Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சில‌ரின் உல‌க‌ம் ல‌ண்ட‌ன் ம‌ற்றும்  இல‌ங்கை , க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பார்த்தால் தெரியும் அண்ண‌ன் சீமானுக்கு எத்த‌னையோ நாட்டில் இருந்து ஆத‌ர‌வு கொடுக்கின‌ம் , அதும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் , 

புல‌ம்பெய‌ர் நாட்டில் இருக்கும் பெரும்பாலான‌ பிள்ளைக‌ளுக்கு இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ளை தெரியாது , சீமான் யார் என்று கேட்டால் அவ‌ர் மேடையில் பேசுவ‌த‌ சின்ன‌ன் சிறுசுக‌ள் அப்ப‌டியே சொல்லுவின‌ம் , 

இத‌ வாசித்த‌ பிற‌க்கு யாருக்கு எங்கை எரிய‌ போகுதோ தெரியாது , இது தான் சீமானின் வேர்வைக்கு கிடைத்த‌ வெற்றி , 
த‌மிழ‌க‌த்து இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளும் அண்ண‌ன் சீமானின் பேச்சை கேக்க‌ ஆர‌ம்பிச்சிட்டின‌ம் , வ‌ள‌ந்து  அந்த‌ பிள்ளைக‌ள்  ஓட்டு போடும் நிலை வ‌ரும் போது த‌மிழ‌க‌த்தில் மாற்ற‌ம் க‌ண் முன்னே தெரியும் 🤞

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
7 hours ago, பையன்26 said:

 

நாதா , நான் பிற‌ந்து வ‌ள‌ந்த‌து  ஏழாலையில் , ஆனால் யாழ்பாண‌த்திலும் கூட‌ த‌ங்கி இருக்கிறேன் , அங்கு எங்க‌ளுக்கு மூன்று வீடு இருக்கு /

 

தம்பி ஏழாலையோ, ஏழாலை எவடம் ?நானும் இடம்பெயர்ந்து வந்து கொஞ்சகாலம் " உத்தமன் சிலையடியிலே " இருந்தனான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இந்த கருத்து நான் மருதருக்கு எழுதியது தவறுதலாய் பகலவனை கோட் பண்ணி விட்டேன் ...மன்னிக்கவும் 

அவரோ, தலைவர் மற்றும் சூசையோட கடைசி வரை நிண்டனான் எண்டுறார்.

நீங்களோ அங்காளிப்பக்கம், அம்மானிண்ட ஆதரவாளர்.

இப்ப சீமானை எதிர்க்க, ரெண்டு பேரும் சேருவியலோ...

அட... கண்ணுறாவியே   😟

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தலைமை தாயகத்தில் இருந்துதான் வரவேண்டும். தமிழகமும் புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களும் பின்தளமாகவே செயற்படவேண்டும். இப்படித்தான் 2009க்கு முன்னர் இருந்தது. அதுதான் சரியானதும் ஆகும்.

தாயகத்தில் உள்ள தற்போதைய தலைமை தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத் தராது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. புலம்பெயர் தமிழர்தான் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

2009 மே மாதத்திற்குப் பின்னர் ஈழத்தமிழருக்கு சரியான தலைமை இல்லாததால், அந்த வெற்றிடத்தை சீமான் என்ற மாயமானைக் கொண்டு நிரப்ப முனையாமல், சரியான தலைமையை தாயகத்தில் உருவாக்கி அவர்களுடன் கைகோர்க்கவேண்டும். 

 

 

கிருபன் உங்களுடைய இக்கருத்துடன் மட்டும் 100% ஒத்துப்போகிறேன்.

யாழ் களத்தில் உள்ள பெரும்பாலானவர்களும் இக்கருத்துடன் ஒத்துப்போவார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் என்ன அவர்களுடைய கௌரவம் சொல்லவிடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இந்த கருத்தை எழுத உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமோ சூடு,சுரணையோ இல்லையா😉 

இந்த திரியில் சீமானை விஜயலக்சுமியோடு சேர்த்து எழுதிட்டார் என்று துள்ளுபவர்கள் தான் அம்மானின் சொந்த புகைப்படங்களை வெட்கமில்லாமல் தேடித் ,தேடி இணைக்கிறார்கள்.

கருணா நான் திருந்திவிட்டேன் என்றுதானே  இயக்கத்தை விட்டுட்டு ஓடினவர்.ஓடிப்போனவர் பொம்புளையளோடை கும்மாளம் அடிச்சதை தவிர வேறை என்ன செய்தவர்?
 கிழக்கு பகுதியிலை முஸ்லீம்களின்ரை அட்டகாசமும் ஆதிக்கமும் கூடினது மட்டுமில்லாமல் புத்த பிக்குகளின்ரை அகங்கார அதிகாரங்களும் சனங்களும் அடி வாங்கினதுதான் மிச்சம்.

தலைவரைப்பற்றியோ புலிகளை பற்றியோ சீமான் கதைக்கக்கூடாது  அருகதையில்லாவர் என குமுறும் நீங்கள்............ ஈழத்தில் இருப்பவர்கள் அல்லதுபுலம்பெயர் தேசங்களில்  இருப்பவர்கள் புலிகளையும் தலைவரையும் நையாண்டி செய்த போது எங்கே  போனீர்கள்?

ஏன் சுமந்திரன் கூட புலிகளை வெறுத்து கதைக்கின்றார். அவர்கள் போராட்டம் பிழை என்கிறார்.
அதன் அர்த்தம் விளங்குகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நான் அம்மான் பக்கம் தான் ஆனால் எது நியாயமோ அதை  சொல்வதில் பிழையில்லை 

ஏன் யாரும் வந்து உங்களுக்குகாய் கதைக்கோணும் ,போராடணும் ,அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் .
உங்கள் நாட்டில் சிறந்தவர்களாய்ப் பார்த்து உருவாக்குங்கள்..
 

அம்மா தாயே,

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு என்கின்ற ரீதியில் எல்லாவற்றையும் போட்டுக் குழப்புகின்றீர்கள். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தலைமை தாயகத்தில் இருந்துதான் வரவேண்டும். தமிழகமும் புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களும் பின்தளமாகவே செயற்படவேண்டும். இப்படித்தான் 2009க்கு முன்னர் இருந்தது. அதுதான் சரியானதும் ஆகும்.

தாயகத்தில் உள்ள தற்போதைய தலைமை தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத் தராது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. புலம்பெயர் தமிழர்தான் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

2009 மே மாதத்திற்குப் பின்னர் ஈழத்தமிழருக்கு சரியான தலைமை இல்லாததால், அந்த வெற்றிடத்தை சீமான் என்ற மாயமானைக் கொண்டு நிரப்ப முனையாமல், சரியான தலைமையை தாயகத்தில் உருவாக்கி அவர்களுடன் கைகோர்க்கவேண்டும். 

 

பிளான் எல்லாம் நல்லாய்த்தான் இருக்கு ஆனால் எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது?

தாயகத்தில் தற்போது தமிழருக்கு தலைமை வகிக்கக்கூடிய ஒருவரின் பெயரை சொல்லுங்கள்.


புலம்பெயர் தமிழர்கள்   போராட்டத்தை முன்னெடுக்க முடியாது தான்.இனிவரும் காலங்களில் தாயக அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் பிரசன்னமும் நிச்சயம் இருக்க வேண்டும்.
ஏனெனில் புலம்பெயர் தமிழர்களின் பலம் சிங்கள அரசிற்கு மட்டும் நன்றாகவே தெரியும். 

சீமான் ஈழமக்களின் அவலங்களை மேடைக்கு மேடை பேசும் போது வராத கோவம் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்லும் போது ஏன் உங்களைப்போன்றவர்களுக்கு கோபம் வருகின்றது?
இலங்கையில் ஆமைக்கறி,உடும்புக்கறி சாப்பிடுபவர்களை நீங்கள் பார்த்ததில்லையா?
சீமான் தமிழினத்தின் தலைவராக மாறவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

பிளான் எல்லாம் நல்லாய்த்தான் இருக்கு ஆனால் எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது?

தாயகத்தில் தற்போது தமிழருக்கு தலைமை வகிக்கக்கூடிய ஒருவரின் பெயரை சொல்லுங்கள்.


புலம்பெயர் தமிழர்கள்   போராட்டத்தை முன்னெடுக்க முடியாது தான்.இனிவரும் காலங்களில் தாயக அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் பிரசன்னமும் நிச்சயம் இருக்க வேண்டும்.
ஏனெனில் புலம்பெயர் தமிழர்களின் பலம் சிங்கள அரசிற்கு மட்டும் நன்றாகவே தெரியும். 

சீமான் ஈழமக்களின் அவலங்களை மேடைக்கு மேடை பேசும் போது வராத கோவம் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்லும் போது ஏன் உங்களைப்போன்றவர்களுக்கு கோபம் வருகின்றது?
இலங்கையில் ஆமைக்கறி,உடும்புக்கறி சாப்பிடுபவர்களை நீங்கள் பார்த்ததில்லையா?
சீமான் தமிழினத்தின் தலைவராக மாறவில்லை.

இவர்களில் பலர், எதுக்காக சீமானை பிடிப்பதில்லை என்று கேட்டுப்பாருங்கள்.

நீட்டி, முழக்கி... என்னண்டா.... வந்து... அதுதான், அவர் அங்கே தமிழகத்திலே, கண காலமாக இருக்கும் வேறு மொழி ஆட்களுக்கு எதிராக இனவெறி அரசியல் செய்கிறாராம்.

சரி... அப்ப... சிங்களவரை எதிர்த்து எதுக்கு போராடினீர்கள், அது இனவெறி இல்லையையோ என்றால், பதிலே சொல்லாமல் பம்முவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kaalee said:

யாழ் களத்தில் உள்ள பெரும்பாலானவர்களும் இக்கருத்துடன் ஒத்துப்போவார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் என்ன அவர்களுடைய கௌரவம் சொல்லவிடாது.

புலம்பெயர் தமிழர்தான் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
சீமான் என்ற மாயமானைக் கொண்டு நிரப்ப முனையாமல், சரியான தலைமையை தாயகத்தில் உருவாக்கி அவர்களுடன் கைகோர்க்கவேண்டும்.
என்ற கிருபனின் கருத்துக்களுடன் நானும் ஒத்து போகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kaalee said:

கிருபன் உங்களுடைய இக்கருத்துடன் மட்டும் 100% ஒத்துப்போகிறேன்.

யாழ் களத்தில் உள்ள பெரும்பாலானவர்களும் இக்கருத்துடன் ஒத்துப்போவார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் என்ன அவர்களுடைய கௌரவம் சொல்லவிடாது.

ஈழத் தமிழினத்தின் தலைவராக சீமானைக் கருதுகிறார்களாம். இதனை ஒத்துக்கொள்ள கெளவரம் இடம்தராதாம் 😂😂

யாரையா உங்களுக்கு இதனைச் சொன்னது. அந்தப் புத்திசாலிக்கு - அதென்ன புலிற்சர் பிறை சோ அல்லது நோபல் பீஸ் பிறைசோ -(😂😂😂) கொடுக்கலாமென்று இருக்கிறன். அற்றஸைத் தாங்கோ . 😏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

 

5 hours ago, ரதி said:

சீமான்

இப்படி இவர்களுக்கு பின்னால் நின்று விசிலடிக்காமல் ஈழத்தில் இருக்கும் உணர்வுமிக்க ,படித்தவர்களாய் பார்த்து தேர்ந்து எடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மூலம் அரசியல் ரீதியான தீர்வினை வென்றெடுப்பதற்கு புலத்தில் உள்ளவர்கள் உறுதுணையாய் நிற்க வேண்டும் 

👍

இந்த கருத்துடனும் ஒத்து போகிறேன்

5 hours ago, ரதி said:

இந்த திரியில் சீமானை விஜயலக்சுமியோடு சேர்த்து எழுதிட்டார் என்று துள்ளுபவர்கள் தான்

அது தான் எல்லோருக்கும் தெரிந்த செய்தியாச்சே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தின் ஆறுமுகம் தொண்டமான், மகிந்தவுடன், வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் இருந்து பேசி வீடு போனவுடன் மயங்கி விழுந்து போனார்.

அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவுடன், சாரத்தோட அங்க ஓடின மகிந்தா பெரும் ஆக்ட்டிங் கொடுத்திருக்கிறார்.

ஹார்ட் அட்டாகில போட்டாராம் எண்டு டாக்குத்தர் மார் சொல்லி முடிச்சு, ஆளையும் எரிச்சு காடாத்தியாச்சு. 

இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர், அரசியல் அரங்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு, சொல்வழி கேட்கும் டம்மி அமர்த்தப்படுள்ளார்.

சுமந்திரன் பம்முகிறார். சம்பந்தர்... பயணிக்க அதிக தூரமில்லை. கஜேந்திரன், விக்கி பிரயோசனம் இல்லை.

என்றும் மாறாத டக்லஸ் அரசியல் குறித்து எமக்கு தெரியும். கருணா அம்மான்.... தண்ணிபோத்தலும் கையும். அவரை மகிந்தா கம்பெனி கணக்கே எடுப்பதில்லை. பிள்ளையானுக்கு மகிந்தா அளித்த உறுதிமொழியே நிறைவேற்றப்படவில்லை.

ஐநா இந்தப்பக்கம் வர விடுவேனா பார் என்கிறார்கள் சகோதரர்கள். இந்தியா, சீனாவை மிக சிறப்பாக கையாள்கின்றனர்.

ராணுவ அதிகாரிகளை, சிவிலியன் பணிகளில் அமர்த்துகின்றனர். அழுத்தத்தினை தாங்க முடியாத, உயர் நீதிமன்றம், தேர்தல் வழக்குகளை தள்ளி விட்டுள்ளது.

மகிந்தா, கோத்தா... (கொடூர) பலம் என்ன என்பதனை புரியாது, தமிழர் தலைமை உள்ளூரில் வளரவேண்டும் என்றால் எப்படி? புலம்பெயர்ந்தவர்களோ, தமிழகமோ உதவாமல் இருக்க வேண்டும் என்று வேறு நிலைப்பாடு. வெளியில் இருந்து குரல் கொடுத்தாலும்.... ம்.ம்ம்ம்... கூடாது.

கனவுலகில் வாழும் இவர்கள், இலங்கை அரசியல் குறித்து என்ன சொல்ல வருகிறார்கள்?

புத்திசாலித்தனமாக பேசுவதாக காட்டிக் கொண்டு, மகிந்தா கம்பெனிக்கு ஆதரவு தரும், பெரும் அலம்பறை பண்ணிக்கொண்டு அல்லவா இருக்கிறார்கள். மகிந்தாவின் கைத்தடி கருணாவின் ஆதரவு, அக்கா வேற நமக்கு பாடம் எடுக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

மலையகத்தின் ஆறுமுகம் தொண்டமான், மகிந்தவுடன், வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் இருந்து பேசி வீடு போனவுடன் மயங்கி விழுந்து போனார்.

அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவுடன், சாரத்தோட அங்க ஓடின மகிந்தா பெரும் ஆக்ட்டிங் கொடுத்திருக்கிறார்.

ஹார்ட் அட்டாகில போட்டாராம் எண்டு டாக்குத்தர் மார் சொல்லி முடிச்சு, ஆளையும் எரிச்சு காடாத்தியாச்சு. 

இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர், அரசியல் அரங்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு, சொல்வழி கேட்கும் டம்மி அமர்த்தப்படுள்ளார்.

சுமந்திரன் பம்முகிறார். சம்பந்தர்... பயணிக்க அதிக தூரமில்லை. கஜேந்திரன், விக்கி பிரயோசனம் இல்லை.

என்றும் மாறாத டக்லஸ் அரசியல் குறித்து எமக்கு தெரியும். கருணா அம்மான்.... தண்ணிபோத்தலும் கையும். அவரை மகிந்தா கம்பெனி கணக்கே எடுப்பதில்லை. பிள்ளையானுக்கு மகிந்தா அளித்த உறுதிமொழியே நிறைவேற்றப்படவில்லை.

ஐநா இந்தப்பக்கம் வர விடுவேனா பார் என்கிறார்கள் சகோதரர்கள். இந்தியா, சீனாவை மிக சிறப்பாக கையாள்கின்றனர்.

ராணுவ அதிகாரிகளை, சிவிலியன் பணிகளில் அமர்த்துகின்றனர். அழுத்தத்தினை தாங்க முடியாத, உயர் நீதிமன்றம், தேர்தல் வழக்குகளை தள்ளி விட்டுள்ளது.

மகிந்தா, கோத்தா... (கொடூர) பலம் என்ன என்பதனை புரியாது, தமிழர் தலைமை உள்ளூரில் வளரவேண்டும் என்றால் எப்படி? புலம்பெயர்ந்தவர்களோ, தமிழகமோ உதவாமல் இருக்க வேண்டும் என்று வேறு நிலைப்பாடு. வெளியில் இருந்து குரல் கொடுத்தாலும்.... ம்.ம்ம்ம்... கூடாது.

கனவுலகில் வாழும் இவர்கள், இலங்கை அரசியல் குறித்து என்ன சொல்ல வருகிறார்கள்?

புத்திசாலித்தனமாக பேசுவதாக காட்டிக் கொண்டு, மகிந்தா கம்பெனிக்கு ஆதரவு தரும், பெரும் அலம்பறை பண்ணிக்கொண்டு அல்லவா இருக்கிறார்கள். மகிந்தாவின் கைத்தடி கருணாவின் ஆதரவு, அக்கா வேற நமக்கு பாடம் எடுக்கிறார்.

தெளிவாக கூறியுள்ளீர்கள். 👍

ஏன் இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் கொஞ்சம் நீளமாகவும் எழுதக் கூடாது 🤔

Link to comment
Share on other sites

40 minutes ago, Nathamuni said:

மலையகத்தின் ஆறுமுகம் தொண்டமான், மகிந்தவுடன், வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் இருந்து பேசி வீடு போனவுடன் மயங்கி விழுந்து போனார்.

அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவுடன், சாரத்தோட அங்க ஓடின மகிந்தா பெரும் ஆக்ட்டிங் கொடுத்திருக்கிறார்.

ஹார்ட் அட்டாகில போட்டாராம் எண்டு டாக்குத்தர் மார் சொல்லி முடிச்சு, ஆளையும் எரிச்சு காடாத்தியாச்சு. 

இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர், அரசியல் அரங்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு, சொல்வழி கேட்கும் டம்மி அமர்த்தப்படுள்ளார்.

சுமந்திரன் பம்முகிறார். சம்பந்தர்... பயணிக்க அதிக தூரமில்லை. கஜேந்திரன், விக்கி பிரயோசனம் இல்லை.

என்றும் மாறாத டக்லஸ் அரசியல் குறித்து எமக்கு தெரியும். கருணா அம்மான்.... தண்ணிபோத்தலும் கையும். அவரை மகிந்தா கம்பெனி கணக்கே எடுப்பதில்லை. பிள்ளையானுக்கு மகிந்தா அளித்த உறுதிமொழியே நிறைவேற்றப்படவில்லை.

ஐநா இந்தப்பக்கம் வர விடுவேனா பார் என்கிறார்கள் சகோதரர்கள். இந்தியா, சீனாவை மிக சிறப்பாக கையாள்கின்றனர்.

ராணுவ அதிகாரிகளை, சிவிலியன் பணிகளில் அமர்த்துகின்றனர். அழுத்தத்தினை தாங்க முடியாத, உயர் நீதிமன்றம், தேர்தல் வழக்குகளை தள்ளி விட்டுள்ளது.

மகிந்தா, கோத்தா... (கொடூர) பலம் என்ன என்பதனை புரியாது, தமிழர் தலைமை உள்ளூரில் வளரவேண்டும் என்றால் எப்படி? புலம்பெயர்ந்தவர்களோ, தமிழகமோ உதவாமல் இருக்க வேண்டும் என்று வேறு நிலைப்பாடு. வெளியில் இருந்து குரல் கொடுத்தாலும்.... ம்.ம்ம்ம்... கூடாது.

கனவுலகில் வாழும் இவர்கள், இலங்கை அரசியல் குறித்து என்ன சொல்ல வருகிறார்கள்?

புத்திசாலித்தனமாக பேசுவதாக காட்டிக் கொண்டு, மகிந்தா கம்பெனிக்கு ஆதரவு தரும், பெரும் அலம்பறை பண்ணிக்கொண்டு அல்லவா இருக்கிறார்கள். மகிந்தாவின் கைத்தடி கருணாவின் ஆதரவு, அக்கா வேற நமக்கு பாடம் எடுக்கிறார்.

சிறப்பான கருத்து நாதம். ஈழத்தீவினில் தமிழருக்கான தலைமை அமைந்து அரசியல் தீர்வும் எடுக்கலாம் என எண்ணுவது எட்டாக்கனிக்கு (கனிமொழி அல்ல 😁) கொட்டாவி விட்ட கதைதான். தேசியத் தலைவரே போராட்டத்தை புலம்பெயர் தமிழரிடம் ஒப்படைக்கிறேன் என்று சொல்லி சென்றுவிட்டார்.

2009 பிற்பாடு தமிழர்களுக்கு ஒற்றைத் தலைமை என்பதே கிடையாது. அப்படி இருக்கவும் கூடாது. யார் எப்போது துரோகச் செயலில் ஈடுபடுவார் என்பதை அறுதியிட்டு கூற முடியாது. ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேணும். எனது தனிப்பட்ட கருத்து என்பது தேசியத்தலைவர் மற்றும் புலிகளின் அர்ப்பணிப்பும், தியாகமும் மட்டுமே இனி தமிழினத்தை வழிநடத்த வேண்டும். வேறு ஒற்றைத் தலைமை என்பது கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

மலையகத்தின் ஆறுமுகம் தொண்டமான், மகிந்தவுடன், வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் இருந்து பேசி வீடு போனவுடன் மயங்கி விழுந்து போனார்.

அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவுடன், சாரத்தோட அங்க ஓடின மகிந்தா பெரும் ஆக்ட்டிங் கொடுத்திருக்கிறார்.

ஹார்ட் அட்டாகில போட்டாராம் எண்டு டாக்குத்தர் மார் சொல்லி முடிச்சு, ஆளையும் எரிச்சு காடாத்தியாச்சு. 

இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர், அரசியல் அரங்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு, சொல்வழி கேட்கும் டம்மி அமர்த்தப்படுள்ளார்.

சுமந்திரன் பம்முகிறார். சம்பந்தர்... பயணிக்க அதிக தூரமில்லை. கஜேந்திரன், விக்கி பிரயோசனம் இல்லை.

என்றும் மாறாத டக்லஸ் அரசியல் குறித்து எமக்கு தெரியும். கருணா அம்மான்.... தண்ணிபோத்தலும் கையும். அவரை மகிந்தா கம்பெனி கணக்கே எடுப்பதில்லை. பிள்ளையானுக்கு மகிந்தா அளித்த உறுதிமொழியே நிறைவேற்றப்படவில்லை.

ஐநா இந்தப்பக்கம் வர விடுவேனா பார் என்கிறார்கள் சகோதரர்கள். இந்தியா, சீனாவை மிக சிறப்பாக கையாள்கின்றனர்.

ராணுவ அதிகாரிகளை, சிவிலியன் பணிகளில் அமர்த்துகின்றனர். அழுத்தத்தினை தாங்க முடியாத, உயர் நீதிமன்றம், தேர்தல் வழக்குகளை தள்ளி விட்டுள்ளது.

மகிந்தா, கோத்தா... (கொடூர) பலம் என்ன என்பதனை புரியாது, தமிழர் தலைமை உள்ளூரில் வளரவேண்டும் என்றால் எப்படி? புலம்பெயர்ந்தவர்களோ, தமிழகமோ உதவாமல் இருக்க வேண்டும் என்று வேறு நிலைப்பாடு. வெளியில் இருந்து குரல் கொடுத்தாலும்.... ம்.ம்ம்ம்... கூடாது.

கனவுலகில் வாழும் இவர்கள், இலங்கை அரசியல் குறித்து என்ன சொல்ல வருகிறார்கள்?

புத்திசாலித்தனமாக பேசுவதாக காட்டிக் கொண்டு, மகிந்தா கம்பெனிக்கு ஆதரவு தரும், பெரும் அலம்பறை பண்ணிக்கொண்டு அல்லவா இருக்கிறார்கள். மகிந்தாவின் கைத்தடி கருணாவின் ஆதரவு, அக்கா வேற நமக்கு பாடம் எடுக்கிறார்.

இது தான் எனக்கும் புரியவில்லை.
பத்தி எரிய வேண்டிய யாழ்நூலகம் எரிக்கப்பட்ட நாள் ஏற்கனவே எரிந்தபடியாலோ என்னவோ ஓரிரு பக்கங்களோடு நூர்ந்துவிட்டது.
பதிலுக்கு ஆமைஇறைச்சி தின்றேன் இட்டலி தின்றேன் என்ற திரி பத்தி எரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

அவரோ, தலைவர் மற்றும் சூசையோட கடைசி வரை நிண்டனான் எண்டுறார்.

நீங்களோ அங்காளிப்பக்கம், அம்மானிண்ட ஆதரவாளர்.

இப்ப சீமானை எதிர்க்க, ரெண்டு பேரும் சேருவியலோ...

அட... கண்ணுறாவியே   😟

இந்த கருத்தின் மூலம் உங்கள் இயலாமையையும் ,கீழ்த்தர புத்தியையும் காட்டி விட்டீர்கள் …"கத்தரிக்காய் மலிந்தால் சந்தைக்கு வந்து தான் ஆகோணும் ".

 

12 hours ago, Kapithan said:

அக்கா,

அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் கதக்கப்படாது.😉

பிரபாகரன் பெயரை உச்சரித்தாலும் குற்றம் உச்சரிக்காவிட்டாலும் குற்றமா 😂

சீமான் விடுதலைப் புலிகளைச் சொல்லி அரசியல் செய்வது எந்த வகையில் பிழை என்று கூறுவீர்களா ? 😏

"புலிகளை வைத்து அரசியல் செய்யம் தகுதி  சீமானுக்கு  இல்லை" . இந்த பதில் போதுமா 🙂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kaalee said:

தம்பி ஏழாலையோ, ஏழாலை எவடம் ?நானும் இடம்பெயர்ந்து வந்து கொஞ்சகாலம் " உத்தமன் சிலையடியிலே " இருந்தனான் 

நான் க‌ண்ண‌கிஅம்ம‌ன் கோயிலுக்கு ப‌க்க‌த்தில் ,

ஏழாலையில் இட‌ம்பெய‌ர்ந்து வ‌ந்து நிறைய‌ உற‌வுக‌ள் ஏழாலையில் த‌ங்கினார்க‌ள் , என்ர‌ அத்தையாக்கள் வெளி நாட்டில் இருந்த‌ ப‌டியால் இட‌ம் பெய‌ர்ந்து வ‌ந்த‌ உற‌வுக‌ளை அத்தை மாரின் வீட்டில் த‌ங்க‌ வைத்தோம் , 

உத்த‌ம‌ன் சிலைய‌டி எல்லாம் எங்க‌ட‌ ஏரியா தான் , இந்திய‌ன் ஆமிக்கு எதிராக‌ ச‌ண்டையிட்டு வீர‌ச்சாவு அடைந்த‌ எம‌து ஊர் போராளிக‌ளின் ப‌ட‌ங்க‌ள் அந்த‌ சிலையை சுத்த‌வ‌ர‌ இருந்த‌து , 

இந்திய‌ன் ஆமி வ‌ந்த‌தும் தெரியா போன‌தும் தெரியா , அப்போது நான் சிறுவ‌ன் , உற‌வின‌ர்க‌ள் சொல்லித் தான் தெரியும் , என‌து பெற்றோர் இந்திய‌ன் ஆமிக்கு எதிராக‌ ச‌ண்டை பிடித்த‌ எம‌து ஊர் போராளிக‌ளுக்கு எங்க‌ள் வீட்டில் பாதுகாப்பாய் த‌ங்க‌ வைச்ச‌வை , இப்ப‌டி சொல்ல‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு உற‌வே ,

நீங்க‌ள் எந்த‌ ஊர் , எத்த‌னையாம் ஆண்டு ஏழாலைக்கு வ‌ந்தீங்க‌ , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கருணா நான் திருந்திவிட்டேன் என்றுதானே  இயக்கத்தை விட்டுட்டு ஓடினவர்.ஓடிப்போனவர் பொம்புளையளோடை கும்மாளம் அடிச்சதை தவிர வேறை என்ன செய்தவர்?
 கிழக்கு பகுதியிலை முஸ்லீம்களின்ரை அட்டகாசமும் ஆதிக்கமும் கூடினது மட்டுமில்லாமல் புத்த பிக்குகளின்ரை அகங்கார அதிகாரங்களும் சனங்களும் அடி வாங்கினதுதான் மிச்சம்.

தலைவரைப்பற்றியோ புலிகளை பற்றியோ சீமான் கதைக்கக்கூடாது  அருகதையில்லாவர் என குமுறும் நீங்கள்............ ஈழத்தில் இருப்பவர்கள் அல்லதுபுலம்பெயர் தேசங்களில்  இருப்பவர்கள் புலிகளையும் தலைவரையும் நையாண்டி செய்த போது எங்கே  போனீர்கள்?

ஏன் சுமந்திரன் கூட புலிகளை வெறுத்து கதைக்கின்றார். அவர்கள் போராட்டம் பிழை என்கிறார்.
அதன் அர்த்தம் விளங்குகின்றதா?

அண்ணா நான் கேட்பதற்கு முதலில் நேரடியாய் பதில் சொல்லுங்கோ ;
எந்தத் திரியிலாவது நீங்களோ அல்லது சக கள உறவுகளோ தலைவரைப் பற்றி எழுதினால், நான்  இடையில் புகுந்து சம்மந்தமில்லாமல் கருணாவைப் பற்றி எழுதி இருக்கிறேனா?
அவர் இயக்கத்தை விட்டு பிரியும் போது எங்களுக்காய் போராடுவேன் என்றோ ,நாடு பிரித்து தருவேன் என்றோ சொல்லவில்லை .
புலிகள் போகும் பாதை சரியில்லை  அதனால் பிரிகிறேன் என்று தான் சொன்னார்.
ஈழத்தில்/புலத்திலிருந்து யார் தலைவரையும் ,புலிகளை நக்கலடித்தார்கள் ...சொல்லுங்கள் .
அவர்களும்[புலிகள்] மனிசர்கள் தான் ...அவர்கள் விட்ட பிழையை கதைப்பதில் என்ன பிழை?
எதிர்காலத்தில் ஒரு போராட்டம் நடந்தால், விட்ட பிழையில் இருந்து பாடம் படிக்காமல் திரும்பவும் அதே பிழையை விட்டு தோத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?
சும் புலிகளை குறை சொல்லவில்லை ...ஆயுதப் போராட்டம் தேவையில்லை என்ற ரீதியிலேயே தனது கருத்தை சொல்லி இருந்தார்(அவர் இந்த கேள்விக்கான பதிலை ஒற்றை வரியில் முடிக்காமல் சிறப்பாய் சொல்லியிருக்க முடியும் என்பது கருத்து.)

 

Link to comment
Share on other sites

M

7 hours ago, இசைக்கலைஞன் said:

சிறப்பான கருத்து நாதம். ஈழத்தீவினில் தமிழருக்கான தலைமை அமைந்து அரசியல் தீர்வும் எடுக்கலாம் என எண்ணுவது எட்டாக்கனிக்கு (கனிமொழி அல்ல 😁) கொட்டாவி விட்ட கதைதான். தேசியத் தலைவரே போராட்டத்தை புலம்பெயர் தமிழரிடம் ஒப்படைக்கிறேன் என்று சொல்லி சென்றுவிட்டார்.

2009 பிற்பாடு தமிழர்களுக்கு ஒற்றைத் தலைமை என்பதே கிடையாது. அப்படி இருக்கவும் கூடாது. யார் எப்போது துரோகச் செயலில் ஈடுபடுவார் என்பதை அறுதியிட்டு கூற முடியாது. ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேணும். எனது தனிப்பட்ட கருத்து என்பது தேசியத்தலைவர் மற்றும் புலிகளின் அர்ப்பணிப்பும், தியாகமும் மட்டுமே இனி தமிழினத்தை வழிநடத்த வேண்டும். வேறு ஒற்றைத் தலைமை என்பது கூடாது.

ஒற்றைத்தலைமை என்பது 2009 ன் ப்பின்னர் அல்ல அதற்கு முன்பே இருந்திருக்க கூடாது. அந்த ஒற்றைத்தலைமையில் பேதைத்தனமான அரசியலே இன்றைய ஈழத்தமிழரின் கையறு நிலைக்கு காரணம் என்பதை மட்டும் சொல்ல உங்கள்  மனம் மறுக்கிறது.  அதை மறைக்க கண்ணில் பட்டவனுக்கெல்லாம்  துரோகிப் பட்டம் வேறு. எமது தோல்விகளுக்கெல்லாம் அடுத்தவன் மீது பழி சுமத்தி அவனைத் துரோகியாக்கி அவனைத்திட்டியும் சீமானுக்கு விசிலடித்தும் எமது மிச்ச காலத்தை போக்குவதே புலம் பெயர்ஸ் முன்னாள்களின் அரசியல். அதுவே அவர்களது தமிழ்தேசியம். 

இதை விட புலிகள் இருந்த காலத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்த முன்னாள்கள் அவர்களின் அரசியல் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தி இருக்கலாம். அதன் மூலம் மாவீர்ர்களின் உன்னத தியாகம் வீண்போகாமல்  செய்திருக்கலாம். அதை விடுத்து இப்போது தமது ஆற்றாமையை மறைக்க அடுத்தவனை குற்றம் சாட்டுவது ஒட்டு மொத்த தமிழருக்கே அவமானம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இசைக்கலைஞன் said:

சிறப்பான கருத்து நாதம். ஈழத்தீவினில் தமிழருக்கான தலைமை அமைந்து அரசியல் தீர்வும் எடுக்கலாம் என எண்ணுவது எட்டாக்கனிக்கு (கனிமொழி அல்ல 😁) கொட்டாவி விட்ட கதைதான். தேசியத் தலைவரே போராட்டத்தை புலம்பெயர் தமிழரிடம் ஒப்படைக்கிறேன் என்று சொல்லி சென்றுவிட்டார்.

2009 பிற்பாடு தமிழர்களுக்கு ஒற்றைத் தலைமை என்பதே கிடையாது. அப்படி இருக்கவும் கூடாது. யார் எப்போது துரோகச் செயலில் ஈடுபடுவார் என்பதை அறுதியிட்டு கூற முடியாது. ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேணும். எனது தனிப்பட்ட கருத்து என்பது தேசியத்தலைவர் மற்றும் புலிகளின் அர்ப்பணிப்பும், தியாகமும் மட்டுமே இனி தமிழினத்தை வழிநடத்த வேண்டும். வேறு ஒற்றைத் தலைமை என்பது கூடாது.

தான் சொன்ன கருத்தை பிழையாக விளங்கி "சீமானுக்கு" பின்னால் புலம் பெயர்ந்த சிலர் வால் பிடிப்பார்கள் என்று தெரிந்திருந்தால் இந்த கருத்தை  அவர் சொல்லியிருக்கவே மாட்டார் 😆
 

8 hours ago, விளங்க நினைப்பவன் said:

புலம்பெயர் தமிழர்தான் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
சீமான் என்ற மாயமானைக் கொண்டு நிரப்ப முனையாமல், சரியான தலைமையை தாயகத்தில் உருவாக்கி அவர்களுடன் கைகோர்க்கவேண்டும்.
என்ற கிருபனின் கருத்துக்களுடன் நானும் ஒத்து போகிறேன்.

ஈழத்திலே இருக்கும் கல்வி கற்றவர்,  தேசத்தில் அக்கறையுள்ளோர் அரசியலுக்கு வர வேண்டும்...அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாய் அகிம்சை முறையில் போராடினாலே எமக்கான தீர்வை ,உரிமையை பெறலாம்...ஆங்கில புலமை கொண்டவர்களால் தான் எமது பிரச்சனையை எடுத்து சொல்ல முடியும் ...சர்வதேச நாடுகளை தமது பேச்சால் வசப்படுத்த கூடியவராகவும், அதே நேரத்தில் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்காதவராகவும் இருத்தல் வேண்டும் ....எமக்கான  தீர்வு என்பது எடுத்தேன் ,கவிழ்த்தேன் என்று முடிக்கும் விசயமல்ல 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

சும் புலிகளை குறை சொல்லவில்லை ...ஆயுதப் போராட்டம் தேவையில்லை என்ற ரீதியிலேயே தனது கருத்தை சொல்லி இருந்தார்(அவர் இந்த கேள்விக்கான பதிலை ஒற்றை வரியில் முடிக்காமல் சிறப்பாய் சொல்லியிருக்க முடியும் என்பது கருத்து.)

புலிகள் ஆயுதங்களை மௌனித்த பின்னர்தானே முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தது. அந்த போர் குற்றத்திற்கு கால அவகாசம் கேட்ட உங்கள் தலைவர் சுமந்திரனை என்னவென்பது?

Link to comment
Share on other sites

37 minutes ago, tulpen said:

M

ஒற்றைத்தலைமை என்பது 2009 ன் ப்பின்னர் அல்ல அதற்கு முன்பே இருந்திருக்க கூடாது. அந்த ஒற்றைத்தலைமையில் பேதைத்தனமான அரசியலே இன்றைய ஈழத்தமிழரின் கையறு நிலைக்கு காரணம் என்பதை மட்டும் சொல்ல உங்கள்  மனம் மறுக்கிறது.  அதை மறைக்க கண்ணில் பட்டவனுக்கெல்லாம்  துரோகிப் பட்டம் வேறு. எமது தோல்விகளுக்கெல்லாம் அடுத்தவன் மீது பழி சுமத்தி அவனைத் துரோகியாக்கி அவனைத்திட்டியும் சீமானுக்கு விசிலடித்தும் எமது மிச்ச காலத்தை போக்குவதே புலம் பெயர்ஸ் முன்னாள்களின் அரசியல். அதுவே அவர்களது தமிழ்தேசியம். 

இதை விட புலிகள் இருந்த காலத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்த முன்னாள்கள் அவர்களின் அரசியல் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தி இருக்கலாம். அதன் மூலம் மாவீர்ர்களின் உன்னத தியாகம் வீண்போகாமல்  செய்திருக்கலாம். அதை விடுத்து இப்போது தமது ஆற்றாமையை மறைக்க அடுத்தவனை குற்றம் சாட்டுவது ஒட்டு மொத்த தமிழருக்கே அவமானம். 

இன்னும் விரிவாக நீங்கள் சிந்திக்க வேண்டும். ஈழத்தை விட்டு வெளியே வந்து சிந்திக்கலாம். மற்றும்படி Retrospective ஆக சிந்தித்துக் கொண்டிருப்பதால் பயன் கிடையாது. நடந்த சம்பவங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்வதே சிறப்பானது.

2009 முன் வரையில் நானும் ஈழ அளவில்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதீத எதிர்பார்ப்புகளே காரணம். ஆனால் சம்பவங்கள் என்றுமே நேர்கோட்டில். நடப்பதில்லை. பக்கவாட்டிலும் சிந்திக்க வேண்டும்.

ஈழத்தமிழரின் பிரச்சினைகளுக்கு ஈழத்தமிழர் தலைமையில்தான் தீர்வு என்பது நான் 2009 வரையில் கொண்டிருந்த கருத்து. ஊர்கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்பது இப்போது கொண்டிருக்கும் கருத்து.

மக்களின் திரட்சிதான் பலமாக வெளிப்படுகிறது. இன்று அமெரிக்காவில் இடம்பெறும் நிகழ்வுகள்கூட அதைத்தான் சொல்கின்றன. இத்தகைய திரட்சியை நாம் எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என சிந்திப்பதுதான் எமக்கான ஒரே பாதுகாப்பு. ஈழத்தில் இருக்கும் 15 லட்சம் மக்களினால் இது கைவரப் பெறாது.

இங்குதான் இந்த துரோகம் சம்பந்தமான கருத்துகள் வெளிப்படுகின்றன. ஈழப்பிரச்சினை இலங்கை சம்பந்தப்பட்டது என்பது திமுகவின்.. ஏன் வட இந்தியரின் கருத்தும்கூட. அவர்கள் தமிழ் மக்களின் திரட்சியை விரும்பும் தரப்பு அல்ல. பிரித்துவிடுவதுதான் அவர்களுக்குப் பலம். அதே மாதிரியான கருத்துகளை இங்கே பதிவுகளில் கண்டால் திமுகவை ஒத்த கருத்து இது என எண்ணுவதை தவிர்க்க முடியாது ்அல்லவா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

"புலிகளை வைத்து அரசியல் செய்யம் தகுதி  சீமானுக்கு  இல்லை" . இந்த பதில் போதுமா 🙂
 

அம்மானுக்கும் இல்லை!! 😂
துரோகத்தால் வீழ்த்திய ஒருவரை, இப்போ அரசியலுக்காக, அவர் ஒருவரே தேசிய தலைவர் என்பது பச்சோந்தித்தனம்.

நம்ம தல, மகிந்தா தானே என்று சொல்லும் நேர்மை, ஆண்மை வேண்டும். அது கிராம் என்ன விலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஈழத்திலே இருக்கும் கல்வி கற்றவர்,  தேசத்தில் அக்கறையுள்ளோர் அரசியலுக்கு வர வேண்டும்...அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாய் அகிம்சை முறையில் போராடினாலே எமக்கான தீர்வை ,உரிமையை பெறலாம்...ஆங்கில புலமை கொண்டவர்களால் தான் எமது பிரச்சனையை எடுத்து சொல்ல முடியும் ...சர்வதேச நாடுகளை தமது பேச்சால் வசப்படுத்த கூடியவராகவும், அதே நேரத்தில் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்காதவராகவும் இருத்தல் வேண்டும் ....எமக்கான  தீர்வு என்பது எடுத்தேன் ,கவிழ்த்தேன் என்று முடிக்கும் விசயமல்ல 🙃

வந்தால், கடத்தி வெடிவைக்க, உங்க அண்ணரும், அதற்காக வெளியே வரப்போகும் பிள்ளையானும் ரெடி. கிழக்கு பல்கலைகழக பேராசிரியருக்கு நடந்தது என்ன?

முடிந்தால் அண்ணன் இடம் சொல்லி, மகிந்தருக்கு வேண்டுகோள் வையுங்கள். ஆங்கில புலமை கொண்ட தமிழ் கல்வியாளர்களை செயல்பட விடுங்கள் என்று.

மன்னிக்கோணும் அக்கா,

நீஙகள் என்னதான் ஆலோசணை சொன்னாலும், மகிந்தாவை தூக்கிப்பிடிக்கும் அம்மானை ஆதரிக்கும் நிலையில் உங்கள் கருத்துக்கள் வேஸ்ட்.

சும்மா, வாயில் வந்ததை பேசிக் கொண்டிராமல், இலங்கையில், மகிந்தா, கோத்தா அகோரப்பிடியில், நடக்ககூடியதை  மட்டும் பேசுங்கோ.

*******************

நல்லதோர் ஆய்வு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

பிளான் எல்லாம் நல்லாய்த்தான் இருக்கு ஆனால் எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது?

தாயகத்தில் தற்போது தமிழருக்கு தலைமை வகிக்கக்கூடிய ஒருவரின் பெயரை சொல்லுங்கள்.


புலம்பெயர் தமிழர்கள்   போராட்டத்தை முன்னெடுக்க முடியாது தான்.இனிவரும் காலங்களில் தாயக அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் பிரசன்னமும் நிச்சயம் இருக்க வேண்டும்.
ஏனெனில் புலம்பெயர் தமிழர்களின் பலம் சிங்கள அரசிற்கு மட்டும் நன்றாகவே தெரியும். 

சீமான் ஈழமக்களின் அவலங்களை மேடைக்கு மேடை பேசும் போது வராத கோவம் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்லும் போது ஏன் உங்களைப்போன்றவர்களுக்கு கோபம் வருகின்றது?
இலங்கையில் ஆமைக்கறி,உடும்புக்கறி சாப்பிடுபவர்களை நீங்கள் பார்த்ததில்லையா?
சீமான் தமிழினத்தின் தலைவராக மாறவில்லை.

என்ர‌ தாத்தாவை யாரும் விவாத‌த்தில் வெல்ல‌ முடியுமா , 
பேர‌ன் எழுத்து பிழை விட்டு எழுதினாலும் பேர‌னின் தாத்தா சிற‌ந்த‌ எழுத்தாள‌ர் ம‌ற்றும் க‌ருத்துக்க‌ள புய‌ல் / 

நீ க‌ல‌க்கு தாத்தா 🙏👏😘

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.