Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ஆகவே சீமானை, ஈழம் என்ற கண்ணாடியினை போட்டுக் கொண்டு பார்க்காமல், தமிழக அரசியல் என்று மட்டும் பாருங்கள்.

சீமானும் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டு விடயங்களை தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் நாங்கள் ஏன் கதைக்கப்போகின்றோம்?

ஆனால் அது அவரால் முடியாதே! புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் ஒரு சிலர் இவரின் உசுப்பேத்தல்களுக்கு பின்னால் இழுபட்டு திரிவதை நாம்தான் தினமும் பார்க்கின்றோமே😄

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

சீமானும் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டு விடயங்களை தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் நாங்கள் ஏன் கதைக்கப்போகின்றோம்?

ஆனால் அது அவரால் முடியாதே! புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் ஒரு சிலர் இவரின் உசுப்பேத்தல்களுக்கு பின்னால் இழுபட்டு திரிவதை நாம்தான் தினமும் பார்க்கின்றோமே😄

கிருப‌ன் அண்ணா
எம் இன‌த்து சாவ‌க்கேடு எது தெரியுமா , எம் இன‌த்துக்கு உண்மையும் நேர்மையுமா எவை போராடின‌மோ அவையை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து /

உதார‌ன‌த்துக்கு இந்த‌ யாழ் க‌ள‌த்தை எடுத்து கொள்வோம் , 2006 ம‌ற்றும் 2007 இந்த‌ கால‌ப் ப‌குதியில் யாழில் எம் த‌லைவ‌ரையும் எம் போராட்ட‌த்தையும் இழிவு ப‌டித்தின‌வையை ( மோக‌ன் அண்ணா அவ‌ர்க‌ளை யாழில் க‌ருத்து ப‌திய‌ விடாம‌ல் நிர‌ந்த‌ர‌மாய் நீக்கின‌வ‌ர் )

த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் த‌ன்ர‌ பிள்ளைக‌ளை வைத்து கொண்டு மாற்றான் பிள்ளைக‌ளை போர்க‌ள‌த்துக்கு அனுப்புகிறார் என்று எம் த‌லைவ‌ரை வ‌சை பாடாத‌ ஆட்க‌ளா /


உங்க‌ளுக்கு அண்ண‌ன் சீமான் முன் எடுக்கும் அர‌சிய‌ல் பிடிக்க‌ல‌ என்றால் ஓர‌மாய் ஒதுங்கி நிப்ப‌து ந‌ல்ல‌ம் அத‌ விடுத்து ஓதின‌ ம‌ந்திர‌த்தை திருப்ப‌ திருப்ப‌ ஓத‌ வேண்டாம் /

எம் இன‌த்தை அழித்த‌ திராவிட‌த்துக்கு எதிராக‌ ப‌ல‌ இன்ன‌ல்க‌ளுக்கு ம‌த்தியில் அவ‌ர் முன்னொடுக்கும் அர‌சிய‌லை விம‌ர்சிக்க‌ உங்க‌ளுக்கோ என‌க்கோ சிறு த‌குதியும் இல்ல‌ /

உங்க‌ளை பார்த்து கேக்க‌ ப‌ல‌ நூறு கேள்விக‌ள் இருக்கு கிருப‌ன் அண்ணா , பிற‌க்கு நான் ஆர‌ம்பிக்க‌ அது உங்க‌ளுக்கு கோவ‌த்த‌ கூட‌ வ‌ர‌ வைக்க‌லாம் , ஆன‌ ப‌டியால் அப்ப‌டியான‌ கேள்விக‌ளை த‌விர்கிறேன் 😉 /


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கிருபன் said:

சீமானும் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டு விடயங்களை தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் நாங்கள் ஏன் கதைக்கப்போகின்றோம்?

ஆனால் அது அவரால் முடியாதே! புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் ஒரு சிலர் இவரின் உசுப்பேத்தல்களுக்கு பின்னால் இழுபட்டு திரிவதை நாம்தான் தினமும் பார்க்கின்றோமே😄

இதே கேள்வி எனக்கும் எழுந்தது. 

நமது வீடுகளில் காந்தியும், நேருவும் படங்களாக இருந்தார்களே ஏன்?

முக்கியமான ஒரு விடயத்தினை மறந்து விடாதீர்கள்....

இலங்கையிலும் இருந்தது தான் சாதிய வேறுபாடு. பொது எதிரியாக சிங்களவன் வந்தபோது, பிரபாகரன் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

திராவிட, ஆரிய கைங்கரியத்தில் சாதி வேற்றுமை தமிழகத்தில் கொடி கட்டி பறக்கிறது.

எதிரி, திராவிட போர்வையினை போட்டுக் கொண்டு, ஆள வசதியாக, சாதிய வன்மத்தினை கிளப்பி விட்டிருக்கிறான்.

இந்த வன்மத்தின் உக்கிரமாக, தமிழ் தலைவர்கள் பெயர்களில் ஓடிய பேரூந்துகள் கூட, சாதிய ரீதியில் அடையாளமாகப் பட்டு எரிக்கப்பட்டன. இறுதியில் பெயரே இல்லாமல் ஓடுகின்றன.

விளைவாக, தெலுங்கு அண்ணாவும்,  கருணாநிதியும், கன்னட ஜெயலலிதாவும், மலையாள MGR ம் ஆண்டார்கள்.

ரஜனிக்கும், கமலுக்கும், விஷாலுக்கும், ராகவா லாரன்ஸ்க்கும் கூட ஆசை வந்தது.

சரி சாதியம் காரணமாக வெளியில் இருந்து வரும் தலைமை தான், அதுவும் தமிழர்கள் இல்லாத தலைமை தான் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது என தெளிவாக புரிந்தது.

இந்நிலையில், ஈழத்தின் பிரபாகரன், வெளியில் இருந்து கொண்டுவரப்பட்டு, சாதிய வட்டத்துக்குள் குறுக்கப்படாமல் தமிழர் என்கிற ரீதியில் தலைவரானார். சீமானும், தான் சாதிய வட்டத்துக்குள் குறுக்கப்படலாம் என்பதால், தான் தலைவன் அல்ல. தலைவனின் தம்பி என்கிறார்.  இதுவரை 17 லட்ச்சம் தமிழர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அது தேறாது என்று இருந்து, இப்போது தீவிரமாவதால் பிரபாகரன், திமுகவால் கடுமையாக இப்போது, எதிர்க்கப்படும் நிலை. ரஜனி பின்வாங்கி விட்டார்.

புரியும் என்று நினைக்கிறேன்.

புரியாவிடில், சாதிய பார்வையாக இருக்கலாமோ என்று கருதவும் இடம் உண்டு. (மன்னிக்க வேண்டும், எனக்கு புரிய வைத்தவர், உபயோகித்த வார்த்தைகள்).

ஈழத்தமிழர்கள் 1520 ல் போர்த்துகேயர்களிடம் வீழ்ந்தது போலவே 1529ல் தெலுங்கு நாயகர்களிடம் வீழ்ந்தவர்கள் தமிழகத்து தமிழர்கள்.

இரு பக்கமும் அடிமைகள். அடிமைகளில், ஒரு அடிமை, இன்னோரு அடிமைக்கு ஆதரவு தரலாமே அன்றி, எதிர்க்க கூடாது.

அநேகமாக, மேற்குலகில் வாழ்வதால், எமது சிந்தனைகள் வேறு விதமாக உள்ளனவோ தெரியவில்லை. ஆனால் தாயகத்தில், ஒருவருமே நீட்டி, முழக்குவதில்லை. யாழில் உள்ள தாயக உறவுகள் கூட. 

இன்றைய நிலையில், பெரும் பணம் வாங்கிக் கொண்டு சீமான் ஒரு திராவிட கட்சியுடன் அல்லது ரஜனியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு MLA, MP ஆக முடியும்.

அது செய்யாதவரை, வாக்குக்கு காசு கொடுக்கும் அரசியல் செய்யாதவரை, எனக்கு சந்தேகம் வர காரணம் இல்லை. உங்கே இரண்டொருவர் செய்யும் அலம்பரைகளை வைத்து, ஈழத்தமிழர் பெரும் பொருளாதாரவு கொடுப்பதாக கருதமுடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

உங்க‌ளை பார்த்து கேக்க‌ ப‌ல‌ நூறு கேள்விக‌ள் இருக்கு கிருப‌ன் அண்ணா , பிற‌க்கு நான் ஆர‌ம்பிக்க‌ அது உங்க‌ளுக்கு கோவ‌த்த‌ கூட‌ வ‌ர‌ வைக்க‌லாம் , ஆன‌ ப‌டியால் அப்ப‌டியான‌ கேள்விக‌ளை த‌விர்கிறேன் 😉

பையன் 2009 மே மாதத்திற்குப் பின்னர் கோபம் எல்லாம் வருவதில்லை. எனவே தாராளமாக எதையும் கேட்கலாம்😎 தெரிந்தால் சொல்வதில் தயக்கமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

பையன் 2009 மே மாதத்திற்குப் பின்னர் கோபம் எல்லாம் வருவதில்லை. எனவே தாராளமாக எதையும் கேட்கலாம்😎 தெரிந்தால் சொல்வதில் தயக்கமில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

விளைவாக, தெலுங்கு அண்ணாவும்,  கருணாநிதியும், கன்னட ஜெயலலிதாவும், மலையாள MGR ம் ஆண்டார்கள்.

ரஜனிக்கும், கமலுக்கும், விஷாலுக்கும், ராகவா லாரன்ஸ்க்கும் கூட ஆசை வந்தது.

சரி சாதியம் காரணமாக வெளியில் இருந்து வரும் தலைமை தான், அதுவும் தமிழர்கள் இல்லாத தலைமை தான் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது என தெளிவாக புரிந்தது.

 

நாதம்ஸ்,

தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்பது இனவெறிப் பார்வை. தமிழ்நாட்டை தமிழ்நாட்டில் வாழும் யாரும் ஆளலாம். பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்பவும்,  கல்வியறிவை முன்னேற்றவும் அரசியல் ரீதியில் மத்திய அரசுக்குப் பணியாமல் பலமாக இருக்கவும் தேவையான கொள்கைகளே போதும்.

இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சாதிய ரீதியாக வேற்றுமைகள் தொடர்ந்தும் காட்டப்படுவது உண்மைதான். இவற்றைக் களைய தூரநோக்குள்ள தலைவர்கள் தேவை. பிளவுகளை ஏற்படுத்துபவர்களால் சாதியத்தின்  வீரியத்தைக் குறைக்கமுடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ்,

தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்பது இனவெறிப் பார்வை. தமிழ்நாட்டை தமிழ்நாட்டில் வாழும் யாரும் ஆளலாம். பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்பவும்,  கல்வியறிவை முன்னேற்றவும் அரசியல் ரீதியில் மத்திய அரசுக்குப் பணியாமல் பலமாக இருக்கவும் தேவையான கொள்கைகளே போதும்.

இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சாதிய ரீதியாக வேற்றுமைகள் தொடர்ந்தும் காட்டப்படுவது உண்மைதான். இவற்றைக் களைய தூரநோக்குள்ள தலைவர்கள் தேவை. பிளவுகளை ஏற்படுத்துபவர்களால் சாதியத்தின்  வீரியத்தைக் குறைக்கமுடியாது.

 

ஈழத்தினை சிங்களவன் எப்படி ஆளலாம் என்று கேட்டு சண்டை பிடித்து பெரும் உயிர்பலி கொடுத்து, அகதியாக வந்து, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த Excel போனேன் என்று சொல்லிக் கொண்டே, தமிழ் நாட்டினை, தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என்பது இனவெறிப் பார்வை என்பது எந்த வகை நியாயம்?

இனவெறி வேறு, மண், மலை, ஆறு இந்த தமிழரல்லாதவர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு நாசமாகின்றதே என்கிற நாட்டுப் பற்று வேறு. இன்று கூட ரவிகரன், முள்ளிவாய்க்காலின் சகல பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு நடக்கின்றது என்று புலம்புகிறார்.

றிசாட், தனது ஆதரவளருக்காக, முல்லை காடுகளை அழித்த போது, மக்கள் போராடியது, இனவாதமா?

தமிழகத்தில், இந்த கண்ணை வாங்கி (வளங்களை வித்து) சித்திரம் கையில் (வாக்குக்கு அந்த பணத்தினை தரும் ) தரும் திராவிட கொளகைகளை நிறுத்த வேண்டும் யாராவது. 

சாதியத்தின் வீறு குறையாமலா, 17 லட்ச்சத்துக்கு மேலே இணைந்திருக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பையன்26 said:

 

Quote

 

இங்கு சிலர் பெரியாரின் தமிழர் அழிப்பு.. மாயை வாதமான திராவிடத்தை கட்டிக்காக்க.. தமிழர்கள் யார் என்று சிங்களவர்கள் கேட்குமாப் போல கேள்வி கேட்கிறார்கள். இன்னும் சிலர் தங்களின் கண்டுபிடிப்பினூடு.. தமிழ் தேசிய அடையாளப்படுத்தலை.. தூய தமிழின வாதம் என்கின்றனர். பின்னர் தங்கள் கண்டுபிடிப்பையே பிற்போக்கும் என்றும் வகுக்கின்றனர். என்னே வேடிக்கை மனிதர்கள்.

அதுபோக.. ஈழத்தில் இருப்பது தமிழ் தேசியமாம்.. தமிழகத்தில் இருப்பது திராவிடமாம்.. இப்படி இன்னொரு குண்டையும் சுயமுரண்பாட்டோடு.. தூக்கிப் போடுகின்றனர். ஆனால் ஈழத்தமிழன் தமிழக தொப்புள் கொடி உறவும் என்றும் சொல்கின்றனர்.

இவர்களின் பெரியார் காப்பு..சுயமுரண்பாட்டு வாதங்களையும் சப்பைக் கட்டுக்களையும் வைத்துப் பார்க்கின்ற போது கோத்தாவும்.. சிங்களத் தேரர்களும் பறுவாயில்லை என்று தோன்றுகிறது.

தமிழர்கள் யார்...???! territorial எல்லை வகுத்து.. தனித்துவ மொழி பேசி.. தனித்து சமூக கலை.. பண்பாட்டியல் விழுமியம் காத்து.. ஆட்சி அதிகாரம் தக்க வைத்து சிறப்புற சமூக வாழ்வியல் வகுத்து.. தெற்காசிய பிராந்தியத்தில் வாழ்ந்த வாழ்ந்து வருகின்ற ஒரு மனிதர்கள் கூட்டமே தமிழர்கள். அவர்களின் மொழி தமிழ்...1

இவர்களை திராவிடர்கள் என்று வகுத்துக் கொள்ள எந்த தேவையும் இல்லை. தமிழர்கள் தமிழர்களாகவே தான் இனங்காட்டப்பட வேண்டும். தமிழ் மொழி மருவி வந்த பிற மொழி பேசுபவர்களும் கூட தங்களை தமிழர்களாகத்தான் அடையாளப்படுத்த வேண்டுமே தவிர.. திராவிடர்கள் என்ற பொது கொள்கை அவசியமில்லை. அப்படி இனங்காட்ட விரும்பாதவர்கள் தங்களின் தற்கால மொழி.. நிலம் பற்றி தங்கள் சொந்த அடையாளம் பற்றி வாழட்டும். அதற்கு தமிழர்கள் எப்போதும் தடையாக இருக்கமாட்டார்கள்.

கன்னட மொழியாகட்டும்.. மலையாளம் ஆகட்டும்.. தெலுங்காகட்டும்.. தமிழ் மொழி மருவி வந்த மொழிகள் தான்..! இன்று அந்த மொழிகளுக்கு எல்லாம் ஒரு தனித்துவமான territorial எல்லை உண்டு. அதனால் தான் அவை மாநில வாரியான மொழிகளாக்கப்பட்டுள்ளன. அந்த நிலை தமிழுக்கும் உண்டு. ஆனால் தமிழர்கள் என்போர் தமிழர்களால் ஆளப்படும் நிலை இன்றி.. பிறமொழி பேசுவோரால் ஆளப்படும் நிலை உள்ளது. இந்த நிலை பிறமொழி மாநிலங்களில் இல்லை. இது பண்டைய தமிழ் ஆட்சி மரபில் இருந்தும் மாறுபட்டுள்ளது. நவீன இனத்துவ கருத்தியலில் இருந்தும் தமிழர்களை பிறழ வைத்து பலவீனப்படுத்தி நிற்கிறது.

தமிழர்கள் மத்தியில் உள்ளது போன்று.. பிறமொழி பேசுவோர் மத்தியிலும் சாதி.. வகுப்பு வாதங்கள்.. பிரிவினைகள்.. பிளவுகள் உள்ளன. அவர்களை எல்லாம் ஒற்றுமைப்படுத்த.. திராவிடம் அல்ல காரணியாக நிற்கிறது. ஆனால் தமிழர்கள் மத்தியில் மட்டும் அவர்களின் மொழி.. நில.. ஆட்சியுரிமை தொன்மை மறைத்து திராவிடம் திணிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இது தமிழர்கள் இலகுவாக பிறமொழி பேசுபோரால் ஆளப்படவும் அடிமைப்படுத்தப்படவும் வாய்ப்பளிப்பதோடு.. தமிழர்கள் தங்கள் நிலத்தில் தங்கள் நிலை தளர்வதை உணராது வாழவும் செய்கிறது.

இவற்றைக் கடந்து.. இந்த நவீன இனத்துவ உலகில்.. தமிழர்களின் இனத்துவம் நிறுவி மீண்டும்.. territorial எல்லைகளோடு தமிழர்களும் ஆட்சி உரிமை கொண்ட வாழ்வுரிமை கொண்ட மனித கூட்டமாக பூமிப்பந்தில் வாழ வேண்டின்.. திராவிடம் என்ற மாயைப் பதமாடல் முதலில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டும். தமிழின தேசிய உணர்வான.. தமிழ் தேசிய அடையாளமும்.. உணர்வும் மேலெழவும்.. மக்கள் அதன்பால் ஒற்றுமைப்பட்டு.. சாதி.. மத.. சமூக வேறுபாடுகளுக்கு அப்பால் மொழி.. நிலம்.. கலை.. பண்பாடு.. விழுமியம் சார்ந்து தமிழர்களாக வாழவும் தூண்டப்பட வேண்டும்.

தமிழகத்தில் எழும் இந்த மாற்றமே.. ஈழத்திலும்.. தமிழர்களின் இருப்பை காக்கும். மற்றும்படி.. திராவிடம்.. பேசுக் கொண்டிருப்பதால்.. தமிழர்களின் அழிவைப் பற்றி கவலைப்படவோ அக்கறை செய்யவோ மாட்டாத கன்னடர்களையும்.. மலையாளிகளையும்.. தெலுங்கர்களையும் அயலில் மாயைப் பதமான திராவிடத்தால் கட்டி.. தமிழர்கள் எதனையுமே இந்த உலகில் சாதிக்கப் போவதில்லை.

திராவிடம் என்பது ஒரு செத்துப் போன மாயைக் கருத்தியல். இதனை அறிந்திருக்கும் பலர்.. பெரியார் போன்ற சிலரின் காலத்துக்கு ஒவ்வாத பழைய கால வாதங்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்கின்றனர். ஆனால் மக்களோ.. இவர்களின் வாதங்களில் அர்த்தம் உணர்பவர்களாக இன்று இல்லை..!

இதனை தெளிவாக உணர்ந்து கொண்டு.. மொழி.. நில எல்லை.. கலை.. பண்பாடு.. விழுமியம் சார்ந்து தமிழர்கள் யார் என்பதையும் அவர்களின் தேசியம் என்ன என்பதையும் மக்கள் உணரச் செய்து.. அதன் கீழ் அந்த மக்களை ஒற்றுமைப்படுத்தி.. அவர்களின் ஒத்துழைப்போடு.. தமிழர்களே தமிழர்களை ஆளக் கூடிய நிலை வருதல் அவசியம்.

"தூய தமிழினம்".. என்ற சொல்லாடல் எக்காலத்துக்கும் எவருக்கும் பொருந்தப் போறதில்லை. இந்த உலகில் எவரும் தூய இனத்தினர் கிடையாது. எல்லோருக்குள்ளும் ஒரு கலப்பு நிலை உண்டு. அதற்காக.. மற்றைய இனத்தவர்கள் தங்களின் territorial எல்லைகளை விட்டுக்கொடுத்து.. மொழி.. பண்பாடு.. விழுமியம் தொலைத்து.. பொதுக்கொள்கை ஒன்றின் கீழ்.. தங்களை மற்றவர்களாக இனங்காட்டி வாழத் தயார் இல்லை.

சீமான் போன்றவர்கள் முன் வைப்பது.. தூய தமிழின வாதம் அல்ல. தமிழர்கள் தங்கள் நிலத்தில் தங்கள் தேசியம் போற்றி.. தங்களை தாங்களே ஆளுதல்... இதனையே அவர் முன்னிறுத்துகிறார். தமிழர்களின் நிலத்தில் மற்றவர்கள் வாழ வேண்டாம் என்பதல்ல.. சீமானின் வாதம். மற்றவர்கள் அவர்களின் உரிமைகளோடு வாழலாம். அதேவேளை தமிழர்களின் நிலத்தில் தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்ட.. தமிழர்களின் ஆட்சி உரிமையே இருக்க வேண்டும் என்பது சீமானின் வேண்டுகோள். இது தூய தமிழின வாதம் என்று சில திராவிட விசமிகளால் இனங்காட்டப்படுகின்றது. இது தவறாகும்.

யூதர்கள்.. தூய யூத இனம் அல்ல. அரேபியர்கள் தங்களை தூய அரேபியர்கள் என்று சொல்வதில்லை. ஆனால் எல்லோருக்கும்.. ஒரு தேசிய அடையாளம்.. நிலம்.. பண்பாடு.. விழுமியம்.. ஆட்சியுரிமம் உண்டு. ஆனால் தமிழர்களிடம் மட்டும் அது.. ஆரியத்தாலும்.. திராவிடத்தாலும் கூட்டுப்பறிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதனையே சீமான் நிராகரிக்கிறார்.

தமிழர்களை தமிழர்களிடமே கையளியுங்கள் என்று தான் அவர் கோருகிறார். இதனை தான் ஈழத்திலும் தமிழ் மக்கள் சிங்களர்களிடம் கோருகின்றனர். இங்கு தமிழர்கள்.. அது தமிழகம் ஆகட்டும்.. ஈழமாகட்டும்.. ஒரே இன உணர்வு பற்றியே உள்ளனர். இதனை சில திராவிட... பெரியார் விசமிகள்... தவறாக இனங்காட்டி தங்கள் வெட்டிப் புகழ் வளர்க்க முயல்கின்றனர்.

மக்கள் இவற்றை உணர்ந்து மற்றைய மொழி பேசுவோர் மத்தியிலும்.. புதிய தலைமுறை தமிழர்கள் மத்தியிலும்.. செத்துப் போன திராவிடத்தை கைவிட்டு.. தமிழ் தேசிய உணர்வு வளர்த்து.. தமிழர்கள்.. தங்களை தாங்களே தங்கள் நிலத்தில் ஆளும் நிலை பெற உதவிக் கொண்டு.. உலகில் பிற இனங்களோடு.. தம் தனித்துவமும் ஆட்சியுரிமையும்.. நில உரிமையும்.. காத்து ஒற்றுமையாக வாழ வேண்டும். இதுதான் தமிழர்களின் எதிர்பார்ப்பும் ஆகும். திராவிடம் காப்பதால்.. இதில் எதுவுமே தமிழர்களுக்கு சாத்தியமாகாது..! :icon_idea:

 

8 ஆண்டுகளுக்கு முன் இதே யாழ் களத்தில் பதிந்தது...! இன்று பேசு பொருளாகி விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

ஈழத்தினை சிங்களவன் எப்படி ஆளலாம் என்று கேட்டு சண்டை பிடித்து பெரும் உயிர்பலி கொடுத்து, அகதியாக வந்து, தமிழ் நாட்டினை, தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என்பது இனவெறிப் பார்வை என்பது எந்த வகை நியாயம்?

தமிழ்நாட்டை தனது வாழ்விடமாகக் கொண்டு தமிழில் சரளமாகப் பேசக்கூடியவர் ஆள்வதற்கும், தமிழ் ஈழத்தை ஆக்கிரமித்துள்ள சிங்களம் பேசும் சிங்களவர் ஆள்வதற்கும் உள்ள வித்தியாசம் புரியாமலே கேட்கின்றீர்கள்?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

தமிழ்நாட்டை தனது வாழ்விடமாகக் கொண்டு தமிழில் சரளமாகப் பேசக்கூடியவர் ஆள்வதற்கும், தமிழ் ஈழத்தை ஆக்கிரமித்துள்ள சிங்களம் பேசும் சிங்களவர் ஆள்வதற்கும் உள்ள வித்தியாசம் புரியாமலே கேட்கின்றீர்கள்?🤔

கிருபன், உங்களிடம் இருந்து இப்படி (மொக்கை) கேள்வியா?

1529ல் ஆக்கிரமித்தவர்கள் தமிழ் பேசுகிறார்கள். ஆள்கின்றனர்.

அப்படியானால் சிங்களவர்கள், இப்போது தமிழ் நன்கு படிக்கிறார்கள். பிறகென்ன, அவர்கள் ஆடசியில் சேர்ந்து வாழலாம் தானே. அவர்கள் தமிழ் படிப்பது குறித்து வேறு திரி ஒன்றும் உள்ளது.

பண்டாரநாயக்க (உண்மையில் தெலுங்கு நாயக்கர்) ஒரு தமிழராக அறியப்பட்டு சிங்களவராக நடித்தவர்...அரசியலுக்காக கண்டிய சிங்கள ரத்வத்தை குடும்ப பெண்ணை கட்டினார். அவர்தானே சிங்கள மொழி மட்டும் சட்டம் கொண்டு வந்தார். 

பிறகேன் சண்டை பிடித்தனர் முட்டாள் தமிழ் மக்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

ம‌றுப‌டியும் ஆர‌ம்ப‌த்தில் இருந்தா கிருப‌ன் அண்ணா /
2005ம் ஆண்டு எம்ம‌வ‌ர்க‌ள் வன்னியில் ப‌ல‌மா இருந்த‌ போதும் கூட‌ சொன்னார்க‌ள் இந்தியா த‌லையிட்டு எம‌க்கு தீர்வு பெற்று த‌ற‌னும் என்று /
நீங்க‌ள் சொல்லும் திராவிட‌ க‌ட்சிக‌ள் அப்ப‌ என்ன‌ செய்தார்க‌ள் , 
2009ம் ஆண்டு எம் இன‌ம் அழிய‌ இந்த‌ ப‌த‌வியை வைத்து என்னால் என்ன‌ செய்ய‌ முடியும் என்று க‌ருணாநிதி சொன்ன‌த‌ ம‌ற‌ந்து போனிங்க‌லா ,

இப்ப‌ ஸ்ராலின் தானே எதிர் க‌ட்சி த‌லைவ‌ர் , ஏதாவ‌து ஈழ‌ம் ப‌ற்றி வாய் திற‌ந்தாரா , 

திமுக்கா
ஆதிமுக்கா இவ‌ர்க‌ளால் தான் முடியும் என்றால் இந்த‌ 11 ஆண்டில் என்ன‌த்த‌ இவ‌ர்க‌ள் செய்தார்க‌ள் , ப‌தில‌ சொல்லுங்கோ கிருப‌ன் அண்ணா 

கிருப‌ன் அண்ணா  , அப்போது உங்க‌ளின் ப‌திலுக்கு என் ப‌தில‌ எழுதி இருந்தேன் , நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ க‌ட‌த்தி விட்டதாக‌வே உண‌ருகிறேன் 😉/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் நான் இணைத்த‌ காணொளியை பாருங்கோ , ப‌ல‌ உண்மைக‌ள் வெளியில் வ‌ரும் /

என‌க்கு திராவிட‌மும் ஒன்னு தான் சிங்க‌ள‌வ‌னும் ஒன்னு தான்  😉/

இந்த‌ துரோக‌ கும்ப‌ல் எம‌க்காக‌ உண்மையும் நேர்மையுமா குர‌ல் கொடுப்பார்க‌ள் என்றால் சுத்த‌மாய் இல்லை /

புத்தி உள்ள‌வ‌ன் என்ன‌ நினைப்பான் இந்த‌ திருட்டு கும்ப‌ல‌ இனியும் ந‌ம்ப‌க் கூடாது என்று /

திருமாள‌வ‌ன் திமுக்காவுட‌னும் காங்கிர‌ஸ்சுட‌னும் கூட்ட‌னி வைத்து விட்டு ல‌ண்ட‌னுக்கு வ‌ந்த‌ போது அவ‌ர் ப‌ட்ட‌ அவ‌மான‌த்தை பார்த்திங்க‌ள் தானே , 

வைக்கோவுக்கும் அதே நில‌மை தான் வ‌ரும்  , வைக்கோ கொஞ்ச‌ம் விப‌ர‌ம் ஆன‌வ‌ர் , இனி புல‌ம்பெய‌ர் நாடுக‌ளுக்கு வ‌ந்து ஈழ‌ த‌மிழ‌ர‌ ச‌ந்திக்க‌ மாட்டார் / வ‌ந்தா செருப்பு மாலை வைக்கோவுக்கு போட‌ப் ப‌டும் 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன நந்தன் 
உங்களை கிங் எண்டெல்லாவோ நினைச்சன் ,அடுத்தவனை கிண்டலடிக்க போய் நீங்களும் பிழையாய் அல்லவோ எழுதுகிறீர்கள் , .203 துப்பாக்கியோ ....? ஒரு வேளை போராளிகள் இப்படிச்சொல்லித்தான் உங்களுக்கு பயிற்சி தந்தவினமோ, துப்பாக்கியின் பெயர் அதுவல்ல கீழே பொருத்தியிருக்கும் Grenade launcher தான் M 203 (Single shot 40mm) .
துப்பாக்கியின் பெயர் M16A1, கண்ணை கட்டிக்கொண்டு துப்பாக்கியை கழட்டி பூட்டுமளவுக்கு பயிற்சியளித்த புலிகள் துப்பாக்கியின் பெயரை கூட ஒழுங்காக சொல்லித்தரவில்லையோ 

தாரு, இவர், நந்தன் இயக்கத்திலே இருந்தவரே?

அப்ப... பின்ன நானும்... இயக்கத்திலே நிண்டனான் 😉:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

இதற்க்குள் சம் சும் எப்படி வந்தார்கள் . மருந்து மாத்திரை எடுப்பது போல் நீங்கள் எபோதும் சம் சும்மை சாப்பாட்டு முன்பு ஒருமுறை சாப்பாட்டிற்கு பின்பு ஒரு முறை திட்டுவது உங்கள் வாடிக்கை.  இங்கு சம் சும்மை திட்டுவபர்களிடம் நான் கேட்பது 2009 க்கு முன்பு அரசியல் செய்து தப்பு தாளம் ஆடியவர்களிடம் இப்படி உரிமையுடன்  கேட்டிருந்தால் சம் சும் போன்றவரகள் எம்மை ஏமாற்றும் நிலை வந்திருக்காது.

ஈழத்தமிழர் பிரச்சனைகளை கதைக்கும் போது சம்சும் பேர்வளிகள் வராமல் நயன்தாரா நமிதாவே வருவினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2020 at 10:19, அக்னியஷ்த்ரா said:

என்ன நந்தன் 
உங்களை கிங் எண்டெல்லாவோ நினைச்சன் ,அடுத்தவனை கிண்டலடிக்க போய் நீங்களும் பிழையாய் அல்லவோ எழுதுகிறீர்கள் , .203 துப்பாக்கியோ ....? ஒரு வேளை போராளிகள் இப்படிச்சொல்லித்தான் உங்களுக்கு பயிற்சி தந்தவினமோ, துப்பாக்கியின் பெயர் அதுவல்ல கீழே பொருத்தியிருக்கும் Grenade launcher தான் M 203 (Single shot 40mm) .
துப்பாக்கியின் பெயர் M16A1, கண்ணை கட்டிக்கொண்டு துப்பாக்கியை கழட்டி பூட்டுமளவுக்கு பயிற்சியளித்த புலிகள் துப்பாக்கியின் பெயரை கூட ஒழுங்காக சொல்லித்தரவில்லையோ 

என்ன அக்கினி நீங்களும் ஆரம்பகால போராட்ட காலத்தில் துப்பாக்கிகளின் பெயரை சொல்வதில்லை எல்லாம் ஒரு கோட் பெயர்தான் அதாவது உன்மையான பெயரை சொல்வதில்லை.  என நான் நினைக்கிறன் 

ஆனால் துப்பாக்கிகளின் பெயர் அதுவாக இருக்கலாம்  நீங்கள் சொல்வது போல

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன அக்கினி நீங்களும் ஆரம்பகால போராட்ட காலத்தில் துப்பாக்கிகளின் பெயரை சொல்வதில்லை எல்லாம் ஒரு கோட் பெயர்தான் அதாவது உன்மையான பெயரை சொல்வதில்லை.  என நான் நினைக்கிறன் 

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ,ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக, அவர்கள் கோட் வேர்ட் பாவிப்பதுண்டு 
தொலைத்தொடர்பு ஒட்டுக்கேட்டலில் தெரியாமலிருக்கவே அதிகமாக பயன்படுத்துவர் 
ஆனால் போராளிகளுக்கு ஆயுதத்தை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விளங்கப்படுத்தப்பட்டுவிடும் என்று  , 
உ+ம் :டொங்கான் --இதுவும் போராளிகளால் பயன்படுத்தப்பட்ட கோட் வேர்ட் தான், ஆனால் கருத்துக்களத்தில் இப்படி எழுத முடியாது பாருங்கோ   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, அக்னியஷ்த்ரா said:

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ,ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக, அவர்கள் கோட் வேர்ட் பாவிப்பதுண்டு 
தொலைத்தொடர்பு ஒட்டுக்கேட்டலில் தெரியாமலிருக்கவே அதிகமாக பயன்படுத்துவர் 
ஆனால் போராளிகளுக்கு ஆயுதத்தை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விளங்கப்படுத்தப்பட்டுவிடும் என்று  , 
உ+ம் :டொங்கான் --இதுவும் போராளிகளால் பயன்படுத்தப்பட்ட கோட் வேர்ட் தான், ஆனால் கருத்துக்களத்தில் இப்படி எழுத முடியாது பாருங்கோ   

ம்  ஆனாலும் ஆயுத பற்றாக்குறை காணப்பட்ட காலத்தில் ஊருக்கு ஒன்றே வழங்கப்பட்டது அது சிலருக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம் .பின்னர் ஒரு குறுப்பில் ஒருவருக்கு பின்னர் ஆளாளுக்கு ஒன்று அதன் பின்னர் அடிச்சு எடுத்தது ஏராளம் அப்பவும் கோட்தான் 

ஒரு நாள் சித்திரம் கீறி கொண்டுவா என்றார்கள் நண்பரிடம் நான் முளிச்சு முளிச்சு திரிஞ்சன் என்ன சித்திரம் என தெரியாமல்😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

99439971_147013236904378_7288975932751085568_n.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeEChimZ9HcY1Oli9eHax_xflog16dUDXLeWiDXp1QNctyPKHvihkaLmnpoFKAvEsiOMrNhGrheMK8DrAo9w53mj&_nc_ohc=dwjC3t62SmkAX8NWUWA&_nc_ht=scontent-frx5-1.xx&oh=2f9bef3dee7adbeaf573bbc2a06aa129&oe=5EF6C4F4


அண்ணனின் தத்துவங்கள் அனைத்துமே மிகவும் எளிமையானவை. “எனக்கு ஓட்டுப் போடலைன்னா தொலைஞ்சீங்கடா”, “என் மேல் கேசு போட்டவங்களை நான் அதிகாரத்துக்கு வந்து தீர்த்துப்புடுவேன்”, “தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் கார் இலவசமாக வழங்கப்படும்”, “ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை”. போதும், இதற்கு மேல் தெம்பில்லை.

😆

- வினவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:


அண்ணனின் தத்துவங்கள் அனைத்துமே மிகவும் எளிமையானவை. “எனக்கு ஓட்டுப் போடலைன்னா தொலைஞ்சீங்கடா”, “என் மேல் கேசு போட்டவங்களை நான் அதிகாரத்துக்கு வந்து தீர்த்துப்புடுவேன்”, “தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் கார் இலவசமாக வழங்கப்படும்”, “ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை”. போதும், இதற்கு மேல் தெம்பில்லை.

😆

- வினவு

அவ‌ர் எத‌ற்காக‌ இப்ப‌டி சொன்னார் என்ற‌த‌ முழு காணொளி பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு புரியும் , அவ‌ர் என்ன‌ சொல்ல‌ வ‌ந்தார் என்று /
200ரூபாய்க்கு கூலிக்கி மார் அடிக்கும் கூட்ட‌ம் வெளியிடும் காணொளிக‌ளை தானே நீங்க‌ள் பார்த்து ம‌கிழ்ந்து விப‌ர‌ம் தெரியாம‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌து ,

நேற்று நான் இணைத்த‌ 40நிமிட‌ காணொளி கூட‌ நீங்க‌ள் பார்த்து இருக்க‌ மாட்டிங்க‌ள் /

உங்க‌ட‌ விவாதாம் எம் இன‌த்தை அழித்த‌ திமுக்கா ம‌ற்றும் ஆதிமுக்காவால் தான் விடிவு கால‌ம் பிற‌க்கும் என்று /

இந்த‌ திராவிட‌ கூட்ட‌ம் ஓவ‌ரா கூவினா ஈழ‌ விடைய‌த்தில் இவ‌ர்க‌ள் செய்த‌ ஊழ‌லை வைத்து வ‌ட‌ நாட்டான் மிர‌ட்டுவான் , பிற‌க்கு என்ன‌ அவ‌ங்க‌ளின் மிர‌ட்ட‌லுக்கு திராவிட‌ம் அட‌க்கி தான் வாசிப்பின‌ம் , 
2ஜீ ஊழ‌லில் 2009ம் ஆண்டு காங்கிர‌ஸ் க‌ருணாநிதியை இந்த‌ ஊழ‌லை வைத்து எப்ப‌டி மிர‌ட்டினார்க‌ள் என்ற‌து த‌மிழ் நாட்டில் ப‌ல‌ருக்கு தெரிந்த‌ விடைய‌ம் 😠😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

நேற்று நான் இணைத்த‌ 40நிமிட‌ காணொளி கூட‌ நீங்க‌ள் பார்த்து இருக்க‌ மாட்டிங்க‌ள் /

பொன்னான 40 நிமிடத் துளிகளை வீணாக்கமுடியுமா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

உங்க‌ட‌ விவாதாம் எம் இன‌த்தை அழித்த‌ திமுக்கா ம‌ற்றும் ஆதிமுக்காவால் தான் விடிவு கால‌ம் பிற‌க்கும் என்று /

 

என்னுடைய கருத்து தமிழகத்தில் உள்ள உதிரிக்கட்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்பதே. இறுதி யுத்த நேரத்தில் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற உதிரிகள் எதையும் செய்யமுடியாமல் கையாலாகாது நின்றார்கள். தங்கள் குற்றவுணர்வை மறைக்க வைகோவும், நெடுமாறனும் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று தமக்குத்தாமே சொல்லி சமாதானம் அடைந்தனர்!

எனவே தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான். 

நாம் தமிழரை அரசு கட்டிலில் ஏற்றிப் பார்க்க புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் செய்யும் ‘புரஜெக்ட்’, செந்தமிழன் சீமானின்  “வாய்” இருக்குமட்டும் வெற்றியளிக்காது😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

என்னுடைய கருத்து தமிழகத்தில் உள்ள உதிரிக்கட்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்பதே. இறுதி யுத்த நேரத்தில் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற உதிரிகள் எதையும் செய்யமுடியாமல் கையாலாகாது நின்றார்கள். தங்கள் குற்றவுணர்வை மறைக்க வைகோவும், நெடுமாறனும் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று தமக்குத்தாமே சொல்லி சமாதானம் அடைந்தனர்!

எனவே தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான். 

நாம் தமிழரை அரசு கட்டிலில் ஏற்றிப் பார்க்க புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் செய்யும் ‘புரஜெக்ட்’, செந்தமிழன் சீமானின்  “வாய்” இருக்குமட்டும் வெற்றியளிக்காது😁

கால‌ம் ப‌தில் சொல்லும் அதுவ‌ர‌ பொறுத்து இருங்கோ கிருப‌ண் அண்ணா 😁😉

Link to comment
Share on other sites

46 minutes ago, கிருபன் said:

என்னுடைய கருத்து தமிழகத்தில் உள்ள உதிரிக்கட்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்பதே. இறுதி யுத்த நேரத்தில் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற உதிரிகள் எதையும் செய்யமுடியாமல் கையாலாகாது நின்றார்கள். தங்கள் குற்றவுணர்வை மறைக்க வைகோவும், நெடுமாறனும் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று தமக்குத்தாமே சொல்லி சமாதானம் அடைந்தனர்!

எனவே தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான். 

நாம் தமிழரை அரசு கட்டிலில் ஏற்றிப் பார்க்க புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் செய்யும் ‘புரஜெக்ட்’, செந்தமிழன் சீமானின்  “வாய்” இருக்குமட்டும் வெற்றியளிக்காது😁

கிருபன்,  வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றோர் புலிகளுக்கு உண்மையான நிலமையை ஜதாரத்த‍ம் என்ன என்பதை களத்தில் இருந்த புலிகளுக்கு  அவர்களுக்கு புரியும் படி எடுத்து சொல்லி இருக்கலாம் என்பதே எனது கருத்து.  2005 ம் ஆண்டிற்கு பின்னரான பல மாற்றங்கள் என்பது புலிகள் தலைமையில் தான் தங்கி இருந்த‍து. ஆகவே அவர்களுடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நெடுமாறன் போன்றோர் நிலைமையை எடுத்து கூறியிருக்கலாம். அதன் மூலம் புலிகளின் அரசியல் அணுகு முறையில் மாற்றத்தை கொண்டுவந்து முள்ளிவாய்கால் அவலத்தை தடுத்து நிறுத்தி இருக்க முடியும். மாறாக புலிகளை மேலும் உசுப்பேற்றுவதை தான் அவர்கள் செய்தார்கள்.

(நான் இவ்வாறு கூறுவதன் மூலம் 1980 களில் இருந்து எமது போராட்டத்தில் அக்கறையுடன் அவர்கள் செய்த பல உதவிகளை மறப்பது என்று நினைக்க கூடாது. அவர்களின் உதவகள் என்றும் நன்றியுடனும் மரியாதையுடனும் நினைத்து பார்க்க கூடியவை)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.