Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

சீமான் பந்தயத்தில் என்றுமே கடைசியாக வந்து கொண்டிருக்கின்ற, இனியும் வரப் போகின்ற ஒரு குதிரை. ஒன்றில் தன் நிலையை அறிந்து போட்டியில் வேகமாகச் செல்லும் ஏதாவது ஒரு குதிரையுடனோ அல்லது குதிரைக் கூட்டத்துடனோ கூட்டு வைப்பார், இல்லாவிடின் இப்படியே யார் கடைசியாக வருவது என்ற போட்டியில் முன்னுக்கு நிற்பார்.

சீமான் தொடர்பாக இந்த ஏகே 47, இட்டலி, தோசை, ஆமைக்கறி போன்ற விடயங்கள் தொடர்பற்ற ஒரு சில திரிகளில் அவை பற்றி எதுவும் எழுதாமல் மோடியை ஒத்த, ஆர் எஸ் எஸ் இனை ஒத்த அவரது அரசியல் பற்றி நானும் கோசானும் இன்னும் சிலரும் தெளிவாக எழுதியிருக்கின்றோம். 

புலிகளை அழித்தமையால் தமிழக மக்களுக்கு தன் தேசம் மீது, இந்தியம் மீது, பார்ப்பனியம் மீது, மத்திய அரசின் மீது ஏற்பட்ட நியாயமான ஆத்திரம், கோபம், இயலாமை போன்றவற்றால் எழக்கூடிய ஒரு எழுச்சியை, தமிழ் தேசியம் மீதான பற்றுறுதியை, மத்திய பார்ப்பனிய அரசு மீதான வெறுப்பை சீமானைக் கொண்டு, நாம் தமிழர் கட்சியைக் கொண்டு கேலிக்குரியதாக மாற்றி நீர்த்துப் போகச் செய்யும் வேலையை தான் மத்திய அரசு செய்கின்றது. இதனைத் தான் மத்திய அரசு செய்கின்றது என்ற தெளிவும் அவருக்கின்றது. ஆனால் இத்தனை இழப்புகளையும், அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் செய்த எம் இனத்தில் உள்ள சிலருக்கு தான் இது புரிவதில்லை. வேட்டி உருவப்படுகின்றது எனபதைக் கூட அறியாமல் உள்ளனர்.

காலம் விரைவில் பதில் சொல்லும். 

நன்றி வணக்கம்.

அதாவது.... எனக்கு விளங்காத விசயம் என்னெண்டா... ஒவ்வொருத்தரா, சொல்லி வைத்த மாதிரி டேர்ன் எடுத்துக் கொண்டு வருகினம். இனி இவருக்கு வேற நியாயம் பிளக்க வேணுமாம்.

விழ, விழ எழுவோம் எண்டது இதுதானோ 🤔

முதலில நிழலி... உங்கட ஊர்ல ஒரு சட்டம் வருக்குதாமே... தமிழ் படுகொலை குறித்தது.....

சிங்களவர்கள் அதனை எதிர்த்து இதுவரை 12,000 கையெழுத்து சேர்த்து விட்டார்களாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள். 

சீமானை பிறகு பார்க்கலாம், முதலில அதுகுறித்து என்ன செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

https://www.change.org/p/reject-tamil-genocide-day-bill-in-ontario-and-canada

United Canadian Sri Lankans என்று சொல்லி ஆப்படிக்கிறாங்கள்.  இவர் இங்கே சீமானின் கதையோட நிக்கிறார்.

எங்கட ஆட்களே விளங்கமா இதில போய் சைன் வைக்கினம்.... முதலில் இதனை விளங்கப்படுத்தி சைன் போடாமல், இது குறித்து முறைப்பாடு செய்யவேண்டும் என்று உங்கள் தொடர்புகளுக்கு சொல்லுங்கள். அல்லது எமக்கு சார்பான புதிய திரி ஆரம்பியுங்கள். நாமும் பதிவோம்.

எனக்கு லண்டன் நண்பர் அனுப்பினார், பார்த்தவுடன் கொதி தான் வந்தது.

கீழே 'Start a new petition' இருக்குது.

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

புலிகளை அழித்தமையால் தமிழக மக்களுக்கு தன் தேசம் மீது, இந்தியம் மீது, பார்ப்பனியம் மீது, மத்திய அரசின் மீது ஏற்பட்ட நியாயமான ஆத்திரம், கோபம், இயலாமை போன்றவற்றால் எழக்கூடிய ஒரு எழுச்சியை, தமிழ் தேசியம் மீதான பற்றுறுதியை, மத்திய பார்ப்பனிய அரசு மீதான வெறுப்பை சீமானைக் கொண்டு, நாம் தமிழர் கட்சியைக் கொண்டு கேலிக்குரியதாக மாற்றி நீர்த்துப் போகச் செய்யும் வேலையை தான் மத்திய அரசு செய்கின்றது. இதனைத் தான் மத்திய அரசு செய்கின்றது என்ற தெளிவும் அவருக்கின்றது. ஆனால் இத்தனை இழப்புகளையும், அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் செய்த எம் இனத்தில் உள்ள சிலருக்கு தான் இது புரிவதில்லை. வேட்டி உருவப்படுகின்றது எனபதைக் கூட அறியாமல் உள்ளனர்.

புலிகளையும் மற்றைய இயக்கங்களையும் இந்தியா தனது தேவைக்காகவே களமிறக்கியது.ஆனாலும் இதிலிருந்து புலிகள் எப்படி மீண்டு வந்தனர் என்பது உங்களுக்குத் தெரியாததா?
எனவே நீங்கள் சொல்வது போல மத்திய அரசின் பேரில் நாம் தமிழர் இயங்கிறதாக சொன்னாலும் கூட காலப் போக்கில் புலிகள் மீண்டது போல மீண்டு வருவார்கள்.
மத்திய அரசு எமது இயக்கங்களை பிரித்தது போல அருவருக்கத்தக்க மிக மோசமான செயல் எல்லாம் நாம் தமிழரை பிரிப்பதற்காக செய்வார்கள்.
இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

12 minutes ago, Nathamuni said:

சீமானை பிறகு பார்க்கலாம், முதலில அதுகுறித்து என்ன செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

எமது பல்லுக்குள் எவ்வளவு ஊத்தை இருக்கு என்று எமக்கு தெரியாது தானே?
அடுத்தவன் பல்லுக்குள் இருப்பது தான் பளிச்சென்று தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள், ஈழத்து அரசியலை, சீமானின் அரசியலுடன் சேர்த்தே குழம்பி, அடுத்தவர்களையும் குழப்புகின்றனர்.

முதலாவது, சீமான் கட்சி கரை சேருமா, இல்லையா என்று முடிவு எடுக்க வேண்டியது தமிழக வாக்காளர்களே.

இதுவரை நடந்த தேர்தல் அரசியலில், 0 வில் இருந்து, 2016ல் 1.1 எடுத்து, அந்த 1.1னை எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்க கூடிய திமுக வினை மண்கவ்வி விழ வைத்தனர்.

2019ல், பின்னர் நடந்த வேலூர் சேர்த்து பார்த்தால், 4% எடுத்து உள்ளனர்.

பந்தயக்குதிரை வேகமெடுக்கிறதா இல்லை, பம்மி பின் தங்குகிறதா என்பதனை 2021 தேர்தல் முடிவுகள் காட்டும். 

அதுவரை, உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் சொல்லிக்கொண்டு அலம்பறை பண்ணாமல் அமைதியாக இருந்தாலே போதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

புலிகளையும் மற்றைய இயக்கங்களையும் இந்தியா தனது தேவைக்காகவே களமிறக்கியது.ஆனாலும் இதிலிருந்து புலிகள் எப்படி மீண்டு வந்தனர் என்பது உங்களுக்குத் தெரியாததா?
எனவே நீங்கள் சொல்வது போல மத்திய அரசின் பேரில் நாம் தமிழர் இயங்கிறதாக சொன்னாலும் கூட காலப் போக்கில் புலிகள் மீண்டது போல மீண்டு வருவார்கள்.
மத்திய அரசு எமது இயக்கங்களை பிரித்தது போல அருவருக்கத்தக்க மிக மோசமான செயல் எல்லாம் நாம் தமிழரை பிரிப்பதற்காக செய்வார்கள்.
இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

எமது பல்லுக்குள் எவ்வளவு ஊத்தை இருக்கு என்று எமக்கு தெரியாது தானே?
அடுத்தவன் பல்லுக்குள் இருப்பது தான் பளிச்சென்று தெரியும்
.

என்னை அமைதி காக்க‌ சொல்லி விட்டு இங்கை பாருங்கோ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா  பொங்கி எழுகிறார் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இவர்கள், ஈழத்து அரசியலை, சீமானின் அரசியலுடன் சேர்த்தே குழம்பி, அடுத்தவர்களையும் குழப்புகின்றனர்.

முதலாவது, சீமான் கட்சி கரை சேருமா, இல்லையா என்று முடிவு எடுக்க வேண்டியது தமிழக வாக்காளர்களே.

இதுவரை நடந்த தேர்தல் அரசியலில், 0 வில் இருந்து, 2016ல் 1.1 எடுத்து, அந்த 1.1னை எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்க கூடிய திமுக வினை மண்கவ்வி விழ வைத்தனர்.

2019ல், பின்னர் நடந்த வேலூர் சேர்த்து பார்த்தால், 4% எடுத்து உள்ளனர்.

பந்தயக்குதிரை வேகமெடுக்கிறதா இல்லை, பம்மி பின் தங்குகிறதா என்பதனை 2021 தேர்தல் முடிவுகள் காட்டும். 

அதுவரை, உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் சொல்லிக்கொண்டு அலம்பறை பண்ணாமல் அமைதியாக இருந்தாலே போதும். 

இதை தான் நான் மேல‌ நிழ‌லி அண்ணைக்கு சொல்லி காட்டினேன் , தேர்த‌ல் முடிவு த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் கையில் இருக்கு ( அது உங்க‌ள் கையிலும் இல்ல‌ கோசான் சே அவர் கையிலும் இல்லை )

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி செய்து கொண்டு இருக்கிற‌ ந‌ல்ல‌தையும் எழுதி இருந்தேன் , 

நாதா இவ‌ர்க‌ள் 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு இணைய‌த‌ள‌த்தில் எழுதி ம‌ற்ற‌வ‌ர்க‌ளை குழ‌ப்பின‌து தான் மிச்ச‌ம் ,

க‌ம‌ல‌ விட‌ குறைந்த‌ ஓட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்கும்  என்று புல‌ம்பின‌ கூட்ட‌மும் இருக்கு , இனி அவ‌ர்க‌ள் அதை ப‌ற்றி புல‌ம்ப‌ மாட்டின‌ம்  😁/

நிழ‌லி அண்ண‌ சொல்லுவ‌து அண்ண‌ன் சீமானை ப‌ற்றி , அது முற்றிலும் த‌வ‌று , அண்ண‌ன் சீமான் ஆர‌ம்ப‌த்திலே சொல்லி விட்டார் தேசிய‌ க‌ட்சிக‌ளுட‌னும் திராவிட‌ க‌ட்சிக‌ளுட‌னும் கூட்ட‌னி இல்லை என்று ,

அந்த‌ க‌ட்சியில் இருக்கும் சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ள் க‌ட்சியை வ‌ள‌க்க‌ ப‌டும் பாடு , ஆனால் எம்ம‌வ‌ர் நோகாம வீட்டுக்குள் இருந்து ம‌க்க‌ளை குழ‌ப்புவ‌து ,

நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை ப‌ற்றி எழுதாம‌ உங்க‌ வேலையா பார்த்தாலே அந்த‌ க‌ட்சி இன்னும் ச‌ரியான‌ ப‌தையில் ப‌ய‌ணித்து இன்னும் கூடுத‌லான‌ ம‌க்க‌ளின் க‌வ‌ன‌த்தை ஈர்க்கும் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை ப‌ற்றி எழுதாம‌ உங்க‌ வேலையா பார்த்தாலே அந்த‌ க‌ட்சி இன்னும் ச‌ரியான‌ ப‌தையில் ப‌ய‌ணித்து இன்னும் கூடுத‌லான‌ ம‌க்க‌ளின் க‌வ‌ன‌த்தை ஈர்க்கும் 😉

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேணும் பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேணும் பையா.

எதிர்கடை வைக்கிறதுக்கு ஓடி வார ஆட்களை பாருங்கோவன்.

ஒருத்தர் களத்தில நிண்டு சண்டை பிடிச்சேன். எண்டுறார்... ஆனால் அதை நம்புறமாதிரி அவரது சொந்த பதிவுகளே இல்லை. Scholarship, O/L, A/L result அந்த மாதிரி எண்டுறார். பொறியியல் முடித்து யாழ்ப்பாணத்தில் பொறியியல் பீடம் இல்லாத நிலையில், பேராசிரியர் எண்டுறார். ஆனால் வன்னியில் சூசை பக்கத்தில் நிண்டனான், கோத்தாவுக்கு குளுசை குடுத்துட்டு தப்பி வந்து, 4 வருசத்தில, மூன்று நாடுகளின் ஆயிரக்கணக்கான ஆட்களுக்கு பொறுப்பா இருந்து வேலையும் வாங்குறன் எண்டு தாய்க்கு கடிதமும் போடுறார்.

இன்னொருத்தர், துவக்கு பத்தி ஏதோ சொல்கிறார். அக்கினியாத்திரா வந்து அதனை சலேன்ஜ் பண்ணினோன்ன, ஆள் பம்மீடார். பிறகு பார்த்தா.... சீமான்... சாமான் எண்டு ஆவேசமா வாரார்.

துரோகம் செய்து புலிகளை அழிக்க உதவின கருணாவின் ஆதரவாளரோ, அந்த புலிகளின் பெயரை சீமான் பாவிக்க கூடாதாம். ஆனால், கருணா தேசியத்தலைவர் எண்டால், பிரபாகரன் மட்டும் தான் எண்டு சொல்வது ஆட்சேபம் இல்லை. 

என்ன தார்மீக அடிப்படையில இவர்கள் பேசுகிறார்கள்?

இவர்களுடன் சேர்ந்து கொண்டு இப்ப நிழலியர் வாறார்.... இவர்கள் background பார்த்தாவது, மட்டுனர் நிழலி மூக்கை நுழைக்காமல் ஒதுங்கி இருக்க வேண்டாமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பையன்26 said:

யாழில் இவை எழுதுவ‌த‌ அண்ண‌ன் சீமானுக்கு அருகில் நின்ற‌ க‌ட்சி தொண்ட‌னுக்கு சொல்ல‌னும் , க‌தையில்லை அடி உத‌ ரேஞ்சுக்கு நில‌மை போயிடும் , 

உண்மைதானே! அண்ணன் கட்சித்தொண்டர்களுக்கு அடி உதை தெரியாமலா இருக்கும்😂

 

இரண்டு நாளுக்கு முன்னர் ஒரு கட்டுரை படித்தேன்😃

அண்ணன் சீமானின் தம்பிகள், ஆறுதலாக எழுத்துக்கூட்டிப் படித்தால் நல்லது.😁

தலைப்பைப் பார்த்துவிட்டு உள்ளடக்கத்தை கற்பனைக் குதிரையில் பறந்து பார்க்கவேண்டாம். எழுதியவரை திமுக செம்பு என்று வையவும் வேண்டாம்😎

 

அண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’

spacer.png

தன்னை ஓர் ஆளுமையாக தகவமைத்துக் கொள்ள இயலாதவர்கள்தான் எப்போதும் அடுத்தவர்களின் புகழ் வெளிச்சத்தின் கீழ் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளத் துடிப்பார்கள். இன்னாரின் நண்பன், இன்னாரின் உறவினன், எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று சொல்லி வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடிக் கொள்பவர்களால் ஒருபோதும் ஒரு சுய ஆளுமையாக தன்னை உருவாக்கிக் கொள்ள முடியாது. மேலும் அப்படிப் பட்டவர்கள்தான் தான் யாரின் பெயரைச் சொல்லி பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருக்கின்றார்களோ, அவர்களின் புகழுக்கே ஆப்பு வைத்து விடுவார்கள். கடும் உழைப்பால் அவர்கள் சேர்த்து வைத்த நற்பெயரையும் நாசம் செய்து விடுவார்கள். அது போன்ற உழைப்புறிஞ்சிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து களை எடுக்கவில்லை என்றால், போலிகளே உண்மைகளைப் போல கொட்டமடிக்க ஆரம்பித்து விடும். ஆனால் நிழல்கள் ஒரு போதும் மரங்கள் ஆகி விடுவதில்லை என்பது போல, போலிகள் ஒருபோதும் நிஜங்களைப் பதிலீடு செய்து விடுவதில்லை.

அப்படி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரைச் சொல்லி வயிறு வளர்த்து வந்த சீமான், இன்று அவரின் பிம்பத்தை உடைத்து நொறுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றார். ஈழப் போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, விடுதலைப் புலிகளின் இராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்த நபர்கள் சீமானுக்கு ஆமைக் கறி, உடும்புக் கறி, கறி இட்லி என விதவிதமாக சமைத்துப் போட்டு, அவர் எதைச் சாப்பிட்டார், எதைச் சாப்பிடவில்லை எனக் குறிப்பு வேறு எடுத்தார்கள் என்று கூச்சமே இல்லாமல் பரப்புரை செய்து விடுதலைப் புலிகள் தன் சொந்த இன மக்கள் அழித்தொழிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி இம்மி அளவு கூட கவலைப்படாமல் சுகபோகமாக உண்டு களித்ததாக ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.

பிரபாகரன் அவர்களின் அரசியலை கடுமையாக விமர்சிக்கும் இயக்கங்கள், கட்சிகள் கூட பிரபாகரனை இந்தளவிற்குக் கேவலமாக தமிழக மக்கள் முன் காட்சிப்படுத்தியது இல்லை. பிரபாகரனை இழிவு செய்யும் இது போன்ற கதைகளை சீமான் சில ஆண்டுகளாக வலியச் சொல்வதற்கும், அவரின் வங்கி இருப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதற்கு எல்லா முகாந்திரங்களும் உள்ளன.

திராவிட எதிர்ப்பு, பார்ப்பனிய ஆதரவு எனத் தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை கட்டமைத்துக் கொண்ட சீமானின் முதன்மையான திட்டம் ஏற்கெனவே மதுவாலும், பண்பாட்டுச் சீரழிவாலும், உலகமயமாக்கத்தாலும் தக்கை மனிதர்களாக வாழ்ந்து வரும் இளைஞர்களை தன்னுடைய பேச்சை மட்டுமே நம்பும் அடிமைக் கூட்டமாக மாற்றி, அதன் வழி பிழைப்பு ஓட்டுவதுதான்.

சீமானின் அரசியல் களம் விரிவடைந்ததற்கு முக்கிய காரணம் ஈழப் பிரச்சினையைத் தீர்க்க முடிந்த சர்வ வல்லமை பொருந்திய ஒரே நபர் தான்தான் என்ற தோற்றத்தை இளைஞர்களின் மத்தியில் ஏற்படுத்தியதும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளே நம்பிய அரசியல் பிரதிநிதியாக பொய்யாகத் தன்னை முன்நிறுத்திக் கொண்டதும்தான். இன்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளும் இல்லை, ஈழத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைப்பை ஓட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை என்பதால், தனது முக்கிய நிதி ஆதாரமாக விளங்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் தனக்கிருக்கும் செல்வாக்கை ஆழப்படுத்திக் கொள்ள, தான் சொன்ன பொய்யையே வெவ்வேறு பரிணாமங்களில் மாற்றி, மாற்றி சொல்வதன் மூலம் அதை உண்மையாக்க வேண்டிய கட்டாயம் சீமானுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் பிரபாகரனைப் பயன்படுத்தி உருவாக்கிக் கொண்ட தனது போலிப் பிம்பத்தை தக்க வைத்துக் கொள்ள, பிரபாகரனைப் பற்றிய சாப்பாட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதன் மூலம் தன்னை பிரபாகரனின் அரசியல் வாரிசாக நிலைநிறுத்திக் கொள்ள முயன்று வருகின்றார்.

சீமான் சொல்வதை எல்லாம் அப்படியே விமர்சனமின்றி நம்பும் தம்பிகளின் அரசியல் அறிவு பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. தம்பிகள் அனைவரும் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் புளுகு மூட்டைகளை பார்வெட் செய்வதிலும், சீமானுக்கு எதிராக யாராவது பேசினாலோ, எழுதினாலோ அவர்களை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்குத் திராணியில்லாமல் அவதூறுகளையும், ஆபாசங்களையும் கொண்டு தாக்குவதிலும், சங்கிக் கும்பலுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் செய்பவர்கள்.

சீமான் விடுதலைப் புலிகளைச் சந்தித்தது வெறும் 15 நிமிடங்கள் கூட இருக்காது என தோழர் கொளத்தூர் மணி அவர்கள் உறுதியாகச் சொல்கின்றார். அவர் சொல்வதை நாம் அப்படியே கடந்து சென்றுவிட முடியாது. காரணம் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் விடுதலைப் புலிகளோடு மிக நெருக்கமான தொடர்பில் இருந்தவர். ஈழப் பிரச்சினைக்காக பல முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும், தடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர். இன்னும் சொல்லப் போனால் அடையாளமே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த சீமானுக்கு ஈழத்திற்குப் போகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்.

தன்னுடைய புளுகுகள் எல்லாம் நிச்சயம் அம்பலப்பட்டு விடும் என்று சீமானுக்கு நன்றாகவே தெரியும். காரணம் விடுதலைப் புலிகளுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்த பலர் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள். ஆனால் அண்ணன் சொல்லும் புளுகுகள் எல்லாம் ஒட்டுமொத்த பொதுச் சமூகத்துக்குமானதல்ல.. அது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட 'அறிவாளிகள்' கூட்டத்திற்கானது.

அந்த 'அறிவாளிகள்' கூட்டம்தான் ஏகே 75 துப்பாக்கியை தூக்கிக் கொண்டு போய் தனி ஈழத்தை அண்ணன் வாங்கித் தருவார் என்று நம்பி, அவரது கட்சிக்கான வங்கிக் கணக்கை சிறப்பாகக் கவனித்து வந்தது. ஆனால் காலச்சூழல் இலங்கையின் அரசியல் போக்கையும், தமிழகத்தின் அரசியல் போக்கையும் மாற்றி விட்டதால், இனி தனி ஈழத்தை வாங்கித் தருவேன் என்று சொல்லி, எவனாவது பணம் கேட்டால் தமிழ் நாட்டில் சல்லிப் பைசா கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் பதறிப் போய் பிரபாகரனுடனான தனது நெருக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக அண்ணன் புதுப் புது அயிட்டங்களை அவ்வப்போது வீசிக் கொண்டே இருக்கின்றார்.

உண்மையிலேயே ஈழ விடுதலையைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் சீமானுக்கு உயரிய மதிப்பீடுகள் எல்லாம் இருந்ததே கிடையாது. அப்படி இருந்திருந்தால் ஈழப் படுகொலைக்குப் பின்னர், ஐநாவின் டப்ளின் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையில், "ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிடுங்கி,படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்தனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள், தப்பிக்கப் பார்த்த தமிழர்களை சுட்டுக் கொன்றார்கள்" என்று தனது கட்சி சார்பில் சொல்லியிருக்க மாட்டார்.

சீமானின் அரசியல் நகர்வுகள் அனைத்துமே வரும்படியை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப் படுகின்றது. இன்று அண்ணன் வாழும் சொகுசு வாழ்க்கையே அதற்குச் சான்று. சீமானால் தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. அவர் தன்னுடைய தனித்தன்மையாக சொல்லிக் கொண்டிருக்கும் இனவாதம், மொழிவாதம் போன்ற பாசிசக் கோட்பாடுகள் எல்லாம் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் ஏற்கெனவே வீசி எறியப்பட்டவை. அவரிடம் மிச்சம் மீதி ஏதோ சிறப்பாக இருப்பதாகச் சொல்லப்படுபவையும் மார்க்சியக் கோட்பாடுகளில் இருந்தும், காந்தியத்தில் இருந்தும் திருடப் பட்டவைதான்.

நாம் தமிழர் கட்சியில் ஒருவன் உறுப்பினராக இருப்பதற்கான முதன்மையான தகுதி அவன் ஒரு அறிவிலியாக இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி சமூகத்தில் அரசியல் விழிப்புணர்வு இன்றி, தக்கை மனிதர்களாய் சுற்றிக் கொண்டிருந்த கூட்டம்தான் இன்று சீமானின் அடிமைகளாய் மாறி இருக்கின்றது. எப்படி ரஜினி ரசிகர்களும், விஜய், அஜித் ரசிகர்களும் அவர்களின் படங்கள் வெளிவருவதற்காக காத்திருக்கின்றார்களோ, அதே போல இந்த அடிமைக் கூட்டமும் சீமானின் அடுத்த புளுகு மூட்டை கதைக்காக காத்திருக்கின்றது. அண்ணன் ஒரு நாளும் தம்பிகளை ஏமாற்றுவதில்லை. கூடிய விரைவில் மிகச் சிறப்பான ஒரு மசாலா மாஸ் கதையுடன் அண்ணன் ரீஎன்ரீ கொடுப்பார். அநேகமாக அந்தக் கதை மனிதக் கறி தின்றதாகக் கூட இருக்கலாம்!.

- செ.கார்கி

 

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40269-2020-05-31-05-44-59

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

உண்மைதானே! அண்ணன் கட்சித்தொண்டர்களுக்கு அடி உதை தெரியாமலா இருக்கும்😂

 

இரண்டு நாளுக்கு முன்னர் ஒரு கட்டுரை படித்தேன்😃

அண்ணன் சீமானின் தம்பிகள், ஆறுதலாக எழுத்துக்கூட்டிப் படித்தால் நல்லது.😁

தலைப்பைப் பார்த்துவிட்டு உள்ளடக்கத்தை கற்பனைக் குதிரையில் பறந்து பார்க்கவேண்டாம். எழுதியவரை திமுக செம்பு என்று வையவும் வேண்டாம்😎

 

அண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’

spacer.png

தன்னை ஓர் ஆளுமையாக தகவமைத்துக் கொள்ள இயலாதவர்கள்தான் எப்போதும் அடுத்தவர்களின் புகழ் வெளிச்சத்தின் கீழ் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளத் துடிப்பார்கள். இன்னாரின் நண்பன், இன்னாரின் உறவினன், எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று சொல்லி வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடிக் கொள்பவர்களால் ஒருபோதும் ஒரு சுய ஆளுமையாக தன்னை உருவாக்கிக் கொள்ள முடியாது. மேலும் அப்படிப் பட்டவர்கள்தான் தான் யாரின் பெயரைச் சொல்லி பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருக்கின்றார்களோ, அவர்களின் புகழுக்கே ஆப்பு வைத்து விடுவார்கள். கடும் உழைப்பால் அவர்கள் சேர்த்து வைத்த நற்பெயரையும் நாசம் செய்து விடுவார்கள். அது போன்ற உழைப்புறிஞ்சிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து களை எடுக்கவில்லை என்றால், போலிகளே உண்மைகளைப் போல கொட்டமடிக்க ஆரம்பித்து விடும். ஆனால் நிழல்கள் ஒரு போதும் மரங்கள் ஆகி விடுவதில்லை என்பது போல, போலிகள் ஒருபோதும் நிஜங்களைப் பதிலீடு செய்து விடுவதில்லை.

அப்படி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரைச் சொல்லி வயிறு வளர்த்து வந்த சீமான், இன்று அவரின் பிம்பத்தை உடைத்து நொறுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றார். ஈழப் போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, விடுதலைப் புலிகளின் இராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்த நபர்கள் சீமானுக்கு ஆமைக் கறி, உடும்புக் கறி, கறி இட்லி என விதவிதமாக சமைத்துப் போட்டு, அவர் எதைச் சாப்பிட்டார், எதைச் சாப்பிடவில்லை எனக் குறிப்பு வேறு எடுத்தார்கள் என்று கூச்சமே இல்லாமல் பரப்புரை செய்து விடுதலைப் புலிகள் தன் சொந்த இன மக்கள் அழித்தொழிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி இம்மி அளவு கூட கவலைப்படாமல் சுகபோகமாக உண்டு களித்ததாக ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.

பிரபாகரன் அவர்களின் அரசியலை கடுமையாக விமர்சிக்கும் இயக்கங்கள், கட்சிகள் கூட பிரபாகரனை இந்தளவிற்குக் கேவலமாக தமிழக மக்கள் முன் காட்சிப்படுத்தியது இல்லை. பிரபாகரனை இழிவு செய்யும் இது போன்ற கதைகளை சீமான் சில ஆண்டுகளாக வலியச் சொல்வதற்கும், அவரின் வங்கி இருப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதற்கு எல்லா முகாந்திரங்களும் உள்ளன.

திராவிட எதிர்ப்பு, பார்ப்பனிய ஆதரவு எனத் தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை கட்டமைத்துக் கொண்ட சீமானின் முதன்மையான திட்டம் ஏற்கெனவே மதுவாலும், பண்பாட்டுச் சீரழிவாலும், உலகமயமாக்கத்தாலும் தக்கை மனிதர்களாக வாழ்ந்து வரும் இளைஞர்களை தன்னுடைய பேச்சை மட்டுமே நம்பும் அடிமைக் கூட்டமாக மாற்றி, அதன் வழி பிழைப்பு ஓட்டுவதுதான்.

சீமானின் அரசியல் களம் விரிவடைந்ததற்கு முக்கிய காரணம் ஈழப் பிரச்சினையைத் தீர்க்க முடிந்த சர்வ வல்லமை பொருந்திய ஒரே நபர் தான்தான் என்ற தோற்றத்தை இளைஞர்களின் மத்தியில் ஏற்படுத்தியதும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளே நம்பிய அரசியல் பிரதிநிதியாக பொய்யாகத் தன்னை முன்நிறுத்திக் கொண்டதும்தான். இன்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளும் இல்லை, ஈழத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைப்பை ஓட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை என்பதால், தனது முக்கிய நிதி ஆதாரமாக விளங்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் தனக்கிருக்கும் செல்வாக்கை ஆழப்படுத்திக் கொள்ள, தான் சொன்ன பொய்யையே வெவ்வேறு பரிணாமங்களில் மாற்றி, மாற்றி சொல்வதன் மூலம் அதை உண்மையாக்க வேண்டிய கட்டாயம் சீமானுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் பிரபாகரனைப் பயன்படுத்தி உருவாக்கிக் கொண்ட தனது போலிப் பிம்பத்தை தக்க வைத்துக் கொள்ள, பிரபாகரனைப் பற்றிய சாப்பாட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதன் மூலம் தன்னை பிரபாகரனின் அரசியல் வாரிசாக நிலைநிறுத்திக் கொள்ள முயன்று வருகின்றார்.

சீமான் சொல்வதை எல்லாம் அப்படியே விமர்சனமின்றி நம்பும் தம்பிகளின் அரசியல் அறிவு பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. தம்பிகள் அனைவரும் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் புளுகு மூட்டைகளை பார்வெட் செய்வதிலும், சீமானுக்கு எதிராக யாராவது பேசினாலோ, எழுதினாலோ அவர்களை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்குத் திராணியில்லாமல் அவதூறுகளையும், ஆபாசங்களையும் கொண்டு தாக்குவதிலும், சங்கிக் கும்பலுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் செய்பவர்கள்.

சீமான் விடுதலைப் புலிகளைச் சந்தித்தது வெறும் 15 நிமிடங்கள் கூட இருக்காது என தோழர் கொளத்தூர் மணி அவர்கள் உறுதியாகச் சொல்கின்றார். அவர் சொல்வதை நாம் அப்படியே கடந்து சென்றுவிட முடியாது. காரணம் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் விடுதலைப் புலிகளோடு மிக நெருக்கமான தொடர்பில் இருந்தவர். ஈழப் பிரச்சினைக்காக பல முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும், தடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர். இன்னும் சொல்லப் போனால் அடையாளமே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த சீமானுக்கு ஈழத்திற்குப் போகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்.

தன்னுடைய புளுகுகள் எல்லாம் நிச்சயம் அம்பலப்பட்டு விடும் என்று சீமானுக்கு நன்றாகவே தெரியும். காரணம் விடுதலைப் புலிகளுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்த பலர் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள். ஆனால் அண்ணன் சொல்லும் புளுகுகள் எல்லாம் ஒட்டுமொத்த பொதுச் சமூகத்துக்குமானதல்ல.. அது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட 'அறிவாளிகள்' கூட்டத்திற்கானது.

அந்த 'அறிவாளிகள்' கூட்டம்தான் ஏகே 75 துப்பாக்கியை தூக்கிக் கொண்டு போய் தனி ஈழத்தை அண்ணன் வாங்கித் தருவார் என்று நம்பி, அவரது கட்சிக்கான வங்கிக் கணக்கை சிறப்பாகக் கவனித்து வந்தது. ஆனால் காலச்சூழல் இலங்கையின் அரசியல் போக்கையும், தமிழகத்தின் அரசியல் போக்கையும் மாற்றி விட்டதால், இனி தனி ஈழத்தை வாங்கித் தருவேன் என்று சொல்லி, எவனாவது பணம் கேட்டால் தமிழ் நாட்டில் சல்லிப் பைசா கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் பதறிப் போய் பிரபாகரனுடனான தனது நெருக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக அண்ணன் புதுப் புது அயிட்டங்களை அவ்வப்போது வீசிக் கொண்டே இருக்கின்றார்.

உண்மையிலேயே ஈழ விடுதலையைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் சீமானுக்கு உயரிய மதிப்பீடுகள் எல்லாம் இருந்ததே கிடையாது. அப்படி இருந்திருந்தால் ஈழப் படுகொலைக்குப் பின்னர், ஐநாவின் டப்ளின் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையில், "ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிடுங்கி,படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்தனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள், தப்பிக்கப் பார்த்த தமிழர்களை சுட்டுக் கொன்றார்கள்" என்று தனது கட்சி சார்பில் சொல்லியிருக்க மாட்டார்.

சீமானின் அரசியல் நகர்வுகள் அனைத்துமே வரும்படியை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப் படுகின்றது. இன்று அண்ணன் வாழும் சொகுசு வாழ்க்கையே அதற்குச் சான்று. சீமானால் தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. அவர் தன்னுடைய தனித்தன்மையாக சொல்லிக் கொண்டிருக்கும் இனவாதம், மொழிவாதம் போன்ற பாசிசக் கோட்பாடுகள் எல்லாம் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் ஏற்கெனவே வீசி எறியப்பட்டவை. அவரிடம் மிச்சம் மீதி ஏதோ சிறப்பாக இருப்பதாகச் சொல்லப்படுபவையும் மார்க்சியக் கோட்பாடுகளில் இருந்தும், காந்தியத்தில் இருந்தும் திருடப் பட்டவைதான்.

நாம் தமிழர் கட்சியில் ஒருவன் உறுப்பினராக இருப்பதற்கான முதன்மையான தகுதி அவன் ஒரு அறிவிலியாக இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி சமூகத்தில் அரசியல் விழிப்புணர்வு இன்றி, தக்கை மனிதர்களாய் சுற்றிக் கொண்டிருந்த கூட்டம்தான் இன்று சீமானின் அடிமைகளாய் மாறி இருக்கின்றது. எப்படி ரஜினி ரசிகர்களும், விஜய், அஜித் ரசிகர்களும் அவர்களின் படங்கள் வெளிவருவதற்காக காத்திருக்கின்றார்களோ, அதே போல இந்த அடிமைக் கூட்டமும் சீமானின் அடுத்த புளுகு மூட்டை கதைக்காக காத்திருக்கின்றது. அண்ணன் ஒரு நாளும் தம்பிகளை ஏமாற்றுவதில்லை. கூடிய விரைவில் மிகச் சிறப்பான ஒரு மசாலா மாஸ் கதையுடன் அண்ணன் ரீஎன்ரீ கொடுப்பார். அநேகமாக அந்தக் கதை மனிதக் கறி தின்றதாகக் கூட இருக்கலாம்!.

- செ.கார்கி

 

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40269-2020-05-31-05-44-59

இத‌ வாசிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என‌க்கு இல்லை , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

உண்மைதானே! அண்ணன் கட்சித்தொண்டர்களுக்கு அடி உதை தெரியாமலா இருக்கும்😂

 

இரண்டு நாளுக்கு முன்னர் ஒரு கட்டுரை படித்தேன்😃

அண்ணன் சீமானின் தம்பிகள், ஆறுதலாக எழுத்துக்கூட்டிப் படித்தால் நல்லது.😁

தலைப்பைப் பார்த்துவிட்டு உள்ளடக்கத்தை கற்பனைக் குதிரையில் பறந்து பார்க்கவேண்டாம். எழுதியவரை திமுக செம்பு என்று வையவும் வேண்டாம்😎

 

அண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’

spacer.png

தன்னை ஓர் ஆளுமையாக தகவமைத்துக் கொள்ள இயலாதவர்கள்தான் எப்போதும் அடுத்தவர்களின் புகழ் வெளிச்சத்தின் கீழ் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளத் துடிப்பார்கள். இன்னாரின் நண்பன், இன்னாரின் உறவினன், எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று சொல்லி வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடிக் கொள்பவர்களால் ஒருபோதும் ஒரு சுய ஆளுமையாக தன்னை உருவாக்கிக் கொள்ள முடியாது. மேலும் அப்படிப் பட்டவர்கள்தான் தான் யாரின் பெயரைச் சொல்லி பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருக்கின்றார்களோ, அவர்களின் புகழுக்கே ஆப்பு வைத்து விடுவார்கள். கடும் உழைப்பால் அவர்கள் சேர்த்து வைத்த நற்பெயரையும் நாசம் செய்து விடுவார்கள். அது போன்ற உழைப்புறிஞ்சிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து களை எடுக்கவில்லை என்றால், போலிகளே உண்மைகளைப் போல கொட்டமடிக்க ஆரம்பித்து விடும். ஆனால் நிழல்கள் ஒரு போதும் மரங்கள் ஆகி விடுவதில்லை என்பது போல, போலிகள் ஒருபோதும் நிஜங்களைப் பதிலீடு செய்து விடுவதில்லை.

அப்படி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரைச் சொல்லி வயிறு வளர்த்து வந்த சீமான், இன்று அவரின் பிம்பத்தை உடைத்து நொறுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றார். ஈழப் போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, விடுதலைப் புலிகளின் இராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்த நபர்கள் சீமானுக்கு ஆமைக் கறி, உடும்புக் கறி, கறி இட்லி என விதவிதமாக சமைத்துப் போட்டு, அவர் எதைச் சாப்பிட்டார், எதைச் சாப்பிடவில்லை எனக் குறிப்பு வேறு எடுத்தார்கள் என்று கூச்சமே இல்லாமல் பரப்புரை செய்து விடுதலைப் புலிகள் தன் சொந்த இன மக்கள் அழித்தொழிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி இம்மி அளவு கூட கவலைப்படாமல் சுகபோகமாக உண்டு களித்ததாக ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.

பிரபாகரன் அவர்களின் அரசியலை கடுமையாக விமர்சிக்கும் இயக்கங்கள், கட்சிகள் கூட பிரபாகரனை இந்தளவிற்குக் கேவலமாக தமிழக மக்கள் முன் காட்சிப்படுத்தியது இல்லை. பிரபாகரனை இழிவு செய்யும் இது போன்ற கதைகளை சீமான் சில ஆண்டுகளாக வலியச் சொல்வதற்கும், அவரின் வங்கி இருப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதற்கு எல்லா முகாந்திரங்களும் உள்ளன.

திராவிட எதிர்ப்பு, பார்ப்பனிய ஆதரவு எனத் தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை கட்டமைத்துக் கொண்ட சீமானின் முதன்மையான திட்டம் ஏற்கெனவே மதுவாலும், பண்பாட்டுச் சீரழிவாலும், உலகமயமாக்கத்தாலும் தக்கை மனிதர்களாக வாழ்ந்து வரும் இளைஞர்களை தன்னுடைய பேச்சை மட்டுமே நம்பும் அடிமைக் கூட்டமாக மாற்றி, அதன் வழி பிழைப்பு ஓட்டுவதுதான்.

சீமானின் அரசியல் களம் விரிவடைந்ததற்கு முக்கிய காரணம் ஈழப் பிரச்சினையைத் தீர்க்க முடிந்த சர்வ வல்லமை பொருந்திய ஒரே நபர் தான்தான் என்ற தோற்றத்தை இளைஞர்களின் மத்தியில் ஏற்படுத்தியதும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளே நம்பிய அரசியல் பிரதிநிதியாக பொய்யாகத் தன்னை முன்நிறுத்திக் கொண்டதும்தான். இன்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளும் இல்லை, ஈழத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைப்பை ஓட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை என்பதால், தனது முக்கிய நிதி ஆதாரமாக விளங்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் தனக்கிருக்கும் செல்வாக்கை ஆழப்படுத்திக் கொள்ள, தான் சொன்ன பொய்யையே வெவ்வேறு பரிணாமங்களில் மாற்றி, மாற்றி சொல்வதன் மூலம் அதை உண்மையாக்க வேண்டிய கட்டாயம் சீமானுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் பிரபாகரனைப் பயன்படுத்தி உருவாக்கிக் கொண்ட தனது போலிப் பிம்பத்தை தக்க வைத்துக் கொள்ள, பிரபாகரனைப் பற்றிய சாப்பாட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதன் மூலம் தன்னை பிரபாகரனின் அரசியல் வாரிசாக நிலைநிறுத்திக் கொள்ள முயன்று வருகின்றார்.

சீமான் சொல்வதை எல்லாம் அப்படியே விமர்சனமின்றி நம்பும் தம்பிகளின் அரசியல் அறிவு பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. தம்பிகள் அனைவரும் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் புளுகு மூட்டைகளை பார்வெட் செய்வதிலும், சீமானுக்கு எதிராக யாராவது பேசினாலோ, எழுதினாலோ அவர்களை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்குத் திராணியில்லாமல் அவதூறுகளையும், ஆபாசங்களையும் கொண்டு தாக்குவதிலும், சங்கிக் கும்பலுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் செய்பவர்கள்.

சீமான் விடுதலைப் புலிகளைச் சந்தித்தது வெறும் 15 நிமிடங்கள் கூட இருக்காது என தோழர் கொளத்தூர் மணி அவர்கள் உறுதியாகச் சொல்கின்றார். அவர் சொல்வதை நாம் அப்படியே கடந்து சென்றுவிட முடியாது. காரணம் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் விடுதலைப் புலிகளோடு மிக நெருக்கமான தொடர்பில் இருந்தவர். ஈழப் பிரச்சினைக்காக பல முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும், தடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர். இன்னும் சொல்லப் போனால் அடையாளமே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த சீமானுக்கு ஈழத்திற்குப் போகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்.

தன்னுடைய புளுகுகள் எல்லாம் நிச்சயம் அம்பலப்பட்டு விடும் என்று சீமானுக்கு நன்றாகவே தெரியும். காரணம் விடுதலைப் புலிகளுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்த பலர் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள். ஆனால் அண்ணன் சொல்லும் புளுகுகள் எல்லாம் ஒட்டுமொத்த பொதுச் சமூகத்துக்குமானதல்ல.. அது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட 'அறிவாளிகள்' கூட்டத்திற்கானது.

அந்த 'அறிவாளிகள்' கூட்டம்தான் ஏகே 75 துப்பாக்கியை தூக்கிக் கொண்டு போய் தனி ஈழத்தை அண்ணன் வாங்கித் தருவார் என்று நம்பி, அவரது கட்சிக்கான வங்கிக் கணக்கை சிறப்பாகக் கவனித்து வந்தது. ஆனால் காலச்சூழல் இலங்கையின் அரசியல் போக்கையும், தமிழகத்தின் அரசியல் போக்கையும் மாற்றி விட்டதால், இனி தனி ஈழத்தை வாங்கித் தருவேன் என்று சொல்லி, எவனாவது பணம் கேட்டால் தமிழ் நாட்டில் சல்லிப் பைசா கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் பதறிப் போய் பிரபாகரனுடனான தனது நெருக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக அண்ணன் புதுப் புது அயிட்டங்களை அவ்வப்போது வீசிக் கொண்டே இருக்கின்றார்.

உண்மையிலேயே ஈழ விடுதலையைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் சீமானுக்கு உயரிய மதிப்பீடுகள் எல்லாம் இருந்ததே கிடையாது. அப்படி இருந்திருந்தால் ஈழப் படுகொலைக்குப் பின்னர், ஐநாவின் டப்ளின் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையில், "ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிடுங்கி,படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்தனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள், தப்பிக்கப் பார்த்த தமிழர்களை சுட்டுக் கொன்றார்கள்" என்று தனது கட்சி சார்பில் சொல்லியிருக்க மாட்டார்.

சீமானின் அரசியல் நகர்வுகள் அனைத்துமே வரும்படியை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப் படுகின்றது. இன்று அண்ணன் வாழும் சொகுசு வாழ்க்கையே அதற்குச் சான்று. சீமானால் தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. அவர் தன்னுடைய தனித்தன்மையாக சொல்லிக் கொண்டிருக்கும் இனவாதம், மொழிவாதம் போன்ற பாசிசக் கோட்பாடுகள் எல்லாம் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் ஏற்கெனவே வீசி எறியப்பட்டவை. அவரிடம் மிச்சம் மீதி ஏதோ சிறப்பாக இருப்பதாகச் சொல்லப்படுபவையும் மார்க்சியக் கோட்பாடுகளில் இருந்தும், காந்தியத்தில் இருந்தும் திருடப் பட்டவைதான்.

நாம் தமிழர் கட்சியில் ஒருவன் உறுப்பினராக இருப்பதற்கான முதன்மையான தகுதி அவன் ஒரு அறிவிலியாக இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி சமூகத்தில் அரசியல் விழிப்புணர்வு இன்றி, தக்கை மனிதர்களாய் சுற்றிக் கொண்டிருந்த கூட்டம்தான் இன்று சீமானின் அடிமைகளாய் மாறி இருக்கின்றது. எப்படி ரஜினி ரசிகர்களும், விஜய், அஜித் ரசிகர்களும் அவர்களின் படங்கள் வெளிவருவதற்காக காத்திருக்கின்றார்களோ, அதே போல இந்த அடிமைக் கூட்டமும் சீமானின் அடுத்த புளுகு மூட்டை கதைக்காக காத்திருக்கின்றது. அண்ணன் ஒரு நாளும் தம்பிகளை ஏமாற்றுவதில்லை. கூடிய விரைவில் மிகச் சிறப்பான ஒரு மசாலா மாஸ் கதையுடன் அண்ணன் ரீஎன்ரீ கொடுப்பார். அநேகமாக அந்தக் கதை மனிதக் கறி தின்றதாகக் கூட இருக்கலாம்!.

- செ.கார்கி

 

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40269-2020-05-31-05-44-59

இந்த கிருபனுக்கு மட்டும் ஊர் உலகத்து கருமாந்திரங்கள் எல்லாம் எப்படி கிடைக்குதோ தெரியவில்லை. :grin:

நிழலி வந்தோன்ன... தெம்பா வந்துடியள் என்ன? 💪

அது சரி, ராத்திரி என்ன brand? Jonny, Jack?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

இத‌ வாசிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என‌க்கு இல்லை , 

அது தெரிந்ததுதானே பையன்😀 ஆனாலும் படித்தாலும் உங்கள் உறுதியான கொள்கையில் மாற்றம் வராது😊

 

4 minutes ago, Nathamuni said:

இந்த கிருபனுக்கு மட்டும் ஊர் உலகத்து கருமாந்திரங்கள் எல்லாம் எப்படி கிடைக்குதோ தெரியவில்லை. :grin:

நிழலி வந்தோன்ன... தெம்பா வந்துடியள் என்ன? 💪

அது சரி, ராத்திரி என்ன brand? Jonny, Jack?

யாரையும் நான் துணைக்கு அழைத்து குழுவாக கருத்து வைப்பதில்லை. வேலைப்பளு இல்லாவிட்டால் மட்டுக்கள் கலைக்குமட்டும் தனியவே நிற்கும் தெம்பு இருக்கு😀

 நான் குடித்துவிட்டு யாழில் எழுதுவதும் இல்லை.மற்றது நான் மதுவைத் தொட்டு மூன்று மாதங்களாகிவிட்டது. கொம்பனி இல்லாமல் குடிப்பதில்லை என்ற கொள்கைதான் காரணம்!🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

எதிர்கடை வைக்கிறதுக்கு ஓடி வார ஆட்களை பாருங்கோவன்.

ஒருத்தர் களத்தில நிண்டு சண்டை பிடிச்சேன். எண்டுறார்... ஆனால் அதை நம்புறமாதிரி அவரது சொந்த பதிவுகளே இல்லை. Scholarship, O/L, A/L result அந்த மாதிரி எண்டுறார். பொறியியல் முடித்து யாழ்ப்பாணத்தில் பொறியியல் பீடம் இல்லாத நிலையில், பேராசிரியர் எண்டுறார். ஆனால் வன்னியில் சூசை பக்கத்தில் நிண்டனான், கோத்தாவுக்கு குளுசை குடுத்துட்டு தப்பி வந்து, 4 வருசத்தில, மூன்று நாடுகளின் ஆயிரக்கணக்கான ஆட்களுக்கு பொறுப்பா இருந்து வேலையும் வாங்குறன் எண்டு தாய்க்கு கடிதமும் போடுறார்.

இன்னொருத்தர், துவக்கு பத்தி ஏதோ சொல்கிறார். அக்கினியாத்திரா வந்து அதனை சலேன்ஜ் பண்ணினோன்ன, ஆள் பம்மீடார். பிறகு பார்த்தா.... சீமான்... சாமான் எண்டு ஆவேசமா வாரார்.

துரோகம் செய்து புலிகளை அழிக்க உதவின கருணாவின் ஆதரவாளரோ, அந்த புலிகளின் பெயரை சீமான் பாவிக்க கூடாதாம்.

என்ன தார்மீக அடிப்படையில இவர்கள் பேசுகிறார்கள்?

இவர்களுடன் சேர்ந்து கொண்டு இப்ப நிழலியர் வாறார்.... இவர்கள் background பார்த்தாவது, நிழலி ஒதுங்கி இருக்க வேண்டாமோ?

க‌ள‌வு எடுக்கிற‌ க‌ள்ள‌ன் என்றோ ஒரு நாள் கையும் மெய்யுமா பிடி ப‌டுவான்  நாதா ,


சீமான் சாமான் என்று எழுதின‌வ‌ர் இடையில் விவாத‌த்த‌ தொட‌ராம ஓடி விட்டார் ,  ஏன் என்றால் அவ‌ருக்கு நான் எழுதின‌து எங்கையோ சுட்டு போச்சு , 

ம‌ருத‌ங்கேணி அண்ணா விவாத‌த்துக்கு த‌யார் என்று வெளிப்ப‌டையாய் சொன்னார் , சும்மா இருந்த‌ ம‌ருத‌ங்கேணி அண்ணாவை விவாத‌த்துக்கு இழுத்த‌வ‌ர் க‌ட‌சியில் கோழைத் த‌ன‌மாய் வில‌கி இருக்கிறார் ,


இப்ப‌ கிருப‌ன் ஜ‌யா பெரிய‌ ந‌க்க‌ல் ப‌திவோட‌ வ‌ந்து இருக்கிறார் சீமானின் த‌ம்பிக‌ள் எழுத்து கூட்டி வாசிக்க‌ சொல்லி  

சீமானின் த‌ம்பிக‌ளில் நானும் ஒருவ‌ன் , 

என‌க்கு 
டெனிஸ் த‌மிழ் ஆங்கிலம் ஜேர்ம‌ன் இத்த‌ன‌ மொழியும் தெரியும் , குசா தாத்தாவோடு கூட‌ போனில் ஜேர்ம‌ன் மொழியில் கொஞ்ச‌ நேர‌ம் க‌தைச்ச‌ நான் /

இவ‌ர்க‌ள் சீமானின் த‌ம்பிக‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்ட‌லாம் , ஆனால் சீமானின் த‌ம்பிக‌ளுக்கு இருக்கும் துணிவும் திற‌மையும் , இணைய‌ த‌ள‌த்தில் செய்தியை வாசித்து விட்டு முட்டையிட்ட‌ கோழி கொக்க‌ர‌கோ என்று கூவிற‌ மாதிரி இவ‌ர்க‌ளுக்கும் கூவ‌த் தான்   லாய்க்கு , 

5 minutes ago, கிருபன் said:

அது தெரிந்ததுதானே பையன்😀 ஆனாலும் படித்தாலும் உங்கள் உறுதியான கொள்கையில் மாற்றம் வராது😊

 

யாரையும் நான் துணைக்கு அழைத்து குழுவாக கருத்து வைப்பதில்லை. வேலைப்பளு இல்லாவிட்டால் மட்டுக்கள் கலைக்குமட்டும் தனியவே நிற்கும் தெம்பு இருக்கு😀

 நான் குடித்துவிட்டு யாழில் எழுதுவதும் இல்லை.மற்றது நான் மதுவைத் தொட்டு மூன்று மாதங்களாகிவிட்டது. கொம்பனி இல்லாமல் குடிப்பதில்லை என்ற கொள்கைதான் காரணம்!🤠

நான் த‌னி ஒருவ‌னாய் எதையும் எதிர் கொள்ளுவேன் , நாதாவும் நானும் ஒரே க‌ருத்து கொள்கை உடைய‌வ‌ர்க‌ள் , அத‌னால் நாதா எழுதுவ‌து ச‌ரி என்று ப‌டுது கிருப‌ன் ஜ‌யா /

உங்க‌ட‌ கொஸ்ரிய‌ நீங்க‌ளும் கூட்டிட்டு வாங்கோ , நீங்க‌ளா நாமா என்று ஒரு கை பாப்போம் , உங்க‌ அத்த‌னை பேரையும் த‌னி ஒருன‌வ‌னாய் நான் வேட்டையாட‌ த‌யார் , நீங்க‌ த‌யாரா 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! ஒரு மனிதன் பொது மேடைக்கு வந்துவிட்டால் நக்கல்,நையாண்டிகள்,பலத்த விமர்சனங்கள் இருப்பது வழமையானதே. அதிலும் அரசியல் என்றால் சொல்லவே தேவையில்லை. இதற்கு சீமான் விதிவிலக்கா என்ன?
இருந்தாலும் இந்த யாழ்கள திரியில் சீமானுக்கு எதிரான ஒருவர் கூட ஆக்கபூர்வமான எதிர்க்கருத்தையோ அல்லது எதிர்ப்பதற்கான காரணத்தை ஆதாரத்துடன் முன் வைக்கவேயில்லை உணவு விடயத்தையும் ஏகே47விடயத்தையும் அலசி ஆராய்ந்து கேலி பண்ணினார்களே தவிர  வேறு எந்த ஆக்கபூர்வமான கருத்து எதையும் வைக்கவேயில்லை. உண்மையில் சகோதரம் பகலவன் வந்ததும்  பல விடயங்கள் அலசி ஆராய்வார்கள் என நினைத்தேன்.அதுவும் புஸ்வாணமாகிவிட்டது.:(

பந்தயத்தில் முன்னுக்கு ஓடும் குதிரையில் தான் எல்லோரும் கண் வைப்பார்கள். அது  இப்போதைக்கு சீமான் மட்டுமே.:cool:

குமாரசாமி அண்ணா.... நீங்கள் சொல்வது, மிகவும் உண்மை. 👍
நான் ஆரம்பத்தில் இருந்தே... ஒவ்வொருவரின் கருத்தையும், வாசித்துக் கொண்டு வருகிறேன்.
சீமானை தூற்றுபவர்கள்..... திரும்பத் திரும்ப, ஒரு சுற்று வட்டத்துக்குள்ளேயே நிற்கிறார்கள்.
அவர்களால்... அதனை விட்டு வெளியே வர முடியவில்லை. :(

சீமானுக்கு... ஆதரவாக கருத்து எழுதுபவர்கள்,
அந்த மாதிரி... சிறந்த கருத்துக்களை, எழுதுவதை பார்க்க,
இதுவரை... நடு நிலைவாதியாக நின்ற நானும், 
சீமானின், தீவிர ஆதரவாளனாகி விட்டேன். :14_relaxed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

உங்க‌ட‌ கொஸ்ரிய‌ நீங்க‌ளும் கூட்டிட்டு வாங்கோ , நீங்க‌ளா நாமா என்று ஒரு கை பாப்போம் , உங்க‌ அத்த‌னை பேரையும் த‌னி ஒருன‌வ‌னாய் நான் வேட்டையாட‌ த‌யார் , நீங்க‌ த‌யாரா 😉

AK-74 துடைச்சுப் பளபளப்பாக மினுங்குவது கண்ணுக்குள் தெரியுது😁

இது கருத்துக்களம். கோஸ்டி எல்லாம் தேவையில்லை. பதிவைப் படிக்காமலே யார் எழுதுகின்றார்கள் என்றுதானே பதில் கருத்துக்கள் வருகின்றன. 😂🤣

Link to comment
Share on other sites

46 minutes ago, Nathamuni said:

 

இவர்களுடன் சேர்ந்து கொண்டு இப்ப நிழலியர் வாறார்.... இவர்கள் background பார்த்தாவது, மட்டுனர் நிழலி மூக்கை நுழைக்காமல் ஒதுங்கி இருக்க வேண்டாமோ? 

பாசிசத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று எதிர்க்கருத்துகளை விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாது, அப்படி எழுதுகின்றவர்களை ஒதுங்கிப் போகச் சொல்வதும் ஏதாவது ஒன்றை சாட்டி எழுதக் கூடாது என்பதும். சீமானின் அரசியலும் பாசிசம் நிறைந்த இனவாத அரசியல் என்பதால் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்த்தனான். 

இந்த திரியில் மட்டுறுத்துநர் நுணாவிலானும் கருத்து எழுதியிருக்கின்றார். பொறுப்பாளர்களில் ஒருவரான இணையவனும் பச்சை குத்தி இருக்கின்றார். இவர்கள் இருவரும் சீமானின் அரசியலை ஆதரித்து தம் பிரதிபலிப்புகளை காட்டியமையால் 'மட்டு எப்படி எழுதலாம்' என்ற கேள்வி உங்களிடம் இல்லை. ஆனா நிழலி எதிர்த்து எழுதியவுடன், மட்டு என்று தூக்கிப் பிடித்துக் கொண்டு வருகின்றீர்கள். 

ஆனால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இதையெல்லாம் பார்த்து கடந்து வந்துவிட்டேன். அத்துடன் திரிக்கு சம்பந்தமில்லாமல் ஒன்றை கேட்டுவிட்டு உங்களுக்கு பிடித்த மாட்டை மரத்தில் கட்டிவிட்டு அதைப்பற்றி கேள்வி கேட்கும் தந்திரத்தையும் பார்த்துவிட்டு கடந்து செல்வதையும் பழகிவிட்டேன். 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

AK-74 துடைச்சுப் பளபளப்பாக மினுங்குவது கண்ணுக்குள் தெரியுது😁

இது கருத்துக்களம். கோஸ்டி எல்லாம் தேவையில்லை. பதிவைப் படிக்காமலே யார் எழுதுகின்றார்கள் என்றுதானே பதில் கருத்துக்கள் வருகின்றன. 😂🤣

மேல‌ இதுக்கு முத‌ல் நீங்க‌ள் எழுதின‌ ப‌திவை பாருங்கோ என்ன‌ எழுதி இருக்கிறீங்க‌ள் என்று ,

அத‌ற்கு தான் என‌து ப‌தில‌ எழுதினேம் , இது க‌ருத்துக்க‌ள‌ம் என்று தெரியாம‌லா இவ‌ள‌வு கால‌மும் எழுதிட்டு இருக்கிறேன் , என்ன‌ புது க‌ண்டு பிடிப்பு எல்லாம் க‌ண்டு பிடிக்கிறீங்க‌ள் , ஏதாவ‌து புதிசா எழுதுங்கோ , எதுக்கெடுத்தாலும் ஏக்கே 74 தானா உங்க‌ளின் விம‌ர்ச‌ன‌ம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

என்னை அமைதி காக்க‌ சொல்லி விட்டு இங்கை பாருங்கோ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா  பொங்கி எழுகிறார் 😁

பையா.....  "தான்... ஆடா விட்டாலும், தசை ஆடும்"  
என்ற பழமொழியை, கேள்விப்  பட்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன். :14_relaxed:

அதுதான்... ஈழப் பிரியன் அண்ணா, 
உங்களுக்கு உபதேசம் பண்ணி, விட்டு....
தன்னை அறியாமலே... மீண்டும், களத்தில்.. குதித்து விட்டார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

சீமானுக்கு... ஆதரவாக கருத்து எழுதுபவர்கள்,
அந்த மாதிரி... சிறந்த கருத்துக்களை, எழுதுவதை பார்க்க,
இதுவரை... நடு நிலைவாதியாக நின்ற நானும், 
சீமானின், தீவிர ஆதரவாளனாகி விட்டேன். :14_relaxed:

சில கருத்துக்கள் வைத்த பகலவனின் பின்னணியை ஆராய்வதுகூட சிறந்த கருத்துக்கள்தான்😆

நடுநிலை என்று எதிலும் இல்லை என்பதால் அண்ணன் சீமானின் ஆதரவாளராக ஆகியதும் நல்லது.😃

படிக்கவேண்டிய அரிய தகவல்கள்: https://www.naamtamilar.org

பார்க்கவேண்டிய அவசியமான காணொளிகள்: https://www.youtube.com/user/NaamThamizharKatchi

உறுப்பினராகச் சேர: https://join.naamtamilar.org

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

சில கருத்துக்கள் வைத்த பகலவனின் பின்னணியை ஆராய்வதுகூட சிறந்த கருத்துக்கள்தான்😆

நடுநிலை என்று எதிலும் இல்லை என்பதால் அண்ணன் சீமானின் ஆதரவாளராக ஆகியதும் நல்லது.😃

படிக்கவேண்டிய அரிய தகவல்கள்: https://www.naamtamilar.org

பார்க்கவேண்டிய அவசியமான காணொளிகள்: https://www.youtube.com/user/NaamThamizharKatchi

உறுப்பினராகச் சேர: https://join.naamtamilar.org

 

கிருபனை மாற்றி விட்டார்கள்! அவரே உறுப்புரிமை ஏஜெண்டாக மாறும் அளவுக்கு வெறுப்பேத்தி விட்டார்கள் பாருங்கள்! 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

பாசிசத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று எதிர்க்கருத்துகளை விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாது, அப்படி எழுதுகின்றவர்களை ஒதுங்கிப் போகச் சொல்வதும் ஏதாவது ஒன்றை சாட்டி எழுதக் கூடாது என்பதும். சீமானின் அரசியலும் பாசிசம் நிறைந்த இனவாத அரசியல் என்பதால் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்த்தனான். 

இந்த திரியில் மட்டுறுத்துநர் நுணாவிலானும் கருத்து எழுதியிருக்கின்றார். பொறுப்பாளர்களில் ஒருவரான இணையவனும் பச்சை குத்தி இருக்கின்றார். இவர்கள் இருவரும் சீமானின் அரசியலை ஆதரித்து தம் பிரதிபலிப்புகளை காட்டியமையால் 'மட்டு எப்படி எழுதலாம்' என்ற கேள்வி உங்களிடம் இல்லை. ஆனா நிழலி எதிர்த்து எழுதியவுடன், மட்டு என்று தூக்கிப் பிடித்துக் கொண்டு வருகின்றீர்கள். 

ஆனால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இதையெல்லாம் பார்த்து கடந்து வந்துவிட்டேன். அத்துடன் திரிக்கு சம்பந்தமில்லாமல் ஒன்றை கேட்டுவிட்டு உங்களுக்கு பிடித்த மாட்டை மரத்தில் கட்டிவிட்டு அதைப்பற்றி கேள்வி கேட்கும் தந்திரத்தையும் பார்த்துவிட்டு கடந்து செல்வதையும் பழகிவிட்டேன். 

நன்றி

ஐயா, நிழலி...

உங்களிடம் இருந்து ஆக்கபூர்வமான பல கருத்துக்களை நாம் பார்த்ததால், தான்... உங்கள் மீதான தரமான எதிர்பார்ப்பு அதிகம்...

நுணாவிலான், இணையவைன் இங்கே விவாதத்தில் பங்கெடுக்க வில்லை.

அடுத்தது, நீங்கள் என்ன கருத்துக்கள் வைக்கிறீர்கள் என்பதல்ல விடயம். யாருடன் சேர்ந்து கருத்தினை வைக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

show me your friends, I will say about you என்பதனை நினைவு கொள்ளுங்கள்.

பக்கத்தில் நிற்பவர்களிடம், நேர்மை இல்லாத போது, அங்கிருந்து விலகிக் கொள்வதே மேன்மை என்பது உங்களுக்கு நான் சொல்லவருவது. அப்புறம் உங்கள் விருப்பம்.

43 minutes ago, Justin said:

கிருபனை மாற்றி விட்டார்கள்! அவரே உறுப்புரிமை ஏஜெண்டாக மாறும் அளவுக்கு வெறுப்பேத்தி விட்டார்கள் பாருங்கள்! 😄

வெறுத்தே போய் விட்ட்டாரப்பா. ஒரு திரியினை தொடங்கி.... மாஞ்சு, மாஞ்சு எழுதியும்... ஒரு கோதரியும் இல்லை. போதாக்குறைக்கு தமிழ் சிறியர் மாறிவிட்டார்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஐயா, நிழலி...

உங்களிடம் இருந்து ஆக்கபூர்வமான பல கருத்துக்களை நாம் பார்த்ததால், தான்... உங்கள் மீதான தரமான எதிர்பார்ப்பு அதிகம்...

நுணாவிலான், இணையவைன் இங்கே விவாதத்தில் பங்கெடுக்க வில்லை.

அடுத்தது, நீங்கள் என்ன கருத்துக்கள் வைக்கிறீர்கள் என்பதல்ல விடயம். யாருடன் சேர்ந்து கருத்தினை வைக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

show me your friends, I will say about you என்பதனை நினைவு கொள்ளுங்கள்.

தமிழ் சிறியர் மாறியபின்னர் கிருபனும் மாறிவிட்டார் :grin:

நாதமுனி, இப்படியாக நட்பின் வழியேதான் அரசியல் அல்லது சமூகப் பார்வை இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புச் சரியல்ல என்று நினைக்கிறேன். இப்படி இருந்தால் கருத்துகளின் பன்முகத் தன்மை மறைந்து குழுவாதம் உருவாகும் என நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

நாதமுனி, இப்படியாக நட்பின் வழியேதான் அரசியல் அல்லது சமூகப் பார்வை இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புச் சரியல்ல என்று நினைக்கிறேன். இப்படி இருந்தால் கருத்துகளின் பன்முகத் தன்மை மறைந்து குழுவாதம் உருவாகும் என நினைக்கிறேன். 

நன்றி ஜஸ்டின்...

இங்கே ஒருவர் மீதான தாக்குதலுக்கு, அப்பட்டமான நேர்மையீனம் கடைபிடிக்கப்படுகின்றது. என்ன காரணம்? அதனை ஏற்றுக் கொள்ள முடியாதே?

Link to comment
Share on other sites

15 minutes ago, Nathamuni said:

ஐயா, நிழலி...

உங்களிடம் இருந்து ஆக்கபூர்வமான பல கருத்துக்களை நாம் பார்த்ததால், தான்... உங்கள் மீதான தரமான எதிர்பார்ப்பு அதிகம்...

நுணாவிலான், இணையவைன் வாதங்களில் இங்கே விவாதத்தில் பங்கெடுக்க வில்லை.

அடுத்தது, நீங்கள் என்ன கருத்துக்கள் வைக்கிறீர்கள் என்பதல்ல விடயம். யாருடன் சேர்ந்து கருத்தினை வைக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

show me your friends, I will say about யு என்பதனை நினைவு கொள்ளுங்கள்.

நாதம், இங்கு நான் யாருடனும் சேர்ந்து கருத்தாடவில்லை. இந்த திரியில் உங்களுடன் முரண்பட்டு கருத்தாடிக் கொண்டு இன்னொரு திரியில் முரண்படாமல் கருத்தாடினால், அது உங்களுடன் சேர்ந்து கருத்தாடினதாக எடுத்துக் கொள்ளப்படுமா? இல்லைதானே. 

ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, அதே கருத்தை இன்னொருவர் ஆதரித்து எழுதினால் அது கோஷ்டி சேர்ந்து என்று ஆகிவிடாது. கோசான் இதே யாழில் என்னுடன் மல்லுக்கட்டி (முக்கியமாக விஜய் ரீவி பிக் பொஸ் நிகழ்ச்சியை பற்றி யாழில் விபரங்கள போடக் கூடாது என்று அறிவித்த பின்) என்னை திண்ணையில் வைத்து நார் நாராகவும் உரித்த ஆள் அவர். அதே நேரத்தில் சீமான் தொடர்பான விடயத்தில் இருவருக்கும் சில பொதுக் கருத்துகள் உண்டு என்பதால் அவர் பெயரைக் குறிப்பிட்டு எழுதினேன். 
கிருபன் நான் எழுதியவுடன் பதில் போட்டமைக்கு அவரும் என்னுடன் கோஷ்டி போடுகின்றார் என்று குறிப்பிடுகின்றீர்கள். அதே போன்று நீங்களும் பையனும், குசா அண்ணாவும், உடையாரும், நம் இசையும் சீமானை ஆதரிப்பதால் ஒரே கோஷ்டி போட்டுக் கொண்டு எழுதுகின்றீர்கள் என்று அழைக்க முடியாதது போலத்தான் இதுவும்.

show me your friends, I will say about யு என்பதை அறவே மறுக்கின்றேன். எனக்கு நெருக்கமான நண்பர்களில் இன்றைய இராணுவத்தளபதிகளில் ஒருவரின் மகனும் (போர்க் குற்றவாளியும் கூட) ஒருவர். அதே போன்று  இறுதி போரில் இறுதி நிமிடம் வரைக்கும் பணியாற்றி கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று பின் அமெரிக்கா சென்ற வைத்தியரும் என் நண்பர். 

நன்றி வணக்கம் தெரிவித்து ஒரே பதிலில் நிறுத்துவம் என்று தான் நினைத்தனான். ஆனால் உங்களது பதிலை பார்த்த பின் பதில்கள் சில எழுத வேண்டி வந்தது,
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

நாதம், இங்கு நான் யாருடனும் சேர்ந்து கருத்தாடவில்லை. இந்த திரியில் உங்களுடன் முரண்பட்டு கருத்தாடிக் கொண்டு இன்னொரு திரியில் முரண்படாமல் கருத்தாடினால், அது உங்களுடன் சேர்ந்து கருத்தாடினதாக எடுத்துக் கொள்ளப்படுமா? இல்லைதானே. 

ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, அதே கருத்தை இன்னொருவர் ஆதரித்து எழுதினால் அது கோஷ்டி சேர்ந்து என்று ஆகிவிடாது. கோசான் இதே யாழில் என்னுடன் மல்லுக்கட்டி (முக்கியமாக விஜய் ரீவி பிக் பொஸ் நிகழ்ச்சியை பற்றி யாழில் விபரங்கள போடக் கூடாது என்று அறிவித்த பின்) என்னை திண்ணையில் வைத்து நார் நாராகவும் உரித்த ஆள் அவர். அதே நேரத்தில் சீமான் தொடர்பான விடயத்தில் இருவருக்கும் சில பொதுக் கருத்துகள் உண்டு என்பதால் அவர் பெயரைக் குறிப்பிட்டு எழுதினேன். 
கிருபன் நான் எழுதியவுடன் பதில் போட்டமைக்கு அவரும் என்னுடன் கோஷ்டி போடுகின்றார் என்று குறிப்பிடுகின்றீர்கள். அதே போன்று நீங்களும் பையனும், குசா அண்ணாவும், உடையாரும், நம் இசையும் சீமானை ஆதரிப்பதால் ஒரே கோஷ்டி போட்டுக் கொண்டு எழுதுகின்றீர்கள் என்று அழைக்க முடியாதது போலத்தான் இதுவும்.

show me your friends, I will say about யு என்பதை அறவே மறுக்கின்றேன். எனக்கு நெருக்கமான நண்பர்களில் இன்றைய இராணுவத்தளபதிகளில் ஒருவரின் மகனும் (போர்க் குற்றவாளியும் கூட) ஒருவர். அதே போன்று  இறுதி போரில் இறுதி நிமிடம் வரைக்கும் பணியாற்றி கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று பின் அமெரிக்கா சென்ற வைத்தியரும் என் நண்பர். 

நன்றி வணக்கம் தெரிவித்து ஒரே பதிலில் நிறுத்துவம் என்று தான் நினைத்தனான். ஆனால் உங்களது பதிலை பார்த்த பின் பதில்கள் சில எழுத வேண்டி வந்தது,
 

நீங்களும் ஏதோதோ தொடர்பில்லாமல், கிருபன் போல எழுதுகிறீர்கள்.

நான் ஜஸ்டினுக்கு போட்ட பதிவினை பார்த்தீர்களா?

Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

 

நான் ஜஸ்டினுக்கு போட்ட பதிவினை பார்த்தீர்களா?

என் கருத்தை எழுதிய பின்னரே பார்த்தேன். ஆனால் விளங்கவில்லை. இதில் யார் / எது நேர்மையீனம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.