Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

21 hours ago, Nathamuni said:

உங்கள் கருத்துடன் உடன் பட முடியவில்லை.

இந்திய அரசும், அதன் ராணுவமும் எமது இளைஞர்களை உசுப்பேத்தி ஆயுதம் கொடுத்து, முள்ளிவாய்க்கால் அழிவு வரை கொண்டு வந்து விட்டது.

அந்த நிலைமைக்கு காரணமானவர்களில், கருணாநிதியும் ஒருவர் என்று எமக்கு தெரியும்.

அதே நாட்டின் ஒருவர், குற்ற உணர்வில் எதுவும் பேசினால், அவர்கள் எம்மை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று போட்டு தாக்குவது.

செய்தார்கள், வைகோவும், திருமாவும், திருமுருகனும். ஏன் லண்டன் தமிழர்கள், பாலுவையும், ஸ்டாலினையும் கூட லண்டன் அழைத்து உபசரித்து பேசினார்கள்.

நம்புவர்கள் நம்பி விட்டு போகட்டும்.... நம்பாதவர்கள் நம்பாமல் போகட்டும்... அது அவரவர் உரிமை.

அதுக்காக, உங்கள் விருப்பு, வெறுப்புகளை அடுத்தவர்கள் மீது திணிக்க வேண்டாமே.

ஒரு கோஸ்ட்டி, கூட்டமைப்பினை சாடுகின்றது. இன்னோரு கோஸ்ட்டி கஜேந்திரகுமார் பின்னால் நிக்கும்.

மேலும் ஒரு கோஸ்ட்டி டக்லஸ் தான் பிதாமகன் என்று சொல்லும்.

கருணாவை விரும்பும் கோஸ்ட்டியோ, அவர் மூலமாக மகிந்தவை வளைத்து அலுவல் பார்க்கலாமே என்று சொல்லும்.

இன்னும் ஒரு கோஸ்ட்டியோ, சர்வதேசத்தினை நம்புவோம் என்று சொல்லும்.

அது அவரவர் விருப்பு வெறுப்பு. அனைவைரையும் நமது விருப்பு வெறுப்புக்குள் கொண்டுவரும் வேலை, ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத வேலை.

கிருபனுக்கும், நந்தனுக்கும், உங்களுக்கும் பிடிக்கவில்லை.

பையனுக்கு, நெடுகருக்கு, இசைக்கு, ஈழப்பிரியருக்கு, குமாரசாமியாருக்கு பிடிக்கிறது.

ஆனால், வேண்டுமென்றே, பதிவினை போட்டு, அடுத்தவர்கள் பைத்தியக்காரர்கள், நாம் விண்ணாதி விண்ணர்கள் என்று காட்டிக்கொள்வதில் ஏதோ பெருமை. 🤧

ஏதோ மனதில் தோன்றியதை எழுதினேன். யாரும் தொப்பியை எடுத்துக் கொள்ள வேண்டாம். 🥺

நாதமுனி, மேற்கண்ட உங்கள் கருத்தின் மூலம் நீங்கள் சொல்ல வருவது.

  1. எமது தமிழ் இயக்கங்கள் சொந்த அறிவு சற்றும் இல்லாமல் இந்திய அரசின் உசுப்பேற்றல்களாலேயே ஆயுதம் ஏந்தி போராடினர். இக்கருத்து மூலம் சுமந்திரன் ஆயுதம.போராட்டம் குறித்து கூறிய கருத்துகளை நீங்கள் முழுமையாக ஆதரிக்கிறீர்கள். (சுமந்திரன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட சுமந்திரனுக்கு ஆதரவான இந்த கருத்துக்கும் விருப்பு தெரிவித்திருப்பது வேடிக்கை)
  2. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அங்கு வாழும் சட்டபூர்வ பிரஜைகள் தமது விருப்பபடி யாருக்கும் ஆதரவு அளிக்க முழு உரிமையும் உள்ளது.  அது அவரவர் விருப்பு வெறுப்பு. அவர்களை துரோகிகள் என்று திட்ட ஈழத்தமிழர் எவருக்கும் உரிமை இல்லை.  
Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

எனவே தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான். 

 

என்ன ஒரு ஏமாளியக இருக்கின்றீர்கள் 🤣. இதுவரை இவர்கள் செய்தவை தெரியாதா?

இவர்கள்  கிந்திய றோவின் வழிநடத்தலில் தலை ஆட்டும் பொம்மைகள். ஜெயா கூட ஒன்றும் செய்யமுடியவில்லை, இப்ப இருப்பவர்கள் கை பாவைகள். 

இவர்கள் தானாக ஓரங்கட்டப்படுவார்கள். இன்றைய இளைஞர்கள் நல்ல தெளிவுடன் தமிழ் இன உணர்வுடன் இருக்கின்றார்கள். எங்களில் சிலர்தான் நம்பிக்கையிழந்து நிற்கின்றோம்

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

நாம் தமிழரை அரசு கட்டிலில் ஏற்றிப் பார்க்க புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் செய்யும் ‘புரஜெக்ட்’, செந்தமிழன் சீமானின்  “வாய்” இருக்குமட்டும் வெற்றியளிக்காது😁

கிருபன் ,புலம் பெயர் தமிழரில் ஒரு சிறு பகுதியினர் செய்யும் அந்த “புரஜேக்ட்” நாம் தமிழரை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கல்ல.  நீங்கள் கூறிய அந்த “ சீமானின் வாய்”  என்ற Freetime  Entertainment object க்கான கூலியே. அது இல்லை என்றால்  நாம் தமிழர் வயசுக்கு வந்தால் என்ன வராமல் போனால் என்ன. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, tulpen said:

நாதமுனி, மேற்கண்ட உங்கள் கருத்தின் மூலம் நீங்கள் சொல்ல வருவது.

  1. எமது தமிழ் இயக்கங்கள் சொந்த அறிவு சற்றும் இல்லாமல் இந்திய அரசின் உசுப்பேற்றல்களாலேயே ஆயுதம் ஏந்தி போராடினர். இக்கருத்து மூலம் சுமந்திரன் ஆயுதம.போராட்டம் குறித்து கூறிய கருத்துகளை நீங்கள் முழுமையாக ஆதரிக்கிறீர்கள். (சுமந்திரன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட சுமந்திரனுக்கு ஆதரவான இந்த கருத்துக்கும் விருப்பு தெரிவித்திருப்பது வேடிக்கை)
  2. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அங்கு வாழும் சட்டபூர்வ பிரஜைகள் தமது விருப்பபடி யாருக்கும் ஆதரவு அளிக்க முழு உரிமையும் உள்ளது.  அது அவரவர் விருப்பு வெறுப்பு. அவர்களை துரோகிகள் என்று திட்ட ஈழத்தமிழர் எவருக்கும் உரிமை இல்லை.  

ஒரு கேள்வியுமே விளங்கேல்ல.

இவ்வளவு மொக்கனா இருக்கிறனே? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, உடையார் said:

என்ன ஒரு ஏமாளியக இருக்கின்றீர்கள் 🤣. இதுவரை இவர்கள் செய்தவை தெரியாதா?

இவர்கள்  கிந்திய றோவின் வழிநடத்தலில் தலை ஆட்டும் பொம்மைகள். ஜெயா கூட ஒன்றும் செய்யமுடியவில்லை, இப்ப இருப்பவர்கள் கை பாவைகள். 

இவர்கள் தானாக ஓரங்கட்டப்படுவார்கள். இன்றைய இளைஞர்கள் நல்ல தெளிவுடன் தமிழ் இன உணர்வுடன் இருக்கின்றார்கள். எங்களில் சிலர்தான் நம்பிக்கையிழந்து நிற்கின்றோம்

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் குறைந்தது 60% சனங்களின் ஆதரவைக் கொண்டிருப்பவர்கள்.  அரசியல் பலமிக்கவர்கள். ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு 80களில் இவர்களின் ஆதரவு இருந்ததால்தான் போராட்டமே வளர்ந்தது. ஆதரவு ஏன் இல்லாமல் போனது என்பதை நான் திரும்பவும் சொல்லத் தேவையில்லை என நினைக்கின்றேன்.😎

திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டலாம் என்று காங்கிரஸ், பா.ஜ.க. மனப்பால் குடிப்பதுபோல அண்ணன் சீமானின் தம்பிகளும் மனப்பால் குடிக்கலாம். தப்பில்லை. ஆனால் நீங்கள் சொல்வதுபோல இளைஞர்கள் தெளிவாக இருப்பதனால்தான் திராவிடக்கட்சிகளை ஓரம்கட்ட முடியாமல் இருக்கின்றது😁

ஈழத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகள் இருக்கின்றன.

1. கோத்தாவுடன் இணைந்து சிங்கள இனத்துடன் ஐக்கியமாதல்

2. சமூக அக்கறையும், இராஜதந்திரமும் உள்ள ஓர் புதிய அரசியல் தலைமையை தாயகத்தில் கட்டியமைத்து, பின்தளமாக பெரும்பான்மை தமிழக மக்களின் ஆதரவுள்ள கட்சிகளினதும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களினதும் துணையுடன் ஒரு நீதியான தீர்வை தமிழர்களுக்கு பெற்றுக்கொள்ளல்.

இரண்டாவதைச் செய்ய நம்பிக்கையும், பொறுமையையும் இல்லாமல்தான் சீமான் போன்றவர்களின் பின்னால் சென்று முதலாவது தெரிவை விரைவுபடுத்துகின்றனர்.

 

இந்தியாவை எதிர்த்தல்’ என்பது புலம்பெயர் சூழலில் உள்ள பலரிடம் இருக்கும் ஒரு மனேபாவம். இதற்கு அவர்களின் வாழ்நிலையும் ஒரு காரணம். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் – தெற்காசிய பிராந்தியத்திலிருந்தே வெளியேறிவிட்ட உணர்வை பெற்றுவிடுகின்றனர். இதனால் அவர்களால் இலகுவாக இந்திய எதிர்புணர்வுக்குள் தங்களை இணைத்துக் கொள்ள முடிகின்றது. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட தமிழ் அரசியல் தரப்பினர் மத்தியில் ‘றோ’ எதிர்ப்பு என்பது தீவிரமாக இருக்கின்றது. வடக்கிலும் புலம்பெயர் சமூகத்தினர் மத்தியிலும் ‘றோ எதிர்ப்பாளர்கள்’ என்னும் ஒரு பிரிவினர் இருந்து கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலும் இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட அரசியல் நிலையாகும் – மேலும் இவ்வாறு பேசுகின்ற போது தாங்கள் அறிவுபூர்வமாக பேசுவதாகவும் சிலர் எண்ணிக் கொள்ளக் கூடும்

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் குறைந்தது 60% சனங்களின் ஆதரவைக் கொண்டிருப்பவர்கள்.  அரசியல் பலமிக்கவர்கள். ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு 80களில் இவர்களின் ஆதரவு இருந்ததால்தான் போராட்டமே வளர்ந்தது. ஆதரவு ஏன் இல்லாமல் போனது என்பதை நான் திரும்பவும் சொல்லத் தேவையில்லை என நினைக்கின்றேன்.😎

திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டலாம் என்று காங்கிரஸ், பா.ஜ.க. மனப்பால் குடிப்பதுபோல அண்ணன் சீமானின் தம்பிகளும் மனப்பால் குடிக்கலாம். தப்பில்லை. ஆனால் நீங்கள் சொல்வதுபோல இளைஞர்கள் தெளிவாக இருப்பதனால்தான் திராவிடக்கட்சிகளை ஓரம்கட்ட முடியாமல் இருக்கின்றது😁

ஈழத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகள் இருக்கின்றன.

1. கோத்தாவுடன் இணைந்து சிங்கள இனத்துடன் ஐக்கியமாதல்

2. சமூக அக்கறையும், இராஜதந்திரமும் உள்ள ஓர் புதிய அரசியல் தலைமையை தாயகத்தில் கட்டியமைத்து, பின்தளமாக பெரும்பான்மை தமிழக மக்களின் ஆதரவுள்ள கட்சிகளினதும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களினதும் துணையுடன் ஒரு நீதியான தீர்வை தமிழர்களுக்கு பெற்றுக்கொள்ளல்.

இரண்டாவதைச் செய்ய நம்பிக்கையும், பொறுமையையும் இல்லாமல்தான் சீமான் போன்றவர்களின் பின்னால் சென்று முதலாவது தெரிவை விரைவுபடுத்துகின்றனர்.

 

இந்தியாவை எதிர்த்தல்’ என்பது புலம்பெயர் சூழலில் உள்ள பலரிடம் இருக்கும் ஒரு மனேபாவம். இதற்கு அவர்களின் வாழ்நிலையும் ஒரு காரணம். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் – தெற்காசிய பிராந்தியத்திலிருந்தே வெளியேறிவிட்ட உணர்வை பெற்றுவிடுகின்றனர். இதனால் அவர்களால் இலகுவாக இந்திய எதிர்புணர்வுக்குள் தங்களை இணைத்துக் கொள்ள முடிகின்றது. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட தமிழ் அரசியல் தரப்பினர் மத்தியில் ‘றோ’ எதிர்ப்பு என்பது தீவிரமாக இருக்கின்றது. வடக்கிலும் புலம்பெயர் சமூகத்தினர் மத்தியிலும் ‘றோ எதிர்ப்பாளர்கள்’ என்னும் ஒரு பிரிவினர் இருந்து கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலும் இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட அரசியல் நிலையாகும் – மேலும் இவ்வாறு பேசுகின்ற போது தாங்கள் அறிவுபூர்வமாக பேசுவதாகவும் சிலர் எண்ணிக் கொள்ளக் கூடும்

 

 

 

 

திராவிட‌ம் ஓட்டுக்கு ம‌க்க‌ளுக்கு ப‌ண‌ம் குடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ முடியுமா என்று ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ மிஸ்ர‌ர் கிருப‌ன் அண்ணா ,

திராவிட‌ம் மெது மெதுவாக‌ அழியும் , திராவிட‌ க‌ட்சிக‌ளிட‌ம் ப‌ண‌ம் வேண்டி போட்டு ஓட்டு போட்ட‌ மக்க‌ளே ஒத்து கொள்ளுகின‌ம் , ஆனால் நீங்க‌ள் திராவிட‌ம் அது இது என்று புல‌ம்பிட்டு இருக்கிறீங்க‌ள் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒருவர் நான் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்பது இயல்பானது. அதை ஒரு விவாதம் ஆக்குவது அற்பத்தனம்
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2020 at 10:10, tulpen said:

1991 ல் எம்மவரே அதை கெடுத்து குட்டி சுவராக்கும் வரை அந்த ஆதரவு இருந்த‍து.

கிந்திய ஆமி தமிழ் பெண்களையும் தமிழ் மக்களையும் கொன்று குவித்ததை எல்லாம் மறந்து விட்டீர்கள். ஆனால் தமிழ்நாட்டு கட்சிகளால் மறந்தும் மறைக்கப்படும் அந்த சம்பவங்களை ஒவ்வொரு மேடையிலும் சீமான் காரணங்களை சொல்லி விளங்கப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200528-205836.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting and outdoor

ஒரு மஞ்சள் பையுடன் சென்னைக்கு வந்த கலைஞர் கருணாநிதி குடும்பம் எப்படி முப்பதாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தது என்று கேட்க முடியாதவர்கள்,
ஒரு நடிகையாக மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ருபாவுக்கு டான்ஸ் ஆடிய ஜெயலலிதா எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தார் என்பதை கேட்க முடியாதவர்கள்,
இட்லிக்குள் எப்படி கறி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள். சரி. பரவாயில்லை.
நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனோவுக்கு 6 பேர் பலியாகியுள்ளார்கள். அதைப் பற்றி அக்கறைப்படாதவர்கள் இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று அக்கறை கொள்கின்றனர். சரி. பரவாயில்லை.
திருச்சி சிறைக்குள் ஒரு அயுள் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி சீமான் கேட்கிறார்.
ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று கவலைப்படுபவர்கள் இந்த ஏழு தமிழர் பற்றியும் ஒரு வரியிலாவது அக்கறை காட்டியிருக்கலாம். சரி. பரவாயில்லை.
தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியலுக்காக சீமானை கிண்டல் பண்ணுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் சிலர் ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புரியவில்லை.
சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரே ( பிரபாகரன்) தன் தலைவர் என்றும் பகிரங்கமாக கூறுகிறார்.
ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை.
சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகன் தன் தந்தையின் மரண சடங்கை கைத்தொலைபேசி மூலம் பார்க்க அனுமதி கேட்டார். அனுமதிக்கப்படவில்லை.
அடுத்து லண்டனில் இருக்கும் தன் மகளுடன் கைத்தெலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
சீமான் இந்த ஈழத் தமிழரான முருகனுக்கும் அவர் மகளுக்காகவும் குரல் கொடுக்கிறார். 
ஆனால் சீமானை கிண்டல் செய்யும் ஈழத் தமிழர்கள் இந்திய அரசின் இந்த அடிப்படை மனிதவுரிமை மீறல் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லை. சரி. பரவாயில்லை.
இட்லிக்குள் கறி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழனுக்குள் இருக்கும் இன உணர்வை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

ஒரு மஞ்சள் பையுடன் சென்னைக்கு வந்த கலைஞர் கருணாநிதி குடும்பம் எப்படி முப்பதாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தது என்று கேட்க முடியாதவர்கள்,
ஒரு நடிகையாக மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ருபாவுக்கு டான்ஸ் ஆடிய ஜெயலலிதா எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தார் என்பதை கேட்க முடியாதவர்கள்,
இட்லிக்குள் எப்படி கறி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள். சரி. பரவாயில்லை.
நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனோவுக்கு 6 பேர் பலியாகியுள்ளார்கள். அதைப் பற்றி அக்கறைப்படாதவர்கள் இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று அக்கறை கொள்கின்றனர். சரி. பரவாயில்லை.
திருச்சி சிறைக்குள் ஒரு அயுள் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி சீமான் கேட்கிறார்.
ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று கவலைப்படுபவர்கள் இந்த ஏழு தமிழர் பற்றியும் ஒரு வரியிலாவது அக்கறை காட்டியிருக்கலாம். சரி. பரவாயில்லை.
தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியலுக்காக சீமானை கிண்டல் பண்ணுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் சிலர் ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புரியவில்லை.
சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரே ( பிரபாகரன்) தன் தலைவர் என்றும் பகிரங்கமாக கூறுகிறார்.
ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை.
சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகன் தன் தந்தையின் மரண சடங்கை கைத்தொலைபேசி மூலம் பார்க்க அனுமதி கேட்டார். அனுமதிக்கப்படவில்லை.
அடுத்து லண்டனில் இருக்கும் தன் மகளுடன் கைத்தெலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
சீமான் இந்த ஈழத் தமிழரான முருகனுக்கும் அவர் மகளுக்காகவும் குரல் கொடுக்கிறார். 
ஆனால் சீமானை கிண்டல் செய்யும் ஈழத் தமிழர்கள் இந்திய அரசின் இந்த அடிப்படை மனிதவுரிமை மீறல் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லை. சரி. பரவாயில்லை.
இட்லிக்குள் கறி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழனுக்குள் இருக்கும் இன உணர்வை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

Tholar balan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி முடிஞ்சிட்டுதா :unsure:

இந்த திரியை வாசித்தலில் புரிந்தது;
எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும்🙂.
விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம்😛.
இணையவனும், நுணாவும் சீமானிற்கு சப்போட் 😄
நிழலி இல்லை 😆
மோகன்🤔

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2020 at 10:40, tulpen said:

கிருபன்,  வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றோர் புலிகளுக்கு உண்மையான நிலமையை ஜதாரத்த‍ம் என்ன என்பதை களத்தில் இருந்த புலிகளுக்கு  அவர்களுக்கு புரியும் படி எடுத்து சொல்லி இருக்கலாம் என்பதே எனது கருத்து.  2005 ம் ஆண்டிற்கு பின்னரான பல மாற்றங்கள் என்பது புலிகள் தலைமையில் தான் தங்கி இருந்த‍து. ஆகவே அவர்களுடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நெடுமாறன் போன்றோர் நிலைமையை எடுத்து கூறியிருக்கலாம். அதன் மூலம் புலிகளின் அரசியல் அணுகு முறையில் மாற்றத்தை கொண்டுவந்து முள்ளிவாய்கால் அவலத்தை தடுத்து நிறுத்தி இருக்க முடியும். மாறாக புலிகளை மேலும் உசுப்பேற்றுவதை தான் அவர்கள் செய்தார்கள்.

(நான் இவ்வாறு கூறுவதன் மூலம் 1980 களில் இருந்து எமது போராட்டத்தில் அக்கறையுடன் அவர்கள் செய்த பல உதவிகளை மறப்பது என்று நினைக்க கூடாது. அவர்களின் உதவகள் என்றும் நன்றியுடனும் மரியாதையுடனும் நினைத்து பார்க்க கூடியவை)

அவயள விடுங்க, நீங்கள் ஏன் எடுத்து சொல்லேல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

அவயள விடுங்க, நீங்கள் ஏன் எடுத்து சொல்லேல்ல?

இதைப் பற்றி நிறைய எழுதப்பட்டு இருக்கு. மூத்த உறுப்பினராக இருந்த ஈரோஸ் பாலகுமார் (அவரின் வீட்டில் அண்ணன் சீமான் முதன்முதல் உடும்புக்கறி சாப்பிட்டார்!) கூட எடுத்துச் சொல்லமுற்பட்டார். ஆனால் அவரின் சந்திப்பைக்கூட தலைமைப்பீடம் தவிர்த்துவிட்டது. வன்னிக்குப்போய் பெரும் தளபதிகளுடன் படம் எல்லாம் எடுக்கக்கூடிய (அண்மையில் கனடாவில் மரணமடைந்த சுரேஸ் போன்று) செல்வாக்கானவர்களாக இருந்தால் லொபி செய்ய முடிந்திருக்கும். ருல்பன் அப்படியானவர் என்றால் அவராலும் முடியவேயில்லையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

இதைப் பற்றி நிறைய எழுதப்பட்டு இருக்கு. மூத்த உறுப்பினராக இருந்த ஈரோஸ் பாலகுமார் (அவரின் வீட்டில் அண்ணன் சீமான் முதன்முதல் உடும்புக்கறி சாப்பிட்டார்!) கூட எடுத்துச் சொல்லமுற்பட்டார். ஆனால் அவரின் சந்திப்பைக்கூட தலைமைப்பீடம் தவிர்த்துவிட்டது. வன்னிக்குப்போய் பெரும் தளபதிகளுடன் படம் எல்லாம் எடுக்கக்கூடிய (அண்மையில் கனடாவில் மரணமடைந்த சுரேஸ் போன்று) செல்வாக்கானவர்களாக இருந்தால் லொபி செய்ய முடிந்திருக்கும். ருல்பன் அப்படியானவர் என்றால் அவராலும் முடியவேயில்லையே!

ஜி, அப்போ இவருக்கும் புலிகளின் ஆயுத போராட்டத்திற்கும் தொடர்பில்லையா?

இவர் ஐரோப்பாவிற்கு வந்து பிரச்சாராம் செய்தபோது, இடம் பொருள் ஏவல் புரியாமல்  கரும்புலிகளை புகழ்கிறேன் என்று கரும்புலிகளின் நடவடிக்கைகளை  உளறியது தான் மிச்சம்.

இவரும் புதுவையும் கடைசிவரை தனது பிள்ளைகளை போராட்டத்தில் இணைக்கவேயில்லை.... ஆனால் பொதுமக்களை உசுப்பேற்றி இணைத்து விட்டிருந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இதைப் பற்றி நிறைய எழுதப்பட்டு இருக்கு. மூத்த உறுப்பினராக இருந்த ஈரோஸ் பாலகுமார் (அவரின் வீட்டில் அண்ணன் சீமான் முதன்முதல் உடும்புக்கறி சாப்பிட்டார்!) கூட எடுத்துச் சொல்லமுற்பட்டார். ஆனால் அவரின் சந்திப்பைக்கூட தலைமைப்பீடம் தவிர்த்துவிட்டது. வன்னிக்குப்போய் பெரும் தளபதிகளுடன் படம் எல்லாம் எடுக்கக்கூடிய (அண்மையில் கனடாவில் மரணமடைந்த சுரேஸ் போன்று) செல்வாக்கானவர்களாக இருந்தால் லொபி செய்ய முடிந்திருக்கும். ருல்பன் அப்படியானவர் என்றால் அவராலும் முடியவேயில்லையே!

 

1 hour ago, MEERA said:

ஜி, அப்போ இவருக்கும் புலிகளின் ஆயுத போராட்டத்திற்கும் தொடர்பில்லையா?

இவர் ஐரோப்பாவிற்கு வந்து பிரச்சாராம் செய்தபோது, இடம் பொருள் ஏவல் புரியாமல்  கரும்புலிகளை புகழ்கிறேன் என்று கரும்புலிகளின் நடவடிக்கைகளை  உளறியது தான் மிச்சம்.

இவரும் புதுவையும் கடைசிவரை தனது பிள்ளைகளை போராட்டத்தில் இணைக்கவேயில்லை.... ஆனால் பொதுமக்களை உசுப்பேற்றி இணைத்து விட்டிருந்தார்கள்.

ருல்பன் இடம் கேட்டிருந்தேன் 😟

Link to comment
Share on other sites

3 hours ago, Nathamuni said:

அவயள விடுங்க, நீங்கள் ஏன் எடுத்து சொல்லேல்ல?

 

1 hour ago, Nathamuni said:

 

ருல்பன் இடம் கேட்டிருந்தேன் 😟

நாத முனி நான் அப்படி எடுத்து சொல்ல வெளிக்கிட்டிருந்தால்... என்னுடன் யாழ் களத்தில் உரையாடி இருப்பீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, tulpen said:

 

நாத முனி நான் அப்படி எடுத்து சொல்ல வெளிக்கிட்டிருந்தால்... என்னுடன் யாழ் களத்தில் உரையாடி இருப்பீர்களா? 

தலைவா,

எனது முந்தய பதிவுகளை நீங்கள் பார்க்கவில்லை போலும்.

கிருபன், புலி ஆதரவாளர், சீமான் ஆதரவாளர் அல்ல.

நான் புலிகள் விசயத்தில் நடுநிலையாளர், சீமான் ஆதரவாளர். இரண்டையும் குழப்புவதில்லை. அது வேறு, இது வேறு என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

சீமான், பிரபாகரனை தலைவனாக கொண்டு செல்ல வேண்டிய தேவையையும், அதன் அவலமான (தமிழகத்தில் நிலவும்) காரணத்தினையும் புரிந்து கொள்கிறேன்.

கிருபன் போல, excel மண்டபம் போகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைகவில்லை. ஏனெனில் இங்கே உணர்வுக்கு முன் சிலரது பண ஆசை முன்னே உள்ளது என உணர்ந்ததால்.

oxford பக்கத்தில், ஒரு பெரிய காணித்துண்டு வாங்கி, பணம் பார்க்க ஒரு குரூப் கிளம்பியது. பெரிசா போகவில்லை போலுள்ளது.

இங்கே பணத்துக்காக தூக்கி பிடிப்பவர்களுக்கும், அங்கே ஒரு அவலத்தினை தடுக்க தூக்கிப் பிடிப்பவர்களுக்கும் வேறுபாடு உண்டு.

இந்த புரிதல் இருந்தால், சீமான் எதிர்க்கப்படுவதன் காரணமும் புரியும். மீண்டும் சொல்கிறேன். தொப்பியை உங்கள் தலைக்கு போட்டுக் கொண்டு வராதீர்கள்.

 

Link to comment
Share on other sites

30 minutes ago, Nathamuni said:

தலைவா,

எனது முந்தய பதிவுகளை நீங்கள் பார்க்கவில்லை போலும்.

கிருபன், புலி ஆதரவாளர், சீமான் ஆதரவாளர் அல்ல.

நான் புலிகள் விசயத்தில் நடுநிலையாளர், சீமான் ஆதரவாளர். இரண்டையும் குழப்புவதில்லை. அது வேறு, இது வேறு என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

கிருபன் போல, excel மண்டபம் போகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைகவில்லை. ஏனெனில் இங்கே உணர்வுக்கு முன் சிலரது பண ஆசை முன்னே உள்ளது என உணர்ந்ததால்.

oxford பக்கத்தில், ஒரு பெரிய காணித்துண்டு வாங்கி, பணம் பார்க்க ஒரு குரூப் கிளம்பியது. பெரிசா போகவில்லை போலுள்ளது.

எமது தமிழ் மக்கள் இலங்கை தீவில் உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழ புலிகளின் ஆயுத போராட்டம் ஒரு உந்து சக்தியாக அமையும் என்று நம்பியதால்  நான் புலிகளின் போராட்ட‍த்தின் ஆதரவாளராக புலிகள் இருக்கும் போது இருந்தேன்.  ஏனைய மக்களை போல் என்னால் முடிந்த பங்களிப்பையும் செய்தேன். எனது நம்பிக்கை பொய்த்து நான் நம்பிய  புலிகள்  தமது மோசமான அரசியலால் நம்பிய மக்களையும் நட்டாற்றில் விட்டு தாமும் காலாவதியாகினர். 

 சீமான் அடுத்த நாட்டில் பதவிக்கு வர துடிக்கும்  அதற்காக இனவெறியை கையில் எடுத்து அதை தூண்டிவரும்  அரசியல்வாதிகளில் ஒருவர்  என்பதால் அவரை ஆதரிக்க வேண்டிய எந்த தேவையும் எனக்கு இல்லை.  நான் தமிழக தமிழரும் இல்லை எனக்கு வாக்குரிமையும் இல்லை. நீங்கள் ஒரு பதிவில் கூறியது போல் எதிர் காலத்திலாவது  சீமான் திருந்தினால் தமிழக மக்கள் அவரை ஆதரிக்கலாம்.  எப்படியோ அவர் பதவிக்கு வருவதை தீர்மானிப்பது தமிழக தமிழரே. 

தமிழகத்தில் வாக்குரிமை இல்லாத அடுத்து நாட்டு பிரஜையாக நீங்கள் உங்களை சீமான் ஆதரவாளர் என்று கூறுகிறீர்கள். தமிழத்தில்  வாக்குரிமை உள்ள தமிழக பிரஜைகள் சட்டபூர்வமாக ஒரு கட்சியை ஆதரிப்பதை அங்கீகரிக்க மறுக்கும் நீங்கள்  அவர்களை திமுக ,அதிமுக சொம்பு என்று கொச்சைப்படுத்துகின்றீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

 சீமான் அடுத்த நாட்டில் பதவிக்கு வர துடிக்கும்  அதற்காக இனவெறியை கையில் எடுத்து அதை தூண்டிவரும்  அரசியல்வாதிகளில் ஒருவர்  என்பதால் அவரை ஆதரிக்க வேண்டிய எந்த தேவையும் எனக்கு இல்லை.  நான் தமிழக தமிழரும் இல்லை எனக்கு வாக்குரிமையும் இல்லை. நீங்கள் ஒரு பதிவில் கூறியது போல் எதிர் காலத்திலாவது  சீமான் திருந்தினால் தமிழக மக்கள் அவரை ஆதரிக்கலாம்.  எப்படியோ அவர் பதவிக்கு வருவதை தீர்மானிப்பது தமிழக தமிழரே. 

உங்களது எதிர்ப்போ, எனது ஆதரவோ... பெரிதாக எதுவும் செய்யப்போவதில்லை.

கிருபனிடம் கேட்ட, அவர் பதில் அளிக்காத அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

சிங்களவன் எப்படி எம்மை ஆளலாம் என்று சண்டையிட்ட புலிகளை ஆதரித்து விட்டு, தமிழனை தமிழனே ஆளனும் என்று சொல்லும் சீமான் இனவெறியன் என்பது என்ன நியாயம்? 

ஒரே ஒரு காரணம் இருக்கலாம்.

மன்னிக்க வேண்டும்... இலங்கை ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று குப்புக்கரணம் அடித்த இருவர்; ஒருவர் டக்லஸ் அடுத்தவர் கருணா.

இனவெறி இல்லாதவர்கள். உங்கள் பதிவு படி... திருந்தியவர்கள்.

அவர்களுக்கு உங்கள் பேராதரவு உண்டா?

Link to comment
Share on other sites

10 minutes ago, Nathamuni said:

உங்களது எதிர்ப்போ, எனது ஆதரவோ... பெரிதாக எதுவும் செய்யப்போவதில்லை.

கிருபனிடம் கேட்ட, அவர் பதில் அளிக்காத அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

சிங்களவன் எப்படி எம்மை ஆளலாம் என்று சண்டையிட்ட புலிகளை ஆதரித்து விட்டு, தமிழனை தமிழனே ஆளனும் என்று சொல்லும் சீமான் இனவெறியன் என்பது என்ன நியாயம்? 

நான் வாழும் சுவிஸ் நாட்டில் ஒரு அரசியல் வாதி ஒருவர் இங்கு பிறந்து பிரஜாவரிமை பெற்ற ஒரு வெளிநாட்டு  வம்சாவளியினர் எவரும் என்ன தகுதி அவருக்கு இருந்தாலும்  எப்போதும்  சுவிற்சர்லாந்தின் ஜனாதிபதியாக முடியாது.  தூய சுவிஸ்கார‍ர் மட்டும் தான் சுவிஸை ஆளவேண்டும் என்று சொன்னால் அது இனவெறியாக தான் இருக்க முடியும்.  அதை தான் சீமானும் கூறுகிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இந்த திரி முடிஞ்சிட்டுதா :unsure:

இந்த திரியை வாசித்தலில் புரிந்தது;
எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும்🙂.
விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம்😛.
இணையவனும், நுணாவும் சீமானிற்கு சப்போட் 😄
நிழலி இல்லை 😆
மோகன்🤔

 

 

உங்களை போல நந்தன் கிருபன் அண்ணா போல அறிவாளிகளாக 
பிறக்கும் பாக்கியம் எல்லா தமிழருக்கும் கிடைக்காததும் சீமான் செய்த தவறுதான்! 

அறிவாளிகள் வெட்டி புடுங்குவதை விட 
சாமானியர்கள்தான் இந்த உலகை வடிவமைக்கிறார்கள் 
என்பது உப்பு போல கசக்கும் ...உணவுக்கு இன்றி அமையாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

நான் வாழும் சுவிஸ் நாட்டில் ஒரு அரசியல் வாதி ஒருவர் இங்கு பிறந்து பிரஜாவரிமை பெற்ற ஒரு வெளிநாட்டு பிரஜையின் வம்சாவளியினர் எவரும் என்ன தகுதி அவருக்கு இருந்தாலும்  எப்போதும்  சுவிற்சர்லாந்தின் ஜனாதிபதியாக முடியாது.  தூய சுவிஸ்கார‍ர் மட்டும் தான் சுவிஸை ஆளவேண்டும் என்று சொன்னால் அது இனவெறியாக தான் இருக்க முடியும்.  அதை தான் சீமானும் கூறுகிறார். 

உங்களுடன் ஒரு ஆக்கபூர்வமான விவாதம் ஆரம்பித்த சில நேரங்களில் குழம்பி விடுகிறீர்கள்.

சுவிஸில் உங்களால் தலை கீழாக நின்றாலும் ஜனாதிபதியாக முடியாது. இதனை ஒரு அரசியல் வாதி வாயால் சொல்ல வேண்டியதில்லை. தவறான உதாரணம். அங்குள்ள சில காண்டோன்களில், வெளியூர்க்கார்களுக்கு குடியுரிமை கொடுக்கவே உள்ளூர் தேர்தல் நடத்தப்பட்டு, பெரும்பாலானவை இனவாதம் காரணமாக நிராகரிக்கப்படுள்ளது.

அமெரிக்காவில் ஆஸ்திரேலியாவில் பிறந்த வெள்ளை தோல் ஆர்னோல்ட் ஜனாதிபதியாக முடியாத வகையில் சட்டம் உள்ளது. அது இனவாதம் இல்லையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

கிருபனிடம் கேட்ட, அவர் பதில் அளிக்காத அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

கேள்வியிலேயே பதில் இருந்ததால் பதிலளிக்கவேண்டி இருந்திருக்கவில்லை!

தெலுங்கு நாயக்கர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்டார்கள் என்றாலும் அவர்களின் பரம்பரையினர் தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களாக இனமாகவும் உணர்வாகவும் கொண்டுள்ளனர். அவர்களை தெலுங்கன் என்று சொல்லுவதுதான் நியாயம் என்றால் எங்கேபோய் முட்டிக்கொள்ள? இதைத்தான் கடைந்தெடுத்த இனவாதம் என்பது.

சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து தமிழரை தனக்கும் கீழானவர்கள் என்று சொல்கின்றான். சிங்களவனுக்கு தமிழும் தெரியாது (கொன்னைத் தமிழ் சேர்ப்ப்பில்லை), தமிழுணர்வும் கிடையாது. இது பச்சைப்புள்ளைக்கும் தெரியும் என்பதால் கேள்வி மப்பில் வந்ததாக்கும் என்று நினைத்திருந்தேன். இரண்டாம் தரமும் கேட்டதால் ஒன்றில் மப்பில்லை. அல்லது இரண்டு தரமும் மப்புத்தான்😜

 

இனங்களை பற்றி ஆராயவெளிக்கிட்டால் சிங்களவனை தமிழரின் பரம்பரையினர் என்றும் நிறுவலாம்.😀 தலைவர்  பிரபாகரனை மலையாளி என்றும் நிறுவலாம்.🤒

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

உங்களை போல நந்தன் கிருபன் அண்ணா போல அறிவாளிகளாக 
பிறக்கும் பாக்கியம் எல்லா தமிழருக்கும் கிடைக்காததும் சீமான் செய்த தவறுதான்! 

எல்லோரும் சிங்களவன் எப்படி எம்மை ஆளலாம் என்று புலிகளை ஆதரித்தார்களாம். சிலர் இயக்கத்திலும் இருந்தார்களாம்.

தமிழனை, தமிழனே ஆளவேண்டும் என்று சீமான் சொல்வது இனவாதமாம்.

நல்லா இருக்குது நியாயம், நியாமாரே.

11 minutes ago, கிருபன் said:

கேள்வியிலேயே பதில் இருந்ததால் பதிலளிக்கவேண்டி இருந்திருக்கவில்லை!

தெலுங்கு நாயக்கர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்டார்கள் என்றாலும் அவர்களின் பரம்பரையினர் தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களாக இனமாகவும் உணர்வாகவும் கொண்டுள்ளனர். அவர்களை தெலுங்கன் என்று சொல்லுவதுதான் நியாயம் என்றால் எங்கேபோய் முட்டிக்கொள்ள? இதைத்தான் கடைந்தெடுத்த இனவாதம் என்பது.

சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து தமிழரை தனக்கும் கீழானவர்கள் என்று சொல்கின்றான். சிங்களவனுக்கு தமிழும் தெரியாது (கொன்னைத் தமிழ் சேர்ப்ப்பில்லை), தமிழுணர்வும் கிடையாது. இது பச்சைப்புள்ளைக்கும் தெரியும் என்பதால் கேள்வி மப்பில் வந்ததாக்கும் என்று நினைத்திருந்தேன். இரண்டாம் தரமும் கேட்டதால் ஒன்றில் மப்பில்லை. அல்லது இரண்டு தரமும் மப்புத்தான்😜

 

இனங்களை பற்றி ஆராயவெளிக்கிட்டால் சிங்களவனை தமிழரின் பரம்பரையினர் என்றும் நிறுவலாம்.😀 தலைவர்  பிரபாகரனை மலையாளி என்றும் நிறுவலாம்.🤒

With images) | Smiley, Smiley emoji, Emoticon

 

அடேங்கப்பா விளக்கம் !!

500 வருசத்துக்கு முன்னம் வந்த தெலுங்கன் இன்னும் தமிழ் பேசி ஆளலாம்.

72 வருசத்துக்கு முன்னம் ஆளத்தொடங்கிய சிங்களவன் தமிழ் இன்னும் பேசாததால், ஆளப்படாது.

அதுதான் நம்ம இனவாத தத்துவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

உங்களை போல நந்தன் கிருபன் அண்ணா போல அறிவாளிகளாக 
பிறக்கும் பாக்கியம் எல்லா தமிழருக்கும் கிடைக்காததும் சீமான் செய்த தவறுதான்! 

அறிவாளிகள் வெட்டி புடுங்குவதை விட 
சாமானியர்கள்தான் இந்த உலகை வடிவமைக்கிறார்கள் 
என்பது உப்பு போல கசக்கும் ...உணவுக்கு இன்றி அமையாதது. 

 

எதிர்பார்த்த எதிர்வினைதான் வந்துள்ளது. நாம் மற்றவர்கள் எப்படிச் சிந்திப்பார்கள் என்று உய்த்தறியும்நுண்ணறிவையும் கொண்டுள்ளோம் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.😎

சாமானியர்கள்தான் இந்த உலகை வடிவமைக்கின்றார்கள் என்ற கருத்தியலை விதைத்து பெரும்பான்மையானவர்களை கோர்ப்பரேட் உலகம் அடிமையாக வைத்திருக்கின்றது என்று நாளை புலம்பக்கூடாது. இலுமினாட்டி, freemasons போன்ற அமைப்புக்களில் இருப்பவர்கள்தான் உலகை ஆளுகின்றார்கள் என்றும் நம்பக்கூடாது. ஆமா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.