Jump to content

சிங்களத் தரப்புடனல்ல, வல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது; கஜேந்திரகுமார் நேர்காணல்


Recommended Posts

“சிறிலங்கா அரசாங்கத்துடனோ, எதிர்க்கட்சியினரிடமோ, சிங்களத் தரப்புக்களுடனோ நாங்கள் பேரம் பேச வேண்டியதில்லை. வல்லரசுகளுடனேயே பேரம் பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, இதற்கான அறிவுள்ள, ஆளுமையுள்ளதொரு தலைமைத்துவத்தையே தமிழ்மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் ஊடாக நிச்சயம் நாங்கள் முன்னோக்கிச் செல்லலாம் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை” எனக் கூறியிருக்கின்றார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தினக்குரலுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனான நேர்காணல்….

கேள்வி:- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் உங்களுக்கு நடந்த விடயங்கள் தொடர்பில்…

பதில்:- உண்மையிலேயே அரசாங்கம் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முடக்குவதற்காகத் திட்டமிட்டு மேற்கொண்ட நடவடிக்கையாகத் தான் நாம் அனைத்துத் தடைகளையும் பார்க்கின்றோம். இது வெறுமனே எங்களுடைய அமைப்பிற்கு மட்டுமல்ல வேறு அமைப்புக்களுக்கும் இந்த நெருக்கடிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் தமிழினப் படுகொலை வாரமாக அனுஷ்டிக்க வேண்டுமென்ற கூடுதலான ஏற்பாடுகளை நாங்கள் தான் மேற்கொண்ட தரப்பு என்ற வகையில் எங்களை நோக்கித் தான் அதிகமான குறி வைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரமென்பது வெறுமனவே நாங்கள் நினைவு கூரும் நிகழ்வாக மாத்திரம் பார்க்க முடியாது. இந்த இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டிக்கும் அதேநேரம் இனப் படுகொலை செய்த தரப்புக்கள் தொடர்பாக இன்னொரு செய்தியையும் நாங்கள் கொடுக்கின்றோம். அத்துடன் யார் உண்மையான குற்றவாளிகள் என்பதையும் நாம் இனம் காட்டுகின்றோம்.

தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் இனப்படுகொலை செய்த தரப்புக்களில் மிக முக்கியமானவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாகத் தற்போதைய ஜனாதிபதி போர் நடாத்தியதில் மிக முக்கிய மூளையாகச் செயற்பட்டுள்ள நிலையில் தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பல்வேறு தடைகளும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

ஆனாலும், எம்மைப் பொறுத்தவரை நாங்கள் உரிமைகளுக்காகப் போராடுகின்றதொரு தரப்பென்ற வகையில் இவ்வாறான தடைகள், எதிர்ப்புக்களைத் தாண்டியும் எங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில் நாங்கள் மிகவும் தெளிவாகவிருக்கின்றோம்.

சட்டவிரோதமாக எங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு எங்களைத் தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டாலும் கூட எங்களால் இயன்றளவுக்கு நீதிமன்றத்தை நாடி எமக்கெதிரான திட்டமிட்ட செயற்பாடுகளை முறியடி த்தோம்.

நாங்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து வைத்துள்ளோம். எனவே, அந்த இலக்கை அடைவதற்கு எத்தகைய தடைகள் வந்தாலும் நாங்கள் தொடர்ச்சியாகப் போராடுவோம். இதுவே, இந்த வருட மே-18 நினைவேந்தல் நிகழ்வு மூலமாக எங்கள் மக்களுக்கு நாம் சொல்ல வரும் மிக முக்கியமான செய்தி.

கேள்வி:- உங்கள் மீது அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ், இராணுவம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியிருந்தீர்கள்.அந்த செயற்பாடு தற்போது எந்தக் கட்டத்தில் உள்ளது?

பதில்:- இதுதொடர்பாக நாங்கள் எங்கள் சட்ட ஆலோசகர்களுடன் தற்போது ஆலோசித்து வருகிறோம். சிறிலங்கா சட்டத்தையே மீறி எங்களுக்கெதிராக எடுக்கப்பட்ட தனிமைப்படுத்தும் நடவடிக்கை இரண்டு வாரத்திற்கு எங்கள் சுதந்திரத்தையே கட்டுப்படுத்தும் நடவடிக்கை. ஆகவே, இதுவொரு சாதாரண நடவடிக்கையல்ல.

பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதொரு சூழலிலேயே இவ்வாறானதொரு செயற்பாடு அரங்கேறியுள்ளது. கொரோனாத் தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் எங்களுடைய கட்சி முன்னின்று செயற்பட்டு வருகிறது. அதுமாத்திரமன்றி சமகாலத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்பதிலும் எங்கள் கட்சி முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. இத்தகையதொரு சூழ்நிலையில் தான் எங்களை முடக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, எமக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இத்தகைய மோசமான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னர் இதனால் ஏற்படப் போகும் விளைவுகள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாதவிடத்து எமக்கெதிரான இத்தகைய நடவடிக்கைகள் தொடரவே செய்யும். ஆகவே, இனியும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர நாம் இடமளிக்க கூடாது.

எனவே, சட்ட நுணுக்கங்களைத் தெளிவாக ஆராய்ந்த பின்னர் தான் சட்டவிரோதமாக எங்களுக்கெதிராக நீதிமன்றத்தை நாடி நடவடிக்கைகள் எடுத்த தரப்புக்களுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றோம்.

கேள்வி:- உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கே தடைகளைப் போடும் அரசாங்கத்திடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?

பதில்:- நடந்த இனப்படுகொலைக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் தடைகளைப் போடுவதால் அவர்கள் தீர்வைக் கொடுக்கப் போவதில்லை எனக் கூறுவது என்னைப் பொறுத்தவரையில் தவறானதொரு கணிப்பு.

முன்னர் இந்த நாட்டை ஆட்சி செய்த அரசாங்கம் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. எனினும், அவர்களும் தீர்வு வழங்குவதற்குத் தயாராகவிருக்கவில்லை. மாறாக அவர்கள் தமிழ்த் தரப்புக்களைப் பயன்படுத்தித் தமிழ்மக்களுக்கு சாபக்கேடாக காணப்படும் ஒற்றையாட்சியை ஏமாற்றி ஏற்றுக் கொள்ள வைக்கும் மிக ஆபத்தானதொரு செயற்பாட்டைச் செய்தார்கள்.

ஆகவே, நினைவு கூருவதற்கு அனுமதி வழங்கியமையால் தமிழ்மக்களுக்கு நன்மை செய்வார்களெனவும், நினைவு கூருவதற்குத் தடை விதிக்கின்றமையால் எதுவுமே செய்ய மாட்டார்கள் என்ற முடிவுக்கும் நாங்கள் வரக் கூடாது.

நாங்கள் இந்த விடயங்கள் தொடர்பில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில் சிங்களத் தேசியவாதத் தரப்புக்கள் எவருமே தமிழ்மக்களுக்கு விரும்பி எதனையும் வழங்கப் போவதில்லை என்பது உறுதி.

அவ்வாறாயின் நாங்கள் எவ்வாறு எங்கள் உரிமைப் போராட்டத்துக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளப் போகின்றோம்? என்ற கேள்வியை எமக்குள் நாமே எழுப்பி அதற்குரிய விடையையும் தேட வேண்டும்.

இவ்வாறான விடையை நாம் மிகத் தெளிவாகத் தேடிப் பெற்றுக் கொண்டமையால் தான் நாங்கள் வெறுமனவே இலங்கைத் தீவுக்குள் மாத்திரம் நிலவும் அரசியல் நிலைமைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு எங்களுடைய காய் நகர்த்தல்களைச் செய்வோமானால் இதைப் போன்றதொரு முட்டாள்தனம் வேறு கிடையாது. எனவே, இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள சர்வதேச அரசியலையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கைத் தீவு தொடர்பான வல்லரசு நாடுகளுடைய போட்டிகளையும் அவதானிக்க வேண்டும். இதன் ஊடாகத் தமிழ்த்தேசிய அரசியலுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள், இழப்புக்கள் தொடர்பாக கவனம் செலுத்தித் தான் நாங்கள் எங்கள் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, இதற்கு முதலில் எங்கள் மத்தியில் மிகத் தெளிவான, உறுதியானதொரு கொள்கை காணப்பட வேண்டும். எங்களுக்கென உறுதியானதொரு கொள்கை இல்லாமல் நாங்கள் வேறொரு தரப்பை அணுகிப் பேரம் பேசுவதற்கு வாய்ப்புக்களில்லை.

சிறிலங்கா அரசாங்கத்துடனோ, எதிர்க்கட்சியினரிடமோ, சிங்களத் தரப்புக்களுடனோ நாங்கள் பேரம் பேச வேண்டியதில்லை. வல்லரசுகளுடனேயே பேரம் பேச வேண்டியிருக்கிறது. ஆக்வே, இதற்கான அறிவுள்ள, ஆளுமையுள்ளதொரு தலைமைத்துவத்தையே தமிழ்மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் ஊடாக நிச்சயம் நாங்கள் முன்னோக்கிச் செல்லலாம் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

கேள்வி:- தமிழ்மக்களுடைய தீர்வு விடயத்தில் நீங்கள் தற்சமயம் கொண்டுள்ள நிலைப்பாடு என்ன?

பதில்:- தமிழ்மக்களுடைய தீர்வு விடயத்தில் தற்சமயம் என்ற நிலைப்பாடு எங்களிடமில்லை. நாங்கள் இந்த விடயத்தில் நிரந்தரமாக ஒரே நிலைப்பாடு உடையவர்களாகவே உள்ளோம். அந்த வகையில் எங்கள் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டே ஆக வேண்டும். அது தான் தமிழ்மக்களுக்கான நியாயபூர்வமான தீர்வு.

தமிழ்த் தேசத்தை அழிக்கும் செயற்பாடு தான் இனப்பிரச்சினை. எனவே, இதற்கான தீர்வு தமிழ்த் தேசத்தினுடைய அங்கீகாரமே. இந்த விடயத்தில் எங்களிடம் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களுமில்லை.

நாட்டைப் பிரிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. ஆகவே, அந்தத் தமிழ்த் தேசம் ஓர் தனிநாடாக இல்லாமல் சிங்கள தேசத்துடன் இணைந்து ஒரே நாட்டுக்குள் அமையும் அரசியல் கட்டமைப்பையே நாங்களும் கோருகிறோம்.

அந்த அடிப்படையில் தான் தமிழ்மக்கள் பேரவையில் எங்களுடைய திட்டங்களை முன்வைத்து, தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்து
இந்தத் தீர்வுத் திட்டத்தையே தமிழ்மக்களுக்கான நிரந்தரத் தீர்வுக்கான தீர்வுத் திட்டமாக அடையாளப்படுத்தி எங்கள் மக்கள் மத்தியிலொரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

கேள்வி:- இலங்கை படையினர் மீது அழுத்தங்களை கொடுக்கும் அமைப்பிலிருந்து வெளியேறுவோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருக்கிறார்.இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:- இது ஆச்சரியப்படக் கூடியதொரு விடயமல்ல. கோட்டாபய ராஜபக்சவாகவிருக்கலாம் அல்லது அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சவாகவிருக்கலாம். அவர்களின் சிங்களத் தேசியவாதமென்பது உச்சத்திலுள்ள, முரட்டுத்தனமான தேசியவாத அணுகுமுறையாகும். அவர்களைப் பொறுத்தவரை சிங்களத் தேசிய நலன்களை அடைவது என்பது வெறுமனவே அடைவு மட்டுமல்லாமல் அவர்களின் நேரடிப் பார்வைக்கு உட்பட்டதாகவும் அமைய வேண்டும்.

சிங்களத் தேசியத்திற்கு எதிராக நெருக்கடி எழுகின்ற போது மற்றைய தரப்பை முற்றாக நிராகரித்து அவர்களை அழிக்கின்றவளவுக்குச் செல்ல வேண்டுமென்பது தான் அவர்களுடைய தேசியவாதம்.

ஐக்கியதேசியக் கட்சியினுடைய தேசியவாதமும் நாசூக்காக இத்தகைய விடயங்களைக் கையாண்டது. ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்ட நிலையில் தீர்மானத்திற்குத் தாமே இணை அனுசரணை வழங்குகின்றோம் என இணக்கம் தெரிவித்து விட்டுப் பின்னர் ஐந்து வருட காலமாக அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கும் வகையில் தான் செயற்பட்டார்கள்.

ஆகவே, இலங்கை படையினர் மீது அழுத்தங்களை கொடுக்கும் அமைப்பிலிருந்து வெளியேறுவோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருப்பது ஒரு விமர்சனம் முன்வைப்பதையே ஏற்றுக் கொள்ள மறுப்பதாக அமைந்துள்ளது. எனினும், ஐக்கியதேசியக் கட்சி விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு பின்னர் தான் விரும்பியவாறு செயற்பட்டது.

எனவே, முன்னைய ஆட்சிக் காலத்திலும் சரி தற்போதும் சரி நடைமுறை ரீதியாகத் தமிழ்மக்களுக்கு கிடைக்கும் முன்னேற்றம் என்பது பூச்சியமாகவே காணப்படுகின்றது.

கேள்வி:- எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்களுடைய கட்சியும் போட்டியிடவுள்ளது.இந் நிலையில் தமிழ்மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத, தமிழ் மக்களைத் தொடர்ந்தும் புறக்கணித்து வரும் தலைவர்களைக் கொண்டுள்ள பாராளுமன்றத்துக்குச் சென்று நீங்கள் எதனைச் சாதிக்கமுடியும் எனக் கருதுகிறீர்கள்?

பதில்:- பாராளுமன்றம் ஊடாகச் சாதிக்க முடியுமென நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் கருதவில்லை. நாங்கள் ஒருபோதும் இலங்கைத் தீவுக்குள் எங்கள் அரசியலை முடக்கி எதனையும் சாதிக்க முடியாது. 75 வீதமான மக்கள் சிங்கள- பெளத்த மக்களாகவிருக்கும் நிலையில் 12.5 வீதத்திற்கும் குறைவான சனத்தொகையைக் கொண்ட தமிழ்மக்களைப் பார்த்து எந்தவொரு சிங்களத் தலைமைகளும் பயப்பட வேண்டிய தேவையில்லை.

ஆனாலும், தற்போது நிலவும் பூகோள அரசியலில் தமிழ்மக்களுடைய அரசியலென்பது மிக முக்கியமானதொரு கருவி. சிங்கள தேசத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஒரு வல்லரசு எங்களுக்குப் பின்னாலிருக்கும் நிலைமை வந்தால் அது கடும் சவாலை சிங்கள தேசத்திற்கு ஏற்படுத்தும்.

தமிழர்கள் ஓர் தேசமாக இலங்கைத் தீவில் இருப்பது தான் சிங்கள- பெளத்த தேசியவாதத்திற்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய அச்சுறுத்தல். இலங்கைத் தீவு வெறுமனே சிங்கள- பெளத்தர்களுக்கு மாத்திரம் இருக்க வேண்டுமென்ற சித்தாந்தத்தில் வளர்ந்து எவரும் இந்தத் தீவுக்கு உரிமை கோரக் கூடாது என்கின்ற மகாவம்ச மனநிலையிருக்கின்ற காரணத்தால் சிங்கள- பெளத்த தேசிய வாதிகள் தமிழ்த் தேசிய அரசியலை மிக மிக ஆபத்தானதொரு விடயமாகவே அவர்கள் பார்ப்பார்கள். எனவே, தமிழ்த்தேசிய அரசியலுக்குப் பின்னால் ஓர் வல்லரசு வருகின்ற போது அது சிங்கள தேசத்திற்கு கடும் சவாலானதொன்றாக அமையும்.

எனவே, தமிழ்த்தேசிய அரசியல் மட்டும் தான் சிங்கள- பெளத்த தேசியவாதத்திற்குக் கடும் அழுத்தத்தை வழங்குமொரு கருவியாக அமைந்துள்ளது. இதனால் தான் தமிழ்த்தேசிய அரசியலைக் கையாள்வதற்கு மேற்கு, இந்தியா நாடுகள் மிகவும் கஷ்ரப்பட்டுத் தங்களுடைய முகவர்களைத் தமிழ் அரசியலுக்குள் இறக்கினார்கள். இதே காரணத்துக்காகத் தான் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ் இனத்துக்காகவும், தமிழ்மக்களுடைய உரிமைகளுக்காகவும் நேர்மையாகப் போராடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து அகற்றியது. பின்னர் மீதியாகவுள்ள தமிழ்த் தரப்புக்களைத் தாம் கையாளக் கூடிய வகையிலும், தாம் சொல்லும் சொற்களைக் கேட்கக் கூடிய வகையிலும் இருக்கக் கூடிய தரப்புக்களைத் தலைமைப் பீடத்திற்குக் கொண்டது வர வேண்டுமென்ற முடிவெடுத்துத் தான் மேற்கும், இந்தியாவும் இணைந்து தமிழ்மக்களுடைய உரிமைப் போராட்டத்தை மெளனிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

ஆகவே, வல்லரசுகள் போட்டி விடயத்தில் தற்போதைய நிலையிலும் தமிழ்த்தேசிய அரசியல் என்பது மிக முக்கியமானதொரு இடத்திலுள்ளது. இதனை விளங்கிக் கொண்டு அந்தத் தரப்புக்களுடன் மாத்திரம் தான் பேச வேண்டும். மாறாக, இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் மாத்திரம் பேசி நாங்கள் எமக்கான தீர்வுகளைப் பெற முடியாது. எனினும், நாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் ஏன் நாங்கள் போட்டியிடுகின்றோம் எனில் தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பிரதிதிகளாக எங்களை அடையாளப்படுத்த வேண்டியுள்ளமையாலேயே ஆகும்.

கேள்வி:- எதிர்வரும் தேர்தலில் வடக்கு,கிழக்கில் பல கட்சிகள் களமிறங்கவுள்ள நிலையில் உங்களுடைய கட்சியினுடைய வெற்றி வாய்ப்புக்கள் எவ்வாறு அமையுமென எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:- தற்போதைய சூழலில் வட- கிழக்கில் ஒரு மாற்றம் நிகழ வேண்டுமென்ற திட்டவட்டமான முடிவுக்குத் தமிழ்மக்கள் வந்துள்ளனர். அந்த மாற்றம் என்பது ஒரு உண்மையான மாற்றமாகவிருக்க வேண்டுமென்பதிலும் அவர்கள் மிகத் தெளிவாகவிருக்கின்றார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உண்மையில் தமிழ்த்தேசிய அபிலாசைகளுடன் இல்லையென்ற முடிவுக்கு வந்தமையால் கண்களை மூடிக் கொண்டு இன்னொரு தரப்பிற்கு வாக்களிப்பதனால் எதனையும் சாதிக்க முடியாது என்பது கடந்த காலச் செயற்பாடுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் கூட்டமைப்பு பிழையானதொரு தரப்பு எனத் தமிழ்மக்கள் விளங்கிக் கொண்டாலும் சரியான தரப்பை அடையாளப்படுத்தி வாக்க்களிக்கவில்லை. இதனால் தான் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான கடந்த இரண்டரை வருடங்களில் இவ்வளவுக்கு ஊழல்களையும், பிரச்சினைகளையும் காண முடிகிறது.

யாழ். மாவட்டத்தில் மாத்திரம் தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கணிசமான மாற்றுத் தரப்பாக காணப்படும் நிலையில் யாழில் ஊழல்களும் , மோசடிகளும் ஒரு எல்லையை மீறி இடம்பெறாதவளவுக்கு நாங்கள் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். இந்த இரண்டரை வருடங்களிலும் உண்மையில் தமிழ்மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தரப்பு யார்? என்பதைத் தமிழ்மக்கள் அடையாளப்படுத்தியுள்ளனர் என்பது தான் எங்களுடைய கணிப்பு.

கடந்த-2010 ஆம் ஆண்டு முதல் நாங்கள் தமிழ்மக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம். 2010 ஆம் ஆண்டு நாங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவுடன் மக்கள் மட்டத்தில் செல்கையில் எம்மைப் பற்றி எங்கள் மக்கள் மத்தியிலிருந்த பார்வையும், தற்போது மக்கள் எம்மைப் பற்றிக் கொண்டுள்ள பார்வையும் தலைக்கும், காலுக்கும் இடையில் வித்தியாசம் போன்று தானிருக்கிறது. அந்தளவுக்குத் தற்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதொரு தரப்பாகவும், நம்பக் கூடியதொரு தரப்பாகவும், கொள்கையில் உறுதியாகவுள்ள ஒரேயொரு தரப்பாகவும் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களாகத் தமிழ்மக்கள் கண்களை மூடிக் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ள ஆணைக்குச் சமமாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கினால் எதிர்வரும் ஐந்து வருடத்திற்குள் கணிசமானதொரு முன்னேற்றத்தை எங்கள் மக்களுக்கு நிரூபித்தே ஆவோம்.

கேள்வி:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகப் பேசியுள்ளார்கள். இதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:- மகிந்த ராஜபக்சவுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தமிழ்மக்களின் உரிமை சார்ந்ததோ அல்லது தமிழ்மக்களுடைய நலன்கள் சார்ந்த பேட்ச்சுவார்த்தைகளோ அல்ல.

மகிந்த ராஜபக்ச தற்போது நாட்டின் பிரதமராகப் பதவி வகித்து வரும் நிலையில் தேர்தல் சூழல் நிலைமையில் வட- கிழக்கில் தமிழ்மக்கள் மத்தியில் காணப்படும் காலநிலைமையைப் புலனாய்வுப் பிரிவு பிரதமருக்கு நிச்சயம் தெரியப்படுத்தியிருக்கும். எனவே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தற்போது பலவீனமான தரப்பாக காணப்படும் விடயமும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். இவ்வாறான பலவீனமானதொரு சூழலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்காக அரசாங்கத்துடன் சென்று பேரம் பேசியுள்ளார்கள் எனக் கூறுவது முட்டாள்தனமானதொரு பார்வை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்காக அரசாங்கத்துடன் பேரம் பேசவில்லை. மாறாகத் தங்களுடைய அரசியல் இருப்பு, சுயநல அரசியல் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றாவது வெல்ல வேண்டுமென்பதற்கான பேரம் பேசலாகவே நாங்கள் மேற்படி சந்திப்பைக் கருதுகிறோம். காலப் போக்கில் இந்த விடயம் இன்னும் இன்னும் தெளிவாகும்.

http://thinakkural.lk/article/42960

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் வாயால் வடைசுடுவதை  நிப்பாட்டி வென்று  காட்டுங்கோ தமிழ் சனத்தின்  சாபக்கேடுகளில் இந்த கூட்டம் வேறை அப்பப்ப இப்படித்தான் வடிவேலு போலை .

Link to comment
Share on other sites

Just now, பெருமாள் said:

முதலில் வாயால் வடைசுடுவதை  நிப்பாட்டி வென்று  காட்டுங்கோ தமிழ் சனத்தின்  சாபக்கேடுகளில் இந்த கூட்டம் வேறை அப்பப்ப இப்படித்தான் வடிவேலு போலை .

அவர் அமெரிக்காவை வல்லரசு என்று நினைத்து பேசுகிறார் போல இருக்குது. சீனாவை மறந்துவிடடார் போல. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.