Jump to content

தமிழர்கள் ஸ்ரீலங்கன் இல்லை; முள்ளிவாய்க்கால் சொல்லும் சேதி: கவிஞர் தீபச்செல்வன்


Recommended Posts

 நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற என்னுடைய கவிதை ஒன்றுக்கு தொடர்ச்சியாக புலி எதிர்ப்பாளர்களிடமிருந்து கவிதையை எதிர்கொள்ள முடியாத காழ்ப்புணர்வு வந்து கொண்டே இருக்கிறது. அக் கவிதை பெரும்பாலும் மாவீரர் தினம், மே – இன அழிப்பு நினைவுநாள், இலங்கை சுதந்திர தினம் முதலிய நாட்களில் ஏராளமான தமிழ் இளையவர்களால் அதிகம் பகிரப்படுகிறது. ‘நீ ஸ்ரீலங்கன் இல்லை என்றால் எதற்காக ஆசிரியர் உத்தியோகம் செய்கிறாய்?’ என்பது தொடங்கி, ‘எந்த நாட்டின் அடையாள அட்டையை பயன்படுத்துகிறாய்’ என்பது வரை கேள்விகள் நீளும். அந்தக் கவிதையே யாவற்றுக்குமான பதிலை சொல்லி விடுகிறது.

அண்மைய காலத்தில், கொரோனா பேரிடர் காலத்தில் சிங்கள இராணுவத்தை வைத்து அரசு செய்கிற அரசியலையும் வடக்கு கிழக்கில் அதனால் ஏற்படுகிற அச்சுறுத்தலையும் பற்றி ‘உரிமை’யில் எழுதிய போதும்கூட சிலர் இதிலும் இராணுவத்தை எதிர்க்கக்கூடாது என்று அறிவுரைத்தார்கள். சவேந்திர சில்வாவை கொரோனா தடுப்பு தலைவராக நியமித்தது முதல், கொரோனா தடுப்பில் இராணுவத்தை பயன்படுத்தியது வரையில் கோத்தபாயவின் தந்திரமான அரசியலே என்பது குழந்தையும் அறிந்த காரியம்தான். ஆனாலும் நம்பவர்கள், இது அரசியல் பேசும் காலமில்லை, அரசுக்கு ஒத்துழைக்கும் காலம் என்றார்கள்.

வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த காலங்களிலும் இதுபோன்ற கொரோனா பேரிடர் காலங்களிலும் நமது வெகு சில தமிழர்கள் ஸ்ரீலங்கன் ஆகிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். தமிழ் மக்களை நிர்வாணமாக்கி மனிதத் தன்மையின்றி இன அழிப்பு செய்த இராணுவத்தின் கொடுமைகளை மறந்து அவர்களை போற்றுவதையும் பார்த்திருக்கிறேன். கதைகளில் படித்திராத, பெரும் சாதனைகளை செய்த பெரு நாயகர்களை சந்தித்த ஈழ மண்ணில் இருந்து கொண்டு சோதனைச்சாவடியில் நிற்கும் இராணுவத்தை ஹீரோ என்பது நகைப்பானதல்லவா? அப்படிப்பட்ட தமிழ் மக்களுக்கு இதே கொரோனா காலத்திலேயே “தமிழர்கள் யார்?” என்பதை குறித்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச தெளிவான பதிலை தன் பாணியிலேயே சொல்லியிருக்கிறார்.

இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தை ஒரு போர்க் காலமாக சிங்கள அரச படைகள் மாற்றியிருந்தன. வழமைக்கு மாறான இராணுவ ரோந்துகள்கூட முல்லைத்தீவு வீதியில் நடந்து கொண்டிருந்தன. கடுமையான கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட இல்லாத இராணுவ சோதனைச்சாவடிகள் திறக்கப்பட்டன. தமிழர்களின் நினைவேந்தலை தடுப்பதற்கு கிருமியை துணையாக்கிக் கொண்டது இலங்கை அரசு.

நினைவேந்தல் நிகழ்வுக்காக மே 18 அன்று கிளிநொச்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் புறப்பட்டேன். அன்றைக்கு காலையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பட்ட செய்தியும் வந்திருந்தது. அதைப்போல யாழிலிருந்து வந்த பலரும் ஆனையிறவிலும் சங்குப்பிட்டியிலும் வைத்து திருப்பி விடப்பட்டனர். தருமபுரத்தில் இருந்த சோதனைச்சாவடியில் வைத்து நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டோம்.

அந்த சோதனைச்சாவடி வழமைக்கு மாறான கடும் இராணுவப் பிடியில் இருந்தது. சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் எம்.பி. அந்த மாவட்ட வேட்பாளர். சிறீதரனை அனுமதிக்க முடியாது என்று கடும் பிடியில் சொன்னார் காவல்துறை பொறுப்பதிகாரி. ஆனாலும் முள்ளிவாய்க்கால் சென்ற பலரும் அங்கிருந்து திருப்பி அனுப்பட்டனர். முன்னாள் எம்.பி சாள்ஸ்சும் திருப்பி அனுப்பட்டார். சாதாரண மக்கள் முதல் ஊடகவியலாளர்கள் வரை தடையே. கடுமையான மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. கொரோனாவின் பெயரால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கிற முனைப்பில் கடுமையாய் இருந்தது இராணுவம். மிக அருகில் இருந்து பல நூறு கிலோமீற்றர்கள் ஓடி ஒருவாறு முள்ளிவாய்க்காலை அடைந்தோம்.

உரிமைக்கும் விடுதலைக்கும் போராடிய ஈழத் தமிழ் இனம், அறமற்ற போரின்மூலம் இன அழிப்பு செய்யப்பட்ட நிலம் முள்ளிவாய்க்கால். ஈழத் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை சொல்வதும் அந்த நிலம்தான். ஈழத் தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதை சொல்வதும் அந்த நிலம்தான். முள்ளிவாய்க்கால் முடியவில்லை என்பதையும் தமிழர்கள் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் இன்றும் உரைப்பதும் அந்த நிலம்தான். முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழ் இனம் அழிக்கப்பட்ட சாட்சி மாத்திரமல்ல. வாழ்தலின் குரலையும் கொண்ட நிலம்.

கொரோனா பேரிடர் காலத்திற்கு ஏற்ப, சுகாதார முறைகளுடன் உரிய வகையில் மக்கள் அஞ்சலியை செலுத்தினர். எதற்காக இன்றைக்கு இந்த வீதிகளை மூடி மக்களை தடுத்தனர்? எம் மக்கள் ஆயுதங்களை ஏந்தியா வந்தனர்? முள்ளிவாய்க்கால் நிலத்தில்தான் எங்கள் சீருடைகளையும் ஆயுதங்களையும் துறந்துவிட்டோமே? எல்லாவற்றையும் துறந்து எல்லாவற்றையும் இழந்தல்லவா எம் மக்கள் முள்வேலிச் சிறைகளுக்குச் சென்றனர்? இப்போது எங்களிடம் கண்ணீர் மாத்திரம்தானே இருக்கிறது. எங்கள் மக்கள் ஒரு தீபம் ஏற்றவும் ஒரு சொட்டு கண்ணீர் விடவுமே முள்ளிவாய்க்காலுக்கு செல்லுகின்றனர். அதற்கும் தடையா? தமிழ் மக்கள் ஏற்றும் தீபமும் சிந்தும் கண்ணீரும் இலங்கையை இரண்டாக்கி விடுமா?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் புலிகளின் அஞ்சலியாக அரசு பார்க்கிறதென்றால், அழிக்கப்பட்ட மக்களையும் புலிகளாகவே அரசு கருதுகிறதா? அல்லது எஞ்சி இன்று வாழ்கிற மக்களையும் புலிகளாக அரசு கருதுகிறதா? இந்த தீவில் வாழும் ஈழத் தமிழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வரலாறு முழுதும் ஒரு முக்கியமான நாளாகவே இருக்கும். வரும் தலைமுறைகள் யாவும் நினைவுகூரும். இதனை தொடர்ந்தும் தடுக்க அரசு முனைந்தால் வரலாறு முழுதும் தமிழினத்துடனான முரண்பாடு ஒரு போராகத் தொடரத்தான் போகிறது. முள்ளிவாய்க்கால் போருக்கும் அமைதிக்குமான புள்ளி.

இறந்தவர்களை நினைவுகூர முடியாதென தடுப்பது எத்தகைய மனித உரிமை மீறல்? இறந்தவர்கள்மீதே இத்தகைய வன்மத்தை செலுத்துகிற அரசு உயிரோடு இருப்பவர்கள்மீது எப்படி வன்மத்தை செலுத்தும்? அதற்கும் சாட்சியாகிறது முள்ளிவாய்க்கால். அப்படினெயில் தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வது எப்படி? இந்த இன ஒடுக்குமுறையும் பாரபட்சமும் எவ்வளவு கொடியது? இதே காலத்தில் போர் வெற்றி விழாவை அரசாங்கம் கொழும்பில் முன்னெடுத்தது. வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது நீதிமன்றம் பாய்ந்து தனிமைப்படுத்தல் தீர்பபை வழங்கியது.

ஆனால் சுகாதார முறைகளுக்கு பொருத்தமில்லாமல் போர் வெற்றி விழாவில் கலந்து கொண்டவர்கள் அமர்ந்திருந்தனர். அப்படியா நிலையில் போர் வெற்றி விழாவை செய்த எந்த தடையும் இல்லை. ஆனால் போரில் இறந்தவர்களை நினைவுகூரத்தான் தடை என்பது, இந்த தீவில் காலம் காலமாய் தொடரும் இன ஒடுக்குமுறையின் தொடர்ச்சியான அணுகுமுறைதான். தமிழர்களுக்கு ஒரு சட்டம், சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் என்ற அதே பழைய அணுகுமுறைதான். தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதி என்ற மாகாவம்ச மனநிலையின் வெளிப்பாடுதான் இது.

தமது போர் வீரர்கள்மீது அழுத்தங்களை பிரயோகித்தால், உறுப்புரிமையை விலக்கிக்கொள்ள நேரிடும் என்று இலங்கை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையை கடுமையாக எச்சரித்துள்ளார். மனித குலமே நடுங்கும் இனவழிப்புக்களை செய்துவிட்டு தமிழர்கள் கண்ணீர் விடுவதற்கும் நினைப்பதற்கும் தடை விதித்துக் கொண்டுதான் இதை சொல்லியிருக்கிறது அரசு. நீங்கள் போர் வீரர்களை காப்பாற்ற ஐ.நாவை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்றால், நாம் அப்போரில் இறந்தவர்களை நினைத்து கண்ணீர் விடவும் நினைவுக்கவும் பிரிந்து தனிநாடு செல்வது நியாயமானதல்வா?

இத் தீவில் ஒரு தினம், தமிழ் மக்களுக்கு கண்ணீருக்கு உரிய நாளாகவும் சிங்கள மக்களுக்கு கொண்டாட்டத்திற்குரிய நாளாகவும் இருக்கிறது என்றால் நாம் ஒரு நாட்டு மக்களாக இருக்க முடியாது. எங்கள் மனங்கள் மிகவும் கனத்துபோகிறது. “என் குருதி உனக்கு கொண்டாட்டமாகவும் எனக்கு கண்ணீராகவும் உள்ளவரையில் நீயும் நானும் வெவ்வேறு நாட்டினரே. என் துயரம் உன் மண்ணில் வெற்றிக் கொடியாகவும் என் மண்ணில் தலை கவிழ்ந்த தோரணமாகவும் உள்ளவரையில் இத் தீவில் இரு நாடுகளே.” ‘தமிழர்கள் ஸ்ரீலங்கன் இல்லை’ என்பதை முள்ளிவாய்க்கால் மாத்திரமல்ல, முள்ளிவாய்க்காலை நினைவுகூற மறுக்கும் தென்னிலங்கையும் அழுத்தமாகவே சொல்கிறது.

கவிஞர் தீபச்செல்வன்

https://thamilkural.net/thesathinkural/views/40587/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.