Jump to content

பூதாகரமாக மாறிவரும் புலிகள் பணம் பெற்றதாக த.தே.ம.முன்னணி பிரமுகர் கூறிய விவகாரம்!


Recommended Posts

உள்ளூர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட த.தே.ம.முன்னணி பிரமுகர், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரேமதாசா மற்றும் பசிலிடம் பணம் பெற்றதாகக் கூறிய விடயம், சமூக வலைத்தளங்களில் மிகுந்த வாதிப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர் மக்களின் பனியிலும் குளிரிலும் க~;டப்பட்டு சம்பாதித்தது பொருளாதாரத்தால் போசித்த விடுதலைப் போராட்டத்தை, தமிழ் தாய்மார் தமது கழுத்தில் கிடந்த தங்கத்தைக் கொடுத்து தாங்கிய போராட்டத்தை, இளைஞர்கள் தங்கள் உயிரையே கொடுத்து நடாத்திய போராட்டத்தை, பசிலிடமும், பிரோமதாசாவிடமும் பணம் பெற்று நடாத்திய போராட்டமாக த.தே.மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் தெரிவித்த விவகாரம் புலம்பெயர் தேசங்களில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது.

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், அந்த போராட்டத்தில் தங்களை அகுதியாக்கிய மாவீரர்களையும் கொச்சைப்படுத்தும்படியான கருத்துக்களை அண்மையில் சுமந்திரன் வெளியிட்டதாகக் கூறி களத்திலும், புலத்திலும் பாரிய எதிர்வினையாற்றப்பட்ட நிலையில், தற்பொழுது த.தே.ம.முன்னியின் பிரமுகர் காண்டீபன் தெரிவித்த கருத்து விவாதத்துக்குள்ளாகி வருகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/143952?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

ஊடகத்துக்கான பண்பு யாதெனில் ஒரு செய்தியை முழுமையாக ஒளிபரப்புதல் வேண்டும். சிங்களத்துக்கு செம்பு தூக்குவோருக்கு ஆதரவாக வெட்டியொட்டி ஒளிபரப்புதல் கூடாது. ஐபீசீயும் சிங்களஅரசின் ஊதுகுழலாகிவிட்டதா?

கப்பிட்டல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முழுமையான பதிவை யாராவது தரவேற்றம் செய்தால் மட்டுமே உரையாடலின்  உண்மையான நோக்கம் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரமதாசா அரசிடமும், மகிந்த அரசிடமும் தமிழீழ விடுதலை புலிகள் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெற்றுள்ளதாக உள்ளகவேலை பார்த்தவர்கள் கூறி உள்ளார்கள். 

நாம் எமது கண்ணால் காணாத ஒன்றை உண்மை என்றும் சொல்ல இயலாது, மறுக்கவும் இயலாது. ஆனால், இவை எல்லாம் இப்போது விவாத பொருளாகி எமது நேரம், சக்தியை வீண்விரயம் செய்யப்படவேண்டுமா?

போர் நிறைவடைந்து ஆயுதங்களும் மெளனிக்கப்பட்டுவிட்டது. 

பழைய பூராயங்களை ஆராய்வதைவிடுத்து இப்போது மக்கள் வாழ்க்கைத்தரம் முன்னேறவும், வாழ்க்கை செழிக்கவும் நேரம், சக்தியை செலவு செய்தால் சிறப்பு.

Link to comment
Share on other sites

7 hours ago, nochchi said:

ஊடகத்துக்கான பண்பு யாதெனில் ஒரு செய்தியை முழுமையாக ஒளிபரப்புதல் வேண்டும். சிங்களத்துக்கு செம்பு தூக்குவோருக்கு ஆதரவாக வெட்டியொட்டி ஒளிபரப்புதல் கூடாது. ஐபீசீயும் சிங்களஅரசின் ஊதுகுழலாகிவிட்டதா?

கப்பிட்டல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முழுமையான பதிவை யாராவது தரவேற்றம் செய்தால் மட்டுமே உரையாடலின்  உண்மையான நோக்கம் புரியும்.

நியாயமான ஆதங்கம்.

ஆனா, இங்க போராளிகளைப் பற்றி காண்டீபன் பயன்படுத்தும் சொல்லுகள் நல்லதல்ல.

அது தான் சர்ச்சைக்கு காரணம்னு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Gowin said:

நியாயமான ஆதங்கம்.

ஆனா, இங்க போராளிகளைப் பற்றி காண்டீபன் பயன்படுத்தும் சொல்லுகள் நல்லதல்ல.

அது தான் சர்ச்சைக்கு காரணம்னு நினைக்கிறன்.

கள உறவே உண்மைதான்!

உயிரீகம் புரிந்து உறங்காது எம்மை உயிர்பித்துக்கொண்டிருப்போரையும்  இன்றும் பல்வேறு துன்பஙகளைச் சுமந்து விலைபோகாது வாழும் மறவர்களையும் புண்டுத்தும் சொற்பிரயோகங்களை யார் பயன்படுத்தினாலும் கண்டிக்கப்பட வேண்டும்.  இங்கே நான் சுட்டியிருப்பது ஐபீசீயின் சகுனி வேலையை மட்டுமே.  

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 26/5/2020 at 12:12, nochchi said:

உயிரீகம் புரிந்து உறங்காது எம்மை உயிர்பித்துக்கொண்டிருப்போரையும்  இன்றும் பல்வேறு துன்பஙகளைச் சுமந்து விலைபோகாது வாழும் மறவர்களையும் புண்டுத்தும் சொற்பிரயோகங்களை யார் பயன்படுத்தினாலும் கண்டிக்கப்பட வேண்டும்.

காண்டீபனின் பேச்சு ஒரு குழப்பவாதியின் பேச்சு போல இருக்கு.
கஜேந்திரகுமார் கட்சியின் சுமந்திரன் காண்டீபன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.