Jump to content

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்


Recommended Posts

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார்

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அமசசர-ஆறமகன-தணடமன-கலமனர/150-250937

 

ஆறுமுகம் தொண்டமான் காலமானார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் காலமானார்.

வீட்டிலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்

29 மே மாதம் 1964 ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகம் பல்வேறு அரசுகளில் முக்கிய பதவிகளை வகித்து வந்தவராவார்.

http://www.palmyrahtamilnews.com/2020/05/26/ஆறுமுகம்-தொண்டமான்-காலமா/

Link to comment
Share on other sites

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான்(வயது 55) சற்றுமுன்னர் காலமானார்.

இவரின் மரணத்தை தலங்கம வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/144082?ref=imp-news

Link to comment
Share on other sites

இனி இவரினிடத்தில் மலையக மக்களின் உரிமைகளை அடகு வைச்சு பிழைக்கப்போவது யாரு?

என்ன தான் மலையக மக்களுக்கு சம்பள விடயங்களில் கடும் துரோகம் இழைத்திருந்தாலும் சம்பந்தன்-சுமந்திரன்-மாவை கோஷ்டியை விட கொஞ்சம் மேலானவர் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.jpg

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலம் ஆனார்….

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணமானார். மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக செயற்பட்டு வந்த அவர், தனது 55ஆவது வயதில் காலமானார்.

ஆளும் அரசாங்கங்களுடன் பேரம் பெசும் சக்தியை வளர்த்து வந்த ஆறுமுகன் தொண்டமான, தற்போதைய அரசாங்கத்தின் மிகப் பொறுப்பு வாய்ந்த தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி  அமைச்சராகவும்  செயற்பட்டார்.

1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்துள்ள அவர் 1993ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக கடமையாற்றினார்.

பின்னர் 1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்ட அவர் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.

தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றியீட்டியிருந்த அவர், பல அமைச்சு பதவிகளை வகித்ததுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/1106750-2/

Link to comment
Share on other sites

26 minutes ago, Rajesh said:

இனி இவரினிடத்தில் மலையக மக்களின் உரிமைகளை அடகு வைச்சு பிழைக்கப்போவது யாரு?

இவருக்கு நேரடியாக வாரிசுகள் இல்லாவிடடால், தொண்டமான் என குடும்பபெயருடன் ஒருவர் தலைவராக கட்சிக்கு வரலாம், சாபம் நீடிக்கும். 

அதேவேளை, சுதந்திரமாக ஒருவரை தலைவராக தெரிந்தால், மக்கள் பயன்பெறுவார்கள். 

Link to comment
Share on other sites

இன்று சில மணிநேரங்களின் முன் தான் ஹிந்திய தூதுவரை மகிந்த கோஷ்டியுடன் கூட்டு வைத்துள்ள ஆறுமுகன் சந்தித்துள்ளார்.

ஹிந்திய தூதுவர் குடுத்த அழுத்தங்களால் அறுமுகனுக்கு ஸ்ட்ரெஸ் ஏறி மாரடைப்பால் மண்டையை போட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மா சாந்தியடையட்டும்.

அதேவேளை இவர் மொடாக்குடிக்காரர் என்பதும், குடித்தால், அருகில் உள்ள எந்தபெண்ணானாலும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதும் மறைக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் ஒரு 5* ஹோட்டலில், நிறை போதையில், அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை கையை பிடித்து இழுத்து கட்டி அணைக்க முயன்ற வேளை , போலீசார் அழைக்கப்பட்டு, இவர் இலங்கை அரசியல்வாதி என்று தெரிந்து, டெல்லி வரை போய், கேஸ் அமுக்கப்பட்டதாக தமிழக இதழில் வாசித்திருக்கிறேன்.

சந்திரிகா காலத்தில், ஸ்ரீ லங்கன் நிறுவன, தமிழக பொது வியாபார முகவராக பெரும் பணம் பார்த்தார். அதில் பெரும் மோசடியும் நடந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகன் தொண்டமானின் முறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு; முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன்

praba-ganeshan-300x202.jpgஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது இந்தியா வம்சாவளி மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாக இருந்தாலும் கூட 1970ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணியின் ஊடாக அதனை இலங்கைவாழ் அனைத்து தமிழ் மக்களின் கூட்டுத்தலைமையாக மாற்றியமைத்தவர் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான்.

சௌமியமூர்த்தி தொண்டமானை தொடர்ந்து ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மலையக தமிழர்களுக்கு பல சேவைகளை ஆற்றிக்கொண்டு இருக்கும் போது ஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆறுமுகன் தொண்டமான் என்ற ஒரு தலைவனின் சகாப்தம் முடிவடைந்ததாக நான் கருதவில்லை மாறாக தொண்டமான பரம்பறையூடாக மலையக மக்கள் பெற்றுக்கொண்ட உரிமைகள் ஒரு போதும் முற்றுப்பெறாது.

இந்த இயக்கத்தின் தொடர் செயற்பாடுகள் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு தொடர்ந்தும் அளப்பெரிய சேவையினை ஆற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அன்னாரின் பிரிவில் சொல்லொன்னா துயரம் கொண்டிருக்கும் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கும் இலங்கை தொழிளாலர் காங்கிரஸின் பிரமுகர்களுக்கும் முக்கியமாக அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து கொள்கின்றேன்.

http://thinakkural.lk/article/43640

5 hours ago, Rajesh said:

இன்று சில மணிநேரங்களின் முன் தான் ஹிந்திய தூதுவரை மகிந்த கோஷ்டியுடன் கூட்டு வைத்துள்ள ஆறுமுகன் சந்தித்துள்ளார்.

ஹிந்திய தூதுவர் குடுத்த அழுத்தங்களால் அறுமுகனுக்கு ஸ்ட்ரெஸ் ஏறி மாரடைப்பால் மண்டையை போட்டிருக்கலாம்.

இன்று மாலை அவரை சந்தித்திருந்த நிலையில் செய்தியினை நம்ப முடியவில்லை; இந்திய உயர் ஸ்தானிகர் அதிர்ச்சி

baglay-2-300x173.jpg“இன்று மாலை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்திருந்த நிலையில் அவரது திடீர் மறைவு குறித்த செய்தியினை நம்ப முடியவில்லை” என இலங்கைக்கான இந்தியாவின் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது;

“அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள். இன்று மாலை அவரை சந்தித்திருந்த நிலையில் இந்த செய்தியினை நம்ப முடியவில்லை.”

1-3.jpg

இன்று மாலை இந்தியத் தூதுவரை ஆறுமுகன் தொண்டமான் குழுவினர் சந்தித்த போது எடுத்துக்கொண்ட படம்

http://thinakkural.lk/article/43614

Link to comment
Share on other sites

சக மனிதன் என்ற ரீதியில் அனுதாபங்கள் .
ஆனால் தொண்டமான், மலையக மக்களின் இரத்தம் குடித்த  அட்டை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, zuma said:

சக மனிதன் என்ற ரீதியில் அனுதாபங்கள் .
ஆனால் தொண்டமான், மலையக மக்களின் இரத்தம் குடித்த  அட்டை.

எனது கருத்தும் இதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சக மனிதன் என்ற ரீதியில் அனுதாபங்கள் .
ஆனால் தொண்டமான், மலையக மக்களின் இரத்தம் குடித்த  அட்டை.

அந்த பாவப்பட்ட மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவது அதுகளுக்கே தெரியாமல்  வெள்ளையடிப்பதில் சிங்கனுக்கு தான் முதலிடம் 1998ல் குடியிருமை என்ற பேச்சில் மயங்கி இன்னும் நம்பிக்கை யோடு இருக்குதுகள் .

சமீபத்தில் என் நண்பன் ஒருத்தன் நுவரெலியாவில் கனடாவில் இருந்து கொண்டு போன பாவித்த குளிர் உடுப்புகளை கொடுக்கும்போது அந்த மக்கள் அடிபட்டு வாங்கும் நிலையை பார்க்க முடியாமல் அந்த காணொளியை நிப்பாட்ட வேண்டி மனது கனத்தது .

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.  இறந்த பின்பு அவரின் அரசியலை விமர்சிக்க விரும்பவில்லை. அம்மக்களுக்கு நல்ல ஒரு  தலைவர் கிடைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை 89 வயது சொச்சம் வரை இருந்து அரசியல் செய்தார். மகன் 55 வயதுடனேயே விடைபெற்று விட்டார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனது கருத்தும் இதுதான்.

ம்ம் மகிந்த ஆட்சி மாறி மைத்திரி ஏறும் போது இவர்களது பதுங்கு தளத்தில் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட , வழங்கப்பட்ட பொருட்கள் கூரைதகடுகள் பல பொருட்களை பதுக்கி இருந்தார்  

ஒட்டு மொத்த தமிழ் அரசியல் வாதிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் எதிரியானாலும் 

அவனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் இறந்தால் 

அஞ்சலிகள் ஆறுமுகம் தொண்டமான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

சந்திரசேகரன் இருந்த போது.. இவருடைய ஈழத்தமிழர் விவகார அணுகுமுறை வேறாகவும்.. இரண்டும் கெட்டான் நிலை.. அவர் இறந்த பின்.. இவரின் அணுகுமுறை சிங்கள ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவது மட்டுமாகவே இருந்தது.

இவர் மட்டுமல்ல.. எம்மினப் பெரும் இன அழிப்புத் துரோகத்தை கண்டிகத்தவறியவர்கள் பலர். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

india-3.jpg

“மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர்” – ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி, தாங்க முடியாத துயரத்தினை அளித்துள்ளதாக தமிழக அரசியல் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஸ்டாலின் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகன் தொண்டமான் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தங்களின் நலன்களுக்காக காலமெல்லாம் பாடுபட்ட ஒரு இளம் தலைவரை மலையக தமிழர்கள் இழந்து தவிப்பதாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/மலையக-தமிழர்களின்-உரிமை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

தந்தை 89 வயது சொச்சம் வரை இருந்து அரசியல் செய்தார். மகன் 55 வயதுடனேயே விடைபெற்று விட்டார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!

இவர் தொண்டமானின் பேரன் என நினைகின்றேன். தந்தை அல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செளமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களின் வாழ்வை முன்னேற்ற பலவற்றைச் செய்தார். நாடற்றவர் என்றிருந்த நிலையை மாற்றினார்.

பேரனாரின் பெயரில் குளிர்காய்ந்து தனது பின்னிரவு களியாட்ட வாழ்வுக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டதைத் தவிர ஆறுமுகன் தொண்டமான சாதித்தது எதுவுமில்லை.

மலையக மக்களின் வாழ்வை முன்னேற்ற ஒரு நல்ல தலைவர் இச்சந்தர்ப்பத்தில் வந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இவர் தொண்டமானின் பேரன் என நினைகின்றேன். தந்தை அல்ல

நானறிந்த வகையிலும் பேரன் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

தந்தை 89 வயது சொச்சம் வரை இருந்து அரசியல் செய்தார். மகன் 55 வயதுடனேயே விடைபெற்று விட்டார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!

நியாயத்தை, நாயமா கதைப்போமா? :grin:

சௌமியமூர்த்தி தொண்டைமானின் பேரன் தான் ஆறுமுகம். தந்தை இளமையிலேயே இறந்ததால், பாட்டாவின் கவனிப்பில் வளர்ந்தார்.

பொன்னம்பலம், திருச்செல்வம், தொண்டைமான் என்று பலமிக்க தமிழ் தலைமைத்துவத்தில், கிழட்டு குள்ளநரி ஜெயவர்த்தனே செய்த வேலையினால் அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு முதலில் கழண்டு கொண்டவர் தொண்டைமான். 

பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து அஷ்ரபினை அதே வகையில் கழட்டி, தீவின் ஒட்டு மொத்த தமிழர்களையும் பிரித்து மேய்ந்தார்கள்.

அதேபோல, ஜெயவர்த்தனே மருமகன் ரணில், புலிகளை, கருணாவை கழட்டி, வீழ்த்தினார்.

இந்த குள்ள நரித்தனத்தினால் தான், ஜெயவர்த்தனேவின் ஐதேக இன்று வரை அவர் உருவாக்கிய ஜனாதிபதி பதவிக்கு வரமுடியாமல் தவிக்கின்றது.

புலிகளும், 2005 ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு தராமல் போனதன் காரணமும் இந்த குள்ளநரித்தனம் தான். 

Link to comment
Share on other sites

மகிந்த கோஷ்டியுடன் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக மகன் ஜீவன் தொண்டமான் தேர்தலில்.

jeevan-thonaman.jpg?fit=640,374&ssl=1

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.