Jump to content

புலிகள் கேட்ட தங்கமும் அரசாங்கம் கேட்கும் தங்கமும்


Recommended Posts

-என்.கண்ணன்


கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு சமிக்ஞையை வெளியிட்டிருக்கிறது.

1990 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் விடுதலைப் புலிகள் இரண்டாவது கட்ட ஈழப்போரைத் தொடங்கிய பின்னர், கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர். அப்போது புலிகள் தமது படைக் கட்டுமானத்தை அடுத்த கட்டுத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் இருந்தார்கள்.
அதற்காக, பெருமளவில் ஆயுதங்களை வாங்க வேண்டியிருந்தது. புதிதாக உருவாக்கும் படைக் கட்டமைப்புகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியிருந்தது. அதற்கு பெருமளவில் நிதி தேவைப்பட்டது. அந்த நிதியை புலிகளால், தமிழ் மக்களிடம் இருந்தே பெற வேண்டிய நிலையும் இருந்தது. 

அப்போது, புலம்பெயர் தமிழர்களிடம் பெரியளவில் பலம் இருக்கவில்லை. அவர்களை ஒருங்கிணைப்பதற்கான கட்டமைப்புகளும் பெரிதாக பலம்பெற்றிருக்கவில்லை. அங்கிருந்தும் கிடைக்கும் நிதி போதுமானதாக இருக்கவில்லை. இந்தநிலையில், தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களிடமே நிதியை திரட்ட புலிகள் முடிவு செய்தனர். அதற்கு முன்னரும், புலிகள் தமிழ் மக்களிடம் நிதி திரட்டியிருந்தனர்.

அதற்கும், 1990 இல் அவர்கள் அறிமுகம் செய்த திட்டத்துக்கும் பெரும் வித்தியாசம் இருந்தது. தமிழீழ மண் மீட்பு நிதி என்ற பெயரில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஒரு குடும்பம், 2 பவுண் தங்கத்தை கடனாக கொடுக்க வேண்டும், கட்டம் கட்டமாக அந்த கடன் திருப்பி செலுத்தப்படும் என்று நிதித்துறை பொறுப்பாளராக இருந்த தமிழேந்தி அறிவித்திருந்தார். அப்போது ஒரு பவுண் தங்கத்தின் மதிப்பு 5000 ரூபா. 2 பவுண் தங்கத்தை கொடுக்க முடியாதவர்கள், 10 ஆயிரம் ரூபாவைக் கொடுக்கலாம் என்ற மாற்றுத் திட்டமும் முன்வைக்கப்பட்டது.

எதைக் கொடுத்தாலும், மீளளிக்கப்படும் போது, புலி இலச்சினை பொறித்த தங்க நாணயமாகவே வழங்கப்படும் என்றும் புலிகள் அறிவித்தனர். புலிகள் கடனாக தங்கத்தைக் கேட்டதும், தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், அதிர்ந்து போனார்கள். அவர்கள் அதனைத் திருப்பிக் கொடுப்பார்கள் என்று யாரும் நம்பவேயில்லை. இது ஒரு காரணம். பொதுவாகவே, தங்கத்தில் தமது சேமிப்பை கொட்டும் வழக்கம் தமிழர்களுக்கு உள்ளது, எதைக் கொடுத்தாலும், அந்த சேமிப்பை யாருக்கும் இலகுவாக கைவிட்டு விடமாட்டார்கள். 

எனவே, புலிகள் தங்கத்தை கடனாக கேட்ட போது, அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் புலிகள், பல்வேறு உத்திகளையும், வழிகளையும் கையாண்டு பெருமளவானோரிடம் தங்கத்தை கடனாக பெற்றனர். அப்போது வடக்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. வடக்கில் இருந்து வெளியேற வேண்டுமானால், அவர்களின் பாஸ் அனுமதியை பெற வேண்டும். தங்கத்தை கொடுத்த பற்றுச்சீட்டை காண்பித்தால் தான், பாஸ் கிடைக்கும். இதுபோன்ற பல வழிகளின் மூலம், புலிகள் அந்த தங்க கடன் திட்டத்தை வெற்றிகரமாகவே நடைமுறைப்படுத்தியிருந்தனர்.

அது புலிகளின் நிதித் தேவையை முழுமையாக நிறைவு செய்தா என்ற கேள்வி ஒரு புறத்தில் இருக்க, அந்த தங்கத்தைக் கொண்டு அவர்கள், தமது பலத்தைப் பெருங்கிக் கொண்டார்கள் என்பது உண்மையே. 

அதேவேளை, தமிழீழ மண்மீட்பு நிதியாக பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதாக அளித்த வாக்குறுதியையும் அவர்கள் காப்பாற்றினார்கள். மாதம் தோறும், 100 பேர் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்டு, ஆண்டு தோறும் மாவீரர் நாளை அண்டிய காலத்தில், 1200 பேருக்கு கடன் மீளளிப்புச் செய்தனர்.

1990 இல் கொடுக்கப்பட்ட கடன், இறுதிக் கட்டப் போர் ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து மீளளிப்புச் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. புலிகளிடம் போன தங்கம் திரும்பக் கிடைக்காது என்று வெளிப்படையாக விமர்சித்தவர்கள் பலரும், தங்கம் மீளக் கிடைத்த போது, கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதுபோன்றதொரு திட்டத்தை, இலங்கை அரசாங்கம் வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தினால் ஆச்சரியப்பட முடியாது என்ற நிலையே இப்போது காணப்படுகிறது. அதற்கான ஒரு சமிக்ஞை, அரசாங்கத் தரப்பில் இருந்து வெளிப்பட்டிருக்கிறது.

பொதுஜன பெரமுனவின் பிரமுகரான முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, 1998 ஆம் ஆண்டு தென்கொரியாவில் வெளிநாட்டு நாணய நெருக்கடி ஏற்பட்ட போது, தம்மிடம் இருந்த தங்கத்தை, அந்த நாட்டு மக்கள் அரசாங்கத்திடம் கையளித்த முன்னுதாரணத்தை எல்லா இலங்கையர்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தென்கொரியாவில் 1998 இல் என்ன நடந்தது என்பதை பார்த்து விட்டு, இலங்கை விவகாரத்துக்கு வருவது பொருத்தம். 1997ஆம் ஆண்டு தென்கொரியா கடுமையான நிதி நெருக்கடிக்குள் சிக்கியது. தென்கொரியா வெளிநாட்டுக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறியது. அப்போது தென்கொரியா கிட்டத்தட்ட 304 பில்லியன் டொலர் வெளிநாட்டு நாணய மாற்றுக் கடனை திருப்பி செலுத்த வேண்டியிருந்தது.

பல்வேறு உபாயங்களைக் கையாண்டு நிதியைப் புரட்ட முயன்றும் தோல்வி தான் மிஞ்சியது. வேறு வழியில்லை. வெளிநாடுகளிடம் கடன்களை வாங்க முயன்ற போதும், திருப்பி செலுத்த கூடிய நிலை இல்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. 


அப்போது தான், தென்கொரிய ஒலிபரப்பு நிறுவனம் (SBS) 1997 டிசெம்பர் 25ஆம் திகதி தங்கத்தை அரசாங்கத்துக்கு கொடையாக கொடுக்கும் திட்டத்தை முன்டிமாழிந்தது. 1998 ஜனவரியில் இதுபற்றி தென்கொரிய ஒலிபரப்பு நிறுவனம் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்தது. இதற்கு தென்கொரிய மக்கள் பெரும் ஆதரவு கொடுத்தனர். 3.51 மில்லியன் மக்கள், தங்களிடம் இருந்த 2.13 பில்லியன் டொலர் பெறுமதியான 227 தொன் தங்கத்தை அரசாங்கத்திடம் கொடுத்தனர். இதில் 30 வீத தங்கம், திட்டம் தொடங்கப்பட்ட முதல் 10 நாட்களில் பெறப்பட்டது. இந்த தங்கத்தைக் கொண்டும், ஏனைய பொருளாதார மீட்சிக்கான வழிகளை பின்பற்றியும் தென்கொரியா நெருக்கடியில் இருந்து மீண்டது. இப்போது வளம் கொழிக்கும் நாடாகவும் மாறியிருக்கிறது. தென்கொரிய அரசாங்கத்துக்கு மக்கள் தொன் கணக்கான தங்கத்தை அள்ளிக் கொடுத்தது போல, இலங்கையர்களும் தங்களிடம் உள்ள தங்கத்தை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது ஆளும்கட்சி.

இது சாதாரணமான ஒரு கோரிக்கையாக கருதப்படத்தக்கது அல்ல. ஏனென்றால், இலங்கை இப்போது மிக மோசமான நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொண்டபோதே, பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியிருந்த அரசாங்கம், கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின்னர், கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடிகளை சமாளிக்க அரசாங்கம், எத்தகைய முடிவையும் எடுக்கக் கூடிய நிலைக்குச் சென்று கொண்டிருப்பதாகவே, அண்மைய செய்திகளும், வெளிப்படுகின்ற சமிக்ஞைகளும், உறுதிப்படுத்துகின்றன.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தைக் கொடுப்பதற்குக் கூட, அரசாங்கத்திடம் நிதி இல்லை என்பதை அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தனவே உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கொரோனா தொற்றினால், ஏப்ரல் மாதம், அரசாங்கத்தின் வருமானம், பாதிக்கும் கீழாக குறைந்து விட்டதே அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், அரசாங்கத்துக்கு பொருட்கள், சேவைகள் மூலம் கிடைக்கின்ற வரி வருமானம், இறக்குமதி தீர்வை, கலால் வரிகள் மற்றும் சுற்றுலாத் துறை மூலம் தான், அதிகளவில், வருமானம் கிடைத்து வருகிறது, ஏப்ரல் மாதம், இந்த துறைகள் பெரும்பாலும் முடங்கி விட்டன. எனவே அரசாங்கத்தின் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த வருமானங்கள் இப்போதைக்கு மீளக் கிடைக்கப் போவதில்லை.
அப்படிக் கிடைத்தாலும், உடனடியாக பொருளாதார நெருக்கடியை தீர்க்காது. இவ்வாறான நிலையில், அரசாங்கம் மாற்று வழிகள் பலவற்றை நாடக் கூடும்.

வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம், தங்க சேமிப்பு உள்ளிட்ட பலவற்றில் கை வைக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படலாம். இத்தகைய நிலையில் வேறு ஒரு தெரிவோ வழியோ அரசாங்கத்துக்கு இல்லாத போது, இந்த ஆயுதம் கையில் எடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
அதுவும் சிங்கள பௌத்த தேசியவாதத்தை முன்னிறுத்தும் ஒரு அரசாங்கம், அந்த தேசியவாதத்தையே தமக்குச் சாதகமானதாக திருப்பிக் கொள்ளவும் முடியும். எனவே, தங்கத்தை கோரும் திட்டம் அறிவிக்கப்படாது என்று கூறுவதற்கில்லை. அவ்வாறு அறிவிக்கப்பட்டால், அந்த கொடையை பெறுவதற்கு புலிகளின் பாணியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா அல்லது, தென்கொரிய பாணியில் பெறப்படுமா என்றும் தெரியவில்லை.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாஙகம் தங்கத்தை பெறும் திட்டத்தை அறிவித்தால் அதற்கு கடுமையாகவே எதிர்ப்புகளும் கிளம்பும். அந்த எதிர்ப்புகளை இந்த அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளாது என்பதே உண்மை.

https://www.virakesari.lk/article/82597

Link to comment
Share on other sites

On 24/5/2020 at 21:59, ampanai said:

1990 இல் கொடுக்கப்பட்ட கடன், இறுதிக் கட்டப் போர் ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து மீளளிப்புச் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. புலிகளிடம் போன தங்கம் திரும்பக் கிடைக்காது என்று வெளிப்படையாக விமர்சித்தவர்கள் பலரும், தங்கம் மீளக் கிடைத்த போது, கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதுபோன்றதொரு திட்டத்தை, இலங்கை அரசாங்கம் வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தினால் ஆச்சரியப்பட முடியாது என்ற நிலையே இப்போது காணப்படுகிறது. அதற்கான ஒரு சமிக்ஞை, அரசாங்கத் தரப்பில் இருந்து வெளிப்பட்டிருக்கிறது.

கள உறவு நொச்சியின் ஒரு பதிவில் இருந்து...... 

அனைத்துலக தமிழர் வைப்பகம் அல்லது நிதியம் என்ற நிறுவனம் என்பது காலத்தின் தேவைக்கானதொரு அமைப்பாக விளக்குவதோடு தமிழினத்தினது பொருண்மிய வாழ்வை உயர்த்தும் பெரும் தளமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. இதனைத் தமிழினம் ஒன்றிணைந்து செய்ய முன்வருமாயின், எமது இனம் தெளிவான அவதானிப்பைப் பெறும். ஏனெனில் இன்றைய உலக ஒழுங்கு என்பதை உற்று நோக்கினால் அதன் ஆதியும் அந்தமுமாய் நிற்பது பொருண்மியத் திரட்சியே. பொருண்மியத் திரட்சியானது இன்று ஒரு காந்தமாகவும், அதனைச் சுற்றியோ அல்லது அதனது ஈர்ப்பிலோ அனைத்தும் நிகழ்கின்றது என்பதே உண்மையாகும். இதனை நாம் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற பெரும் போர்களிலும் அவதானிக்கலாம். பொருண்மியப் பலமானது தமக்கிடையேயான இசைவாக்கத்துக்கான கருவியாகவும், தம்மோடு இசைவாக நிற்போரைப் பாதுகாப்பதற்கான கருவியாகவும் உள்ளது. அதனையே உலக ஒழுங்கென்ற போர்வையில் ஏனைய வறிய நாடுகளைக் கட்டுப்படுத்தவும் சுரண்டவும் வளர்ந்த நாடுகள் பயன்படுத்துகின்றன. இந்த இசைவே கொசொவோவின்KOSOVO (2005 மதிப்பீட்டின்படி மக்கள்தொகை 2,2மில்லியன். பரப்பளவு4,203 சதுரமைல்)விடுதலையை மேற்கும், தென்ஒஸெற்றியா South Ossetia(2000 மதிப்பீட்டின்படி மக்கள்தொகை75,000 பரப்பளவு1,506 சதுரமைல்) அப்காசியா Abkhasia(2003மதிப்பீட்டின்படி மக்கள்தொகை216,000(அல்லது இதற்கும் குறைவு உறுதிப்படுதப்பட வேண்டும்.) பரப்பளவு3,256 சதுரமைல்) மேற்கினது எதிர்நிலை நாடாக எப்போதுமே இருக்கும் ருஸ்யா இவற்றை அங்கீகரித்துப் படைகளையனுப்பிப் பாதுகாப்புமளித்தது என்பது உலகின் அண்மைய பதிவுகளாகும்.

இலங்கையரசுகூட புலம்பெயர் தமிழர்களது பணமாற்றீடுகளாலும் முதலீடுகளாலும் குறிப்பிட்டளவு நன்மையை அடைவதைக் காணலாம். சிங்களத் தேசியத்துக்கான நிதி முதலீட்டு நிறுவனங்கள் பல உள்ளன. ஆனால் தமிழருக்கான முதலீட்டு நிறுவனங்கள் எதுவுமே இல்லை. இன்று பெரும்பாலான தமிழர்கள் என்.ஆர்.எவ்.சீ(NRFC) எனப்படும் வதியாதோர் வைப்புக் கணக்குகளில் கணிசமான முதலீடுகளை வைத்துள்ளார்கள் என்பது யாவருமறிந்த விடயமாகும். நானறிந்த குடும்பமொன்று தமது வயோதிபத் தாயாருக்கு மாதாந்தம் பணம் அனுப்பேலாது என்று நான்கு லட்சம் இலங்கை ரூபாய்களை வைப்பிலிட்டுள்ளார்கள். இதனை நாம் தவறென்றும் கொள்ள முடியாது. இதுபோல் எம்மிடையே பலர் இருக்கலாம். அதைவிட இங்கு புலம்பெயர் நாடுகளில் சீட்டுக் கட்டுதல் (ஏலச்சீட்டுகள் சில மாதம் 500பவுண்கள் என்ற தொகைகள் கூட இருக்கிறது) வட்டிக்குக் கொடுத்தல் என்ற நடைமுறைக@டாகவும் சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க அளவிலான திரவப் பண மிதப்பு நடவடிக்கைகள் நடைபெறுவதனையும் நாம் கவனத்தில் கொள்ளலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பனையவரகளுக்கு நன்றி. 

பத்து வருடத்திற்கு முன்னான பதிவைத் தேடி இணைத்துள்ளீர்கள். ஆனால் இன்றுவரை தமிழரால் முடியாமலே உள்ளது. வடமாகாணசபையின் முயற்சி கூடத் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது.  தமிழினம் தனக்கான எந்த வளத்தையும் அமைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாகவும் உ றுதியாகவும் இருக்கிறது. தமிழினம் அமைப்புகளாக, கட்சிகளாக,  கைப்பாவைகளாக இன்னும் பலவாகி உதிரிகளாய் உடைந்து கொண்டே போகிறது.  பல லட்சம்  மக்களும்  பல்லாயிரம் இளையோரும்  தமிழ் தேசியத்திற்காக ஈகம் புரிந்து ஓருகொடியானபோதும் இன்றையநிலை........... ?  அனைத்தையும் எமதினம் கடந்து மீண்டும் ஒன்றாகி நிமிர வேண்டும். இன்று தெருச் சண்டையரசியலாகிச் சிங்களத்தை வலுப்படுத்தும் வங்குரோத்து அரசியலை தாய்நிலமாயினும் புலமாயினும் கைவிட்டு ஓரணியாகவேண்டும்.  இது ஒன்றேதான்  எமதினத்தின் விடியலுக்கான வழியென்பதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

நிலமுண்டு எம்மிடமில்லை. நிதியுண்டு நிறுவனமில்லை. நாளைய தலைமுறைக்காகவது தமிழினம் தனது பிற்போக்குத் தனங்களில் இருந்து விடுபடாவிடில் ஆயிரம் பிரபாகரங்களாலும் முடியாது. 

மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.