Jump to content

மன்னாரில் பிறந்து, கல்வி கற்ற தமிழரே அரசாங்க அதிபராக நியமிக்கப்பட வேண்டும் - முருங்கன் ரஜமஹா விகாரை விகாராதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் பிறந்து, கல்வி கற்ற தமிழரே அரசாங்க அதிபராக நியமிக்கப்பட வேண்டும் - முருங்கன் ரஜமஹா விகாரை விகாராதிபதி

மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உற்பட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்பட வேண்டும் என்று மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தார்.

thero.jpg

மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) அலுவலகம் நேற்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

-இதன் போது அமைச்சருடன் உரையாடுகையிலேயே மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அமைச்சரிடம் மேலும் தெரிவிக்கையில்,

நீங்கள் சரியாக யோசிக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருடன் சேர்ந்து கடமையாற்ற வேண்டும்.

நான் உங்களுடன் முன்னுக்கு நிற்கின்றேன். எல்லாறும் வேலை செய்ய வேண்டும்.வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும். குறிப்பாக புத்தளம் மற்றும் வேறு இடங்களில் இருந்து இங்கு வந்து வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளுகின்றனர்.

ஏன்   காலி மாவட்டத்தில் உள்ள சிங்களவர் ஒருவர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் வேறு மாவட்டத்தில் இருந்து மன்னாரிற்கு வந்த அரசாங்க அதிபர்.

மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உற்பட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்படவேண்டும். என்று மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மேலும்  தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/82629

Link to comment
Share on other sites

வடகிழக்கு மாகாணங்களில் பிறந்தவர்களையும், ஏனைய மாகாணங்களில் பிறந்தவர்கள் ஆட்சி செய்யும்போது, வேறு மாவட்டத்தில் பிறந்த பிக்குவும் டக்ளசும் மன்னார் மாவட்டம்பற்றி முடிவெடுக்க முயல்வது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. 

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உற்பட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்பட வேண்டும் என்று மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர்

மதவெறியை கக்கும் பௌத்த பிக்கு!

Link to comment
Share on other sites

நல்ல நோக்குடன் கூறிய கருத்தாகின் வரவேற்கக்கூடியதே. டக்ளஸ் இங்குள்ள அரச அதிபரை மாற்றுவதட்கு முயட்சித்து கர்தினாளினால் நிறுத்தப்பட்ட்தும் எல்லோருக்கும் தெரியும். எனவே அவரிடமே இந்த கருத்து முன்வைக்கப்பட்ட்து நல்லது. கார்த்தினாலுடன் பிக்குவும் இணைந்துள்ளார்.

Link to comment
Share on other sites

18 hours ago, Rajesh said:

மதவெறியை கக்கும் பௌத்த பிக்கு!

இங்கு எங்கு மத வெறி இருக்கு ?

அதை விட முக்கியம்... யார் வருவதென்று எங்கட கள்ள காணி களவானி தான் தீர்மானிப்பார்.. பொது தேர்தலில்  ராஜபக்‌ஷ 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் அவர் மீண்டும் இணைவார் அதுக்கு பிறகு கள்ளமாக காணி பிடிக்க மாட்டார் நேரடியாவே புடுங்கி எடுப்பார். ரணிலின் காலத்தில் தமிழர்கள் பலர் ஆடிய ஆட்டம் கொஞ்சமா...அவர் ஒட்டிசுட்டானில் குடியேற்றம் அமைக்க முயன்ற பொழுது மட்டக்களப்பில் இருந்து பஸ் பிடித்து போய் அட்டகாசம் பண்ணியவார்கள் எல்லாம் இனி வாய் மூடிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

On 24/5/2020 at 16:15, கிருபன் said:

மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உற்பட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்படவேண்டும்.

அப்பிடியே வவுனியாவுக்கும் திருகோணமலைக்கும் நுவரெலியாவுக்கும் தமிழ் அரச அதிபரை கேட்டா ஒரு நேர்மை இருக்கும். இல்லை என்றா இது ஒரு சந்தர்ப்பவாத மதவெறி தான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.