Jump to content

கொரோனா வைரஸ்: சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படாதா? #BBCRealityCheck


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படாதா? #BBCRealityCheck

ஸ்ருதி மேனன், பீட்டர் மவாய் பிபிசி ரியாலிட்டி செக் அணி 
கொரோனா வைரஸ்Getty Images

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அது ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் சிறிதும் குறைந்தபாடில்லை. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு ஈடாக அதுகுறித்த போலிச் செய்திகளும் அதிவேகமாக பரவி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான சில போலிச் செய்திகள் குறித்த பின்னணியை பார்ப்போம்.

1. மருத்துவர்கள் சைவ உணவுமுறையை பரிந்துரைக்கவில்லை 

கொரோனா வைரஸ்Social Media

இந்தியாவின் இரண்டு முக்கிய மருத்துவ அமைப்புகள் மற்றும் அந்த நாட்டின் மூத்த மருத்துவர் ஒருவர் ஆகியோர் வாட்சாப்பில் பரவி வரும் ஒரு குறிப்பிட்ட போலிச் செய்திக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். 

வைரலாக பரவி வரும் அந்த குறுஞ்செய்தியில், கொரோனா வைரஸ் தொடர்பான மற்ற வாட்சாப் பகிர்வுகளை போன்றே, நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து உங்களை தற்காத்து கொள்வது எப்படி, தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுவது எப்படி உள்ளிட்ட விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் பலவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இருந்தாலும், அதில் சைவ உணவுமுறையை பின்பற்றுதல், பெல்ட், மோதிரங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை அணிவதை தவிர்த்தல் முதலிய ஆலோசனைகள் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள உணவும் என்று கூறப்பட்டுள்ளதற்கு இதுவரை ஆதாரங்கள் எதுவும் இல்லை.

Banner image reading 'more about coronavirus'  

2. காய்ச்சலுக்கான தடுப்பூசியால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுமா?

ஒரு உண்மையான ஆராய்ச்சியை மேற்கோள்காட்டி, அதன் மூலம் இந்த தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

"நீங்கள் காய்ச்சலுக்கான ஊசியை போட்டிருந்தால், உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது" என்று பரவலாக பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்Social Media

அந்த பதிவில், அமெரிக்க ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி கட்டுரை ஒன்றின் இணையப்பக்கமும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆய்வு கட்டுரையானது கோவிட்-19 நோய்த்தொற்று பரவுவதற்கு முன்னர், அதாவது 2017-18 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை அடிப்படையாக கொண்டது ஆகும்.

எனவே, குழப்பமே வேண்டாம் - காய்ச்சலுக்காக ஊசி போடுவதால் கொரோனா வைரஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்ற கூற்றுக்கு இதுவரை எவ்வித ஆதாரமும் இல்லை.

3. நீண்டநேரம் முகக்கவசம் அணிந்தால் பிரச்சனையா?

கொரோனா வைரஸ்Social Media

நீண்டநேரம் முகக்கவசம் அணிவது உடல்நலனுக்கு ஆபத்தானது என்ற தவறான செய்தியை பரப்பும் கட்டுரை ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

முதலில் ஸ்பானிஷ் மொழியில் பரவலாக பகிரப்பட்ட இந்த கட்டுரை, பிறகு தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளிலும், நைஜீரியாவிலும் பரவியது. 

நீண்ட நேரம் முகக்கவசங்களை அணிந்துகொண்டு சுவாசிக்கும்போது, அதிகளவில் கரியமில வாயு உள்ளிழுக்கப்படுவதாகவும், இதனால் மயக்க உணர்வு ஏற்படுவதுடன், உடலில் ஆக்சிஜன் இழப்பு நேருவதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை முகக்கவசங்களை கழற்றி அணிய வேண்டும் என்று அந்த கட்டுரை பரிந்துரைக்கிறது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் மிஹிகோ, "இந்த கூற்று மிகவும் தவறானது. எளிதில் சுவாசிக்கக் கூடிய துணிகளை கொண்டே முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. இயல்பான சுவாச உணர்வை அளிப்பதோடு, தீமை பயக்கும் துகள்கள் மூக்கின் உள்ளே செல்வதை அவை தடுக்கின்றன" என்று அவர் கூறினார்.

தீங்கு விளைவிக்கும் தாக்கங்களை தவிர்ப்பதற்காக மக்கள் முகக்கவசங்களை அடிக்கடி கழற்றி அணிவதால் சுகாதார கேடு ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் எச்சரிக்கிறார்.

நுரையீரல் முழுவதும் வளர்ச்சியடையாத இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சுவாசம் சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுவோர் ஆகியோர் முகக்கவசங்களை அணியவதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.

4. புகைப்பிடித்தல் வைரஸைத் தடுக்க உதவாது

கொரோனா வைரஸ்Getty Images

மீண்டும் மீண்டும் பரவி வரும் இந்த கூற்று உண்மையாக இருக்க வேண்டுமென்று புகைப்பிடிப்பவர்கள் நினைக்கிறார்கள் - ஆனால், இது உண்மையல்ல.

அதாவது, புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக பல கட்டுரைகள் இணையதளத்தில் உலாவினாலும், அதை உறுதிசெய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

"கொரோனா வைரஸ் அபாயத்தை புகைப்பிடித்தல் குறைக்கும் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன" என்று கூறும் 'யூ.கே. மெயில் ஆன்லைன்' செய்தித்தளத்தின் கட்டுரை ஒன்று சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது.

கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் புகைப்பிடிப்பவர்கள் குறைவாகவே காணப்படுகிறார்கள் என்று பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், எனினும் இதில் வல்லுநர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிக்கோடின் கோவிட்-19 நோய்த்தொற்று பரவுவதை நிறுத்தக்கூடும் என்று இதுதொடர்பாக ஆய்வு நடத்திய பிரான்ஸ் மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மேலதிக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், "கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்கவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலோ நிக்கோட்டின் அல்லது புகையிலைக்கு தொடர்பு உள்ளதாக இதுவரை தேவையான அளவு ஆதாரங்கள் ஏதும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.

புகைப்பிடிப்பதோடு தொடர்புடைய பிற உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக புகைபிடிப்பவர்கள் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அது மேலும் கூறுகிறது.
 

https://www.bbc.com/tamil/global-52790380

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.