பர்கள் கூறுகிறார்கள். நீங்கள் ஓர் ஆலோசகர் என்று கூறும்போது மற்றவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் நீங்கள் செக்ஸ் தெரபிஸ்ட் என்று கூறினால் பார்வை முற்றிலுமாக மாறிப் போகிறது. சிலர் செக்ஸ் பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அதைப் பேசினால் கொஞ்சம் அசவுகரியமாக உணர்வார்கள். இருந்தாலும் மற்றவர்கள் தங்கள் செக்ஸ் பிரச்சினைகளை மகிழ்ச்சியுடன் என்னிடம் கூறுகிறார்கள். 

சிலர் தொழில் ரீதியாக என்னை அணுகலாமா என கேட்பார்கள், தெரிந்த ஒருவருடன் பேசுவது அதிக நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பார்கள். ஆனால் நான் மறுக்க வேண்டியிருக்கும். என் வேலை சார்ந்த விஷயங்களை நான் வீட்டுக்கு எடுத்துச் செல்வதில்லை. நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் சிகிச்சைக்கான உறவு முறையை நீங்கள் கொண்டிருக்க முடியாது.

பாலியல் அத்துமீறல் அல்லது பாலியல் தாக்குதல் போன்ற கடந்த கால அதிர்ச்சிகள் தான் செக்ஸ் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருக்கும். ஒரு பெண் வாடிக்கையாளர், அவருக்கு உறவு நேரத்தில் பெண் உறுப்பு இறுக்கமாகிக் கொள்ளும். தனது தம்பி பிறந்த போது, தாயார் சாவைத் தொட்டுவிட்டு வந்தார் என்று சொன்னதை அவர் கேட்டிருக்கிறார். 

செக்ஸ் தெரபிஸ்டாக இருப்பது எப்படிப்பட்ட உணர்வை தரும்?VICKY LETA / BBC Three

நாங்கள் இரண்டாவது சந்திப்பில் பேசியபோது, வாடிக்கையாளரின் குழந்தைப் பருவம், குடும்பப் பின்னணி மற்றும் ஆரம்ப கால பாலியல் அனுபவங்கள் பற்றி பேசினோம். சிறு வயதாக இருந்தபோது, தன் தாயாரின் அலறைக் கேட்டதாகவும், தன்னால் அப்படி தாங்க முடியாது என மற்றவர்கள் பேசியதைக் கேட்டதாகவும் தெரிவித்தார்.

உறவு குறித்த அவருடைய கவலைகளை தீர்ப்பதற்கு, சி.பி.டி. என்ற பழக்கப்படுத்தும் தெரபி முறையை செய்தோம். நிகழ்வுகளுக்கு தானாகவே விளைவுகளை வெளிப்படுத்துவதற்குப் பழகுதல் பற்றியது அது. இடுப்புப் பகுதியில் வயிற்றில் உள்ள பெல்விக் புளோர் தசைகளை தளர்வாக வைத்துக் கொள்ள நான் கற்றுக் கொடுத்தேன். செயற்கையாக பெண்ணுறுப்பில் நுழைப்பது போல பயிற்சி செய்ய ஊக்கம் கொடுத்தேன். முனையில் உருண்டையாக இருக்கும் குச்சி போன்ற ஒரு பொருளை அதற்குப் பயன்படுத்துவோம். அது வெவ்வேறு அளவுகளில் இருக்கும். அவர்களின் பெண்ணுறுப்பில் யாராவது உள்ளே நுழைத்து உதவி செய்வார்கள்.

சிகிச்சைகளைப் பிரித்துக் கொள்ளும் முறைகளை நான் கற்றுக் கொள்ளாமல் போயிருந்தால், இந்த வேலையில் நீடித்திருக்க முடியாது. சில கஷ்டமான, துயரமான கதைகளையும் நான் கேட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் நான் ஒருபக்கமாக தள்ளி வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நான் வெற்றிகரமாக இருக்க முடியாது. நோயாளிக்காக வருத்தப்படுவது பயன்தராது.

ஆனால் சோகமான ஒரு நேரம் இருந்தால், மகிழ்ச்சியான நேரமும் இருக்கும். சிலநேரங்களில், தெரபி முடிந்த நிலையில் தம்பதியினரிடம் இருந்து எனக்கு மெசேஜ்கள், கார்டுகள் வரும். ``உங்கள் உதவிக்கு நன்றி, இப்போது கர்ப்பமாக இருக்கிறோம்!'' என அவை வரும். உண்மையில், ஒரு தம்பதியினரிடம் இருந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகும் கார்டுகள் வருகின்றன. இப்போது எப்படி இருக்கிறோம் என்பதை அதில் கூறியிருப்பார்கள். அவர்களுடைய ஒரு குழந்தைக்கு என்னுடைய பெயரை வைத்து, என்னை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்!

இந்த வேலையை செய்வதால் நீங்கள் அதிகம் பணம் சம்பாதிக்கவில்லை என்பதால், இதைச் செய்வதற்கு வேறு காரணம் இருக்க வேண்டும். உங்களுடைய ஆலோசனையைக் கேட்டு தங்கள் வாழ்க்கையில் மக்கள் மாற்றம் பெறுவதைப் பார்ப்பது அற்புதமான உணர்வைத் தரும்.

பிபிசி 3-க்காக நடாஷா பிரெஸ்கியிடம் கூறியது...
 

https://www.bbc.com/tamil/global-52785457

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.