Jump to content

நடிகையை பார்க்க இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

fire-story_0_0-720x433.jpeg

நடிகையை பார்க்க, இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை!

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கொட்டைக்காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சூரியகுமார் தேனுஜா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.

மல்லாகம் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். எனினும் பெற்றோர்கள் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இப்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்த்துள்ளனர்.

இந்நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறி நேற்றுமுன்தினம் (24) வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.

தீக்காயத்திற்கு உள்ளன யுவதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அன்றையதினமே மாலை உயிரிழந்துள்ளார்.இந்த இறப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

http://athavannews.com/நடிகையை-பார்க்க-இந்தியா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இந்த அபலை பெண்.
இவரை முன்னமேயே தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தளவுக்கு  படிப்பறிவின் நிலை உளவள மன  ஆற்றல்  கல்வியும் சேர்த்தே படிப்பிக்க வேண்டிய நிலையில் வடகிழக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

26 வயசுப் பெட்டையை  கல்யாணம் கட்டி கொடுக்காமல் வீட்டில வைத்திருந்தால் இப்படித்தான் ...வர ,வர யாழ்ப்பாணம் இந்தியாவை விட கேவலமாய் போய்க்கிட்டு இருக்கு 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2020 at 19:19, ரதி said:

26 வயசுப் பெட்டையை  கல்யாணம் கட்டி கொடுக்காமல் வீட்டில வைத்திருந்தால் இப்படித்தான் ...வர ,வர யாழ்ப்பாணம் இந்தியாவை விட கேவலமாய் போய்க்கிட்டு இருக்கு 

 

On 25/5/2020 at 19:04, பெருமாள் said:

அந்தளவுக்கு  படிப்பறிவின் நிலை உளவள மன  ஆற்றல்  கல்வியும் சேர்த்தே படிப்பிக்க வேண்டிய நிலையில் வடகிழக்கு .

உப்பிடியான மண்டை லூசானதுகள் இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான்.

 

Link to comment
Share on other sites

On 25/5/2020 at 19:19, ரதி said:

26 வயசுப் பெட்டையை  கல்யாணம் கட்டி கொடுக்காமல் வீட்டில வைத்திருந்தால் இப்படித்தான் ...வர ,வர யாழ்ப்பாணம் இந்தியாவை விட கேவலமாய் போய்க்கிட்டு இருக்கு 

 

கல்யாணம் கட்டிக் குழந்தை பெற்றவர்களும், குழந்தை பாலருந்தும் நேரம் மறந்து சின்னத்திரை பார்ப்பது நம்மஊரிலும் நடக்கிறது.

26 வயசுப் பெட்டையின் ஆத்மா சாந்தியடைய, அந்த தென்னிந்திய சின்னத்திரை நடிகையைச் செத்தவீட்டில் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். :100_pray:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ஒழுங்காக விசாரனை செய்ய வேணும்.வேறை பிரச்சனையோ தெரியாது .இந்தக்காலத்தில் யாரை நம்புவது என்டு தெரியாது.26 வயதுப் பெண் ஏதோ மிட்டாய் கேட்ட மாதிரி கொஞ்சம் நம்ப சிரமமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை எல்லாம் ஒரு கனநேரத்து முடிவுதான்.விசர்ப்பெட்டை..... எவ்வளவுபேர் கை  கால்  கண் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்குதுகள்....இதுகளுக்கு எல்லாம் கொழுப்பு கூடிப்போச்சு ......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உப்பிடியான மண்டை லூசானதுகள் இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான்.

 

கொறோனா நேரத்தில், உலகமே முடங்கிப் போயிருக்கும் போது.....

அந்தப் பெட்டைக்கு வந்த, ஆசையை பாருங்கோவன். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இருந்தும் பலன் இல்லை

இப்ப இந்திய சினிமா மோகம் ஊரெல்லாம் கண்டியளோ யாரபார்த்தாலும் பாடுறன் படம் எடுக்கிறன் என்பதும் டைரக்டர் ஆகப்போறன் என்ற பேச்சும் அடிக்கடி அடிபடுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதெல்லாம் இருந்தும் பலன் இல்லை

இப்ப இந்திய சினிமா மோகம் ஊரெல்லாம் கண்டியளோ யாரபார்த்தாலும் பாடுறன் படம் எடுக்கிறன் என்பதும் டைரக்டர் ஆகப்போறன் என்ற பேச்சும் அடிக்கடி அடிபடுது 

அதுதான் நல்லது.அப்பதான் நாங்கள் ஆடு கோழி வளரத்து காசு பாக்கலாம்.

Link to comment
Share on other sites

 

இஞ்ச சிலபேர், முதியவர்கள் உட்பட, சினிமா நடிகைகளின்ற படங்களை போட்டு அடிக்கிற கூத்தை விடவா உந்தபிள்ளை பெரிசாசெய்து போட்டுது, சொல்லப்போனால் எல்லோரும் (சில தறுதலை பெண்டுகளும்) சேர்ந்து இந்த பெண்ணை கொலைசெய்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2020 at 03:04, பெருமாள் said:

அந்தளவுக்கு  படிப்பறிவின் நிலை உளவள மன  ஆற்றல்  கல்வியும் சேர்த்தே படிப்பிக்க வேண்டிய நிலையில் வடகிழக்கு .

இதுதான் உண்மை..நான் ஒவ்வொரு வருடமும் ஊருக்கு போவதுண்டு..அங்கே எவ்வளவு தூரம் பெண்கள் படித்து மிகவும் திறமையனவர்களாக, பல இடங்களில் முக்கியமான பதவிகளில் வேலைபார்த்து வந்தாலும், இன்னமும் பெரும்பாலான பெண்களின் மனமுதிர்ச்சி என்பது சிறுவட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது. அது கொஞ்சம் மாறவேண்டும். 

என்னைப்பொறுத்தவரை.  பாடசாலைகளில் இந்த மனநலம்பற்றிய அறிவை கற்பித்தல் மிகவும் அவசியம்.. இந்த பழையமாணவ சங்கங்கள் தேவையில்லாமல் கட்டடங்களை கட்டாமல் மாணவர்களின் மன ஆற்றல், உளரீதியான தைரியம், சுயகைத்தொழில் முயற்சிகளை பற்றிய பட்டறைகளை அதிகம் நடத்தினால் சமுதாயம் நன்மை பெறும்

On 26/5/2020 at 03:19, ரதி said:

26 வயசுப் பெட்டையை  கல்யாணம் கட்டி கொடுக்காமல் வீட்டில வைத்திருந்தால் இப்படித்தான் ...வர ,வர யாழ்ப்பாணம் இந்தியாவை விட கேவலமாய் போய்க்கிட்டு இருக்கு 

 

திருமணம் செய்து கொடுக்க வழியிருந்தால் எந்தப்பெற்றோரும்  பெரும்பாலும்.   அதனைத்தான் நாடுவார்கள்.. ஆனால் வழியில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

மேலும், திருமணம் செய்து கொடுத்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதுதான் உண்மை..நான் ஒவ்வொரு வருடமும் ஊருக்கு போவதுண்டு..அங்கே எவ்வளவு தூரம் பெண்கள் படித்து மிகவும் திறமையனவர்களாக, பல இடங்களில் முக்கியமான பதவிகளில் வேலைபார்த்து வந்தாலும், இன்னமும் பெரும்பாலான பெண்களின் மனமுதிர்ச்சி என்பது சிறுவட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது. அது கொஞ்சம் மாறவேண்டும். 

என்னைப்பொறுத்தவரை.  பாடசாலைகளில் இந்த மனநலம்பற்றிய அறிவை கற்பித்தல் மிகவும் அவசியம்.. இந்த பழையமாணவ சங்கங்கள் தேவையில்லாமல் கட்டடங்களை கட்டாமல் மாணவர்களின் மன ஆற்றல், உளரீதியான தைரியம், சுயகைத்தொழில் முயற்சிகளை பற்றிய பட்டறைகளை அதிகம் நடத்தினால் சமுதாயம் நன்மை பெறும்

திருமணம் செய்து கொடுக்க வழியிருந்தால் எந்தப்பெற்றோரும்  பெரும்பாலும்.   அதனைத்தான் நாடுவார்கள்.. ஆனால் வழியில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

மேலும், திருமணம் செய்து கொடுத்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? 

 

 

உண்மை தான் .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

திருமணம் செய்து கொடுக்க வழியிருந்தால் எந்தப்பெற்றோரும்  பெரும்பாலும்.   அதனைத்தான் நாடுவார்கள்.. ஆனால் வழியில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

மேலும், திருமணம் செய்து கொடுத்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? 

👍

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

திருமணம் செய்து கொடுக்க வழியிருந்தால் எந்தப்பெற்றோரும்  பெரும்பாலும்.   அதனைத்தான் நாடுவார்கள்.. ஆனால் வழியில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

சீதனம் என்று கொடுக்கவும் வேண்டும்.🥵

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.