Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

19 நிமிடம் 30 வினாடிகளில் ஆமைக்கறி, உடும்புக்கறி வருகின்றது😆

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Iசின்ன வயதில் தமிழ் மொழிப் பாடப் புத்தகத்தில் நான் படித்த கதையொன்றை, செந்தமிழன் சீமான் இன்று ஞாபகப்படுத்திவிட்டார்:

ஒருவன் வெகுதூரம் பயணித்து, ஆற்றைக் கடந்து 
தனது மாமியாரின் வீட்டை அடைகிறான். அன்போடு வரவேற்கும் மாமி, ஓர் உணவுப் பண்டத்தை அவனுக்கு அளிக்கிறார். நல்ல பசியோடு இருக்கும் இவன் அந்தப் பண்டத்தைப் பிட்டுப் பார்த்தால் உள்ளே சுவையான இனிப்புக் கலவையுள்ளது. இவன் தனது வாழ்நாள்நாளில் அப்படியான பண்டத்தைப் பார்த்ததேயில்லை. அந்தப் பண்டத்தின் பெயர் என்னவென்ற இவன் கேட்க, மாமி 'கொழுக்கட்டை' என்கிறார். வீட்டுக்குப் போனதும் மனைவியிடம் அந்தப் பண்டத்தைச் செய்து தரச் சொல்லிக் கேட்க வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டவன், அந்தப் பண்டத்தின் பெயரை மறந்துவிடக் கூடாது என்ற கவனத்தோடு 'கொழுக்கட்டை... கொழுக்கட்டை' என உச்சரித்தவாறே வீடு திரும்புகிறான். ஆனால் ஆற்றைக் கடக்கும் போது 'ஆத்துக்கட்டை... ஆத்துக் கட்டை' என நாக்கும் ஞாபகமும் புரண்டு போகின்றன.

வீடு திரும்பியதும் மனைவியிடம் 'ஆத்துக்கட்டை' செய்து தரச் சொல்லிக் கேட்கிறான். மனைவியோ 'ஆத்துக்கட்டை' என்றொரு பண்டமே கிடையாது என்கிறாள். கோபமுற்ற இவன் மனைவியை அடித்துவிடுகிறான். அடி வாங்கிய மனைவியின் உடலில் வீக்கங்கள் ஏற்பட்டுகின்றன. அவள்  அழும்போது 'அய்யோ என்னுடைய உடலில் கொழுக்கட்டை மாதிரி வீக்கம் வந்துவிட்டதே' எனப் புலம்புகிறாள். 'அதுதான் கண்ணே அதுதான் கண்ணே' என இந்த மனிதன் உற்சாகமாகக் கூவுகிறான்.

இலங்கைக்கே உரிய, தமிழகத்தினருக்குத் தெரியவே தெரியாத 'மாலுபாண்' என்ற உணவைச் சீமான் சாப்பிட்டிருக்கலாம். அதுவும் இட்லி சைஸ் தானே. உள்ளே மீன் கலவையிருக்கும். கடல் கடக்கும்போது பெயர் மறந்துபோய் 'கறி இட்லி' என ஞாபகக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஒருவேளை 'மாலுபாண்' என்ற சிங்களச் சொல்லுக்கு 'கறி இட்லி' என்றுகூட அவராகவே தூய தமிழ்ப் பெயரைச் சூட்டியிருக்கலாம். உண்மையிலேயே அது மிகப் பொருத்தமான பெயர்தான். 

சும்மா சும்மா ஒருவரைக் கேலி செய்வது யாவருக்கும் எளிதான காரியமே, மாறாக நாம் அவரைப் புரிந்துகொள்ளவும் முயல வேண்டும்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200526-143144.png

இந்த‌ ப‌திவுக்கு க‌ண‌க்க‌ எழுத‌ தேவை இல்ல‌ இந்த‌ ப‌ட‌ம் ஒன்று போதும் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பையன்26 said:

20200526-143144.png

இந்த‌ ப‌திவுக்கு க‌ண‌க்க‌ எழுத‌ தேவை இல்ல‌ இந்த‌ ப‌ட‌ம் ஒன்று போதும் 😉

ஆமால்ல!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

ஆமால்ல!

 

 

மேல‌ ஒரு ப‌திவு தோழ‌ர் எழுதி இருக்கிறார் அதை இணைத்து இருக்கிறேன் , வாசித்து பாருங்கோ கிருப‌ன் அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

மேல‌ ஒரு ப‌திவு தோழ‌ர் எழுதி இருக்கிறார் அதை இணைத்து இருக்கிறேன் , வாசித்து பாருங்கோ கிருப‌ன் அண்ணா 

முழுமையாகக் படிக்க முதலே மட்டு ஒருத்தர் தூக்கிட்டார் போலிருக்கே😑

கிடைத்த ஐந்து நிமிடத்தில் இன்னொரு வீடியோ பார்த்தேன். அதையும் பாருங்கள்.😆

பெப்ரவரி 2008 இல் அண்ணன் சீமானை விமான ஊர்தியில் வரவழைத்த சேரா (சேரலாதன்) ஒரு படகில் திருப்பி அனுப்பியிருக்கலாம். ஹொலிவூட் திகில் படமாக ஒன்றை எடுக்க உதவியிருக்கும்😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூசனா இருக்கிறது பிரச்சனை இல்ல மெகா லூசனா இருக்கிறது தான் பிரச்சனை , ஆமா ஆமைக்கறி சாப்பிட்ட லண்டன் புண்ணியவான் யாரது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஊரில ஆமை.. உடும்பு சாப்பிடாத மாதிரி ஒரு படை கிளம்பி இருக்குது. இவை புலம்பெயர்ந்து ஊரை மறந்த படையாம். அவைக்கு தொழில் சீமான் வாயால என்ன விழுகுதுன்னு பார்த்திட்டே இருப்பது தான்.

இயக்கம்..காட்டுப்பன்றி.. உடும்பு.. ஆமை.. வெளவால்.. எல்லாம் சாப்பிடுறது தான். 

அடுத்தது.. ஒரு சிலது.. சோப்போட சோப் ஒட்டுதில்லையாம்.. அதிலும் நக்கல்.

ஊரில சன்லைட் சோப்யையே உடைய உடைய ஒட்டி ஒட்டி குளிச்சதுங்க.. இப்ப வெளிநாடுக்கு வந்திட்டு.. ஒட்டிப்பார்க்குதுகளாம் ஒட்டல்லையாம். 

சீமானை விட அவரை திட்டிறதுங்க காமடி தான் பெரிய காமடி. 😄😄

Link to comment
Share on other sites

சோபாசக்திக்கு இருந்த சரக்கு முடிஞ்சுது போல. ஆமைக்கறியில் இறங்கி இருக்கிறார்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 வயசென்ன.. 12 வயசில பங்கர் வெட்டினவங்களும் உண்டு. அந்த ரைமில.. சிலர் ஏஜென்சிகாரனை தேடிக்கிட்டு இருந்திருப்பார்கள்.. எந்த நாட்டுக்கு ஓடலாமின்னு. அவைங்க எல்லாம் இப்ப மூவிங் பங்கர அப்படின்னா.. என்னென்னு கூட கேட்கக் கூடும்.

நுணாவில் பகுதியில் நாவல் மரத்துக்கு வலை கட்டி.. வெளவால் பிடிச்சு சாப்பிட்ட மட்டுவில் பயிற்சி முகாம் போராளிகளுக்கு தெரிந்திருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2008 பெப்ரவரியில் வந்த செய்திகளை ஊர்ப்புதினம் பகுதியில் பார்த்தேன்.

மன்னாரில் கடுஞ்சண்டை நடந்து தெற்கு அடம்பனை இராணுவம் பிடித்து முன்னேறிக்கொண்டிருந்த காலத்தில் அண்ணன் சீமானுக்கு விதவிதமாக ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி சமைக்க ஒரு பெரிய அணியும், அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் குறிப்பெடுக்க ஒருவரும், பண்டி வேட்டைக்குப் போய் 5 கிலோ சைஸ் பண்டியை கண்களாலேயே நிறுத்து வேட்டையாட ஒருத்தரையும், AK-47 சுட்டுப் பழக்க இன்னோர் அணியையும் இயக்கம் தமிழரின் விருந்தோம்பல் பண்பைக் காட்ட அமர்த்தியிருந்தது!

2009 இல் யுத்தம் தோல்வியில் முடிவடைந்தபோது எமது எதிர்காலம் சூனியமாகப் போய்விட்டதே என்று நாம் கவலைப்பட்ட தருணத்தில் அண்ணன் இனி ஆமைக்கறி சாப்பிடமுடியாதே என்று வருத்தப்பட்டிருப்பார்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

லூசனா இருக்கிறது பிரச்சனை இல்ல மெகா லூசனா இருக்கிறது தான் பிரச்சனை , ஆமா ஆமைக்கறி சாப்பிட்ட லண்டன் புண்ணியவான் யாரது

நான் ஊரில சாப்பிட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் ஊரில சாப்பிட்டிருக்கிறேன்.

 கறி இட்டலி பிரச்சனை இல்லை ஐயா!
அவையளுக்கு சொன்ன ஆள்தான் பிரச்சனை. tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

அண்ணன் சீமானுக்கு விதவிதமாக ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி சமைக்க ஒரு பெரிய அணியும், அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் குறிப்பெடுக்க ஒருவரும், பண்டி வேட்டைக்குப் போய் 5 கிலோ சைஸ் பண்டியை கண்களாலேயே நிறுத்து வேட்டையாட ஒருத்தரையும், AK-47 சுட்டுப் பழக்க இன்னோர் அணியையும் இயக்கம் தமிழரின் விருந்தோம்பல் பண்பைக் காட்ட அமர்த்தியிருந்தது!

 

சீமானுக்கு என்றில்லை.. வைகோவுக்கு ஹிந்தியப் படைகள் சுற்றி நிற்க.. தாக்குதல் நடத்த நடத்த சாப்பாடு போட்டுத்தான் இயக்கம் அனுப்பியது.

அதேபோல் 2002 க்குப் பின் பலர் தமிழகத்தில் இருந்து வன்னிக்கு வந்து போயிருக்கிறார்கள். 

சீமானுக்கு என்று விசேடமாக உணவு கொடுத்தார்களோ இல்லையோ.. நிச்சயம் பட்டினி போட்டிருக்கமாட்டார்கள். ஆமை.. உடும்பு.. இதெல்லாம் வன்னியில் சர்வ சாதாரணம். 

மேலும்.. கறி இட்லி என்பதும் புதிதல்ல. ஏலவே ஊரில் செய்வது தான்.  குறிப்பாக கறியாக சமைச்சு போர்க்களத்திற்கு கொண்டு போய் தொட்டுச் சாப்பிட்டிட்டு இருக்க முடியாது. அதனால்.. கறி இட்லி அவிச்சு சனம் அனுப்பியதுண்டு. குறிப்பாக ஆகாய கடல் வெளி சமரின் போது. குறிப்பாக ஆகாய கடல் வெளி சமர் காலத்தில் மக்களிடம் இருந்து இறைச்சிப் பொரியல்.. பலகாரங்கள்.. மற்றும் கறி இட்லி.. பன்.. இவை தான் அதிகம் விரும்பிப் பெறப்பட்டது. கள முனை போராளிகளுக்கு வழங்க. ஆகவே இவை சீமானுக்கு விசேட கவனிப்பாக பரிமாறப்பட்டிருக்காது. சாத்தியாமனது வழங்கப்பட்டிருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா தமிழ்நாட்டில் சீமான் இல்லாவிட்டால் ஈழமக்களுக்கு பிரச்சனை ஒன்று இல்லை என்றே முடித்து வைத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சினிமா தமிழ்நாட்டில் சீமான் இல்லாவிட்டால் ஈழமக்களுக்கு பிரச்சனை ஒன்று இல்லை என்றே முடித்து வைத்திருப்பார்கள்.

சீமானின் ஈழ குறிப்பாக புலிகள் ஆதரவுக் குரலை.. நாம் தமிழரின் எழுச்சியை தடுக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலில்.. தமிழகத்தில்... திமுக.. திராவிடக் கட்சிகள்.. இடது சாரிகள்.. பெரியார் புகழ்பாடி அரசியல்வாதிகள்.. கருணாநிதி புகழ்பாடி அரசியல்வாதிகள்.. ராஜீவ் குடும்ப விசுவாசிகள்.. காங்கிரஸ் கட்சி.. விசுவாசிகள்.. தமிழக வளங்களை சுரட்டும் பெரிய நிறுவனங்கள்.. அரசியல்வாதிகள்.. என்று பெரிய ஒரு கூட்டம்..  இணைந்துள்ளது.

இத்தோடு தேசிய தலைவருக்கும் புலிகளுக்கும் சதா எதிர்வினையாற்றும் புலம்பெயர் புகழ்விரும்பிக் கூட்டமும் இணைந்துள்ளது. 

இவர்கள் தான் சமூக வலையில்.. சீமானின் வாயால் என்ன வருகிறது என்று பார்த்துக் கொண்டிருந்து.. அதனை உள்வாங்கி மீள உமிழ்ந்து திரிவது. 

சீமானும்.. நாம் தமிழரும் இதனை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு பயனிப்பதால்.. சீமான்.. இந்த சீப்பானதுகளுக்கு அஞ்ச மாட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் ஊரில சாப்பிட்டிருக்கிறேன்.

அண்ணா நான் கேட்டது அந்த கூட சேர்ந்து சாப்பிட்டு,, இப்ப லண்டனில் இருக்கிற எருமை யாரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nedukkalapoovan said:

15 வயசென்ன.. 12 வயசில பங்கர் வெட்டினவங்களும் உண்டு. அந்த ரைமில.. சிலர் ஏஜென்சிகாரனை தேடிக்கிட்டு இருந்திருப்பார்கள்.. எந்த நாட்டுக்கு ஓடலாமின்னு. அவைங்க எல்லாம் இப்ப மூவிங் பங்கர அப்படின்னா.. என்னென்னு கூட கேட்கக் கூடும்.

நுணாவில் பகுதியில் நாவல் மரத்துக்கு வலை கட்டி.. வெளவால் பிடிச்சு சாப்பிட்ட மட்டுவில் பயிற்சி முகாம் போராளிகளுக்கு தெரிந்திருக்கும். 

சாரி டாக்டர் திரும்பவும் சரியான ஆளுடன் பிழையான  இடத்தில மோதுறிங்க

நுணாவில் ரஞ்சன் தெரியுமா பெம்மர் அடியில போட்டார். நாங்க  மட்டுவில்லில  90 ல் இருந்து மூணு  வருசம்  வண்டி ஓட்டிய ஆட்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது நல்லெண்ணங்கள் கொண்ட சீமைத்துரைகள் சீமானின் ஈழ அரசியலை விடுத்து பிற அரசியல் திட்டங்கள் பற்றி எதையுமே தங்கள் பொன்வாயை திறந்து சொல்ல மாட்டார்கள்.
ஊழல் மற்றும் கொள்ளையடிக்கும் கட்சிகளுக்கு துணை போகின்றவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:

சாரி டாக்டர் திரும்பவும் சரியான ஆளுடன் பிழையான  இடத்தில மோதுறிங்க

நுணாவில் ரஞ்சன் தெரியுமா பெம்மர் அடியில போட்டார். நாங்க  மட்டுவில்லில  90 ல் இருந்து மூணு  வருசம்  வண்டி ஓட்டிய ஆட்கள் 

வண்டில் ஓட்டியும்.. பாப்பா வெளவால் பிடிச்சது தெரியாமல் போனது எப்படியோ..??!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பிடுற ஆட்களில  ஏறி  வண்டி  ஓட்டாம  சரியான  தலைவன்  வழியில்  செல்லுங்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

வண்டில் ஓட்டியும்.. பாப்பா வெளவால் பிடிச்சது தெரியாமல் போனது எப்படியோ..??!  

பாப்பா யாருக்கு  எதுக்கு பிடிச்சார்  எண்டு  அவரிட்டதான்  கேட்கவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நந்தன் said:

அம்பிடுற ஆட்களில  ஏறி  வண்டி  ஓட்டாம  சரியான  தலைவன்  வழியில்  செல்லுங்க

 

தலைவன் வழியில் செல்லுறன் என்றவனை தலைவன் வழிகாட்டல் இல்லாத இடத்தில் நிறுத்துவது மிக அவசியம். ஏன்னா.. தமிழனுக்கு அங்கு ஒரு பலம் இருக்குது. அதை இழக்க முடியாது. இழந்ததால் தான்.. 1987 இல் உருவான சூழலை.. 2009 இல் உருவாக்க முடியவில்லை.

சீமான் ஒரு சிறு துரும்பாக இருக்கட்டும். ஈழம் மிதந்து சென்று மறுகரையை அடைய. அதில் தப்பேதும் இல்லை.  ஈழத்தையும்.. ஈழத்துயரையும்.. ஈழப் போராட்டத்தையும் தலைமையையும் மறந்து திரியும்.. திராவிட.. காங்கிரஸ் முதலைகளை விட.. சீமான் எனும் சிற்றெறும்பும்.. சிறுதுரும்பும்.. எவ்வளவோ மேல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.